செவ்வாய், 11 அக்டோபர், 2011

Two special programmes: இரண்டு உரையாடல் நிகழ்ச்சிகள் : நிலாச்சோறு & விழுதுகள்

இரண்டு உரையாடல் நிகழ்ச்சிகள்

நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி

07.10.2011 வெள்ளிக்கிழமை
பிரித்தானிய நேரம் மாலை 06.00 மணி முதல் 08.30 வரை
இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணிவரை 

ஆயுத முனையில் புதைக்கப்படும் 
தமிழர் மரபு

நிலம், பொருளாதாரம், கலாச்சாரம் என தமிழர்களின் பாரம்பர்யமான 
அனைத்துச் செல்வாங்களும் வளங்களும் வடகிழக்கில் நிலை கொண்டிருக்கும் 
இலங்கைப் படையினரால்
அனுதினமும் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 
ஈழத்தின் கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் 
இந்தச் சூறையாடல்களைப் பற்றி இந்த வார நிலாச்சோறு நிகழச்சியில் 
பகிர்ந்து கொள்கிறார்கள்

பங்குகொள்வோர் :

பேராசிரியர் இரா. சிவச்சந்திரன்.
பேராசிரியர் சிற்றம்பலம் 
கல்வியியலாளர் அநந்தராஜ்
கவிஞர் தீபச்செல்வன்
 
குளோபல் தமிழ் நேயர்களை 
உரையாடலில் பங்கு பெற வருமாறு அழைக்கிறோம்

நிகழ்ச்சித் தயாரிப்பு
நடராஜா குருபரன்-யமுனா ராஜேந்திரன்

-----------------------------------------------------------

விழுதுகள் விசேட நிகழ்ச்சி

08.10.2011 சனிக்கிழமை
பிரித்தானிய நேரம் மாலை 05.00 மணி முதல் 08.30 வரை
இலங்கை-இந்திய நேரம் இரவு 09.30 முதல் 01.00 வரை

சாதீயமும் தமிழ்த் தேசியமும் : 
தலித் இயக்கங்களின் தலைவர்கள் உரையாடுகிறார்கள்

தமிழகத்தின் மூன்று தலித் பேரியக்கங்களான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 
புதிய தமிழகம் மற்றும் ஆதித்தமிழர் பேரவை என்பன 
ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும், 
ஈழமக்களின் பால் பரிவுள்ள இயக்கங்கள். 
ஈழத்தையும்; தமிழகத்தையும் சேர்ந்த 
மிகச் சிறுபான்மை அரசியல்வாதிகள் 
சாதீயத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் இருக்கும் 
உறவையும் முரணையும் இலங்கை அரசுக்கு ஆதரவான 
தமது கொள்கை நிலைப்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள். 
இச்சூழலில், தலித் இயக்கங்களின் முப்பெரும் தலைவர்கள் 
சாதீயத்திற்கும் தமிழ் தேசியத்திற்குமான 
உறவையும் முரணையும் தமது அனுபவங்களில் இருந்து 
எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதனை 
இந்த வார விழுதுகள் நிகழ்ச்சியினூடே 
நம்முடன் பகிர்ந்து கொள்ள வருகிறார்கள்

கலந்து கொள்வோர் :

தொல். திருமாவளவன்
தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

டாக்டர். பா.கிருஷ்ணசாமி
தலைவர்
புதிய தமிழகம் கட்சி

அதியமான்
தலைவர்
ஆதித் தமிழர் பேரவை

குளோபல் தமிழ் வானொலி நேயர்களை உரையாடலில் பங்கு பெற வருமாறு அழைக்கிறோம்.

நிகழ்ச்சித் தயாரிப்பு
நடராஜா குருபரன்-யமுனா ராஜேந்திரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக