வெள்ளி, 25 டிசம்பர், 2009

உலகத் தமிழ் செம்​மொழி மாநாடு: அறி​வுக் கருவூலத்​தின் அவல நிலை​யைப் போக்​குமா அரசு?!



உடுமலை,டிச.24:ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டு​மென சாதிக்கத் துடிக்​கும் மாணவ, மாணவிக​ளின் அறி​வுக் கருவூல​மாக விளங்கி வரும் நூலகத்​தின் அவல நிலையை போக்க அரசு நடவ​டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
"பகுத்தறி​வுக் கவிஞராயர்' என தமிழக மக்க​ளால் அன்​போடு அழைக்கப்ப​டும் உடுமலை நாராயணகவி​யின் பெய​ரில் அமைந்​துள்ள மணி மண்டபத்தை முதல்வர் மு.கருணா​நிதி 23}2}2001ல் திறந்து வைத்​தார்.
சுற்றி​லும் பூங்காவுடன் அழ​குற அமைக்கப்பட்ட இந்த மணி மண்டபத்தை ஆண்டு முழுவ​தும் தொடர்ந்து பராம​ரிப்ப​தில் பல்​வேறு நடைமு​றைச் சிக்கல்கள் ஏற்பட்டது. இத​னால் 28}09}2004 முதல் உடுமலை முதல் நிலை நூலகப் பராம​ரிப்​பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் செல​வில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்​வுக்​கான புத்தகங்கள், கேட், யுசிஜி, நெட், ஐஐடி, ஐஐஎம், ரயில்வே போன்ற போட்​டித் தேர்வுக​ளுக்​கான புத்தகங்க​ளும், கணிப் பொறியியல், அறி​விய​லில் வளர்ச்​சிகள், உலக வரலாறுகள் உள்​ளிட்ட புத்தகங்க​ளும் இங்கு கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து புத்தகங்கள் வைக்க அலமாரிக​ளும், பிற தளவாடங்க​ளும் பொதுமக்களிடமி​ருந்து நன்கொடையாகப் பெறப்பட்டன.
ஆனால், இதன் பிறகு கடந்த 5 ஆண்டுக​ளாக இந்த நூலகத்தை எந்த வித விரி​வாக்க​மும் செய்யாம​லேயே விட்டு​விட்டனர். சாதிக்கத் துடிக்​கும் மாணவ,​மாணவிகளை இது சோர்ந்து போகச் செய்து விட்டது.
எனவே, கோவை​யில் நடைபெ​றும் உலகத் தமிழ் செம்​மொழி
மாநாட்டை ​யொட்டி இந்த நூலகத்​திற்கு போது​மான நிதியை ஒதுக்கி விரி​வாக்கம் செய்ய முதல்வர் நடவ​டிக்கை எடுக்க வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​துள்ளது.
இது குறித்து உடுமலை நாராயணகவி இலக்கியப் பேரவை நிர்வாகிகள் கூறியது:​சாதித்த மாணவர்கள்: இந்த நூலகத்​தில் அமர்ந்து படித்த உடுமலை பகுதி மாணவர்கள் மோகன்​தாஸ் கரம்சந்த் காந்தி மற்​றும் எஸ்.செந்​தில்கு​மார் ஆகி​யோர் ஐஏஎஸ் முடித்தது சாதனை படைத்​துள்ளனர்.
இந்நிலை​யில், இந்த நூலகத்​தில் 2001 ம் ஆண்டு வரையி​லான புத்தகங்கள் மட்​டுமே வைக்கப்பட்​டுள்ளது. அதற்கு பிறகு கடந்த 7 வருடங்க​ளாக புதிய புத்தகங்கள் இந்த நூலகத்​தில் இடம்பெற​வில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்​றும் சிவில் சர்​வீஸ் உள்​ளிட்ட பல்​வேறு போட்​டித் தேர்வுக​ளில் நடப்​பாண்டு தொடர்​பாக கேட்கப்ப​டும் கேள்விக​ளுக்கு பதில் அளிக்​கும் விதத்​தில் புதிய புத்தகங்களை இங்கு வைக்க ஏற்​பாடு செய்ய வேண்​டும்.
உடுமலை​யில் அரசு மற்​றும் தனி​யார் கல்லூரிக​ளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரத்​திற்​கும் அதிகமா​னோர் படித்து வரு​கின்றனர். இந்நிலை​யில் தின​மும் நூற்​றுக்கணக்கா​னோர் நூலகத்​திற்கு வரும் நிலை​யில் 25 நபர்களே உட்​கார்ந்து படிக்க முடிகிறது. நிறைய​பேர் நின்று கொண்டே படித்து வரு​கின்றனர்.
எனவே, நூலகத்​தில் குறைந்த பட்சம் நூறு பேர் உட்​கார்ந்து படிக்​கும் அள​விற்கு கட்டடத்தை விரி​வாக்கம் செய்ய வேண்​டும்.
அதே ​போல், ஜெராக்ஸ் எடுக்க ஒரு பிர​திக்கு 75 பைசா என்றி​ருப்பதை இங்கு வரும் ஏழை மாணவ,​மாணவிக​ளின் வச​திக்​காக 25 பைசா​வாக குறைக்க வேண்​டும்.
குறிப் ​பாக, இங்கு வரும் மாணவர்க​ளுக்கு குடி​நீர் வசதி செய்து தர வேண்​டும். இதற்​காக உடுமலை நக​ராட்சி சார்​பில் இலவச​மாக ஒரு குடி​நீர் இணைப்பை ஏற்ப​டுத்​தித் தர வேண்​டும், முக்கிய​மாக இந்த நூலகத்தை சுற்றி​லும் உள்ள
ஆக்கிர​மிப்புகளை அகற்ற வேண்​டும், இந்த நூலகத்​திற்​கென ஒரு நிரந்தர பணியிடத்தை உரு​வாக்க வேண்​டும் என்றனர்.
இந்த அறி​வுக் கருவூலத்​தில் இருந்து சிறந்த ஐஏஎஸ், ஐபிஎஸ், பொருளா​தார அறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள், தமிழறிஞர்கள், தொழில் நுட்ப மேதைகள் உரு​வாக வேண்​டும் என்பது​தான் அனைவரு​டைய ஆர்வம்.
தமிழக முதல்வர் இதற்கு உதவ வேண்​டும் எனபதே அனைவரது எதிர்​பார்ப்பு.

கருத்துக்கள்

இச் செய்தியைப் படித்தவுடன் மாண்புமிகு முதல்வரும் நூலகத்துறையும் நடவடிக்கை எடுக்கும் என்னும் நம்பிக்கையில் முன்னதான பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/25/2009 4:20:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக