புதன், 23 பிப்ரவரி, 2011

Refused loan to tamil med.eng.student: தமிழைத் தேர்வு செய்ததால் வங்கிக் கடன் மறுப்பு: படிப்பிற்கு முழுக்கு போடபொறி.மாணவர் முடிவு

இப்படிப் பாலமுருகன்கள் பலர் இருக்க வேண்டும். இச் செய்தியை வெளியிட்ட தினமலருக்குப் பாராட்டுகள். அரசு உடனே தலையிட்டு உரிய கடன் உதவி அளிக்கவும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய வேண்டும். தமிழ் வழிப் பயில்வோர் வேலைக்கு உறுதி அளிக்க வேண்டும்.  தமிழ் வழி மாணவர்க்கான கட்டணைத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
<  தமிழே விழி! தமிழா விழி! >
 
ராமநாதபுரம் : "தமிழைத் தேர்வு செய்த இன்ஜினியரிங் மாணவருக்கு, வங்கிக் கடன் வழங்க முடியாது' என, அதிகாரிகள் கைவிரித்து விட்டதால், படிப்புக்கு முழுக்கு போடும் நிலையில் மாணவர் உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(18). தந்தை கைவிட்ட நிலையில், தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். பிளஸ் 2 தேர்வில் 819 மதிப்பெண் எடுத்து, கவுன்சிலிங் முறையில் பட்டுக்கோட்டை ராஜா மடம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., மெக்கானிக்கல் பயின்று வந்தார். இதற்கு தமிழ் மொழியை தேர்வு செய்தார். படிப்பு செலவுக்காக, முதுகுளத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். வங்கியில் முறையான தகவல் இல்லை. காலம் கடந்த நிலையில், பண நெருக்கடி ஏற்பட்டதால், உதவி கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.அங்கு நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், முன்னோடி வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். "தமிழைத் தேர்வு செய்ததால் கண்டிப்பாக வேலை கிடைக்கப் போவதில்லை. இதற்கு எப்படி கடன் தர முடியும்?' என, அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

விரக்தி அடைந்த பாலமுருகன் கூறியதாவது:தமிழ் செம்மொழி மாநாடு நடத்திய தமிழகத்தில், தமிழைத் தேர்வு செய்ததற்காக கடன் உதவி தர மறுக்கின்றனர்; வேலை கிடைக்காது என பேசுகின்றனர். அதிகாரிகளே இப்படி இருந்தால் எப்படி முறையிட முடியும்? எனக்கு பணம் கிடைக்காத பட்சத்தில், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
 

வாசகர் கருத்து (18)
Kavee - Jeddah,சவுதி அரேபியா
2011-02-22 11:01:38 IST Report Abuse
மேடைக்கு மேடை, டிவி க்கு டிவி, கல்யாணம், கருமாதின்னு கூட பாக்காமல் வாய் கிழிய தமிழ் தமிழ்னு கத்தி தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஆட்சியாளர்களே அரசியல்வாதிகளே இந்த செய்தி படிச்சீங்களா? ராமநாதபுரம் தமிழ் நாட்டுலே தானே இருக்கு வங்கி அலுவலர்களின் வார்த்தை கேட்டீர்களா!!! இவரை போல எத்தனை எத்தனை படித்த / படிக்க ஆசை படும் இளைன்ஞர்கள் தமிழ் நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்காததால் படும் வேதனை ........ சொல்லி மாளாது மாணவ மணிகளே இந்த வீணர்களின் பேச்சை நம்பி எதி காலத்தை கோட்டை விட்டு விடாதீர்கள் .... அவனவன் அவன் குடும்பம் நலனுக்குத்தான் ...நாமும் நம் வளத்துக்கு மட்டும்... இனி யாரை நம்பியும் பயன் இல்லை ..... நமக்கு நாமே
  • Rate it:
  • 4
  •  
  • 2
Share this comment
Raja Durairaj - Singapore,சிங்கப்பூர்
2011-02-22 10:59:20 IST Report Abuse
அட கொடுமையே ! தமிழுக்கு இது சாப கேடு
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
Johnson Ashok - ooty,இந்தியா
2011-02-22 10:46:07 IST Report Abuse
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்த பாலமுருகன்(18) என்பவருக்கு வங்கி கடன் கிடைக்காமல் போனதற்கு வருந்துகிறேன். தமிழ் தமிழ் என்று பறைசாற்றுவது வெறும் பெயரளவில் இருகின்றதே தவிர, அதை முழுமையாக செயல்படுத்தவதில் பலர் முன் வருவதில்லை. தமிழ் என்றால் வேலையே இல்லை என்று சொல்லி உதவி செய்யாமல் விட்டு விடுவது மிகவும் வருத்ததிற்குரியது.
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
Michael - Singapore,சிங்கப்பூர்
2011-02-22 10:44:25 IST Report Abuse
நான் ஒரு தாய்மொழி ஆர்வலன். மக்கள் அனைவரும் அவரவர் தாய்மொழியை தாயைப் போல கருத வேண்டும் என்று நினைக்கிறவன். ஆனாலும் கூட, தற்போதைய சூழ்நிலையில் தமிழில் பொறியியல் கல்வி கற்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. முதலாவதாக, விரும்புகிறோமோ இல்லையோ, உலகத்தோடு ஒன்றிணைய ஆங்கிலம் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. கணக்கற்ற எண்ணிக்கையில், ஆங்கிலத்தில், உலகின் ஒவ்வொரு மூலையிலிமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அவற்றை தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்ய நமக்கு வளங்கள் இல்லை, குறிப்பாக நேரமில்லை. இந்தி வேண்டாம் என்று நம் உணர்வுப்பூர்வமான, அறிவுப்பூர்வமான நிலைப்பாடு வெற்றி பெற வேண்டுமென்றால், நம் பிள்ளைகள் ஆங்கிலத்தில் உச்ச தேர்ச்சி அடைந்தேயாக வேண்டும். அதற்கு இடைஞ்சலாக இந்த தமிழ் வழி பொறியியல் படிப்பு இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த மாணவன், இப்படி ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. வங்கி, இப்படி ஒரு காரணத்தை கூறி இருப்பது அதிகப்பிரசங்கித்தனம். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பது நமது அரசாங்கத்தின் தெளிவற்ற நிலையையே எடுத்துக் காட்டுகிறது. என் நிலைப்பாடு இதுதான்: தாய் மொழி தமிழை உணர்வுப்பூர்வமாக கற்றுத் தேருங்கள். ஆங்கிலத்தை, உலகுடன் ஒன்றுவதற்கு, அறிவுபூர்வமாக கற்றுத் தேருங்கள். உணர்வுடனும் அறிவுடனும் வாழும் தமிழ் மாந்தருக்கு, தமிழும் ஆங்கிலமும் இரு கண்கள்.
  • Rate it:
  • 8
  •  
  • 2
Share this comment
Pamaran A - chennai,இந்தியா
2011-02-22 10:41:38 IST Report Abuse
உண்மை சுடுகிறதோ ...?
  • Rate it:
  • 0
  •  
  • 3
Share this comment
Balasubramanian - chennai,இந்தியா
2011-02-22 09:48:20 IST Report Abuse
பாலமுருகனுக்கு மட்டும் இது போன்று நடக்கவில்லை நண்பர்களே, வங்கிகள் கடன் கொடுக்க மாட்டோம் என்பதற்கு காரணங்களைத் தேடுகிறார்கள். தம்பி பாலமுருகா ஆர் பி ஐ இல் புகார் செய்யுங்கள். உங்களுக்கு வங்கிக் கடன் உறுதியாக கிடைக்கும். வழிகாட்டு உதவி தேவை எனில் www.ssda2009.blogspot.com.இந்த வலைத்தளம் உதவும். இவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள் email - ssadbookbank@yahoo.in
  • Rate it:
  • 5
  •  
  • 0
Share this comment
Mansoor - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-02-22 09:41:02 IST Report Abuse
இதுக்கு நம்ம தமிழ் காவலர் என்ன சொல்றார்? - " இதை வங்கியிடம் போய் கேளுங்கள்" - என்று பதில் அளித்துவிடுவார்
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment
gomshankar vetrivel - singapore,சிங்கப்பூர்
2011-02-22 09:18:22 IST Report Abuse
தயவு செய்து பாலமுருகனுக்கு உதவி செய்ய முன் வரலாமே! நடப்பவைகளுக்கு நாமும் நம்மை சுற்றி இருக்கும் தமிழ் சமூகம் ஒரு காரணம் தான். எந்த வித ஒருங்கிணைந்த எதிர்ப்போ கருத்தோ ஒற்றுமையோ இல்லை. என்ன நடந்தாலும் தமிழகமே வீழ்ந்தாலும் விமர்சனம் செய்ய தவறுவதில்லை, மாறாக இனிமேல் நடக்காமிருக்க என்ன செய்யலாம் என்று யோசிப்போம் செய்வோம்.
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
PR Makudeswaran - madras,இந்தியா
2011-02-22 09:09:04 IST Report Abuse
தமிழ் பற்று வேண்டியதுதான்!! ஆனால் வாழ்க்கை பயணத்திற்கு தமிழ் அறிவு மட்டும் கை கொடுக்காது ?அரசியல்வாதிகள் மொழி பற்றி பேசுவார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு எல்லா மொழி அறிவும் கிடைக்க வழி வகை செய்வார்கள். நாம் அவர்களை பின்பற்றினால் நம் கதி அதோ கதிதான்.வங்கி பொருளாதாரம் என்பது நாட்டின்,நம் மக்களின் பொருளாதாரம். அதை காக்க வேண்டும்.கடன் கொடுத்தால் அதை திருப்பி செலுத்த வேண்டும்.அப்பொழுதான் அடுத்த நபருக்கு கடன் வாய்ப்பு கிடைக்கும். வங்கி பணத்தை கொள்ளை அடிக்கும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அடியோடு களை எடுத்தே ஆக வேண்டும் .
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
°ღ• ŚÁŤℋℐŶÁ ÁℛÚПÁČℋÁĹÁ� - tirunelveli ,இந்தியா
2011-02-22 08:51:18 IST Report Abuse
யாரோ ஒரு சில குள்ள நரிகளின் தந்திர வாழ்விற்கு இலக்கு இளைய சமுதாயம். இதை உணர தாமதமாகும் போது காலம் வெகு தூரம் கடந்திருக்கும். இளைஞனே இனியாவது விழித்திரு. கயவர் யார்? கள்வன் யார்? காரியவாதி யார்? என அலசி உன் வாழ்வுக்கும் சமுதாய வாழ்வுக்கும் சரியான ஒரு தீர்ப்பு வழங்கு. உன் ஒட்டு குள்ள நரி கூட்டத்திற்கு வைக்கும் வேட்டு.
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
par ban - london,யுனைடெட் கிங்டம்
2011-02-22 07:10:43 IST Report Abuse
எல்லாம் கலைஞர் செயல், கலைஞர் இருக்க பயம் ஏன்?
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment
sathya / ilangai - colombo,இலங்கை
2011-02-22 07:09:50 IST Report Abuse
மஞ்ச துண்டு "செந்தமிழ்" மாநாட்டு செலவு செய்த பணத்த இங்க குடுத்தா அட்லீட்ஸ் ஒரு குடும்பமாவது பொழைக்கும்.."election " சமயத்துல இந்த நியூஸ் வந்தது நல்லதா போச்சு...டவுசர் தாஸ் லருந்து, தா.பாண்டியன் வரைக்கும் queue ல நின்னு இவருக்கு பணம் குடுப்பாங்க, அந்த வங்கி அதிகாரிக்கு ஆப்புதான்...இதுதான் அரசியல்...சரி நான் வர்றேன் விஜயகந்த் கூவறாரு
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment
Mohd. Rias - Kuala Lumur,மலேஷியா
2011-02-22 05:12:45 IST Report Abuse
வங்கி அதிகாரிகள் மக்கள் பணத்தில் விளையும் காளான்கள். ஆனால், ஏழைகள் மீது இளக்காரம்.
  • Rate it:
  • 20
  •  
  • 3
Share this comment
Srinivasan N - chennai ,இந்தியா
2011-02-22 05:01:51 IST Report Abuse
மஞ்ச துண்டை போல் தமிழில் படியுங்கள் வாழலாம் என்ற தவறான உபதேசத்தை தராத அதிகாரிகளை பாராட்டுகிறேன்...மாணவரின் கல்வி பாதிக்காத வகையில் வேறு உதவிகளை செய்திருக்கலாம்..
  • Rate it:
  • 18
  •  
  • 7
Share this comment
Govind - Delhi,இந்தியா
2011-02-22 04:19:20 IST Report Abuse
இந்த அளவுக்கு மாணவனின் மனதை நோகடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .. என்னுடைய நண்பர்கள் ஆங்கிலத்தில் படித்தவர்கள் தமிழ் நாட்டின் மிக சிறந்த கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டபடிப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் சில வருடம் காத்திருந்ததை நானே பார்த்திருக்கிறேன் ..அப்படி இருக்கும் போது இந்த அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் மன்னிக்க முடியாது
  • Rate it:
  • 26
  •  
  • 4
Share this comment
AMMIYA - DENHEDLER,நெதர்லாந்து
2011-02-22 03:54:00 IST Report Abuse
இது நல்ல அழகான வேடிக்கையா இருக்கிறது......பாலமுருகன் சொன்னதுபோல செம்மொழி தமிழாம் என்று கோடிக்கணக்கில் செலவுசெய்து நடாத்தினார்கள்???????..ஆனால்,தமிழ் காத்தில பறந்து விட்டது.....வெறும் வாய்ச சவால் தானா?...பாலமுருகனுக்குக் கலைகுடும்பம் பதில் சொல்லுமா?அல்லது பே..பே.. தானா??????
  • Rate it:
  • 28
  •  
  • 2
Share this comment
KADAYANALLUR SHAHUL HAMEED - LONDON,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
2011-02-22 01:33:39 IST Report Abuse
TAMIL COULD BE BETTER THAN MOST LANGUAGES IN THE WORLD IN MANY WAYS. BUT PRACTICALLY OUR POLITICIANS DID NOT RAISE ANY CAREER PROSPECTS FOR THE TAMIL ASPIRANTS. WE ALL TAMILS SHOULD UNDERSTAND THAT WE MUST NEVER EVER TRUST POLITICIANS REGARDING TAMIL. IF THEY SHOUT ABOUT TAMIL, IT MEANS VOTES. TAMIL CONFERENCES ARE JUST FOOLING AROUND THE PEOPLE. I KNOW KARUN USING ENGLISH WORDS DURING PRESS INTERVIEWS TEN YEARS BACK. LEARN AS MANY LANGUAGES AS YOU CAN. OR PREPARE YOURSELF FOR THE WORST CONSEQUENCES




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக