புதன், 10 நவம்பர், 2010

மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் தினமணி

மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் தினமணி தவறான செய்தியின் அடிப்படையில் இந்த ஆசிரியவுரையை அமைத்துள்ளது. இணையப் பக்கத்தில் இத்தவறு பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் முனைவர் பா.வளனரசு , முனைவர் பா.இறையரசன். முனைவர் தில்லைக்குமரன். முனைவர் நக்கீரன். முனைவர் அருள் நடராசன் என எண்ணற்றோர் தினமணிக்கும் தனியாக மடல்கள் அனுப்பியுள்ளனர். எனவே, தினமணி தன்னுடைய தவறான செய்தியை உணர்ந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். திரு வைத்தியநாதன் பைத்தியநாதன் போல் எழுத மாட்டார்.எனவே, எழுதியவர் மூலமே வருத்தம் தெரிவித்தல் சிறப்பாகும். தற்போது பாட நூல்களிலும் ஒருங்குறி தொடர்பான ஆணையிலும் உள்ள கிரந்த எழுத்துகளு்ம் அகற்றப்பட வேண்டும் என்னும் உணர்வை ஏற்படுத்திய வகையில் ஆசிரியவுரைக்கு நன்றி. தமிழ்க்காப்பு அமைப்புகள் சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2010 1:46:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக