fasting லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
fasting லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 மார்ச், 2013

Fasting Loyola students arrested by police, protests to continue

Fasting Loyola students arrested by police, protests to continue

[TamilNet, Monday, 11 March 2013, 06:18 GMT]
In a sudden operation conducted around midnight, the Tamil Nadu police swooped on the eight Loyola College students who were on an indefinite hunger-strike against the pro-LLRC US resolution and have forcibly removed them from the venue of their protest at Koyambedu, Chennai, on Monday. The students, who had begun their fast on Friday, have been taken to the Royapettah General Hospital. Also, around 200 supporters of the students were detained in a community hall near the protest venue. While this move is seen as a draconian curbing of rising sentiments among Tamil Nadu students against those who extend legitimacy to the genocidal Sri Lankan state, sources in Chennai also told TamilNet that the eight students were firm that even if they were arrested they would not give up their protest.

Around 300 policemen arrived at the protest venue in Koyambedu at around 1.30 AM, Monday. Despite activists stating that this was a legal protest, the police broke down the gates, threw away the chairs, and forcibly removed the protesting students from the spot.

Mr. Umar, an activist from the May 17 Movement, told TamilNet that this arrest was probably made because this hunger-strike was a first of its kind protest against a resolution that was hoodwinking the Tamils world over.

He further said that college students across Chennai were expected to join in mass protests tomorrow.

The students of Madras Christian College and SRM College had already taken a mass bike rally on Sunday to convey their solidarity with the protesting Loyola College students.

Chronology:
28.01.11  Rajapaksa sued in US Courts over war-crimes, pla

சனி, 23 ஏப்ரல், 2011

jkalaignar condemns jaya : உண்ணாவிரதத்தை கபடநாடகம் என விமர்சிப்பதா? செ.,வுக்கு க் கருணாநிதி கண்டனம்

உலகமே அதனை நாடகம் என்றுதான் சொல்லிக் கொண்டு உள்ளது. உணர்வின் அடிப்படையில் அமைந்தஉண்ணா நோன்பைக் காங்.  நாடகமாக ஆக்கும் வகையில் தவறான தகவலைத் தந்தது என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


சென்னை: ""இலங்கையில் போர் நடந்தபோது, நான் உண்ணாவிரதம் இருந்ததை கபட நாடகம் என்றும், தமிழக எம்.பி.,க்கள் அங்கு சென்று வந்ததையும் ஜெயலலிதா தேவையில்லாமல் குறைகூறியுள்ளார்'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவரது கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வக்கீல் தலைமையில் விசாரணை கமிஷனை ஐ.நா., பொதுச்செயலர் பான்-கீ-மூன் அமைந்தார். அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது குறித்து கருத்து என்ன?

பதில்: கடந்த ஒன்பது மாதங்களாக நடந்த விசாரணை அறிக்கை இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருந்தபோதும் அதில் முக்கிய பகுதிகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பலரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அறிக்கைவிட்டுள்ள ஜெயலலிதா வழக்கம்போல், தேவையில்லாமல், போர் நடந்தபோது, நான் உண்ணாவிரதம் இருந்ததை கபட நாடகம் என்றும், தமிழக எம்.பி.,க்கள் இலங்கை சென்று வந்ததை குறைகூறியும், ஒரு அநாகரிகமான, அவருக்கே உரிய நடையில் தெரிவித்துள்ளார்.

கேள்வி: நான்கு வெளிநாட்டுக்காரர்கள் சென்னை வந்திருப்பதாகவும், அவர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்யப்போவதாகவும் சுப்பிரமணியசாமி ஒரு தகவலை கூறியிருக்கிறாரே?

பதில்: இதற்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு தேர்தல் கமிஷனுக்குதான் உள்ளது. இந்த செய்தியில் தவறு இருப்பின், அடிக்கடி இப்படிப்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி பீதியில் ஆழ்த்தும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கையாவது எடுக்க முன்வரவேண்டும்.

கேள்வி: புட்டபர்த்தி சாய்பாபா உடல்நிலை மேலும் மேலும் மோசமாகி வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகிறதே?

பதில்: தமிழகம் மீதும், தமிழர்கள் மீதும் புட்டபர்த்தி சாய்பாபா ஆழ்ந்த அன்பு கொண்டவர். தனிப்பட்ட முறையில் என் மீதும் பாசம் கொண்டவர். அவர் உடல்நிலை குறித்து வந்துள்ள செய்திகளை அன்றாடம் மிகுந்த கவலையோடு படித்து வருகிறேன். சாய்பாபா உடல் நலம் தேறுவதற்கு பிராத்தனை செய்யும் பக்தர்களின் நம்பிக்கை வெற்றி பெற நானும் உளமாற வேண்டுகிறேன்.

செவ்வாய், 15 ஜூன், 2010

நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடும் மொழியாக விளங்க நடவடிக்கை: துரைமுருகன்



சென்னை, ஜூன் 14: உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக விளங்க அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார். நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்கக் கோரி, மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிடக் கோரி அமைச்சர் துரைமுருகன் செய்திக் குறிப்பு மூலம் திங்கள்கிழமை விடுத்த வேண்டுகோள்: உயர் நீதிமன்றத்தில் தமிழ் அங்கீகாரம் பெற்ற வழக்காடு மொழியாக இருக்க வேண்டுமென்பதற்காக தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நீதித் துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதன்மீது மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரவேண்டும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர், சட்டத் துறை அமைச்சர் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி கடிதங்களை எழுதினார். அதன்பின், இந்தக் கருத்துருவை வலியுறுத்தி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க கடந்த 2008-ம் ஆண்டில் பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நினைவூட்டுக் கடிதங்களை கருணாநிதி எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் கருத்துரு மத்திய அரசின் சீரிய பரிசீலனையில் உள்ளது என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி பதில் அளித்தார். தமிழக அரசின் உள்துறை அலுவலர்கள் அளவில் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறைக்கு தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இறுதியாக, கடந்த மே மாதம் மத்திய அரசின் நீதித் துறை எழுதிய கடிதத்தில், இந்தக் கருத்துரு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழித் துறையின் பரிசீலனை மற்றும் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பதில் அளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக விளங்க அனைத்து விதமான நடவடிக்கையையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.
கருத்துக்கள்

அமைச்சரின் இந்த அறிக்கைக்கிணங்க உண்ணா நோன்பிருக்கும் தமிழ்நல வழக்குரைஞர்கள் தங்கள் உண்ண நோன்பை முடித்துக் கொண்டு வெற்றி கிட்டும் வரையில் வேறு வகையில் போராட்டத்தைத் தொடர வேண்டும். உங்களைப் போன்ற உணர்வாளர்களின் உயிர் விலைமதிப்பற்றது. எனவே, உடனே உண்ணா நோன்பைக் கைவிடுக.

வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/15/2010 3:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 24 ஜூலை, 2009

இலங்கை அகதிகள் 2}வது நாளாக உண்ணாவிரதம்



செங்கல்பட்டு, ஜூலை 23: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் 63 பேர் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். க்யூ பிரிவு போலீஸôரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறப்புமுகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள், தங்களை வழக்குகளில் விடுவிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி பாலசுப்ரமணியம், க்யூபிரிவு டிஎஸ்பி விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர் ஆல்பர் வில்சன், வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் பேச்சு வார்த்தையில் நம்பிக்கையில்லாமல் தமிழக அமைச்சர்கள் அல்லது முதலமைச்சரின் பிரதிநிதியாக யாராவது வந்து தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் அப்பொழுது தான் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவோம் இப்போது யார் பேசினாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு உடன் பட மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எஸ்பி பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் அகதிகள் முகாமில் போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தமிழக அரசு இவர்களை மட்டும் தொடர்ந்து வதைமுகாம்களில் அடைத்து வைப்பது முறையன்று. தமிழக ஆட்சியிலுள்ளவர்கள் தங்கள் நாட்டுப்பற்றை மெய்ப்பிப்பதாக எண்ணிக் கொண்டு இந்திய அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு அறமற்ற முறைகளில் தடுத்து வைப்பது முறைதானா? இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வதற்கான அடிப்படைத் தேவைப் பொருள்களை வழங்கியதைக் கூடக் கடுங்குற்றமாகக் கருதி வதைப்பது முறைதானா? எனவே, தமிழக அரசு இவர்களின் கோரிக்கைகள் மீது உடனே நடவடிக்கை எடுத்து அப்பாவிகளை விடுவிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் இச்சிக்கலில் ஈடுபட்டு நீதிமன்றங்கள் மூலமாக நீதி கிடைக்க உடனே உதவ வேண்டும். அப்பாவிகளின் துயர நிலை கண்டு வருந்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
7/24/2009 3:52:00 AM