சனி, 6 ஜூன், 2009

நடிகர் எசு.எசு. இராசேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
தினமணி


சென்னை, ஜூன் 5: பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கம் வழங்குகிறது. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் (ஜூன்-7) ஞாயிற்றுக்கிழமை அந்த சங்கம் நடத்தும் "முக்கனி விருந்து' என்னும் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படுகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருதினை, பிரபல திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு வழங்குகிறார். மேலும், பழம் பெரும் நடிகர்களான கே.ஆர்.செல்வராஜ், பாலசுந்தரம், தில்லை மனோகரி ஆகியோர்களுக்கு "நாடக காவலர்' விருது வழங்கப்படுகிறது.
கருத்துகள்

மக்கள் சார்பாளராக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரிய - இன்றைய நடிகர்கள் போல் முதல்வர் கனவில் ஒப்பனை போடாமல் உள்ளபடியே அரசியல் விழிப்புணர்வுடன் செயல்பட்ட - இலட்சிய நடிகருக்குப் பொருத்தமான விருதே வாழ்நாள் சாதனையாளர் விருது. தினமணி வாசகர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகளும பாராட்டுகளும் உரித்தாகுக! சிங்கப்பூர் இந்தியக கலைஞர் சங்கம் தொண்டு தொடரவும் வாழ்த்துகள்!


போற்றுதலுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/6/2009 3:00:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக