செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

தூக்கி நிறுத்துவோர்,​​ தூக்கியும் போடுவர்!: முதல்வர் கருணாநிதி



சென்னை, ​ பிப்.8:​ புகழுரையால் நம்மை தூக்கி நிறுத்துவோர்,​​ தூக்கியும் போடுவர் என்பதை உணர்ந்து செயல்பட்டால் பொதுவாழ்வில் உயர்ந்த இடம் கிடைக்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.​ இது குறித்து கேள்வி}பதில் பாணியில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் கூறியதாவது:​ பல்வேறு நெருக்கடிகள்,​​ எதிர்பார்ப்புகள்,​​ ஏமாற்றங்களுக்கு இடையேதான் என்னுடைய கலைத்துறை வளர்ச்சி நிகழ்ந்தது.​ 1945}ம் ஆண்டு முதல் இதுவரை நான் திரைக்கதை வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி முதல் மனோகரா உள்ளிட்ட 75}க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.​ எனினும்,​​ நான் கலையுலகில் உச்சகட்டத்தை அடைந்து விட்டதாக கருதவில்லை.​ அதனால்தான் எந்த விதமான ஆணவமும்,​​ அகம்பாவமும் என்னை அணுகாமல் அடக்க ஒடுக்கமாக இந்தத் துறையில் இதுவரையில் நடமாடிக் கொண்டிருக்கிறேன்.​ இன்னமும் எழுதிக் கொண்டேயிருக்கிறேன்.அந்த எழுத்து மூலம் வரும் ஊதியத்தை நலிந்தோருக்கும்,​​ நல்ல பல காரியங்களுக்கும் தொடர்ந்து வழங்கி வருகிறேன்.​ அரசியல் மற்றும் கலைத் துறைகளில் நான் கற்றுக்கொண்ட அடக்கம் ஒடுக்கம் என் உணர்வோடு கலந்துவிட்டது.கலைத் துறையும்,​​ அரசியல் துறையும் போட்டி போட்டுக் கொண்டு என் வளர்ச்சிக்கு வலிமை வழங்கியுள்ளன என்பதைத் தவிர,​​ இதில் என்னுடைய தனிப்பட்ட "பிரதாபம்'எதுவும் இல்லை.​ கலை,​​ அரசியல் துறைகளை வேறுபடுத்திப் பார்க்கவோ அல்லது ஒற்றுமை,​​ வேற்றுமைகளை விளக்கிடவோ விரும்பவில்லை.​ ஆனால்,​​ எந்த ஒரு துறையானாலும் அந்தத் துறையில் ஒருவர் முன்னுக்கு வந்துவிட்டால்,​​ அவரைச் சுற்றி நான்கைந்து பேர் கூடுவார்கள்.​ அவர்கள் நண்பர்களாகவும் இருப்பார்கள்.​ அல்லது நம்மை உசுப்பிவிட்டு உறவாடிக் கெடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.​ அவர்களிடம் எச்சரிக்கையாகவும்,​​ நாணயத்தோடும்,​​ பெருந்தன்மையோடும் இருக்க வேண்டும்.​ புகழுரைக்கு மயங்காதீர்:​ "இந்திரனே,​​ சந்திரனே' என்றெல்லாம் புகழ்ந்து உங்களைத் தூக்கி நிறுத்துபவர்கள்,​​ அதே வேகத்தில் உங்களை கீழேதூக்கிப் போடுபவர்களாகவும் இருப்பார்கள்.​ இதை மனதில் கொண்டு,​​ அவர்கள் உங்கள் காதருகே பேசும்போதெல்லாம் நீங்கள் காது கேளாதோராகிவிட வேண்டும்.​ மற்றவர்களைப் பற்றி உங்களிடம் அவர்கள் கோள்மூட்டும் போதெல்லாம் நீங்கள் வாய் பேசாதோராகிவிட வேண்டும்.​ இப்படி ஒரு விரதத்தைக் கடைப்பிடிப்பீர்களேயானால்,​​ கலை உலகிலும் சரி,​​ அரசியல் வட்டாரத்திலும் சரி,​​ மொத்தத்தில் பொதுவாழ்க்கையிலே உயர்ந்ததோர் இடம் உங்களுக்கு கிடைத்தே தீரும்.​ கோபுர கலசத்தின் நிலை:​ இல்லையேல்,​​ எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும்,​​ கோபுரத்தின் கலசத்தில் எச்சமிடும் பறவைகளை துரத்தவும் முடியாமல்,​​ தூக்கி வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் அந்தக் கோபுர கலசத்தின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

சொல்வது சரிதான். ஆளுயர மாலை அதைப்போடும் ஆள் உயர வேண்டி அணிவி்க்கிறார் என்று சொன்னவரும் கலைஞர்தான். ஆனால், துதிபாடிகளின் புகழரைகளில்தானே மய்ங்குகிறார். அவரது நல்ல திட்டங்களில் பல துதிபாடிகளிடம் ஒப்படைக்கப்பட்டதால்தானே வீணாயின. பதவிநலன்களை எதர்நோக்கிப்பதவியில் இருப்போரைத் துதி பாடுவதைத்தனக்குரிய புகழ்மாலையாகக்கருதித்தானே ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். துதிபாடும் விழாக்களுக்கு இடம்தாராம்ல இருந்தால் அவர்கள் மறைந்து ஒழிவார்களே! துதிமயக்கத்தை விரும்பி வரவேற்று விட்டு இப்படிச் சொல்வதால் என்ன பயன்? ஓயாத உழைப்பாளிக்கு உண்மை தோயாத சொல்மாலைகள் தேவைதானா? தொண்டர்கள் இவரது வழியினைப் பின்பற்றுவார்களா? வாயுரையைப்பின்பற்றுவார்களா?தமிழைப பழித்தவன் தன்னைத் துதிபாடினால் மயங்கும் தலைவனைப் பார்த்துத் தொண்டர்களும் தமிழ்ப்பகைவர்களைத்தானே தூக்கி நிறுத்துகிறார்கள்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/9/2010 3:43:00 AM

Good words to all

By Ganesan AS
2/9/2010 2:56:00 AM

I think that he is advising Mahinda Rajapakse after he has received his doctorate from a Russian university. You know that Stalin was also a ruler of Russia.It appears that Kalaigner alaways had and admiration for Russia and Stalin eventhough some say that millions of Russians were killed during Stalin's rule

By ratnam
2/9/2010 2:17:00 AM

Is there any problem arising between CM and Rajinikanth?

By Nanban
2/9/2010 1:40:00 AM

வெட்கம் மானம் சூடு சொரணை இதெல்லாம் இருந்தால் திருடன் பிழைப்பை நடத்த முடியாது. யார் காரி மூஞ்சில் உமிழ்ந்தாலும் துடச்சி போட்டுட்டு மீதும் திருடுற வேலைய பாரு கழக கண்மணி!

By pannadai
2/9/2010 1:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

dinamalar: இந்திரனே சந்திரனே' என்று சொல்பவர்கள் அதே வேகத்தில் கீழே தூக்கிப் போடுவர் : முதல்வர்
Front page news and headlines today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக