செவ்வாய், 9 நவம்பர், 2010

இலங்கையில் கைதிகள்- ககாவலர் மோதல்


இலங்கையில் கைதிகள்-போலீஸ் மோதல்: 42 பேர் காயம்


கொழும்பு, நவ.7: இலங்கையில் உள்ள வெளிக்கடை சிறைக்குள் கைதிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்தது. இதில் 42 பேர் காயமடைந்தனர்.இலங்கையில் உள்ள பெரும்பாலான சிறைகளுக்குள் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக போதைத் தடுப்பு போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறைகளுக்குள் மூன்று வாரங்களுக்கு முன்பு திடீர் சோதனை தொடங்கி நடந்து வருகிறது.ஞாயிற்றுக்கிழமை வெளிக்கடை சிறைக்குள் சோதிக்க வந்த போதைத் தடுப்பு போலீஸôர், சிறைகளுக்குள் இதுவரை நடத்திய சோதனையில் கணிசமான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 11,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.இதைக்கேட்ட கைதிகள் ஆத்திரம் அடைந்தனர். தங்களையும் போலீஸôர் கைது செய்து விசாரிக்க அழைத்துச் சென்றிடுவார்களோ என்று அச்சம் அடைந்து போலீஸôர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீஸôரும் தாக்குதல் நடத்தினர். இதனால் சற்று நேரம் சிறை கலவரக் களமாக காட்சி அளித்தது. இதில் 42 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்களில் போலீஸôர் எத்தனை பேர், கைதிகள் எத்தனை பேர் என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. காயமடைந்தவர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்

போதைப்பொருள் கடத்தியவர்களில் 11000 பேர் சிறையில் அடைக்கப்பட்டு அவர்களில் ஒரு பகுதியினர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். செய்தியில் இடம் பெற்றவாறு சிறையில் போதை வைத்திருந்த 11000 பேர் கைது செய்யப்படவில்லை.சிறைக்குள் இருப்பவர்களை மீண்டும் கைது செய்ய வேண்டிய தேவை என்ன? செய்தியைச் சரிபார்த்து உள்ளவாறு வெளியிடவும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 4:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக