mano லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mano லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜூலை, 2011

Ilangai music programme - mano cancelled: இலங்கை இசை நிகழ்ச்சியைநீக்கினார் மனோ

இலங்கை இசை நிகழ்ச்சியை ரத்து செய்தார் மனோ

First Published : 21 Jul 2011 01:35:00 AM IST


சென்னை, ஜூலை.20: இசை நிகழ்ச்சி நடத்த இலங்கைக்குச் சென்ற பாடகர் மனோ குழுவினருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து இசை நிகழ்ச்சியை நடத்தாமல் சென்னை திரும்பியுள்ளனர்.  இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிபர் ராஜபட்ச தமிழர்களின் வாக்குகளைப் பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிபர் ராஜபட்சவுடன் 24 அமைச்சர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பெரும்பாலான தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாக்குகளைப் பெற்றால்தான் ராஜபட்சவின் கட்சி பெரும்பான்மையைப் பிடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.  இந்நிலையில், தமிழ் இசைக் குழுவினரை வைத்து தமிழர்களின் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட ராஜபட்ச திட்டமிட்டார். இதற்காக பின்னணி பாடகர்கள் மனோ, கிரீஷ், சுசித்ரா, நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு அழைக்கப்பட்டனர். அனைவரும் புதன்கிழமை இலங்கை சென்றனர். இதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் பாடகர் மனோவைத் தொடர்பு கொண்டு அங்குள்ள சூழல் குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து இசை நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டு புதன்கிழமை இரவு சென்னை திரும்பினார் பாடகர் மனோ.  இது குறித்து பாடகர் மனோவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ""விளையாட்டு மைதானம் திறப்பு விழாவையொட்டி நடக்கும் இசை நிகழ்ச்சி என்றுதான் இலங்கை சென்றோம். தேர்தல் பிரசாரத்துக்காக என்று தெரிந்திருந்தால் சென்றிருக்க மாட்டோம். தேர்தல் பிரசாரம் என்று சொல்லாமலேயே எங்களை அழைத்தார்கள். இலங்கை அரசின் சார்பில் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியாது. தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்றார் மனோ.

Mano programme cancelled: இலங்கையில் பாடகர் மனோவின் நிகழ்ச்சி நீக்கம்

மனோ குழுவினர்க்குப் பாடவும் மட்டுமல்ல, நன்றாக நடிக்கவும் தெரிந்திருக்கிறது. எனினும் நடிப்பிற்குப் பரிசாக ஓர் ஐந்தாண்டுக் காலம் தமிழ்த்திரையுலகம் இவர்களைப் புறக்கணித்தால் பிறருக்கும் பாடமாக  இருக்கும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

வைகோ, நெடுமாறன் எதிர்ப்பு: 
இலங்கையில் பாடகர் மனோவின் நிகழ்ச்சி ரத்து

First Published : 20 Jul 2011 04:47:01 PM IST


கொழும்பு, ஜூலா.20: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கிளிநொச்சியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாடகர் மனோ குழுவினர் உடனடியாக நிகழ்ச்சியை ரத்துச்செய்ததாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.இலங்கையில் கிளிநொச்சியில் உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அந்த நாட்டின் அதிபர் ராஜபட்ச பங்கேற்கிறார். அந்த பிரச்சாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் ராஜபட்சவுடன் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.இதனை ஏற்று இன்று காலை மூன்று பேரும் சென்னையில் இருந்து கொழும்பு சென்றடைந்தனர். இந்த நிலையில் மனோ உள்ளிட்ட மூன்று பேரின் பயணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபட்சவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ததாக அந்த செய்தி தெரிவிக்கிறது.மேலும், கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடிய திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களைக் கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் ராஜபட்ச கலந்து கொள்கிறார் என்று தெரிந்தது.நாங்கள் கொழும்பில்தான் இருந்தோம். கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என பாடகர் மனோ தெரிவித்ததாக அந்த இணையதளச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்துகள்

மனோ அவர்கள் செய்தியை அறிந்ததும் எடுத்த முடிவே அவரின் நியாயமான தமிழ் மக்கள் ஆதரவு நிலைப்பாட்டினை காட்டுகிறது. மனோ அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துக்கள்...!
By அய்யன்பேட்டை தனசேகரன்
7/20/2011 8:46:00 PM
இப்படியெல்லாம் செய்வதால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படாது. இலங்கையிலுள்ள எல்லா இனத்தவரோடும் பகைமையின்றி சேர்ந்து வாழ்வதுதான் அங்குள்ள தமிழர்களுக்கு நல்லது. அதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். இலங்கைத் தமிழர்களுகாக தமிழ்நாட்டில் ஒரு வேலையற்ற கும்பல் கூச்சலிடுவது அவர்களுக்கு கேடு விளைவிக்கும்.
By Jevee
7/20/2011 8:18:00 PM
இந்த பயம் எல்லாருக்கும் வேணும் .
By செந்தில்
7/20/2011 7:43:00 PM
நன்றி மனோ குழுவினர்களுக்கு. நிகழ்ச்சியை இரத்து செய்து நாடு திரும்பியதற்கு. தமிழ் மக்களின் உணர்வை மதிபதாக நாம் உங்களை கருதுகிறோம்.
By சுதாகர்
7/20/2011 6:55:00 PM
உண்மையில் திரும்பி வந்தால் உணர்வுள்ளவர்களே!
By பாஞ்சை வேந்தன்
7/20/2011 5:56:00 PM
நல்லது பாடகர் மனோ குழுவுக்கு எங்கள் வாழ்த்துக்கள் பிரித்தானிய தமிழர்கள்
By RATHAN
7/20/2011 5:54:00 PM