ஞாயிறு, 7 நவம்பர், 2010

தமிழ் கற்கும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: இலங்கை அரசு


கொழும்பு, நவ.6: இலங்கையில் பேசப்படும் தமிழ் உள்பட பிற மொழிகளை கற்றுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இலங்கையில் பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு சிங்கள மொழியைத் தவிர வேறெந்த மொழியும் தெரியவில்லை. இதுபோன்றவர்கள் மக்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் சிரமப்படுகின்றனர். எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் பிற மொழிகளையும் கற்றுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.அரசின் இந்த நடவடிக்கை மூலம் அரசு ஊழியர்கள் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் கிழக்குப் பகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்வார்கள். இனிமேல் தமிழ் மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்ற இடைவெளி இருக்காது என்றும் அந்நாட்டு அரசு நம்புகிறது.இலங்கையில் இப்போது நிலவும் பல பிரச்னைகளுக்கு அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் இடையே உள்ள தகவல் பரிமாற்ற இடைவெளியே முக்கிய காரணமாக உள்ளது. அரசு ஊழியர்கள் பிற மொழிகளையும் கற்றுக்கொண்டால் பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜெயரத்னே தெரிவித்தார்.
கருத்துகள்

தமிழ உட்படப் பிற மொழிகள் என்றால் வேறு என்னென்ன மொழிகள் அங்குப் பேசப்படுகின்றன? எனினும் சிங்கள அரசு ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்னும் திட்டம் ஒன்றும் புதியதல்ல. எனவே, வெற்றறிவிப்பின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம். பெயர்கள். கடைகள். பொருள்கள் பெயர்களைச் சிங்கள மொழியில் மட்டும் எழுதி வரும் சிங்கள அரசு தன் நாட்டில் தமிழ் மட்டும் அல்ல; வேறு பிற மொழிகளும் உள்ளன;அனைத்திற்கும் சம வாய்ப்பு அளிக்கிறோம் எனப் பொய்யான தகவலைப் பரப்ப முயலுகிறது. 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
11/7/2010 4:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக