வெள்ளி, 11 அக்டோபர், 2013

NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes

NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes

[TamilNet, Friday, 11 October 2013, 06:57 GMT]
Twenty members of the Tamil National Alliance (TNA) elected to the Northern Provincial Council took oaths in Jaffna after visiting the memorial site of SJV Chelvanayakam and after observing honour to fallen Tamil Heroes (Maaveerar) and the people perished in the war, at Jaffna Veerasingham Hall Friday 9:00 a.m. EPRLF-leader Suresh Premachandran and five of the six EPRLF's elected members, TELO's M.K.Sivajilingam and an elected TELO member, PLOTE leader Tharmalingam Siththarthan and one elected PLOTE member were absent at the event. Ms Ananthi Sasitharan was present marking her independency between the ITAK and the portfolio-seekers. The ceremonial event took place without any celebrations and the members declined to wear traditional garlands at the function.

NPC members take oath in Jaffna


NPC members take oath in Jaffna
NPC members take oath in Jaffna
After reading a common oath, individual members signed their document in front of TNA Parliamentary Group Leader R. Sampanthan and handed their documents to the Chief Minister CV Wigneswaran, who had taken his oath as CM in front of Sri Lanka's President Mahinda Rajapaksa in Colombo.

Apart from the religious leaders were present at the function, a notable visitor to the event was the Consul General of India Mr V. Mahalaingam.

@As the details of portfolios and other roles of elected members were released to the media, it became clear that all the key functions, including the revenue generating areas, have come under the CM's portfolio, political observers in Jaffna said.

Informed sources within the ITAK also said the controversial appointment of Mr Aingaranesan was a decision taken by Mr R. Sampanthan on the request by India.



NPC members take oath in Jaffna
NPC members take oath in Jaffna
NPC members take oath in Jaffna


Chronology:

இனி நாள் தோறும் ஆயுத பூசை!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_824411.jpg

இனி நாள் தோறும் ஆயுத பூசை!
 
இருசக்கர வாகனங்களைப் பேணும்  முறையை விளக்கும், 'கம்மியர்' இராசேசு: நான், சென்னையில், 'ஆட்டோ மொபைல்ஸ்' கடை வைத்திருக்கிறேன். அதிவேகமான நவீன உலகில், 'டூ வீலர்' எனும், இருசக்கர மோட்டார் வாகனத்தின் பயன்பாடு, அதிகமாக உள்ளது. அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் வழியில், வண்டி பழுதாகி நடுவழியில் நிற்க வைப்பதுடன், தேவையற்ற பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.டூவீலரை முறையாக பராமரிக்காததே, இதற்கு காரணம். சில பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றினாலே, தேவையற்ற பதற்றம் மற்றும் செலவுகளை குறைக்கலாம். 'ஸ்டார்ட்டிங் டிரபிள்' பிரச்னை ஏற்பட்டால், 'ஸ்பார்க் பிளக்'கை, 16 அல்லது 19 சைஸ் ஸ்பேனரால் கழற்றி, அதன் அழுக்கை சிறிய கம்பியால் சுத்தம் செய்ய வேண்டும். பின், அடாப்டரோடு, பிளக்கை இணைத்து, இன்ஜின் மேல் வைத்து, வண்டியை ஸ்டார்ட் செய்து, 'கரன்ட்' வருகிறதா என, 'செக்' செய்ய வேண்டும். இல்லையெனில், பிளக்கை மாற்றினால், பிரச்னை தீர்ந்துவிடும். 5,000 கி.மீ.,க்கு ஒரு முறை, 'ஏர் பில்டர், பிளக், கியர் பாக்சை' மாற்றுவதுடன், வாரம் ஒரு முறை, டயர்களில், 'ஏர் செக்' செய்தால், பெட்ரோல் செலவீனம் குறைந்து, 'மைலேஜ்' அதிகரிக்கும்.
பெண்கள் பயன்படுத்தும், 'வித் அவுட் கியர்' வண்டிகளில், 'பிரேக்' பிரச்னை அடிக்கடி வரும். ஏனெ னில், பிரேக் ராடிற்கு பதில், 'கேபிள் கம்பி'களே இருப்பதால், ஆறு மாதத்திற்கு ஒரு முறை, தரமான கேபிள் கம்பிகளை மாற்றுவது அவசியம். காலையில், 'செல்ப் ஸ்டார்டரை' பயன்படுத்தாமல், 'கிக்கர்'களை உதைத்து, 'ஸ்டார்ட்' செய்ய வேண்டும்.
அதிகம் தேங்கியுள்ள மழைநீரில் வண்டி ஓட்டும் போது, 'திராட்டில்' செய்தபடி கொஞ்சம் வேகமாகவும், அதே நேரத்தில் பிரேக்கை லேசாக பிடித்தபடி ஓட்டினால், 'சைலன்ச'ருக்குள் நீர் புகாது. வண்டியில், 'இன்ஜின் ஆயில்' குறைந்தால், சைலன்சரில் அதிகமாக புகை வரும். தொடர்ந்து பல கி.மீ., ஓட்டினால், இன்ஜின், 'சீஸ்' ஆகி, அதிக செலவு வைக்கும். எனவே, 1,500 கி.மீ.,க்கு ஒரு முறை, இன்ஜின் ஆயிலை மாற்றலாம்.

இற்றை நாள் உடனடித் தொடரி முன்பதிவு - எளிய வழி

தட்கல் ரயில் டிக்கெட்- ஈஸியாக முன்பதிவு செய்ய !

arasiyaltodayவெகு சுலபமாக தட்கல் ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்ய மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இந்த பக்கத்தில் பயணிப்போரின் பெயர், வயது போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். தட்கல் புக்கிங் செய்யும்போது இவ்வாறு நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால், தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.
தட்கல் முன்பதிவின்போது நேரம் விரயமாவதை தவிர்க்கும் வகையில் ஓர் புதிய வசதி அறிமுகமாகியிருக்கிறது. இந்த வசதியில் ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் இருப்பது போன்றே பெயர் உள்ளிட்ட விபரங்களையும் முன்னதாகவே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.( இந்த ஆட்டோஃபில் பக்கத்தினை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்).
இதன் பிறகு ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால், புக்மார்க்கில் உள்ள இந்த பக்கத்தினை பூர்த்தி செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால், மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும்.
இந்த மேஜிக் ஆட்டோ ஃபில் பட்டனை அப்படியே டிராக் செய்து, ஐஆர்சிடிசி முன்பதிவு பக்கத்தில் க்ளிக் செய்தால், பயணியின் விவர பட்டியல் தானாகவே அடுத்த நொடியில் நிரம்பி விடும்.
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த வசதி வரப்பிரசாதமாக இருக்கும். இந்த வசதியின் மூலம் எளிதாக தட்கல் டிக்கெட்டை புக் செய்யலாம்.

உழவு எந்திரன்

எந்திரன் (ரோபோ) விவசாயி பாலாசி !

"ஆயிரம் பேருடைய அறிவும் திறமையும் சிட்டி ரோபோவுக்கு புரோகிராம் செய்யப்பட்டிருக்கு. இவனால எல்லா வேலையும் செய்ய முடியும்." - பாலாஜியின் அலைபேசியை அழைக்கும்போது எந்திரன் படத்தில் ரஜினி பேசிய வசனம் ரிங் டோனாக ஒலிக்கிறது. பேசத் தொடங்கினால் வார்த்தைக்கு வார்த்தை ரோபோ புராணம் பாடுகிறார். அடுத்த ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ள, ‘உலக புத்தாக்கப் போட்டி’க்காக விவசாயம்செய்யும் ரோபோவை வடிவமைப்பதில் மூழ்கியிருக்கும் பாலாஜி ஓர் அசலான கிராமத்து இளைஞர். விழுப்புரம் அருகே உள்ள கண்டாச்சிபுரம்தான் இவரது சொந்த ஊர்.

"விவசாய நாடான இந்தியாவுல, 2020ஆம் ஆண்டுக்குள் விவசாயம்செய்யும் ரோபோவை அறிமுகப்படுத்த வேண்டும். அதுதான் என்னோட தற்போதைய லட்சியம்" என்னும் பாலாஜி, ரோபோ காதல் காரணமாக, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் எம்.டெக். ரோபோடிக்ஸ் பாடப் பிரிவை எடுத்துப் படித்து வருகிறார். ரோபோ படிப்பை எடுத்துப் படிப்பதற்குச் சிறு வயதிலேயே ரோபோ மீது ஏற்பட்ட ஆர்வம்தான் காரணம் என்கிறார் இவர்.

"பள்ளியில படிக்கும்போது பத்திரிகைகளில் வரும் ரோபோ படங்களைப் பார்த்து அட்டைகளில் விளையாட்டா ரோபோ செய்ய ஆரம்பிச்சேன். அதுவே எனக்கு ரோபோ மீது ஆசையைத் தூண்டியது. 9ஆம் வகுப்பு படிச்சபோது மினியேச்சர் புல்டோசர் செய்தேன். அதை மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்தபோது, எனது படைப்பைப் பாராட்டி இளம் விஞ்ஞானி விருது கொடுத்தாங்க. இது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது" என்று தன் ரோபோக் காதலுக்கான காரணம் கூறுகிறார் பாலாஜி.

பள்ளிப் பருவத்திலேயே ஆளில்லா விமானம் உள்பட குட்டி ரோபோக்களைச் செய்து அசத்தியுள்ளார் பாலாஜி. பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு, தச்சுத் தொழிலாளியான அவரது தந்தையால் இவரை உடனடியாக மேல்படிப்பு படிக்கு அனுப்ப முடியவில்லை. ஓராண்டுக்குப் பிறகே மயிலம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் சேர முடிந்தது. படித்தது இயந்திரவியல் என்றாலும், இந்தக் கால கட்டத்திலும் உளவு பார்க்கும் ரோபோ, மினியேச்சர் ஜே.சி.பி., வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ரோபோ எனப் பலவற்றை செய்து இயக்கியும் காட்டியுள்ளார் பாலாஜி.

கல்லூரிப் படிப்பை முடித்ததும், நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது. ரோபோ மீது பாலாஜிக்கு இருந்த பேராவலைக் கண்ட அக்கல்லூரி நிர்வாகம், பாலாஜியின் மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்று எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படிக்க அனுப்பியது.

ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்கள் தெரியாமலேயே அசத்திக்கொண்டிருந்த பாலாஜி, இன்று ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் அவற்றைக் கச்சிதமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் சுயமுயற்சியால் ரோபோடிக்ஸில் வெற்றிக் கொடிகட்டி வரும் பாலாஜிக்கு, வாய்ப்புகள் மட்டும் சரியாக அமைந்து விட்டால் சிறந்த ரோபோடிக்ஸ் விஞ்ஞானியாக வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை...
Like · ·

சாலையிலும் இயங்கும் சரக்குத் தொடரிப் பெட்டிகள் அறிமுகம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_824096.jpg

சாலையிலும் இயங்கும் வகையில் சரக்கு த் தொடரிப் பெட்டிகள் திசம்பரில் அறிமுகம்
இரயில் பாதையிலும், சாலையிலும் செல்லும் சரக்கு ரயில் போக்குவரத்து, "டோர் டூ டோர்' என்ற பெயரில், முதற்கட்டமாக, சென்னை புதுடில்லி இடையே, வரும் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்தியா முழுவதும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லக் கூடிய, சரக்குப் பரிமாற்றம் அதிகரித்துள்ளது. பஸ், லாரி சரக்குப் போக்குவரத்தை விட, ரயில்களில் ஏற்றப்படும் சரக்குகள், குறிப்பிட்ட நேரத்திற்கு, செல்ல வேண்டிய இடத்தை அடைகின்றன என்பதால், ரயில் சரக்கு போக்குவரத்திற்கு, அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்து மூலம், இந்திய ரயில்வேக்கு, அதிக வருவாயும் கிடைத்து வருகிறது. எனினும், சரக்கு அனுப்ப வேண்டிய இடத்திலிருந்து, ரயில் நிலையத்திற்கு எடுத்து வருவதில் சிக்கல், நேரமின்மை, சரக்கை பாதுகாப்பதில் ஏற்படும் பிரச்னைகள், சென்று சேர வேண்டிய இடத்திற்கு, பெட்டியிலிருந்து சரக்கை இறக்கி அனுப்புவதில் ஏற்படும் தாமதம், ஏஜன்டுகள் கட்டணம் ஆகிய பிரச்னைகளை கருத்தில் கொண்டு, ரயில் பெட்டியையே, சாலைப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தும் வகையிலான திட்டம் குறித்து, ரயில்வே சிந்தித்தது. அதன்படி, பெட்டிகளின் அடியில், இரும்புச் சக்கரத்துக்குப் பக்கத்தில், டயர் சக்கரம் பொருத்தி, அதன் உதவியுடன் சாலையில் இயக்கிக் கொள்ளும் வகையில், பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் பெட்டிகள் பயணிக்கும் போது, மேலேறிய நிலையில் இருக்கும் டயர் சக்கரங்கள், சாலையில் இறங்கும் முன், கீழிறங்கும். தார் சாலையில், வாகன இன்ஜின் உதவியுடனும், தண்டவாளத்தில் மின்சார ரயில் இன்ஜின் மூலமும், இவை இயங்கும். மொத்தம், 51 பெட்டிகள் இவ்வகையில் மாற்றப்பட்டுள்ளன. முதல் முறையாக, சென்னை - புதுடில்லி இடையே, "டோர் டூ டோர்' சரக்கு ரயில் போக்குவரத்து திட்டம், வரும் டிசம்பரிலிருந்து துவங்குகிறது. இந்திய ரயில்வேயுடன், கிர்லோஸ்கர் பெனுமேட்டிக் நிறுவனம் இணைந்து, இப்புதிய திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த நவீன சரக்கு ரயிலில் இணைக்கப்படும், 51 பெட்டிகளிலும், 1,200 டன்கள் வரை சரக்குகள் ஏற்றிச் செல்லாம். இந்த சரக்கு ரயில் போக்குவரத்திற்காக, சென்னை பேசின் பிரிட்ஜ் யார்டில், ரயில்வே பணியாளர்கள், 126 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த வசதி குறித்து, ஏஜன்ட்கள் கூறியதாவது:
எங்கள் அலுவலகத்தில் இருந்து, சரக்குப் பெட்டகங்களை பெரிய லாரிகளில் ஏற்றி, ரயில் நிலையத்திற்கு அனுப்பி, லாரியிலிருந்து ரயிலில் ஏற்ற வேண்டும். இந்தப் பணிகள் முடியும் வரை, நாங்கள், கூடவே இருக்க வேண்டும். இனி அறிமுகமாகக் கூடிய சரக்கு ரயிலில், பெட்டகங்களை, நேரடியாக, ரயில் பெட்டிகளில் ஏற்றி விடுவதுடன், எங்கள் பணி முடிந்து விடும். சரக்கு ஏற்று, இறக்கு செலவு, சரக்கு காத்திருக்கும் இடத்திற்கான வாடகை, கண்காணிப்பு ஆட்கள் செலவு குறைவதுடன், சரக்குகள் மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று விடும். இந்த சரக்கு ரயில் போக்குவரத்து துவங்க, ஆவலுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- தினமலர் செய்தியாளர் -

வியாழன், 10 அக்டோபர், 2013

தட்டச்சிற்கு 'அகவை' முந்நூறு!

 தட்டச்சிற்கு  'அகவை' முந்நூறு!

Comment (3)   ·   print   ·   T+  
1
உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் மூடப்பட்டது - அண்மையில் இந்தச் செய்தியை நாளிதழ்களில் பார்த்தபோது நெஞ்சுக்குள் ஏதோ ஒரு வலி! பேப்பரை சுருட்டி கேன்ட் பாரில் செருகிக் கொண்டு, சைக்கிள் மிதித்து டைப் கிளாஸிற்கு சென்ற காலத்தை மறக்க முடியுமா? டைப் செட்டானதோ இல்லையோ தோழர்கள் பலபேருக்கு அந்தக் காலத்தில் லைஃப் செட்டானது இங்குதானே !
ஹென்றி மில் 1714-ல், முதல் டைப்ரைட்டரை உருவாக்கினார். அதன்படி பார்த்தால் அடுத்த வருடம் டைப்ரைட்டருக்கு மூன்றாவது செஞ்சுரி முடிகிறது. நொடிக்கு நொடி நவீனமயம் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் 300 ஆண்டுகள் ஒரு இயந்திரம் தாக்குப்பிடித்திருக்கிறது என்றால் அதற்காக ஒரு விழாவே கொண்டாடலாம். மனிதனுக்கு குரங்கு எப்படி முன்னோடியோ அதுபோன்று…இன்று நாம் மடிவரை வந்துவிட்ட கம்ப்யூட்டர்களுக்கு டைப்ரைட்டர்கள் தான் மூலாதாரம்.
ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட டைப்ரைட்டர்களில் சிலிண்டர்கள் நட்டுக்குத்தலாக இருந்தன. இதனால், மேட்டரை டைப் செய்து பேப்பரை வெளியில் எடுத்துத்தான் மேட்டரை படிக்கமுடியும். முப்பதாண்டுகள் பழக்கத்துக்கு பிறகுதான், இப்போதுள்ள டைப்ரைட்டரை வடிவமைத்தார் ஹென்றி மில்.
கீ- போர்டும் முதலில் அல்ஃபபெட்டிக்கல் ஆர்டரில் தான் இருந்தது. பின்னர், ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்துக்களை 'ஹோம் கீஸ்' என்றழைக்கப்படும் நடுவரிசைக்கு கொண்டுவந்தனர். அப்புறம் தான், டைப்ரைட்டர்கள் சரளமாக தடதடக்க ஆரம்பித்தன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 2-வுக்கு மேல் கல்வியை தொடர முடியாத ஏழைகளுக்கு டைப்ரைட்டிங் கோர்ஸ் ஒரு வரப்பிரசாதம். ஆனால், இப்போது?
அன்று ஹவுஸ் ஃபுல்லாய் இருந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்கள் இன்று பழைய படங்கள் ஓடும் சினிமா கொட்டகைகள் கணக்காய் காத்தாடுகின்றன. பல ஊர்களில் இன்ஸ்டிடியூட்டுகள் மூடப்பட்டு கம்ப்யூட்டர் சென்டர்களாக மறு அவதாரம் எடுத்துவிட்டன. தனியார் நிறுவனங்களில் டைப்ரைட்டர்களை கம்ப்யூட்டர்கள் கபளீகரம் செய்துவிட்டன. ஒருசில அரசு அலுவலகங்களில் மட்டும் இன்னமும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை கக்கிக் கொண்டிருக்கின்றன டைப்ரைட்டர்கள் .இப்படியே போனால், அடுத்த சில ஆண்டுகளில் டைப்ரைட்டர்களை தொல்லியல் துறை சொந்தம் கொண்டாடி விடும் போலிருக்கிறது.
டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ஆசிரியர்களை கேட்டால், ‘’ஸ்ட்ரென்த் இல்லை, ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கவில்லை’’ என்று டைப்ரைட்டரைவிட வேகமாக தடக்கிறார்கள். விடுமுறையை வீணடிக்க இந்தக் காலத்து குழந்தைகளுக்கு எத்தனையோ வழிகள் இருக்கையில் அவர்கள் எப்படி டைப் இன்ஸ்டிடியூட்களை தேடி வருவார்கள்? முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. பாஸாகி இருந்தால் தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளை எழுத முடியும். அப்புறம் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலானவர்களும் என்றாகி… இப்போது, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே தமிழ்நாடு அரசின் ஜூனியர், சீனியர் தட்டச்சு தேர்வுகளை எழுதலாம் என்றாகிவிட்டது. அதிலும் ஒரு அதிரடி சலுகையாக 6-ம் வகுப்பு பாஸானவர்கள் தமிழ்நாடு அரசின் ஸ்பீடு டெஸ்ட் மட்டும் எழுதலாம், இரண்டாம் தாள் கிடையாது என்கிற அளவுக்கு டைப்ரைட்டிங் கிளாஸ்களுக்கு அடிமாட்டு ரேஞ்சுக்கு ஆள்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை சலுகைகளை வாரித் தெளித்தாலும் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களில் '’தட்தடா தட்தடா' என டைப் அடித்துக் கொண்டிருந்த தாவணி பெண்களைப் போல இப்போது டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களும் அரிதாகி விட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓடிக் கொண்டிருக்கும் இன்ஸ்டிடியூட்களிலும் ஸ்ட்ரென்த் இல்லை. தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளால் மட்டுமே இன்ஸ்டிடியூட்டுகள் ஓரளவு தள்ளாட்டத்திலாவது ஓடிக் கொண்டிருக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக புதிய டைப்ரைட்டர்கள் விற்பனை இல்லை என்கிறார்கள்.
இன்ஸ்டிடியூட்டுகளில் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் டைப்ரைட்டர்கள் உள்ள வரை தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளுக்கு செல்ல முடியும். பழுதாகும் டைப்ரைட்டர்களுக்கு இபோதே ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைக்கவில்லை. ஏற்கெனவே பழுதாகிக் கிடக்கும் டைப்ரைட்டர்களில் நல்ல நிலையில் உள்ள பாகங்களை எடுத்து, ஸ்பேராக பயன்படுத்தி வருகிறார்கள். இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ?
டைப்ரைட்டர்களைப் பற்றிய ஆறுதலான ஒரு செய்தி!
அரசாங்க ரகசியங்கள் வெளியில் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அலுவலகப் பணிகளில் கம்ப்யூட்டர்கள் ஒழிக்கப்பட்டு, மீண்டும் தட்டச்சு எந்திரங்களை பயன்படுத்தும் முடிவை எடுத்திருக்கிறது ரஷ்யா. இதற்காக புதிதாக தட்டச்சு எந்திரங்களை வாங்குவதற்கான அரசாணையில் கடந்த ஜூலையில் கையெழுத்திட்டார் அதிபர் புட்டின்!

கனடா பெண் எழுத்தாளர் ஆலிசு மன்றோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

கனடா பெண் எழுத்தாளர் ஆலிசு மன்றோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
கனடா பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம், அக். 10-

2013-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சிறந்த சிறுகதை தொகுப்பிற்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

ஆலிஸ் மன்றோ 14 சிறுகதை தொகுப்புகளை வழங்கியிருக்கிறார். கடைசியாக 4 சுயசரிதை கதைகளுடன் கூடிய ‘டியர் லைஃப்’ என்ற தொகுப்பை வெளியிட்டார். 82 வயதான ஆலிஸ், கதை எழுதுவதில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருப்பதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 13-வது பெண் ஆலிஸ் மன்றோ ஆவார். நோபல் பரிசு தவிர, மூன்று முறை கனடாவின் கவர்னர் ஜெனரல் விருதினையும், 2009ம் ஆண்டு மேன் புக்கர் சர்வதேச பரிசையும் ஆலிஸ் மன்றோ பெற்றிருக்கிறார்.

கடந்த 1901ஆம் ஆண்டு முதல் 2012 வரை 106 பேர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். இவர்களில் 17 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள். ரவீந்திரநாத் தாகூர், ரட்யார்ட் கிப்ளிங், வி.எஸ்.நைபால் ஆகியோர் நோபல் வென்ற இந்தியர்கள் ஆவர். கடந்த ஆண்டு இந்த பரிசு சீனாவின் மோ யானுக்கு வழங்கப்பட்டது.

http://media.dinamani.com/2013/10/09/nobel.jpg/article1826796.ece/alternates/w460/nobel.jpg

ITAK announces NPC ministers, EPRLF challenges

ITAK announces NPC ministers, EPRLF challenges

[TamilNet, Thursday, 10 October 2013, 12:43 GMT]
A press note coming from the ITAK, the main party in the TNA, on Thursday, has announced the list of chairperson and deputy chairperson of the council and the provincial ministers to function under Chief Minister C.V. Wigneswaran. But EPRLF, the party next in line in terms of number of seats in the council, challenged the list, saying that it was highhandedly decided by a few in the ITAK. In a hastily convened press conference in Jaffna on Thursday, Mr. Suresh Premachandran of the EPRLF, denouncing the list, blamed Mr R. Sampanthan for creating internal dissension within TNA. He also condemned the act of C.V. Wigneswaran taking his oath before Mahinda Rajapaksa.

There are no provisions in the SL constitution, forcing the Chief Minister of any province to take oath in front of the SL president. We boycotted taking part at the event as we found it morally wrong to do that after campaigning against the war-crime accused Rajapaksas, Suresh Premachandran said.

The ITAK list has announced the names of Mr. P. Ainkaranesan of the EPRLF from Jaffna district for the portfolio of agriculture, animal husbandry, irrigation and environment; Mr. T. Kurukularajah of the ITAK from Ki'linochchi district for education and culture; Dr. P. Sathiyalingam of the ITAK from the Vavuniyaa district for health and Mr Deneesvaran of TELO from the Mannaar district for fisheries, transport and village development.

Mr. C.V.K. Sivagnanam of the ITAK and Mr. Anton Jeyanathan of the ITAK were announced as chair and deputy chair of the council.

Mr. C.V. Wigneswaran, the Chief Minister is taken as party-less 'general candidate' from the Jaffna district

Condemning the way the list was made, an irate Suresh Premachandran said at the press meet, “This is a unilateral decision by the ITAK and we, as constituting parties of the TNA, were not informed or consulted on the appointment of ministerial positions.”

He particularly blamed Mr Sampanthan for creating internal divisions among the constituting parties of the TNA.

The final list seems to have been decided singlehandedly by the ITAK, at a meeting held on Wednesday evening by R Sampanthan, CV Wigneswaran, Mavai Senathiraja, MA Sumanthiran and E Saravanapavan.

“We were not invited to the meet. I have talked to both Sivajilingam and Sitharthan and their parties too were neither invited nor consulted on this crucial matter,” Suresh Premachandran told the journalists in Jaffna. The press statement issued by the ITAK states that a portfolio had been assigned to one EPRLF member in Jaffna. Even this has not been consulted with the EPRLF party, Mr Premachandran told journalists.

“I was not informed or consulted on the appointment of one EPRLF member as minister. It is not a EPRLF decision. Next to ITAK, we are the party having large number of seats,” he said.

6 EPRLF members have been elected in the provincil council, two in Jaffna, two in Mullaiththeevu and two in Vavuniyaa, while the ITAK has secured 14.

The ITAK list has no minister coming from the Mullaiththeevu district.

Tamil national political activists in the island were sad at the way the TNA was bickering on the shallow and hollow NPC, while there are important fundamental issues to address at the detractors of Eezham Tamil cause inside and especially outside of the island.

Ms. Ananthi Sasitharan, who had secured the largest number of votes next to the CM candidate, has announced that she would not aspire for any position of power in the NPC.

Occupying SLAF demands money from people

Occupying SLAF demands money from people to access their beach in Trincomalee

[TamilNet, Wednesday, 09 October 2013, 23:35 GMT]
The Sri Lankan Air Force, which had appropriated the popular Marble Beach in 2001 at the southern tip of Trincomalee under the pretext of providing ‘high security’ to the SL Air Force base at China Bay, has transformed it into a military run corporate outfit after the war, naming it ‘Marble Beach Air Force Resort’. The occupying SL Air Force has now started to charge money from the public to even access that limited area, civil sources in Trincomalee said.

The occupying SLAF personnel harass the people visiting their beach to pay 20 rupees each to ‘Air Force Command Welfare Fund’.

The ‘Marble Beach Air Force Resort’ was declared opened by the SL president Mahinda Rajapaksa in March 2011.

In the beginning, the SLAF said it allowed people of Trincomalee to access an ‘open area’ in the beach, but now the entire beach has been under the administrative control of the occupying SL military.

Legal sources in Trincomalee alleged that the occupying Sri Lankan Air Force had also violated the Sri Lankan parliamentary act called Coast Conservation Act (Act No. 57 of 1981), in appropriating the beach and making it into a military run corporate property.

கால்கள் முடங்கினால் என்ன

'கால்கள் முடங்கினால் என்ன.. மனம் முழுக்க  துணிவு இருக்கிறதே'

எசு. கல்யாணசுந்தரம்
தமிழ்இந்துComment   ·   print   ·   T+  
மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொணடவர் செனித்தா ஆண்டோ. 2014-இல் நார்வேயில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு துடிப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறார். சிறு வயதிலேயே போலியோ தாக்கத்தால் கால்களை இழந்த இவரை விடாமுயற்சியும் தன்னம்பிக்கையுமே கூட்டணி போட்டு இந்த உயரத்துக்கு இட்டு வந்திருக்கிறது.
திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த காணிக்கை இருதயராஜ் - ஜெயராணி தம்பதியின் மூன்றாவது மகள் ஜெனித்தா ஆன்டோ. காணிக்கை இருதயராஜ் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். முப்பத்தாறு வயதை எட்டிப் பிடித்திருக்கும் ஜெனித்தாவுக்கு மூன்று வயதிலேயே கால்கள் இரண்டும் போலியோவால் முடங்கிப் போனது. ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த மகளுக்கு கால்கள் முடங்கிப் போனதால் இருதயராஜும் ஜெயராணியும் கலங்கிப் போனார்கள்.
’அழகுபெத்த பொம்பள புள்ளைய வீட்டுக்குள்ள முடமா வைச்சிக்கிட்டு இருந்து என்ன பண்ண..?’ என்று உறவுகள் ஒரு பக்கம் உச்சுக் கொட்டின. இருதயராஜும் செல்ல மகள் மறுபடியும் ஓடியாட மாட்டாளா என்ற தவிப்பில் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் ஓடினார். எத்தனையோ வைத்தியங்கள்... எண்ணற்ற மருந்துகள். எதுவுமே அந்தக் குழந்தை எழுந்து நடக்க உதவவில்லை. கடைசியில், ‘முதுகுத் தண்டுவடத்துல பாதிப்பு ஏற்பட்டிருக்கு. அதனால இந்தக் குழந்தைக்கு இடுப்புக்குக் கீழே செயல்பாடு இருக்காது’ என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். பிறகு நடந்ததை இருதயராஜ் விவரித்தார்.. “எங்க பிள்ளை இனி ஓடியாடி விளையாட முடியாதுன்னு டாக்டர்கள் சொன்னப்ப நாங்க ரெண்டு பேரும் இடிஞ்சு போயிட்டோம். பள்ளிக்கூடத்துல சின்னப் புள்ளைங்க ஓடியாடி விளையாடுவாங்க. சில நேரங்கள்ல, அந்தக் குழந்தைகள் கீழே தவறி விழும்போது ‘பாத்துடா.. கைகால் அடிபட்டுறப் போகுது’ன்னு பதறியிருக்கேன். என் பிள்ளை அந்த சந்தோஷத்தை எல்லாம் பறிகுடுத்துட்டாளேன்னு நினைச்சப்ப மனசு கனத்துப் போச்சு. ஆனாலும், நானும் ஜெயராணியும் நம்பிக்கை இழக்கல. புள்ளைய எப்படியாச்சும் எதிலாவது ஒரு துறையில திறமையான மனுஷியா ஆக்கிடணும்னு எங்களுக்குள்ளேயே தீர்மானிச்சிக்கிட்டோம்.
எங்க புள்ளையப் போலவே போலியோவால பாதிக்கப்பட்ட சந்திரசேகர், ஒரு கண்ணுல பார்வை இழந்த பட்டோடி இவங்க எல்லாம் கிரிக்கெட்டுல சாதனை பண்ணலையா? அதேமாதிரி நம்ம புள்ளயும் ஏன் சாதிக்க முடியாதுன்னு யோசிச்சேன். ஜெனித்தாவுக்காக நான் தேர்ந்தெடுத்த விளையாட்டு செஸ்! எனக்கும் செஸ் தெரியும்கிறதால தொடக்கத்துல நானே அவளுக்கு செஸ் சொல்லிக் குடுத்தேன். ஒரு கட்டத்துல என்னையவே அடிக்கிற அளவுக்கு அவ மூளை அற்புதமா வேலை செஞ்சுது’’
இருதயராஜ் நிறுத்த... “அதுக்கப்புறம் நான் சொல்றேன் டாடி..” என்று ஆர்வத்தோடு ஆரம்பித்தார் ஜெனித்தா.. “அப்பா - அம்மாவோட ஆசையை புரிஞ்சுக்கிட்டு, நிறைய ஹோம் ஒர்க் பண்ணுனேன். அதனால எட்டு வயசுலயே எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைச்சிட்டேன். எட்டு வயசுல மாவட்ட செஸ் போட்டியில நான் சாம்பியனா வந்தப்ப எல்லாரும் பாராட்டினாங்க. அப்பா – அம்மா அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. அன்றைக்கு வந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்தான் என்னை அடுத்தடுத்த சாதனைகளுக்கு உந்தித் தள்ளுச்சு. அதுக்கப்புறம் எத்தனை போட்டிகள்ல கலந்துக்கிட்டேன்னுகூட எனக்கு நினைவில்ல. ஆனா, அத்தனையிலும் நான்தான் ஜெயிச்சேன்.
2008-ல் ஜெர்மனியில நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துக்க இந்தியா சார்பில் ஐந்து பேருக்கு வாய்ப்பு கிடைச்சிது. அதுல எனக்கும் ஒரு இடம்! சர்வதேச அளவுல மொத்தம் 570 பேர் கலந்துக்கிட்டோம். அதில் 8 புள்ளிகளுடன் எனக்கு 25 வது ரேங்க் கிடைச்சிது. அடுத்ததா 2010-ல் ரஷ்யாவுல நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துக்கிட்டு, மாஸ்டர் வீராங்கனை (Women Canditate Master) பட்டம் வாங்கினேன். இதுக்கு நடுவுல அப்பாவுக்கு ஒரு ஆக்ஸிடென்ட். அதனால, அடுத்த வருஷம் நடந்த சர்வதேச போட்டிகள்ல கலந்துக்க முடியாம போச்சு.
இந்த வருஷம் நானும் அப்பாவும் மறுபடியும் உற்சாகமா கிளம்பிட்டோம். ஜூன் மாசம் செக் குடியரசில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் கலந்துக்கிட்டேன். இதில் பெண்களுக்கான மாற்றுத் திறனாளிகள் பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிட்டு வந்துட்டேன். இந்த வெற்றி மூலம் மகளிர் இன்டர்நேஷனல் மாஸ்டர் (Women International Master) பட்டமும் எனக்கே கிடைச்சுது. இப்ப அடுத்த கட்டமா, நார்வே ஒலிம்பியாட்சுக்கு தயாராகிட்டு இருக்கேன். இதிலும் கண்டிப்பா நான்தான் சாம்பியன்” நம்பிக்கையுடன் துள்ளுகிறார் ஜெனித்தா ஆன்டோ.
தினமும் குறைந்தது ஐந்து மணிநேரம் செஸ் பயிற்சி எடுத்துக்கொள்ளும் ஜெனித்தா, இந்தியாவின் முன்னாள் கிராண்ட் மாஸ்டர் ராஜா ரவிசேகரிடம் நேரடிப் பயிற்சியும் எடுத்துவருகிறார். ரவி சேகரிடம் 40 மூவ்கள் வரை சளைக்காமல் விளையாடுவாராம் ஜெனித்தா. சமீபத்தில் திருச்சியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் முதலிடத்தில் வந்த ஒருவருடன் கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடி ஜெயித்து அனைவரையும் அதிசயிக்க வைத்தார் ஜெனித்தா. திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஜெனித்தாவின் இந்தத் திறமையை பாராட்டி பரிசும் வழங்கி இருக்கிறார்.
“கால் முடங்கினா என்ன.. என் மனசு முழுக்கதான் தைரியம் இருக்கே. ‘எனக்கு இப்படி ஆகிருச்சே’ன்னு மனம் தளர்ந்துடாம அதிர்ஷ்டத்தை நம்பாம, எடுத்த துறையில விடாமுயற்சியோட உழைச்சா உலகம் நிச்சயம் ஒருநாள் நம்மை திரும்பிப் பார்க்கும்’’ விடை பெறுவதற்கு முன்பு ஜெனித்தா ஆன்டோ சொன்ன வெற்றியின் ரகசியம் இது!