சனி, 23 ஜூலை, 2011

இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி: முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது

இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சி: முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது

First Published : 23 Jul 2011 02:19:13 AM IST


குன்னூர், ஜூலை 22: குன்னூர் ராணுவ முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு ரகசியமாகப் பயிற்சி அளித்து வருவதற்குக் கண்டனம் தெரிவித்து, ராணுவ முகாமை முற்றுகையிட முயன்ற 150-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.  ÷இலங்கை ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு குன்னூரில் ராணுவ முகாம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களை இந்திய ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை குன்னூர் ராணுவ முகாமிற்கு அழைத்து சென்றனர்.  ÷தகவல் அறிந்த "நாம் தமிழர்' கட்சியின் கோவை மாவட்ட அமைப்பாளர் இரா.ஆனந்தராசு, பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் து.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்டவர்கள் குன்னூர் எம்.ஆர்.சி ராணுவ முகாமை முற்றுகையிடுவதற்காக மானெக்க்ஷô பாலத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக