சனி, 6 ஜூன், 2009

இலங்கைத் தமிழ் அகதிகளை வெளியேற்றக் கூடாது: பழ. நெடுமாறன்
தினமணி


சென்னை, ஜூன் 5: தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை வெளியேற்றக் கூடாது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் போர் முடிவடைந்துவிட்டதாகக் கூறி தமிழ்நாட்டில் அகதி முகாம்கள் மற்றும் வெளியில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 1983-ம் ஆண்டிலிருந்து கடந்த 35 ஆண்டு காலமாக ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
உரிமைகள் இல்லாமலும், அதிகார வர்க்கத்தின் கெடுபிடிகளுக்கு இடையிலும் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது அவர்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் செயலாகும்.
இந்திய அரசின் இந்த செயல், உலக நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வரும் பல லட்சம் ஈழத் தமிழர்களை அந்த நாடுகள் வெளியேற்றுவதற்குத் தூண்டுகோலாக அமையும். எனவே, மனித நேயமற்ற இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இலங்கையில் போர் முடிவடைந்துவிட்டாலும் உள்நாட்டில் அமைதி திரும்பவில்லை. அங்கு மூன்று லட்சம் தமிழர்கள் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் போதுமான உணவு மற்றும் மருந்து இல்லாமலும், சித்ரவதைகளுக்கு ஆளாகியும் நலிவடைந்து வருகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் இங்கிருக்கும் ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்புவது அவர்களை கொலைக் களத்திற்கு அனுப்புவதற்குச் சமமாகும்.
ஏற்கெனவே 1992-ல் இதேபோன்ற முயற்சி நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம், நானும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கு தடை ஆணை பெற்றிருக்கிறோம்.
அகதிகள் அவர்களாக திரும்பிச் செல்ல விரும்பினால் ஒழிய யாரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதை நினைவுப்படுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் பழ. நெடுமாறன்.
கருத்துகள்

நெடுமாறன் ஐயா கூறுவது உண்மைதான். புலம் பெயரந்த தமிழர்களால் பன்னாடுகளின் அழுத்தம் பெருகும் என்று அஞ்சும் சிங்கள- காங். அரசுகள் இவர்களைத் திருப்பி யனுப்பச் செய்வதன் மூலம் அமைதிப் பூங்காவாகக்காட்டி உலக நாடுகளிடம் பெரும் பொருள் பெறவும் தாயகம் திரும்பிய தமிழர்களை அழித் தொழித்து வெளிநாடுகளிலும் ஈழத் தமிழர்களை இல்லாமல் செய்வதன் மூலம் முழுச் சிங்கள நாடாக இலங்கையயை மாற்றவும் சதித் திட்டம் தீட்டிச் செயல்படுத்து கின்றனர்.ஈழத் தமிழர்களை வறுமையிலும் வேதனையிலும் வாட்டி நாளும் கொல்லுவதற்கு மாற்றாக ஒரேயடியாகக் கொல்லும் பெருந்தன்மையில்தான் காங்.அரசு அவர்களைத திருப்பி யனுப்ப முயலுகிறது. காங்.கிற்கு விலைபோகிய கரு.அரசும் அதற்கு உடந்தையாக இருக்கிறது. எனவே, மனித நேய ஆர்வலர்கள் புலம் பெயர் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து இக்கொடுமையை நிறுத்த வேண்டும்.

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/6/2009 2:46:00 AM

தமிழ்நெஞ்சங்களே சிங்களர் புத்தமதத்தாலும், யூதர்களும் வெள்ளையர்களும் யெகோவா என்று கிறித்துவ மதத்தாலும், அரேபியர்கள் அல்லா என்று முஸ்லீம் மதத்தாலும் இந்தி வெறியர்கள் ராமவேத இந்து மதத்தாலும் வலிமையுடன் செயல்படுவதுபோல் ஆதி தமிழ்ப் பன்பாடாகிய தூய செவ்வேல் முருக பக்தி ஒழுக்கத்தால் மட்டுமே நாமும் வலிமையான ஒற்றுமையுடன் செயல்பட முடியும். தமிழ்மாண உரிமை என்று ஆசைப்படுவதற்கு முதலில் நாம் தமிழ்ப் பண்பாட்டு ஒழுக்கம் உள்ளவராக தகுதி பெற வேண்டும. தமிழ்ப்பற்று தமிழினப்பற்று இருந்தாலும்கூட கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்கிற திராவிட நாத்திகரும் கம்யூனிச வாதிகளும் மனம்திருந்தி தூய செவ்வேல்முருக ஒழுக்கத்தை ஏற்றுக்கொண்டால்தான் அவர்கள் உன்மைத்தமிழர்கள்.இனியும் நாம் தமிழுரிமைக்கு இடமில்லாத இந்துசாதியாகவோ கிறித்துவராகவோ முஸ்லீமாகவோ வாழ்ந்தால் இன்னும்பெரிய ஆபத்தும் அழிவும் வெகுசீக்கிரம் வந்துவிடும். உரிமைத் தமிழர் செவ்வேல் கட்டளை ! thamilurimai@gmail.com

By sevvelar,Thiruppur
6/6/2009 1:09:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக