புதன், 22 ஜூன், 2011

Prapakaran's family members are alive : பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளனர்: இலங்கை நாடாளுமன்றத்தில் தகவல்

தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரனும் உயிருடன் இருப்பதாக அடுத்துச் சொல்லப்படம் நாள் எந்நாளோ? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் உள்ளனர்:
இலங்கை நாடாளுமன்றத்தில் தகவல்

First Published : 22 Jun 2011 12:36:39 PM IST

Last Updated : 22 Jun 2011 12:43:23 PM IST

கொழும்பு, ஜூன்.22: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் உயிருடன் உள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் ராஜபட்சவின் முன்னாள் ஆலோசகரும், ஆளும் கட்சி எம்பியுமான ஏ.எச்.எம்.அஸ்வர் நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை தெரிவித்ததாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இறுதிப் போரில் நந்திக் கடலில் நிகழ்ந்த மோதலின்போது பிரபாகரன் கொல்லப்பட்டபோதும், அவரது குடும்பம் பாதுகாக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் எங்கு உள்ளார்கள், அந்தத் தகவல் அவருக்கு எப்படி கிடைத்தது என்பன போன்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை என்று அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் தேதி இறந்ததாக அறிவித்தார். அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் வெளியிடவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்லஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் ராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என பத்மநாதன் தெரிவித்தார். பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் பின்னர் கடைசி மகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் செய்தி வெளியானது. அவரது உடலின் புகைப்படமும் வெளியிடப்பட்டது. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் யாருக்கும் தெரியாமல் இருந்தது.இந்த நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்டபோதும், அவரது குடும்பத்தினர் பாதுகாக்கப்பட்டதாக அஸ்வர் எம்பி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்


அங்கு உள்ள தலைவர் அவர்கள் காயங்களுடன் உள்ளதாகவும் இதை அறிந்த இந்திய இலங்கை மற்றும் சர்வேதேச உளவு நிறுவனங்கள்அங்கு தமது தேடுதலை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது பொட்டம்மான் உயிரோடு உள்ளதாக் வந்த தகவலை அடுத்து தற்போதுஇந்த தலைவர் கதையும் பெரும் பரப்பகாக பேச படுகின்றது . இன்னும் சில ஆண்டுகளில் தலைவர் அவர்கள் தமது குரல் வழி காணொளி ஊடாக மக்கள் மத்தியில் முக்கிய வரலாற்று சிறப்பு மிகு உரை ஆற்றுவார் என தெரிவிக்கபட்டுள்ளது . இறுதி யுத்தத்தில் பங்கெடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள போராளிகளால் எனக்கு இந்த தகவல் இது முக்கிய நாடு ஒன்றில் நிறுத்தி வைக்க பட்டிருந்த புலிகளின் பத்து விமானம்களும் மாயமாக மறைந்ததும் அதன் பின் புலத்தில் இவர்களது செயல்பாடு உள்ளதாக முன்னர் புலனாய்வு தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிட தக்கது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி இந்த போராளி இடம் கேட்டோம் பிரபாகரன் கொல்லப்பட்டார்னு இலங்கை ஆர்மி சொல்றதை ஏத்துக்க முடியாது. நேருக்கு நேர் சண்டை நடக்கும்போது எதிராளிகளை ஊடறுத்துச் செல்லும் வலிமைகொண்டவங்க விடுதலைப் புலிகள் அதனால் அரசியல் தீர்வு
By Pallavaram.T.Sampath
6/22/2011 3:46:00 PM
என்னமோ நடந்து மறைக்க பட்டுள்ளது, இதில் சோனியா மற்றும் ராகுலின் பங்கு என்ன ? ராஜபக்யே மட்டும் தனியாக ஒன்றும் செய்து இருக்க முடியாது
By mirudan
6/22/2011 3:33:00 PM
அண்ணன் கண்டிப்பாக வருவார், நமக்கு தமிழீழம் கிடைக்கும் . விழ விழ எழுஒம் ......
By சிலம்பு
6/22/2011 3:13:00 PM
tamilinam meendum puthuyir pera varuvar nam tamil thalaivan pudu pollivodu.
By saravanakumar
6/22/2011 2:37:00 PM
Mr. Azwer told the Media based in Colombo, that he actually meant to say that the government was looking after the family of former JVP leader Rohana Wijeweera and had made a mistake by saying Prabhakaran's family was alive. “I will be making a statement in Parliament today to clarify my statement. In the rush I had made a mistake”, he said.- Lanka guardian today.
By அவசரக் குடுக்கை
6/22/2011 2:17:00 PM
very good news
By udhayakumar
6/22/2011 2:04:00 PM
"SRI LANKA'S KILLING FIELDS" by Channel 4 - "விடுதலைப் புலிகள் தோற்க்கடிப்பட்டார்கள்" என்றுதான் கூறுகிறதே தவிர, தமிழர்கள் மத்தியில் இருக்கும் மிக முக்கியமான கேள்வியான "பிரபாகரன் கொல்லப்பட்டாரா?" என்பது பற்றி எதுவுமே கூறவில்லை. எப்படியோ? புலி ஆதரவாளர்களுக்கு ஒரு புது தெம்பு (ஆறுதல்) கிடைத்து இருக்கிறது.
By Abdul Rahman - Dubai
6/22/2011 2:04:00 PM
கிரிமினல் ராஜபக்ஷே மக்களை திசை திருப்ப செய்யும் முயற்சி இது, இன படுகொலை தொடர்பான பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி . தமிழின தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினரும் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர் என்பது மட்டும் உண்மையே .
By அன்புக்குமரன் . இந்தோனேசியா
6/22/2011 1:51:00 PM
சரி இறந்தவருக்கு ஏன் இன்னும் மரண செர்டிபிகாடே கொடுக்கப்படவில்லை... ..ஹி .ஹி..ஹி ..ஹி இந்த செய்தி பலருக்கு பேதி போகசெயும் இல்லையா?
By KOOPU
6/22/2011 1:48:00 PM
இறுதி யுத்தத்தில் பங்கெடுத்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள போராளிகளால் எமக்கு தந்த தகவல் இது பிரபாகரன் மறைவு உண்மையா பொய்யா அவன் இன்னும் உயிருடன் வாழ்கிறாரா இல்லை மறைந்து விட்டாரா இனிமேல் இலங்கை வாழ் தமிழ் மக்களின் கதி என்ன ? என பல வினாக்கள் எழுகின்றன? ... இவ்வாறு செய்திகள் வரும் நிலையில் பிரபாகரன் இறப்பில் மர்மம் நீடித்து வருகிறது ம...ேலும் தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்! மேலும் தமிழ் ஈழ தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் முக்கிய நாடு ஒன்றுக்குள் நுழைந்திருப்பதாகவும் அங்கிருந்தே புலிகளின் முக்கிய சிறப்பு தளபதிகளின் வழிகாட்டலில் சர்வேதச புலிகளின் வலை அமைப்பு இயங்கிவருகின்றது அங்கு உள்ள தலைவர் அவர்கள் காயங்களுடன
By Pallavaram.T.Sampath
6/22/2011 1:40:00 PM
it seems, taking wrong decisions, prabakaran might have decided to give up his life.
By balakrishnan
6/22/2011 1:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக