திங்கள், 8 பிப்ரவரி, 2010

தமிழின உணர்வோடு தொண்டறத்திற்காக பாடுபடுகிற தமிழர்களை தோளில் தூக்கி வைத்து வெளிச்சம் போட்டு பாராட்ட வேண்டும்
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

சென்னை, பிப்.7_ தமி-ழின உணர்வோடு பாடு-பட்டு வருகின்ற-வர்களை தோளில் தூக்கி வைத்து அவர்களை வெளிச்சத்-திற்கு கொண்டு வர-வேண்டும். அவர்களைப் பாராட்டி வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்று திராவி-டர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்றினார்.

நேற்று மாலை 6.2.2010 அன்று சென்னை பெரியார் திடலில் நடை-பெற்ற தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரை-யாற்றினார். அவரது உரையில் குறிப்பிட்ட-தாவது:

தமிழர்களைப் பெருமைப்படுத்திட

தமிழினத்திற்காகப் பாடுபடுகின்ற தமிழர்-களை அடையாளம் கண்டு அவர்களை பெரி-யார் திடலில் இன்றைக்கு முத்தமிழ் மன்ற விழா மூலம் நாம் பாராட்டி-யிருப்பது பெரியார் வலைக் காட்சி மூலமாக, விடுதலை இதழ் வாயி-லாக உலகம் பூராவும் உள்ள தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்-பதற்காக இந்த நிகழ்ச்-சியை நாம் ஏற்பாடு செய்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களை-யும் முனைவர் மங்கள-முருகேசன் அவர்களையும் அழைத்து இந்த விழா-விலே பெரியார் விருது வழங்கி பாராட்டியிருக்-கின்றோம். தமிழர் தளபதி இலக்குவனார்

இங்கே பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்க-ளுடைய நூற்றாண்டை ஒட்டி அவரது படத்தைத் திறந்து வைத்திருக்-கின்-றோம். நம்மவர்களைப் பற்றிய பல செய்திகள் வெளியில் தெரிவதில்லை.

பேராசிரியர் சி. இலக்கு-வனார் அவர்களை தந்தை பெரியார் அவர்-கள் தமி-ழர் தளபதி என்று அழைத்து அந்தப் பட்டத்தை அவர்-களுக்கு சூட்டினார்கள். பலருக்கு இந்த செய்திகள் தெரியாது. காரணம் தந்தை பெரியார் அவர்-களுடைய கொள்கையை ஆரம்ப காலத்திலிருந்தே பின்பற்றியவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்-திலே கலந்து கொண்டு தண்டனை பெற்று சிறை சென்று வெளியே வந்தவர்.

நாடெங்கும் கொண்டாடவேண்டும்

நாடெங்கும் இலக்குவ-னாருடைய நூற்றாண்டு விழாவை தமிழர்களாகிய நாம் கொண்டாட வேண்-டும் என்ற நமதுஅன்பான விழைவை வேண்டு-கோளாக வைக்கின்றோம். (கை தட்டல்)

அதே போல சி.இலக்கு-வனாருடைய மகன், மறைமலை இலக்குவனா-ருக்கு இங்கே தந்தை பெரியார் விருது அளித்து பெருமைப்படுத்தப்பட்ட அவர் தனது தந்தையார் வழியிலே நின்று திரா-விட இயக்கப் புலவராக விளங்கி, நமது கொள்கை வழியிலே நின்று பாடு-பட்டு வருகின்றார்.

தோளிலே தூக்கி பெருமைப்படுத்த வேண்டும்

தமிழர்களை நல்ல இன உணர்வாளர்களை, பகுத்தறிவாளர்களை, சுயமரியாதை வழியிலே நின்றவர்களை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு மட்டு-மல்ல, அவர்களைத் தோளிலே தூக்கிப் பெரு-மைப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாகும் (கை தட்டல்).

விழுது, - விருது என்-பதைப் பற்றி நாங்கள் அடிக்கடி சொல்வ-துண்டு. விழுதுகள் அடுத்த தலை முறையினர். விழுதுகள் இன்றைக்கு சிறப்பாக இருக்கின்றன.காரணம் வேர்கள் சரியாக இருந்த காரணத்தால்தான் விழுதுகளும் சரியாக இருக்கின்றன.

இலக்குவனாரை நான் நன்கு அறிந்தவன்

பேராசிரியர் இலக்கு-வனார் அவர்களை நேரில் கண்டு பேசிய பல வாய்ப்புகளை நான் பெற்-றவன். விடுதலையைப் புரட்டினால் ஏராள-மான செய்திகள் உண்டு.

விடுதலை தலையங்கத்தில்

இன்றைக்கு இலக்கு-வனார் அவர்களைப் பற்றி விடுதலையில் எழுதப்பட்டிருக்கின்ற தலையங்கம் மிகச் சிறப்-பானது. நேரம் இருந்தால் நானே படித்துக் காட்ட வேண்டும் என்று இருந்-தேன். இன்றைய விடு-தலை தலையங்கத்தைப் படித்து எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்-டும்.

இவர்கள் எல்லாம் சிறுவயது முதற்-கொண்டே மொழி உணர்வு, தந்தை பெரி-யார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள்கை உணர்வோடு ஆளான-வர்கள்.

இலக்குவனார் மாண-வர்; இவருக்கு ஆசிரியர் யார் என்றால் சாமி. சிதம்பரனார். அந்தக் காலத்து சுயமரியாதை உணர்வு கொண்ட புல-வர்கள்.

இலக்குவனாரிடம் கேள்வி

இராமாயணத்தைக் கண்டித்துப் பேசக் கூடியவர் புலவர் இலக்கு-வனார். அவரிடமே குதர்க்கமாகக் கேள்வி கேட்பார்கள். உங்களு-டைய பெயரே இலக்கு-வனார் ஆயிற்றே, நீங்கள் போய் இராமாய-ணத்-தைக் கண்டித்துப் பேச-லாமோ? என்று கேட்ட-துண்டு.

இது போன்று தந்தை பெரியார் அவர்களிட-மும் பலர் கேள்வி கேட்ட-துண்டு. உங்களுடைய பெயரே ராமசாமி, நீங்கள் இராமாயணத்-தைக் கண்டித்துப் பேச-லாமா? என்று கேட்ட-துண்டு. அதற்கு தந்தை பெரியார் அவர்கள் பதில் சொன்னார். நான் ராமனுக்கே சாமி போ! என்று சொல்லுவார். அது போல அந்தக் கேள்விக்கு இலக்கு-வனார் பதில் சொன்-னார். இலக்குவனார் என்றால், இலக்கு நோக்-கிச் செல்வது. இலட்சி-யத்தை நோக்கிச் செல்-வது என்று அவர் பதில் சொன்னார்.

சுயமரியாதைக் கொள்-கையை, தந்தை பெரியார் கொள்கையை ஏற்காத-வர்கள் கூட பல வகை-யில் பயன் பெற்றதுண்டு. ஆனால் இலக்குவனார் குடும்பமோ பல தொல்-லைகளுக்கு ஆளாகி ஏராளமான இழப்பு-களை சந்தித்த குடும்பம்.

துரத்தப்பட்டேன்

விருதுநகர் நாடார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் சி. இலக்கு-வனாரை கல்லூரி நிரு-வாகம் வெளியேற்றியது. ஜாதி உணர்ச்சிப் போராட்-டத்தால் வெளியேற்றப்-பட்டார். அந்தக் கல்லூ-ரிக்கு தந்தை பெரியார் அவர்கள் இலக்குவ-னா-ருக்காக பரிந்துரை செய்தும் அந்த நிருவாகம் அதை ஏற்கவில்லை.

தந்தை பெரியார் அதைக் கண்டித்து அறிக்-கையே எழுதினார். கண்-ணீர் விடக்கூடிய அள-வுக்கு நிலைமைகள். இலக்-குவனார் அவர்கள் துரத்தப்பட்டேன் என்று ஒரு காவியத்தையே எழுதி-யிருக்கிறார்.அதைப் பற்றி அவருடைய-மகனார் மறைமலை இலக்குவ-னாரிடம் சொன்னேன். அந்த நூலைத் தேடித் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை என்று சொன்னார்.

பெரியார் நூலகத்தில் இருக்கிறது. நான் தருகி-றேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கின்றேன்.

பெரியார் அடைக்கலம் கொடுத்தார்

தந்தை பெரியார் அவர்கள் இலக்குவ-னாரை அழைத்து திருச்சி பெரியார் மாளிகையில் அருகிலேயே தங்க வைத்-தார். தன்னுடன் சுற்றுப் பயணத்தில் அழைத்துச் சென்றார். அவருக்கு தந்தை பெரியார் மதிப்பூ-தியம் தர முன்வந்தார். ஆனால் அதை இலக்கு-வனார் ஏற்க மறுத்தார். தந்தை பெரியார் இலக்கு-வனாருக்கு வலுக்கட்-டாயப் படுத்திக் கொடுத்-தார்கள்.

தந்தை பெரியாரிடம் கொண்ட அன்பால், உணர்வால்தான் அவர்-1965 இல் இந்தி எதிர்ப்-புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை தண்டனை பெற்று வெளியே வந்தார்.

அவர் தந்தை பெரி-யார், அண்ணா, கலைஞர் ஆகியோருடைய நன்ம-திப்பைப் பெற்றவர். இறுதி வரையிலே அவர் கொண்ட திராவிடர் இயக்கக் கொள்கை உணர்-வோடு வாழ்ந்து மறைந்தார்கள். கஷ்ட நஷ்டங்களைப் பெற்றார்-களே தவிர, எந்தப் பல-னையும் அவர்கள் பெற-வில்லை.

மறைமலை இலக்குவனாரின் பெருமை

இலக்குவனார் அவர்க-ளு-டைய மகன் மறை-மலை இலக்குவனார் அவர்களை அமெரிக்-காவில் உள்ள கலிஃ-போர்னியா பல்கலைக் கழகம் அழைத்தது. ஹார்வர்டு பல்கலைக் கழகம், எம்.அய்.டி. பல்-கலைக் கழகங்கள் எல்-லாம் இருந்தது. அமெரிக்-கப் பல்கலைக் கழகம் ஒரு தமிழரை அழைத்து இதை எங்களுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று அழைத்-தது என்றால், அப் பெருமை தமிழராகிய நமது மறைமலை இலக்-குவனார் அவர்களையே சாரும். அந்தப் பெருமை அவர்களுக்குத்தான் உண்டு. தான் ஒரு நாத்திகன் என்பதை அங்கே காட்டினார். நாத்திக நன்நெறியைப் பற்றி அவர் ஒரு நூல் எழுதுவேன் என்று சொன்னார். அதை அவர்-கள் சிறப்பாக செய்ய வேண்டும். அந்த சிறப்-பான நூல் வெளி வருவ-தற்கு நாங்கள் துணை-யாக இருப்போம். நாத்-திகன் என்று சொன்-னால் அவர்கள் நன் நெறியாளர்கள். அவரு-டைய குடும்பத்தாரையும், அவருடைய சேவைகளை-யும் இந்த நேரத்திலே பாராட்டி வாழ்த்து-கிறோம்.

அவர்களுக்கு நாங்கள் பெரியார் விருது கொடுத்-திருக்கிறோம் என்றால் அது தமிழர்களுடைய உள்ளத்தின் பிரதிபலிப்-பாகும்.

மங்கள முருகேசனின் சிறப்பான பணி

அதே போல பேராசி-ரியர் மங்கள முருகேசன் அவர்கள் மதுரை கல்-லூரியிலே இருந்து வந்தவர். அது பார்ப்பன ஆதிக்கக் கல்லூரி. அந்தக் கல்லூரியில் இருந்து வந்தவர் சுயமரியாதை உணர்வோடு இருக்-கிறார் என்றால் அவருக்கு இன்-னொரு விருதும் வழங்க-வேண்டும். அவர் ஓய்வு பெற்ற பிறகும் புது முறுக்கோடு பணியாற்றிக் கொண்டு வருகின்றார். சுயமரியாதை இயக்கத்-தைப் பற்றி எழுதி இருக்கின்றார். முத்தையா முதலியாரைப் பற்றி எழுதியிருக்கின்றார். உலகத் தலைவர் பெரி-யார் என்ற நூலை எழுதிக் கொண்டு வரு-கின்றார். அன்னை மணி-யம்மையாரைப் பற்றிய வரலாற்றையும் எழுதிக் கொண்டிருக்கின்றார். ஓய்வறியாத அவருடைய தொண்டறம் சிறப்பா-னது. இவர்கள் எல்லாம் மக்களுக்காகப் பாடு-பட்டுக் கொண்டிருக்கிற-வர்கள்.

அவருடைய வாழ்வி-ணையர் அவருக்கு எல்லா நிலையிலும் துணையாக இருந்து, அவர் படிப்-படியாக முன்னேற உறுதுணையாக இருந்து வருகின்றார். அவர்க-ளையும் இந்த நேரத்திலே பாராட்டி இரு குடும்பத்-தவர்களையும் பாராட்ட இந்த குடும்பங்கள் எல்-லாம் நம்முடைய சுயமரி-யாதைக் குடும்பங்கள்.

தமிழர்களுக்கு சங்கடம் என்றால்

தமிழர்களுக்கு எங்கோ ஒரு மூலையில் சங்கடம் ஏற்பட்டால் அதற்கு துடித்தெழக் கூடியவர்-களாக நாம் இருக்க வேண்டும். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீர-மணி உரையாற்றினார்.

முத்தமிழ்மன்ற விழா

தந்தை பெரியார் முத்-தமிழ்மன்ற முதல் நாள் விழா இயல், நாடக விழாவாக (6.2.2010) சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது-. நடிகர் குமரிமுத்து பங்-கேற்றார். தந்தை பெரி-யார் முத்தமிழ் மன்றத்-தின் 14ஆம் ஆண்டு விழா (முதல் நாள் விழா) சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.-ஆர்.ராதா மன்றத்தில் 6.2.2010 அன்று இரவு 7 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கவிஞர் கலி.பூங்குன்றன்

தந்தை பெரியார் முத்தமிழ்மன்றம் தமிழர் தலைவர் தலைமையில் எப்படி சிறப்பாக இயங்கி தமிழர்களை அடை-யாளம் கண்டு சிறப்பித்து வருகிறது என்பதை கழகப்பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரை-யாற்றினார்.

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வடசென்னை மாவட்ட தி.க தலைவர் கவிஞர் செ.-வை.ர.சிகாமணி அனை-வரையும் வரவேற்று உரையாற்றினார்.

முதல்நாள் விழா இயல், நாடக விழாவாகத் தொடங்கியது. வரியியல் அறிஞர் ச.ராசரத்தினம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து முத்தமிழ்மன்ற விழாப் பெருமையையும், பாராட்டு பெறவிருக்-கின்ற பேராசிரியர் மறைமலை இலக்குவ-னாரையும் பேராசிரியர் மங்கள முருகேசன் அவர்களையும் பாராட்டி வாழ்த்திப் பேசினார்.

இலக்குவனார் படத்திறப்பு

பேராசிரியர் சி.இலக்கு-வனார் படத்தை திராவி-டர் கழக தலைவர் தமி-ழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்-தார்.

பெரியார் விருது முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் ந.க.மங்களமுருகேசன் ஆகியோருக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழா குழு சார்பாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீர-மணி அவர்கள் அனை-வருடைய கரவொலிக்-கிடையே பொன்னாடை அணிவித்து பெரியார் விருதினை வழங்கினார்.

வாழ்க்கை குறிப்புகள்

பேராசிரியர் முனை-வர் மறைமலை இலக்கு-வனார் வாழ்க்கைக் குறிப்பை பெரியார் நூலக வாசகர் வட்ட துணைச் செயலாளர் சுப்பிரம-ணியம் படித்தார். பேராசி-ரியர் முனைவர் ந.க.மங்-கள முருகேசன் வாழ்க்-கைக் குறிப்பை தலை-மைச் செயற்குழு உறுப்-பினர் க.பார்வதி படித்-தார்.

மங்கள முருகேசன்

பேராசிரியர் மங்கள-முருகேசன் தமது ஏற்பு-ரையில் திராவிடர் இயக்க உணர்வோடு நூல்-களை எழுதி வருவதையும், பேசி வருவதையும் குறிப்-பிட்டார். பெரியார் விருது வழங்கிய தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்ததோடு, உலகத் தலைவர் பெரியார், அன்னை மணியம்-மை-யார் வாழ்க்கை வரலாறு பற்றியும் நூலாக எழுதி வருவதை விவரித்தார்.

மறைமலை இலக்குவனார்

அடுத்து மறைமலை இலக்குவனார் தமது ஏற்புரையில், தமிழர் தலைவரால் பெரியார் விருது பெற்றதை பெரு-மையாகக் கூறினார். தமிழின உணர்வோடு தந்தை பெரியார் கொள்கை வழிநின்று தமது பாடு-பட்டு வருவதை எடுத்துக் கூறினார்.

நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்-றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலைமாமணி நடிகர் குமரிமுத்து உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வந்து பங்கேற்றார். நாடகம்

அடுத்து அன்னை மணியம்மையார் கலைக் குழுவினர் சார்பில் கழக கலைத்துறை அமைப்-பாளர், பகுத்தறிவுக் கலைச்சுடர், இனமான நடிகர் மு.அ.கிரிதரன் இயக்கிய அகல்யா என்ற சமூக சீர்திருத்த நாடகம் நடைபெற்றது. நாடகத்தின் இடை-வேளை நேரத்தில் நா-டகத்தில் நடித்த கலைக் குழுவினரை பாராட்டி பேசினார். அதில் பங்-கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசினை தமிழர்தலைவர் கி.வீர-மணி அவர்கள் வழங்கி-னார்.

மீண்டும் நாடகம் தொடர்ந்து நடந்து இரவு 10 மணிக்கு முடி-வுற்றது. நாடகத்தைப் பார்த்த அனைவரும் இடையிடையே கர-வொலி எழுப்பி நாட-கத்தை மகிழ்ந்து பார்த்-தனர். தி.பெரியார் சாக்-ரட்டீஸ் நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக