வெள்ளி, 25 டிசம்பர், 2009

மேலும் 4 புதிய வட்டங்கள்; 2 வருவாய் கோட்டங்கள்: கருணாநிதி உத்தரவு

First Published : 25 Dec 2009 10:54:00 PM IST


சென்னை,​​ டிச.​ 24:​ தமிழகத்தில் மேலும் நான்கு புதிய வட்டங்கள்,​​ இரண்டு வருவாய்க் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.சட்டப்பேரவையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை பிறப்பித்துள்ளார்.சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 30}ம் தேதி நடைபெற்ற வருவாய்த் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது,​​ "வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆம்பூர் வட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.மேலும்,​​ திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பட்டை வட்டத்தை இரண்டாகப் பிரித்து,​​ மடத்துக்குளத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக மடத்துக்குளம் வட்டமும்,​​ காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டத்தை மூன்றாகப் பிரித்து ஆலந்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆலந்தூர் வட்டமும் உருவாக்கப்படும்.சோழிங்கநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக சோழிங்கநல்லூர் வட்டம் ஏற்படுத்தப்படும்.வருவாய் கோட்டங்கள்...​ செங்கற்பட்டு வருவாய்க் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து தாம்பரம்,​​ ஆலந்தூர்,​​ சோழிங்கநல்லூர் ஆகிய வட்டங்களை உள்ளடக்கித் தாம்பரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு "தாம்பரம் வருவாய்க் கோட்டம்' உருவாக்கப்படும்.திருப்பூர் மாவட்டம்,​​ தாராபுரம் வருவாய்க் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து மடத்துக்குளம்,​​ உடுமலைப்பேட்டை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி உடுமலைப்பேட்டைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக "உடுமலைப்பேட்டை வருவாய்க் கோட்டம்' ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நான்கு புதிய வட்டங்களையும்,​​ இரண்டு புதிய வருவாய் கோட்டங்களையும் உருவாக்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்கள்

பெரிய மாவட்டங்களைப் பிரிப்பதற்கு ஒரு நியாயம்! பெரிய மாநில்ங்களைப் பிரிப்பதற்கு ஒரு நியாயமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/25/2009 3:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக