திங்கள், 18 ஜூலை, 2011

Maraimalai adigal birthday function: மறைமலை அடிகள் பிறந்தநாள் விழா

பெரம்பலூர்: பெரம்பலூரில் உலக தமிழ் கழகம் சார்பில் மறைமலை அடிகளாரின் 135வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட தலைவர் புலவர் செம்பியன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பாவலர் ஆடல் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பூங்குன்றன் மறைமலை அடிகளின் உருவபடத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். இதில், மகிழ்வேந்தன், அரங்கசெங்கொடி, இணை செயலாளர் செல்வம், அமுதன் உட்பட பலர் பேசினர். கவிஞர் அகவி தனித்தமிழும், மறைமலை அடிகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவை முன்னிட்டு தூய தமிழ் பெயர்களைக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக முகிலன் வரவேற்றார். பொருளாளர் காப்பியன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக