திங்கள், 1 ஜூன், 2009

யுத்தக்குற்ற விசாரணைகளை ஜ.நா தற்போது கூட நடத்தலாம் எனச் சர்வதேசக் குற்றவியல் நீதிபதி கூறுகிறார்
பிரசுரித்த திகதி : 01 Jun 2009

இலங்கை ராணுவம் நடத்திய இறுதி யுத்தத்தில் 20,000 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, இது குறித்து கடந்த 27ம் திகதி ஜ.நா மனித உரிமைக்கழகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது, இருப்பினும், பல நாடுகள் இலங்கைக்குச் சார்பாக இருந்தால் இத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

தற்போதைய சூழ் நிலையில் கூட ஜ.நா மனித உரிமைக் கழகத்தால் யுத்தக்குற்ற விசாரணைகளை நடத்தமுடியும் என பிரித்தானிய மனித உரிமை வழக்கறிஞரும், சர்வதேச குற்றவியல் நீதீமன்றத்தின் நீதிபதியுமாகிய ரோபேட்சன் QC தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜ.நா மனித உரிமைக்கழகம் தற்போது ஒரு அரசியல் அமைப்பாக மாறியுள்ளதாகவும், மனிதப்படுகொலைகள் பற்றி விசாரனை நடத்தாமல் அரசியல் நடத்துவதாகவும், மனித உரிமைக் கழகம் தற்போது அரசியல் சதுரங்கமாக மற்றப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளர்.

இலங்கை விடையத்தில் ஜான் ஹோம்ஸ், மற்றும் நவநீதம் பிள்ளை ஆகிய உயர் அதிகாரிகள் யுத்தக்குற்ற விசாரணைகளை நடத்தவேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், ஏன் அது நடைபெறவில்லை என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8075000/8075064.stm


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக