ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

மறப்போம், மன்னிப்போம்: முதல்வர் கருணாநிதி



சென்னை, பிப்.6:"நடிகர் ஜெயராம் மன்னிப்புக் கேட்டதை அடுத்து, அவர் தொடர்பான பிரச்னையை மறப்போம், மன்னிப்போம்' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். நடிகர் ஜெயராமின் பேச்சு குறித்தும், அவருடைய இல்லம் தாக்கப்பட்டது பற்றியும் முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை அளித்த பதில்: ""நடிகர் ஜெயராம் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருந்தால் அது கண்டனத்துக்கு உரியது. ஆனால், அவர் அதற்காக வெளிப்படையாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மறப்போம், மன்னிப்போம் என்ற அண்ணாவின் பொன்மொழியைக் கடைப்பிடித்து இந்தப் பிரச்னையை இத்துடன் விட்டுவிடுவது நல்லது. அதேபோன்று, சட்டத்தை கையிலே எடுத்துக் கொண்டு, அவருடைய வீட்டில் புகுந்து பெண்களைப் பயமுறுத்தியும், வீட்டுக்கு தீயிட்டும் நடைபெற்றச் செயல்களை போலீஸ் வேடிக்கைப் பார்க்க முடியாது'' என்று தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

தமிழ் ஈழத்தில் நடைபெற்ற பேரழிவுப் பேரவலங்களையும் இப்பொழுது நடைபெற்று வரும் மனிதஉரிமைகளுக்கு எதிரான வன் கொடுமைகளையம் மறக்கவில்லையா? அப்படியிருக்க வாய்க் கொழுப்பைப் போய்ப் பெரிதுபடுத்துவானேன்? இளித்த வாய்த் தமிழர்களுக்கு இன உணர்வு வரக் கூடாதே! ஆகவே, நீங்கள் தமிழர் என்பதையே மறந்து விடுங்கள். என்ற போதிலும் உண்மையாகவே வன்முறையைக் கையில் எடுக்காதீர்கள். எதிர்ப்பிலே தீவிரம் இருக்க வேண்டும். ஆனால், போக்கிலே வன்முறை இருக்கக் கூடாது. எனினும் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லும் முதல்வர் உணர்ச்சி வயப்பட்டவர்கள் செயல்களையும் இந்த முறை மன்னித்து விடட்டும். ஏனெனில், வாய்க்கொழுப்பின் எதிர் விளைவேயன்றித் திட்டமிட்ட செயல் அல்ல.அதே நேரம் செயராம் பேசிக் காட்டிய உரையாடல் இடம் பெற்ற திரைப்பட இயக்குநர். கதை ஆசிரியர்,உரையாடல் எழுதியவர், தயாரித்தவர், வெளியிட்டவர், முதலான அனைவர் மீதும் தமிழ அரசு வழக்கு போட வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 5:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக