சனி, 30 ஜனவரி, 2010

செம்மொழி மாநாடு: கருணாநிதி கவிதைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை



சென்னை, ஜன.29: செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதைக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கான பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார்.அந்தப் பாடல் வருமாறு:பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!உண்பது நாழி உடுப்பது இரண்டேஉறைவிடம் என்பது ஒன்றேயெனஉரைத்து வாழ்ந்தோம்உழைத்து வாழ்வோம்.தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்நன் மொழியே நம் பொன் மொழியாம்!போரைப் புறம் தள்ளிபொருளைப் பொதுவாக்கவேஅமைதி வழிகாட்டும்அன்பு மொழிஅய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலேஉணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடுஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!அகமென்றும் புறமென்றும் வாழ்வைஅழகாக வகுத்தளித்துஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -ஓதி வளரும் உயிரான உலக மொழி -நம் மொழி}நம் மொழி - அதுவேசெம்மொழி}செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!என பாடல் எழுதியுள்ளார்.முதல்வர் கருணாநிதியுடன் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார் ரஹ்மான். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., பாம்பே ஜெயஸ்ரீ உடன் இருந்தனர்.
கருத்துக்கள்

நல்ல எளிய பாடல். ஒவ்வொரு விழாவின் (தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன்)இறுதியில் இப்பாடலைப் பாடலாம். பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/30/2010 2:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக