வியாழன், 21 ஜூலை, 2011

thamizh kappu kazhagam: தமிழ்க்காப்புக்கழகம்

தமிழ்க்காப்புக்கழகம்

பதிவு செய்த நாள் : July 16, 2011


நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்!
உலகத் தமிழன்பர்களே!
தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.
  • தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து   எழுதவோ மாட்டேன்.
  • தமிழ் அறிந்தவர்களுடன் தமிழிலேயே பேசுவேன். தமிழ் அறியாதவர்களைத் தமிழ் அறியச் செய்வேன்.
  • வணக்கத்தையும் வாழ்த்தையும் தமிழிலேயே சொல்வேன்.
  • தமிழ் வழிக் கல்விக்கு என்னால் இயன்ற கருத்துப் பரப்பலையும் உதவியையும் ஆற்றுவேன்.
  • எல்லாத் துறைகளிலும் தமிழ் தலைமையிடம் பெறவும் தமிழர் முதன்மையிடம் பெறவும் இயன்றவரை உதவுவேன்.
  • பெயரின் தலைப்பெழுத்தையும் தமிழிலேயே குறிப்பிடுவேன்.
  • தமிழிலேயே கையொப்பமும் சுருக்கொப்பமும் இடுவேன்.
  • தமிழ்அறிஞர்களையும் தமிழ்க்கலைஞர்களையும் போற்றுவேன்.
  • தமிழ்மொழி பிற மொழிகளுக்கு இணையான சம வாய்ப்பைப் பெற உதவுவேன்.
  • தமிழர் பிற இனத்தவர்க்கு இணையான சம உரிமை பெற உழைப்பேன்.

படிவம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக