திங்கள், 1 ஜூன், 2009

தலையங்கம்:தமிழ்வழிக்கு ஒரு "வழி'இல்லை

First Published : 01 Jun 2009 12:22:00 AM IST

Last Updated : 01 Jun 2009 09:01:44 AM IST

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிடும்போது அரசுப் பள்ளித் தேர்வு முடிவுகள், மெட்ரிகுலேஷன் பள்ளி தேர்வு முடிவுகள் என தனித்தனியாகப் பிரித்து வெளியிடப்படுகிறது. ஆனால் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடும்போது, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துத்தான் வெளியிடுகின்றனர்.மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, இதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேட்கத் தோன்றும். ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிக வேகமாகக் குறைந்துவரும் இன்றைய சூழலில், இதனை நுட்பமாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடும்போது, தமிழை முதல் மொழிப்பாடமாக எடுத்துப் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டுமே தமிழக அரசு மாநில, மாவட்ட அளவில் தரவரிசைப்படுத்துகிறது. அவர்களுக்குப் பாராட்டு மற்றும் ரொக்கப் பரிசு வழங்குகிறது. ஆனால், இந்த மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்களா என்றால், 99 சதவீதம் இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். முதல் மொழிப்பாடம் மட்டுமே தமிழ். மற்ற பாடங்களுக்கான விடைகளை அவர்கள் ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள்.இப்படியாக ஆங்கில வழிக் கல்வி பயின்று, தமிழை மொழிப்பாடமாக மட்டுமே படித்து, மாநில அளவில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களாகவே இருக்கிறார்கள். தமிழக அரசின் மாநில, மாவட்ட அளவிலான பாராட்டும் ரொக்கப் பரிசும் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ் வழியில் பாடம் நடத்தும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எந்தப் பாராட்டும் பரிசும் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியானபோது, பெற்றோர்களிடம் எப்படி இங்கே மாணவர்களைச் சேர்க்க ஆர்வம் ஏற்படும்?பத்தாம் வகுப்பு தேர்வு முடிவைப் போலவே, பிளஸ்-2 தேர்வு முடிவுகளையும் ஒரேநாளில் ஆனால் அரசுப் பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளித் தேர்வு முடிவுகளைத் தனியாக வெளியிட்டால் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆங்கில வழியில், ஆனால் தமிழை முதல் பாடமாக எடுத்துப் பயின்ற மாணவர்கள் என்ற இரு தரவரிசை உருவாகும். இரண்டு தர வரிசை மாணவர்களுக்கும் அரசு விருது வழங்கலாம். யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.அரசுப் பள்ளிகளின் மீது மக்கள் மதிப்பு குறைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. உதாரணமாக, தருமபுரியில் மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தில் வந்த மாணவர்களின் பெற்றோர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். ஆனால் அவர்களது குழந்தைகள் தனியார் பள்ளியில்தான் படித்து, மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவரின் பெற்றோரும் ஆசிரியர்கள். அந்த மாணவரும் தனியார் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இதற்காக ஆசிரியர்களைக் குறை சொல்ல முடியாது. ஆனால், இதையெல்லாம் அறியவரும் சாதாரண மக்கள், அரசுப் பள்ளி ஆசிரியருக்கே பள்ளி மீது நம்பிக்கை இல்லை என்று நினைப்பார்களே தவிர, தமிழ் வழி, ஆங்கில வழி என்று பிரித்துப் பார்க்க மாட்டார்கள். இதனால் அரசுப் பள்ளிகளைப் பற்றி குறைத்துதான் மதிப்பிடுவார்கள்.மேலும், தற்போது அரசு வழங்கும் பரிசுப் பணம் மிகமிக சொற்பம். சென்ற ஆண்டில், முதல் மூன்று இடங்களில் வரும் மாணவருக்கு ரூ. 15,000, ரூ. 12,000. ரூ. 10,000 வழங்கியது. இத்தொகை தற்போது முறையே ரூ. 50,000, ரூ. 30,000, ரூ. 20,000 என்று உயர்த்தப்பட்டபோதிலும், இன்றைய கல்விக்கட்டணங்களை ஒப்பிடும்போது இது மிகமிக சொற்பத்தொகை.இந்த மாணவர்கள் நிச்சயமாக பொறியியல் அல்லது மருத்துவப் படிப்பை அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களில் வரும் மாணவர்களின் உயர்கல்விச் செலவு முழுவதையும் அரசு ஏற்றாலும்கூட தமிழக அரசுக்குப் பெரும் இழப்பு ஏற்படாது. திரைப்படத்தின் பெயரை தமிழில் வைத்தாலே ஒரு லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள். தமிழ் வழியில் படிக்கும் மாணவருக்குக் கொடுத்தால் என்ன!தமிழ்வழி, ஆங்கிலவழி என இரு தரவரிசைப்படுத்தி பரிசுகள் அளிப்பதன் மூலம், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் பரிசும் பாராட்டும் கிடைப்பதால், மாணவர் சேர்க்கையில் ஆர்வம் ஏற்படும். அதேவேளையில், அந்த மாணவர்கள் படித்த அரசுப் பள்ளி ஆசிரியர் குழுவுக்கும் ஒரு தொகையை ரொக்கப்பரிசுடன் நல்லாசிரியர் விருதும் கொடுத்தால், அரசுப் பள்ளிகளிலும் கற்பித்தல் போட்டி உருவாகும்.இல்லையானால், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மட்டுமே வளரும். அவர்கள் வைத்ததுதான் கல்விக் கட்டணம் என்றாகும்.
கருத்துக்கள்

YES, INCENTIVES AND PRIZES SHALL BE GIVEN TO TAMIL MEDIUM STUDENTS. MOREOVER WE SHOULD THINK WHY PARENTS ARE RELUCTANT TO ADMIT THEIR CHILDREN IN GOVERNMENT SCHOOLS, THERE IS NO PROPER FURNITURE FACILITY AND NO ADEQUATE TEACHERS. FOR EXAMPLE THERE IS A GOVERNMENT HIGH SCHOOL IN VELAVALLI NEAR MATHUR IN KRISHNAGIRI DISTRICT WHERE THERE IS NO TEACHER EXCEPT THE HM A FEW PTA STAFF WERE APPOINTED BUT THEY WERE NOT PAID THEIR SALARY FOR THE PAST 5 MONTHS.IN SPITE OF THESE DRAWBACKS THAT SCHOOL GOT 71% RESULT IN SSLC WHO IS TO BE BLAMED?

By M. Annamalai
6/1/2009 1:54:00 PM

UNAMAYILEA NAN DINAMANI ASIRIYARKKU NANTRI SOLLA KADMAI PATTULEN ENGA VEETLA KOODA PRIVATE SCHOOLATHAN PASANGALA SERTHU IRUKKOM VEDASNTHOOR(DINDUKAL DIST) MANAVI STATE LEVEL 3 M EDAM EDUTHATHU POLA ELLA GOVRNMET SCHOOL M STATE LEVEL A VARATHUKKU TAMIL TAMIL ENTRU PESUM CUREENT GOVERNMENT NALLA NADAVADIKKAI EDUKKUM ENTRU AVAA. (EN MARIYATHAKURIYA ELUTHLAR Gaani AVARKAL KUMUTHAM VARA ETHLIL ELUTHUM O PAKKANKAL NABAKAM VARTHU - OUR CHEIF MINISTER LAWER&POLIC FIGHTINGLA ADIPATTAVARKAL Praivate HOSPITALA TERATMENT EDUPPAVARKALUKU TREATMENT FEES GOVERNMENT GIVE CHEIF MINIDTERKKEA GOVENMENT HOSPILA NAMBIKAI ILLAI)

By shahul m.ksim
6/1/2009 1:12:00 PM

இந்த எண்ணம் சரியானது தான். ஆனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி தரமானது தானா என்பதையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பிள்ளைகளின் மதிப்பெண்ணை மையமாக கொண்ட கல்விதான் தரப்படுகின்றது. அரசு பள்ளிகளிலோ பிள்ளைகளின் கல்வியை பற்றிய எண்ணமில்லாமல் கடமைக்கு பாடம் நடத்துகின்றார்கள். இந்த நிலை மாறினால் தான் நல்ல மனிதர்களை உருவாக்க முடியும்.

By இளந்திரையன்
6/1/2009 12:08:00 PM

காலத்திற்கு ஏற்ற தரமான தலையங்கம். வீழ்வது நாமாக இருப்பின் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாய் கிழிய பேசுபவர்கள் இந்த தலையங்கத்தை சற்று கூர்ந்து பார்க்கட்டும்.அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் ஏன் தங்கள் பிள்ளைகளை சேர்க்க தயங்குகின்றன என்ற காரணங்களை ஆராய்ந்து அதனை களைய முயற்சி செய்யவேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும் அப்போதுதான் தாங்கள் பிள்ளைகள் மேல் உள்ள அக்கறை பள்ளி மீதும் ஏற்படும்.

By அலாவுதீன்
6/1/2009 11:05:00 AM

dinamaniyil thamilil eppadi karuthu sollvathu?

By m. vaiyapuri
6/1/2009 10:45:00 AM

Recently, In UAE, The Primary, secondary school teachers skill evalution made by the government and they scrutinised, recruted well qualified teachers. Nama Tamil Nattil DPI, DEO, CEO adhigaarigalin OOzhal,10th std, +2 padithu vittu just pass panni( 40% Marks)kottavila seattu vaangi private nadathum Teacher training schoolil Rs. 2 Lakh kattittu DTE padikkum maanvargalidamum, kottavilum, seniorityyilum Teacher promotion likesecondi grade, BT, AEO, DEO,CEO agira teacher's ulla varai Tamilnadu mattumalla, Indiavin kalvi murayil onnum panna mudiyaathu. most of Govt school teacher tution nadathurathum, varusathukku 165 naalu mattume pallikoodam vanthu vaangura sambalathai matra naatkalil pakkathilulla townil chit company nadathurathu, kandu vaddikku vidarathu, vasool pandrathu madhiri activities thaan seigiraargal. Munbellam AAsiriyar Thozhil Punithamaaga karuthap pattathu! Ippo?

By Abu Dhabi Gokul
6/1/2009 10:35:00 AM

மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழி கல்வி கற்பவர்களுக்குப் பொறியியல், மருத்துவப் படிப்புகளில் குறைந்தது 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பொதுப் பிரிவிருக்கான இடங்களுக்கும் இவ்வொதுக்கீடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

By பா. ரெங்கதுரை
6/1/2009 10:23:00 AM

Well, ASHWIN, you might be right. But along with the scholar ships they should attach a class where you should service the public for a while, especially the doctors, who doesn't want to work in the remote places and villages.

By Tamizhan
6/1/2009 9:17:00 AM

Cash-awards only are not enough. Scholarships supporting them till they pass out as Graduates in their chosen fields will foster the students' interests and generally motivate them to put efforts to learn. While talking of curriculum, there is nothing wrong in studying more languages and Government need not narrow it down to "one". In fact, the trend of Authorities seems to say, "Don't study this; don't study that" and so on. It should be ,"we do not want to restrict the learning venues of students and they will decide what they want". 'Right to Education' in true sense, as what I understand, should only that. Tendency to say, "Don't study that". NO, NEVER!

By ASHWIN
6/1/2009 7:38:00 AM

நல்ல கருத்து இனி யாவது ஊக்கம் பெருமா தமிழ் வழி கல்வி

By கார்த்திக்கேயன்
6/1/2009 7:28:00 AM

Dont forget that it is the use of English that has got the jobs for the youth in India in IT and ITES secors. So You dont want to kill the goose that lays golden eggs under the guise of promoting Tamil medium.India is recognised for its english knowledge population ahead of China who will catch up with us in another 4-5 years. Then edge will be gone.

By S Raj
6/1/2009 7:27:00 AM

The need of the hour is to improve the standard of teaching in Govt run and aided schools. The teachers there are only interested in attending school and take care of their personal interests.Mnany of them are poor in their teaching. They are not dedicated and allow students to copy to show percentages.The students who pass out do not possess even minimum skills for jobs.

By S Raj
6/1/2009 7:22:00 AM

மிக நல்ல ஆலோசனை.தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.தமிழ் வழி கல்வியை ஆராரிக்கும் தினமணிக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

By கல்பனாசேக்கிழார்
6/1/2009 7:05:00 AM

தமிழ் நாட்டில் தமிழ் வழியாகப் பயிலும் மாணக்கர்களுக்கு மட்டும் அரசு உதவிகள் வழங்கினால் போதுமானது. பிற மொழி வாயிலாகப் பயிலுவோருக்கும் பிற மொழி பயிலுவோருக்கும் அந்தந்த மொழி பேசுவோர் உதவி செய்தால் போதுமானது. தினமணி சரியான நேரத்தில் தலையங்கம் எழுதயிருந்தாலும் ஆளுவோர் செவிகளில் ஏறாது. 'கஞ்சி வரதப்பா!' என்றால் 'எங்கே எங்கே வருதப்பா' என்பதுபோல் குடும்பத்தினருக்கான பதவி அறிவிபபு மட்டுமே செவியில் ஏறும். எனவே மக்களை விழிப்படையச் செய்யு்ங்கள். பிற மொழி வழிக் கல்வி மோகமும் கல்வியகங்களின் கட்டணக் கொள்ளைக்குக் காரணம் என்பதை உணர்த்துங்கள்! தமிழ் வழிக் கல்விக்குக் குரல் கொடுக்கும் தினமணிக்குப் பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/1/2009 4:54:00 AM

This is very goods idea and boosting for tamil medium student. Thanks for Dinamani.

By HAJA MAIDEEN
6/1/2009 4:52:00 AM

Dear Mr.Paris Ejilan,a humble suggestion:Please use CAPS only when necessary.Thx

By Sinha
6/1/2009 4:46:00 AM

IT SEEMS TO BE A GOOD IDEA.

By Paris EJILAN
6/1/2009 3:17:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக