வியாழன், 21 ஜூலை, 2011

Ilangai music programme - mano cancelled: இலங்கை இசை நிகழ்ச்சியைநீக்கினார் மனோ

இலங்கை இசை நிகழ்ச்சியை ரத்து செய்தார் மனோ

First Published : 21 Jul 2011 01:35:00 AM IST


சென்னை, ஜூலை.20: இசை நிகழ்ச்சி நடத்த இலங்கைக்குச் சென்ற பாடகர் மனோ குழுவினருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து இசை நிகழ்ச்சியை நடத்தாமல் சென்னை திரும்பியுள்ளனர்.  இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிபர் ராஜபட்ச தமிழர்களின் வாக்குகளைப் பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிபர் ராஜபட்சவுடன் 24 அமைச்சர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பெரும்பாலான தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாக்குகளைப் பெற்றால்தான் ராஜபட்சவின் கட்சி பெரும்பான்மையைப் பிடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.  இந்நிலையில், தமிழ் இசைக் குழுவினரை வைத்து தமிழர்களின் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட ராஜபட்ச திட்டமிட்டார். இதற்காக பின்னணி பாடகர்கள் மனோ, கிரீஷ், சுசித்ரா, நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு அழைக்கப்பட்டனர். அனைவரும் புதன்கிழமை இலங்கை சென்றனர். இதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் பாடகர் மனோவைத் தொடர்பு கொண்டு அங்குள்ள சூழல் குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து இசை நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டு புதன்கிழமை இரவு சென்னை திரும்பினார் பாடகர் மனோ.  இது குறித்து பாடகர் மனோவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ""விளையாட்டு மைதானம் திறப்பு விழாவையொட்டி நடக்கும் இசை நிகழ்ச்சி என்றுதான் இலங்கை சென்றோம். தேர்தல் பிரசாரத்துக்காக என்று தெரிந்திருந்தால் சென்றிருக்க மாட்டோம். தேர்தல் பிரசாரம் என்று சொல்லாமலேயே எங்களை அழைத்தார்கள். இலங்கை அரசின் சார்பில் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியாது. தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்றார் மனோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக