புதன், 21 ஏப்ரல், 2010

நளினியிடமிருந்து செல்போன் பறிமுதல்



வேலூர், ஏப். 20: வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளியான நளினியிடமிருந்து செவ்வாய்க்கிழமை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வேலூர் பெண்கள் சிறையில் அதன் கண்காணிப்பாளர் ஆர்.ராஜலட்சுமி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் காலை 7 மணி வரை திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது, நளினி அடைக்கப்பட்டிருந்த சிறையிலிருந்து நோக்கியா 1203 மாடல் செல்போனை பறிமுதல் செய்தார்.

கருத்துக்கள்

இல்லாத அலைபேசியை இருப்பதாக அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு; அல்லது மறைமுகமாக இசைவளிப்பதுபோல் இசைவளித்து விட்டுப் பின் பிடிப்பது போல் பிடித்ததற்கும் வாய்ப்பு உண்டு. எவ்வாறிருப்பினும் அடுத்து அறிவுரைக் கழகம் கூடும் பொழுது விதிமுறை மீறி நடந்தவர், நடத்தை பிறழ்ந்தவர் எனக் கூறி முன் விடுதலையை மறுப்பதற்கான சதியாகத்தான் இருக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/21/2010 3:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக