வெள்ளி, 29 ஜனவரி, 2010

உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்​டில் ஆன்​மி​கத்​துக்கு தனி அரங்கு: இராம.கோபா​லன்​ வலி​யு​றுத்​தல்



தாரா ​பு​ரம்,​​ ஜன.​ 27: கோவை​யில் நடை​பெற உள்ள உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்​டில் ஆன்​மி​கத்​திற்​கென தனி அரங்கு அமைக்க வேண்​டும் என்று இந்து ​முன்​னணி மாநில அமைப்​பா​ளர் இராம.கோபா​லன் வலி​யு​றுத்​தி​னார்.​​ ​ ​ தாரா​பு​ரத்​தில் இந்து முன்​னணி மாநாடு செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.​ மாநி​லப் பொதுச்​செ​ய​லர் காடேஸ்​வரா சுப்​பி​ர​ம​ணி​யம் தலைமை வகித்​தார்.​ இதில் மாநில அமைப்​பா​ளர் இராம.கோபா​லன் பேசி​யது:​​ ​ ​ கரூ​ரில் வரும் ஜூன் 20-ம் தேதி மாநில மாநாடு நடை​பெற உள்​ளது.​ இதில் பல்​வேறு கோரிக்​கை​களை வலி​யு​றுத்​தித் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட உள்​ளன.​ ​கோவை​யில் நடை​பெ​றும் உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்​டில் சித்​தர் பாடல்​கள்,​​ தேவா​ரம்,​​ திரு​வா​ச​கம் பாடு​வ​தற்​கா​க​வும்,​​ அவை குறித்து விவா​திப்​ப​தற்​கா​க​வும் தனி அரங்கு அமைக்​கப்​பட வேண்​டும்.​ ​சமச்​சீர் கல்வி முறை​யால் பக்தி மார்க்​கம் ஒடுக்​கப்​ப​டும் அபா​யம் உள்​ளது.​ ​என​வே​தான் ​ சமச்​சீர் கல்வி முறையை நடை​மு​றைப்​ப​டுத்​து​வதை இந்து முன்​னணி எதிர்க்​கி​றது.​ ​பசுவை தேசிய விலங்​காக அறி​வித்து,​​ அவற்​றைப் பாது​காப்​ப​தற்​கான ​நட​வ​டிக்​கை​களை மேற்​கொள்ள வேண்​டும்.​ பசு​வின் சாணம் மூலம் இயற்கை உரம் தயா​ரிக்​கத் துவங்​கி​விட்​டால்,​​ யூரியா இறக்​கு​ம​தி​யைத் தவிர்க்​க​லாம்.​ ​ஹஜ் பய​ணி​க​ளுக்கு மானி​யம் வழங்​கு​வ​து​போல்,​​ காசி,​​ ராமேஸ்​வ​ரம் செல்​லும் பக்​தர்​க​ளுக்​கும் மத்​திய,​​ மாநில அர​சு​கள் மானி​யத் தொகை​களை வழங்க வேண்​டும் என்​றார் இராம.கோபா​லன்.​​ ​ ​ ​ மாநி​லத் தலை​வர் அர​சு​ராஜா,​​ துணைத் தலை​வர் கு.பூசப்​பன்,​​ பொறுப்​பா​ளர்​கள் முரு​கா​னந்​தம்,​​ மூகாம்​பிகை மணி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.
கருத்துக்கள்

மாநாட்டுப் பொருண்மை வரிசை எண் 19 சமயமும் தமிழும் என உள்ளது. ஆதிக்க ஆரியம் எனத் தனியாக ஓர்அமர்வு வேண்டும் என விரும்புகிறாரா இராம.கோபாலன்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/29/2010 3:16:00 AM

Why don't you visit to Manik Farm in Vanni where the people who speak Tamil and see how they suffer? Listen to their stories and find out how Tamils were killed, tortured, murdered and raped by Nazi Sinhalese, then carry on with your Tamil conference and research.

By Vani
1/28/2010 10:05:00 PM

One special counter for may 16th 2009 vanni killing can also be put.

By Ragu
1/28/2010 7:35:00 PM

Well done Ramagopalan. Whatever you have said is fine. Will MUKA pay heed?

By Rahul
1/28/2010 3:50:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக