ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

தமிழகத்துக்கு அழைத்து வர வேண்டும்: தொல். திருமாவளவன்



சென்னை, ஏப். 17: மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்த நடவடிக்கைக்கு யார் காரணமாயிருந்தாலும், எது காரணமாயிருந்தாலும் அதை நியாயப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலாது. மனிதநேயமற்ற இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. பார்வதி அம்மாளை தமிழகத்திற்கு அழைத்து வரவும், அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

அடிபணியும் இராமதாசிலிருந்து மனச்சான்றின்படி அறிக்கை விடும் திருமா வேறுபட்டு நிற்கின்றார். என்றாலும் அறிக்கையில் கண்டித்தால் மட்டும் போதாது. வேறு முனைப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளைய தமிழகம் உங்கள் பின்னால அணி வகுக்க இதுவே வழி! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/18/2010 5:16:00 AM

விடுதலைப் புலிகளிடமிருந்து வாங்கிய காசில் ஆளுக்கு கொஞ்சம் போட்டு அந்த அம்மாவை கொண்டு போய் அமெரிக்காவுல வைத்தியம் பாருங்கப்பா !!! இங்க தமிழ்நாட்டுல எங்க பாத்தாலும் கலப்பட மருந்து ::காலாவதி மருந்து நம்பி கூப்பிட்டு கிட்டு வராதீங்க!!! பழி நம்பலுவ மேல வந்துரும் !!! நடந்ததெல்லாம் நல்லதுக்குதான் விடுங்கப்பா !!!

By rajasji
4/18/2010 4:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக