சனி, 23 அக்டோபர், 2010

600 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கேட்க கருணா மறுப்பு

கொழும்பு, அக்.22- இலங்கை கிழக்குப் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 600 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அமைச்சரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியுமான கருணா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் உத்தரவின் பேரில், நியூட்டன் என்பவரே 600 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்கொண்டார் என்றும், அதனால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கருணா கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.ஆனாலும், அச்சம்பவம் நடைபெற்ற போது கிழக்குப் பகுதிக்கான புலிகளின் தளபதியாக இருந்தவர் கருணா தான் என்பதால் அச்சம்பவத்துக்கு அவரே பொறுப்பு என்று கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் என்னும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றம்சாட்டியுள்ளார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தமிழர்க்கு வஞ்சகம் இழைத்ததே, துரோகம் செய்ததே மன்னிப்பு கேட்டதற்குச் சமம்தான். எனினும் இதன்மூலம் பிள்ளையான் கருணா மோதல் வலுக்கலாம். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 3:23:00 AM
ரிஜி.கரியாப்பட்டினம், Post it again,thanks.
By sinha
10/22/2010 11:33:00 PM
ஏன் என் கருத்தை நீக்கினிர்கள் நான் என்னா தவறாக எழுதிணன் அன்று நடந்த உண்மையை சொன்னதூ தவறா 600போலீசாரையும் ஒரு வயல்வரப்பில் வைத்து கழுத்துஅறுத்து கொலை செய்தது நடக்கவில்லைய அதை செய்தது யார் ,நான் ஒன்னும் சிங்களவனுக்கு ஆதரவாக கருத்து பதியவில்லை நடந்த சம்பவத்தைதான் பதின்தேன்
By ரிஜி.கரியாப்பட்டினம்
10/22/2010 11:30:00 PM
you will face the consequences soon.
By phizo
10/22/2010 11:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக