music troop லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
music troop லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜூலை, 2011

Ilangai music programme - mano cancelled: இலங்கை இசை நிகழ்ச்சியைநீக்கினார் மனோ

இலங்கை இசை நிகழ்ச்சியை ரத்து செய்தார் மனோ

First Published : 21 Jul 2011 01:35:00 AM IST


சென்னை, ஜூலை.20: இசை நிகழ்ச்சி நடத்த இலங்கைக்குச் சென்ற பாடகர் மனோ குழுவினருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து இசை நிகழ்ச்சியை நடத்தாமல் சென்னை திரும்பியுள்ளனர்.  இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிபர் ராஜபட்ச தமிழர்களின் வாக்குகளைப் பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிபர் ராஜபட்சவுடன் 24 அமைச்சர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பெரும்பாலான தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாக்குகளைப் பெற்றால்தான் ராஜபட்சவின் கட்சி பெரும்பான்மையைப் பிடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.  இந்நிலையில், தமிழ் இசைக் குழுவினரை வைத்து தமிழர்களின் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட ராஜபட்ச திட்டமிட்டார். இதற்காக பின்னணி பாடகர்கள் மனோ, கிரீஷ், சுசித்ரா, நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு அழைக்கப்பட்டனர். அனைவரும் புதன்கிழமை இலங்கை சென்றனர். இதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் பாடகர் மனோவைத் தொடர்பு கொண்டு அங்குள்ள சூழல் குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து இசை நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டு புதன்கிழமை இரவு சென்னை திரும்பினார் பாடகர் மனோ.  இது குறித்து பாடகர் மனோவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ""விளையாட்டு மைதானம் திறப்பு விழாவையொட்டி நடக்கும் இசை நிகழ்ச்சி என்றுதான் இலங்கை சென்றோம். தேர்தல் பிரசாரத்துக்காக என்று தெரிந்திருந்தால் சென்றிருக்க மாட்டோம். தேர்தல் பிரசாரம் என்று சொல்லாமலேயே எங்களை அழைத்தார்கள். இலங்கை அரசின் சார்பில் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியாது. தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்றார் மனோ.

வியாழன், 28 ஏப்ரல், 2011

டென்மார்க்கின் அரசவைப் பாடல் குழு இந்தியா வருகை

தமிழ் நாட்டிலிருந்தும் இவ்வாறு உலக நாடுகளுக்கு அனுப்பலாம். ஆனால் அதில் தமிழிசை இருக்காது; தமிழ்க்கலை இருக்காது; தமிழ்ப்பண்பாட்டை  எதிரொலிக்காது. என்றாலும் அப்படி ஒரு காலம் வராமலா போகும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
டென்மார்க்கின் அரசவை பாடல் குழு இந்தியா வருகை

First Published : 28 Apr 2011 12:49:00 AM IST


புது தில்லி, ஏப். 27: டென்மார்க்கின் அரசவை பாடல் குழுவினர், முதன் முறையாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர். அங்குள்ள கோபன்ஹென் ராயல் பிரார்த்தனைக்கூடத்தின் புகழ்பெற்ற இப்பாடல் குழுவினர், இந்தியாவின் டென்மார்க் தூதரகத்துடன் இணைந்து, வரும் மே 10-ம் தேதி இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். இதற்கு முன்னர் நான் இந்தியாவுக்கு வந்ததில்லை என்றாலும், இங்கு, பாடல் குழு என்பது அதிக அளவில் பிரபலமில்லாத ஒன்று என கேள்விப்பட்டுள்ளேன். இருப்பினும், இந்திய மக்கள் எங்கள் இசையை ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்கிறார், இந்த இசைக்குழுவின் இயக்குனரும், நடத்துனருமான எபிமுன்க். சைனா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்றுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தாலும், இந்தியாவில் உள்ள இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது பெரிய விஷயம் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் இசை மேதைகளான பாலமுரளி கிருஷ்ணா, பண்டிட் ரவிஷங்கர் ஆகியோருடன் சேரும் வாய்ப்பு அமையும் என்றும் தெரிவித்தார். உலகப்புகழ்பெற்ற தாஜ்மஹாலைப் பார்க்க எங்கள் குழுவினர் ஆவலாக உள்ளோம். அந்த காதல் நினைவுச் சின்னம் முன்பாக இசைக்க வேண்டும் என்பது எங்கள் பேராவல். அடுத்த முறை இந்தியா வரும்போது அது நிறைவேறும் என எபிமுன்க் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 1924ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பாடல்குழு தற்போது பல்வேறு நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. புகழ்பெற்ற கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இந்த பாடல்குழு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பழமையான பாரம்பரியமிக்க பாடல் குழுக்களில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பேராலய இசைக்குழுக்களும், இசைப்பள்ளிகளும் முக்கியமானவை. இவற்றில் டென்மார்க், நார்வே, ஸ்வீடன் ஆகிய வடக்கு ஐரோப்பிய பகுதியின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் செயல்பட்டு வரும் பாடல் குழுக்களில் கோபன்ஹென் பேராலய இசைக்குழு முக்கிய ஒன்றாக திகழ்கிறது.