திங்கள், 21 டிசம்பர், 2009

தமி​ழ​கத்​தோடு இணைய விரும்​பும் ஆந்​திர மாநில ஊராட்​சி​கள்



தமி​ழக எல்​லை​யில் உள்ள தமிழ் பேசும் ஆந்​திர பகு​தி​களை தமி​ழ​கத்​தோடு இணைப்​பது குறித்து தடா​வில் நடை​பெற்ற பல்வேறு அரசியல் கட்சியினர் கூட்டம்.
கும் ​மி​டிப்​பூண்டி,​டிச.20: ​ தமி​ழ​கத்​தோடு தங்​களை இணைக்​கு​மாறு ஆந்​திர எல்​லை​யோ​ரத்​தில் உள்ள 9 கிராம மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ள​னர்.​÷ஆந் ​திர மாநி​லத்தை பிரித்து தெலங்​கானா என்ற தனி மாநி​லத்தை உரு​வாக்க மத்​திய அரசு பச்​சைக்​கொடி காட்​டி​யதை ஒரு தரப்​பி​னர் வர​வேற்​றுள்​ள​னர்.​ மற்​றொரு தரப்​பி​னரோ இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டம் நடத்தி வரு​கின்​ற​னர்.​÷இந்​நி​லை​யில்,​​ தமி​ழக எல்​லை​யோ​ரத்​தில் உள்ள ஆந்​திர மாநி​லத்​தைச் சேர்ந்த ராமா​பு​ரம்,​​ பெரி​ய​வேடு,​​ பீமார்​பா​ளை​யம்,​ காரூர்,​​ பூண்டி,​​ தடா,​​ தடா கண்​டிகை,​​ இருக்​கம்,​​ வேநாடு ஆகிய ஊராட்​சி​க​ளைச் சேர்ந்​த​வர்​கள் தங்​களை தமி​ழ​கத்​தோடு இணைக்க வேண்​டும் என கோரிக்கை விடுத்​துள்​ள​னர்.​÷ஆந்​தி​ரத்​தில் தெலுங்கை தாய் மொழி​யா​கப் பேசு​ப​வர்​களே தனித்​தனி மாநி​லம் கேட்​கும் போது தமி​ழைத் தாய் மொழி​யா​கக் கொண்ட தங்​களை தமி​ழ​கத்​தில் இணைத்​துக் கொள்ள வேண்​டும் என்ற நியா​ய​மான கோரிக்​கையை இரு மாநில அர​சு​க​ளும் ஏற்க வேண்​டும் என வலி​யு​றுத்​து​கின்​ற​னர்.​÷இ​து​கு​றித்து வழக்​க​றி​ஞ​ரும்,​​ ஆந்​திர மாநி​லத்​துக்கு உள்​பட்ட ராமா​பு​ரம் ஊராட்சி மன்ற முன்​னாள் தலை​வ​ரு​மான வி.என்.​ கிருஷ்​ணன் கூறி​யது:​ மேற்​கண்ட 9 ஊராட்​சிப் பகுதி முழு​வ​தும் தமி​ழர்​களே ​(30 ஆயி​ரம் பேர்)​ வசித்து வரு​கின்​ற​னர்.​ மேற்​கண்ட பகு​தி​கள் ​ வேங்​க​ட​கிரி அர​ச​ரின் சமஸ்​தா​னத்​தைச் சேர்ந்​தாக இருந்​த​வரை தற்​போ​தைய திரு​வள்​ளூர் மாவட்​டம்,​​ பொன்​னேரி வட்​டத்​தின் கீழ் நிர்​வா​கத்​தின் கீழ் இயங்கி வந்​தன.​÷1956-ம் ஆண்டு மொழி​வா​ரி​யாக மாநி​லங்​கள் பிரிக்​கப்​பட்ட போது,​​ மேற்​கண்ட தமிழ் மொழி பேசும் பகு​தி​கள்,​​ இப்​ப​குதி மக்​க​ளின் விருப்​பத்​துக்கு மாறாக வேங்​க​ட​கிரி அர​ச​ரின் விருப்​பத்​தின்​பே​ரில் ஆந்​திர மாநி​லத்​தோடு இணைக்​கப்​பட்​டன.​​ 50 ஆண்​டு​க​ளுக்கும் மேலாக மேற்​கண்ட பகு​தி​கள் ஆந்​திர மாநி​லத்​தைச் சேர்ந்​த​தாக இருந்​தா​லும் நாங்​கள் அனை​வ​ரும் தமி​ழைத் தாய் மொழி​யா​கக் கொண்​டி​ருக்​கி​றோம்.​÷எங்​கள் உற்​றார்,​​ உற​வி​னர்​கள் அனை​வ​ரும் தமி​ழ​கப் பகு​தி​யி​லேயே இருக்​கும் நிலை​யில் நாங்​கள் மட்​டும் ஆந்​தி​ரத்​தில் இருந்து அவ​திப்​ப​டு​கி​றோம்.​ மேலும்,​​ தமி​ழ​கப் பகு​தி​க​ளுக்​குள்​தான் நாங்​கள் பெண் கொடுத்து,​​ பெண் எடுக்​கி​றோம்.​ நாங்​கள் அனை​வ​ரும் இன்​ற​ள​வும் தமிழ்​நாட்​டுப் பள்ளி,​​ கல்​லூ​ரி​க​ளில்​தான் படித்து வரு​கி​றோம்.​ இப்​படி தமி​ழ​கத்​தோடு எல்​லா​வி​தத்​தி​லும் சம்​மந்​தப்​பட்​டுள்ள நாங்​கள் "ஆந்​திர மாநி​லத்​த​வர்' என்று பேதம் பிரிக்​கப்​ப​டு​வ​தோடு இங்கு எல்லா விதத்​தி​லும் பின்​தங்கி உள்​ள​தால் எங்​களை தமி​ழ​கத்​தோடு இணைத்​துக் கொள்ள ஆந்​திர அர​சி​டம் தமி​ழக அரசு வலி​யு​றுத்த வேண்​டும் என்​றார்.​÷நெல் ​லூர் மாவட்ட கவுன்​சி​ல​ரான பூண்டி செல்​வம் கூறு​கை​யில்,​​ மேற்​கண்ட 9 ஊராட்​சிப் பகு​தி​க​ளைச் சேர்ந்த பெரும்​பான்​மை​யா​ன​வர்​க​ளுக்கு தமி​ழில் மட்​டுமே பேச​வும்,​ எழு​த​வும் தெரி​யும்.​ தமி​ழக கல்​லூ​ரி​யில் எம்.ஏ.​ படித்த பட்​ட​தாரி,​​ அவ​ருக்கு தேவைப்​ப​டும் ஒரு சான்​றி​த​ழுக்​காக ஆந்​தி​ரத்​தில் உள்ள வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் விண்​ணப்​பிக்​கக்​கூ​டத் தெரி​யாது.​÷அ​தே​போல இங்கு ஊராட்​சித் தலை​வ​ரா​க​வும்,​​ மாவட்ட கவுன்​சி​ல​ரா​க​வும் பதவி வகிக்​கும் அனை​வ​ருக்​கும் தெலுங்​கில் எழு​தப் படிக்க தெரி​யா​த​தால் அரசு சார்​பில் திட்​டங்​களை மக்​க​ளி​டம் விளக்​கவோ,​​ கூட்​டங்​க​ளில் அதி​கா​ரி​கள் என்ன கூறு​கி​றார்​கள் என்​பதை தெரிந்​து​கொள்​ளவோ இய​லாத நிலை​யில் உள்​ள​னர்.​ இத​னால்,​​ அதி​கா​ரி​கள் அள​வி​லான கூட்​டங்​க​ளில் மேற்​கண்ட பகு​தி​க​ளைச் சேர்ந்த மக்​கள் பிர​தி​நி​தி​கள் அவ​மா​னங்​க​ளைச் சந்​திக்க நேர்​கி​றது.​ எனவே மேற்​கண்ட பகு​தி​களை தமி​ழ​கத்​தி​லேயே சேர்ப்​பது குறித்​த​தான தங்​க​ளின் கோரிக்​கைக்கு தமி​ழ​கத்​தைச் ​ சேர்ந்த அனைத்​துக் கட்​சி​க​ளை​யும் சேர்ந்​த​வர்​கள் ஆத​ர​வ​ளிக்க வேண்​டும் என்​றார்.​÷இதே கருத்தை வலி​யு​றுத்தி ராமா​பு​ரம் பகு​தி​யைச் சேர்ந்த ராமர் கோயில் தர்​ம​கர்த்​தா​வான பட்​ட​தாரி ராக​வன் கூறி​யது:​ இங்கு தெலுங்கு பள்​ளி​கள் இருந்​தா​லும் அதி​க​மாக யாரும் படிப்​ப​தில்லை.​ பனங்​காடு, ​பெரி​ய​வேடு பகு​தி​க​ளில் மாண​வர்​கள் இன்மை கார​ண​மாக தெலுங்கு பள்​ளி​கள் மூடப்​பட்​டன.​ இங்​குள்ள ஊராட்​சிப் பகு​தி​க​ளைச் சேர்ந்த ஆயி​ரக்​க​ணக்​கான மாண​வர்​கள் ஆரம்​பாக்​கம்,​​ மாதர்​பாக்​கம்,​​ கும்​மி​டிப்​பூண்டி,​​ கவ​ரப்​பேட்டை,​​ பொன்​னேரி பகு​தி​க​ளில் பள்​ளிக் கல்​வி​யை​யும்,​​ பொன்​னேரி,​​ சென்​னைப் பகு​தி​யில் கல்​லூ​ரிக் கல்​வி​யை​யும் பயின்று வரு​கின்​ற​னர்.​ இருப்​பி​னும்,​​ தாழ்த்​தப்​பட்ட,​​ மிக​வும் பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்கு அதற்​கு​ரிய சான்​றி​தழ் ஆந்​தி​ரத்​தில் வழங்​கப்​ப​டா​த​தால் தமி​ழ​கப் பள்​ளி​க​ளில் அச் சலு​கை​களை பெற முடி​வ​தில்லை.​ அதே​போல தெலுங்கு பள்​ளி​க​ளில் தமிழை ஒரு பாட​மாக வைக்க தாங்​கள் மேற்​கொண்ட முயற்​சி​கள் ஆந்​திர கல்வி துறை​யால் நிறை​வேற்​றப்​ப​ட​வில்லை என்​றார் அவர்.​÷இங்​குள்ள ஊராட்​சிப் பகு​தி​க​ளைச் சேர்ந்த 100-க்கும் மேற்​பட்ட பட்​ட​தா​ரி​கள் தமி​ழக கல்​லூ​ரி​க​ளில் படித்​த​தா​லும்,​​ அவர்​க​ளுக்கு தெலுங்​கில் பேச,​​ எழுத தெரி​யா​த​தா​லும் அவர்​க​ளுக்கு ஆந்​திர அரசு மூலம் வேலை கிடைப்​ப​தில்லை என்​றார் சென்​னை​யில் முது​க​லைப் பட்​டப்​ப​டிப்பு முடித்த காரூர் பகு​தி​யைச் சேர்ந்த நீல​கண்​டன்.​ அதே​வே​ளை​யில்,​​ தமி​ழ​கத்​தி​லும் அவர்​கள் ஆந்​திர மாநி​லத்​த​வர்​க​ளாக பாவிக்​கப்​ப​டு​வ​தா​லும் இங்​கும் வேலை​வாய்ப்பு மறுக்​கப்​ப​டு​வ​தால் வேலை வாய்ப்​பின்றி இந்த பட்​ட​தா​ரி​கள் இரு தலைக்​கொள்ளி எறும்​பாய் பரி​த​விக்​கின்​ற​னர் என்​றார் அவர்.​÷தடா பகு​தி​யைச் சேர்ந்த முன்​னாள் மாவட்​டக் கவுன்​சி​ல​ரான உத்​தண்டி சுப்​பி​ர​ம​ணி​யம்,​​ பீம​ளா​வா​ரி​பா​ளை​யம் ஊராட்​சித் தலை​வ​ரான மனோ​க​ரன் உள்​ளிட்​டோ​ரும் இதே கருத்தை வலி​யு​றுத்​தி​னர்.​÷ஆந்​திர மாநி​லம்,​​ பழ​வேற்​காடு ஏரி மீன​வர் சங்க நிர்​வா​கி​யான சிவாஜி கூறு​கை​யில்,​​ இந்த ஊராட்​சிப் பகு​தி​களை தமி​ழ​கத்​தில் இணைப்​ப​தன் மூலம் பழ​வேற்​காடு ஏரி​யில் மீன்​பி​டிப்​பது தொடர்​பாக நெடுங்​கா​ல​மாக நிலவி வரும் பிரச்னை தீரும் என நம்​பிக்கை தெரி​வித்​தார்.​÷இந்​நி​லை​ யில்,​​ மேற்​கண்ட 9 ஊராட்​சிப் பகு​தி​க​ளைச் சேர்ந்த பல்​வேறு அர​சி​யல் கட்​சி​யி​ன​ரும் தடா பகு​தி​யில் ஒன்​று​கூடி,​​ ஆலோ​ச​னைக் கூட்​டத்தை நடத்​தி​னர்.​ மேற்​கண்ட பகு​தி​க​ளைச் சேர்ந்த பொது​மக்​களை தமி​ழ​கத்​தோடு இணைக்க ஆவன செய்ய வேண்​டும் என தமி​ழக,​​ ஆந்​திர மாநில அர​சு​களை வலி​யு​றுத்​தும் தீர்​மா​னத்​தை​யும் நிறை​வேற்​றி​னர்.​÷இ ​து​தொ​டர்​பாக தமி​ழக முதல்​வர் கரு​ணா​நிதி,​​ மத்​திய உள்​துறை அமைச்​சர் ப.சிதம்​ப​ரம் ஆகி​யோரை சந்​தித்து பேச உள்​ள​தா​க​வும்,​​ மேலும் தமி​ழ​கத்​தைச் சேர்ந்த அனைத்​துக் கட்​சி​யி​ன​ரை​யும் சந்​தித்து ஆத​ரவு கோர உள்​ள​தா​க​வும் வழக்​க​றி​ஞர் கிருஷ்​ணன்,​​ நெல்​லூர் மாவட்ட கவுன்​சி​லர் ​ செல்​வம் ஆகி​யோர் தெரி​வித்​த​னர்.
கருத்துக்கள்

சரியான கோரிக்கை. இதே போல் திருப்பதி முதலான பிற தமிழ்ப் பகுதிகளும் கருநாடாகா, கேரளாவில் இணைக்கப்பட்ட பிற தமிழ்ப் பகுதிகளும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்படவேண்டும். (நான் ஏற்னெவே தினமணி கருத்துப் பதிவுகளில் குறிப்பிட்டு வந்துள்ளேன்.) வன்முறைக்கு மட்டுமே செவி சாய்ப்பது என்னும் போக்கை மத்திய அரசு கைவிட்டு நியாயத்தின் அடிப்படையில் மறு மாநிலப் பிரிவினை மேற்கொள்ள வேண்டும். அந்தந்தப் பகுதியினர் விருப்பத்திற்கு மாறாகப் பிற பகுதியினர் போராடுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 4:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக