திங்கள், 29 ஜூன், 2009

தனி இட ஒதுக்கீடு வழங்க வன்னியர் சங்கங்கள் கோரிக்கை



சென்னை, ஜூன் 28: தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வன்னியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அதன் நிர்வாகத் தலைவர் சி.என்.ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் மத்தியில் 2 சதவீதமும், மாநிலத்தில் 20 சதவீதமும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கை. பல்வேறு தொடர் போராட்டத்துக்குப் பின் வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.


எனினும் இதுவரை வன்னியர்களுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. எனவே, வன்னியர்களுக்கு தாற்காலிகமாக 15 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். தலித்துகள், கொங்கு வேளாளாளர், முக்குலத்தோர், நாடார், யாதவர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் சமூக நீதியை நிலை நாட்ட, ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் இன்னமும் 69 சதவீத ஒதுக்கீடுக்குப் பதிலாக 50 சதவீத ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
வன்னிய சமுதாய முன்னோர்கள் தங்களது சந்ததியினர் நலனுக்காக ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் சொத்துகளை விட்டுச் சென்றுள்ளனர். இச் சொத்துகளை மீட்டு, ஒருங்கிணைத்து "வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்' அமைக்கப்பட வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் நிர்வாகிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, விரைவில் போராட்டம் நடத்தவும் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் ராமமூர்த்தி.


கருத்துக்கள்

சாதிச் சங்கங்களைத் தடைசெய்தால்தான் நாடு உருப்படும். வன்னியராக எண்ணி அன்னியப்பட்டுப் போகாமல் தமிழராக எண்ணி தமிழ் நாட்டுமக்களுக்கு உழைத்தால் நீங்களும் உயருவீர்கள்! நாடும் உயரும்! சாதிச் சங்கங்கள் இல்லாக் காலமே நாட்டின் பொற்காலம். 'சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே' என்னும் பாவேந்தர் பாரதிதாசன் கவலை தீரும் நாளே நமக்கெல்லாம் பொன்னாள்! அதற்கு முதற்படியாகச் சாதிச் சங்கங்களைத் தடை செய்வீ்ர்!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2009 3:58:00 AM
இன ஒற்றுமை குறித்து கருணாநிதி பேசுவதா?:
வைகோ



விழுப்புரம், ஜூன் 28: ஈழத்தில் நடத்திய இன அழிப்புப் போருக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுடன் துணை போய்விட்டு இன ஒற்றுமை குறித்து க கருணாநிதி பேசுவது அபத்தமானது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டினார்.

விழுப்புரம் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று வைகோ பேசியது:


"எல்லோரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கையில் இதுபோல் நடந்திருக்குமா என்று கருணாநிதி கூறுகிறார். இலங்கையில் இன அழிப்புப் போரை நடத்திய காங்கிரஸ் அரசுக்கு துணை போய்விட்டு இப்போது இவ்வாறு பேசுவது அபத்தமானது. ஈழத்தில் குழந்தைகள், பெண்கள் என்று பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதை எதிர்த்து குரல் கொடுக்காமல் இப்போது இன ஒற்றுமை குறித்துப் பேசுகிறார் கருணாநிதி.

இரங்கல் தெரிவிக்காதவர்

ஈழப் பிரச்னை காரணமாக 14 பேர் தீக்குளித்தனர். அவர்களுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்தாரா? ஏன் திமுக தொண்டர்கள் இருவர் தீக்குளித்தனரே அவர்களுக்குக் கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

கெüரவமான தோல்வி

திமுக கூட்டணி பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றிருக்கிறது. நகரங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அங்கு இவர்கள் வாரி இறைத்த பணத்தால் பயன் ஏற்படவில்லை. கிராமப்புற மக்களுக்கு பல கஷ்டங்கள் உள்ளன. அதனால் அவர்களுக்கு கடைசி நேரத்தில் ஒரு மனப் போராட்டம் ஏற்பட்டு மாறி வாக்களித்துவிட்டனர்.
இதனை வரும் சட்டமன்றத் தேர்தலில் மாற்ற வேண்டும். நகரங்களில் ஏற்பட்ட விழிப்புணர்வை கிராமப் புறங்களிலும் ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

மீண்டும் ஈழப்போர்

ஈழப்போர் மீண்டும் வெடிக்கும். பிரபாகரன் இறந்துவிடவில்லை; உயிருடன் உள்ளார். ராமாயணத்தில் இந்திரஜித் தன் மீது பாய்ந்த அம்பைப் பிடுங்கி போர் தொடுத்ததாக கம்பன் கூறுவான். அதற்கு இணையான வீரர் பிரபாகரன்.


தமிழ் ஈழத்தையும், விடுதலைப் புலிகளையும் நாங்கள் என்றைக்கும் ஆதரிப்போம். இதில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் கடைசி தமிழன் இருக்கும் வரை, மானமுள்ள தமிழர்கள் இருக்கும் வரை ஈழப்போர் ஓயாது. இலங்கையில் தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம் மட்டுமே.
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவினர் நான் போட்டியிட்ட தொகுதியில் நன்றாகத் தேர்தல் பணியாற்றினர். பண பலத்தால் நாம் தோற்கடிக்கப்பட்டோம்' என்றார் வைகோ.

இக் கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் ஏ.கே.மணி தலைமை தாங்கினார். மாநில பொருளர் ஆர்.மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துக்கள்

கலைஞர் தன்மீது உள்ள களங்கத்தை மறைப்பதற்காக இவ்வாறு பேசியுள்ளார் என்பதை பிற்காலத் தலைமுறையினர் புரிந்து கொள்வார்கள். கட்சிகளில் ஒற்றுமையின்மையால பிளவுபட்டுப் புதிய கட்சிகள் மலரும் நாட்டில் இருந்து கொண்டு, உட்கட்சி ஒற்றுமையின்மையால் படுகொலைகள் நடக்கும் கட்சியில் இருந்து கொண்டு குடும்ப ஒற்றுமையின்மையால் நாடடைப் போர்க்களமாக்கிய குடும்பத்தில் இருந்து கொண்டு ஒற்றுமையி்ன்மை குறித்துப் பேசக் கூடாதுதான். இதை உணர்ந்து இனியாவது நாம் ஒற்றுமையுடன் இருக்கலாம் அல்லவா? பேரவலப் படுகொலைகளுக்குத் துணைநின்றமையால் இரங்கல் தெரிவிக்கா மனச் சான்றைப் பாராட்டலாம் அல்லவா? அந்த மனச் சான்று இனியேனும் விழித்து எழுந்து இனப்படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கலாம் அல்லவா? அந்த நாளை எதிர்பார்ப்போம்! அதுவரை நாம் மனித நேயத்துடன் ஈழத் தமிழர்களுக்குத் துணை நிற்போம்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2009 3:44:00 AM

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-29:
அமைப்பு ரீதியான எதிர்ப்பின் ஆரம்பம்!



இலங்கைத் தமிழ் மக்களின் மாறாத வடுவாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் பதிந்தன. இதனைத் தமிழ் மக்கள், தமிழ் தேசிய கெüரவத்திற்கு ஏற்பட்ட இழுக்காக நினைத்தனர். இந்த மாநாட்டிற்குப் பின் தமிழர் வாழும் பகுதிகள் எல்லாம் சிங்கள வெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டு தாக்கப்பட்டன.
தியாகி சிவகுமாரன் மிகப் பெரிய துணிச்சலுடனும், தீர்மானத்துடனும் தமிழ் மக்களின் கெüரவத்தைக் காப்பதற்காகவும், "தனித்தமிழ்ஈழம்' பெறுவதற்காகவும் ஆயுதம் ஏந்திய இளைஞர் குழுவை வளர்த்தார்.
ஆரம்பத்தில் இந்தக் குழுவின் லட்சியம், உலகத் தமிழ் மாநாட்டில் கலவரம் விளைவித்தவர்களைப் பழிக்குப் பழி வாங்குவது என்பதே.
இந்தக் கலவரத்திற்கும் குழப்பத்திற்கும் படுகொலைக்கும் காரணமான போலீஸ் உயர் அதிகாரி சந்திரசேகராவையும், யாழ் தமிழ் மேயர் துரையப்பாவையும் சுட்டுக் கொல்வதுதான் இந்தக் குழுவின் நோக்கமாயிருந்தது.
சந்திரசேகராவை சிவகுமார் தேடி அலைந்தார். தெல்லிப்பளை என்னும் இடத்தில் வைத்துக் குண்டு வீசினார். சந்திரசேகரா தப்பிவிட்டார். மீண்டும் யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டுக்குப் பக்கத்தில் வேலைக்குச் செல்லும் சமயம் ஜீப்பை மறித்தார். குண்டுகளை எறிந்தார். குண்டு வெடிக்க மறுத்தது. சுழல் துப்பாக்கியை எடுத்துச் சந்திரசேகராவின் மார்புக்கு நேராக வைத்து ஆறு ரவைகளையும் தீர்க்க முயன்றார். ஆறும் வெடிக்க மறுத்தன. மீண்டும் மறைந்தார். அவரது தலைக்கு விலைபோட்டுப் போலீஸôர் தேடினர். ஆயிரம் பேர் ஆயுதங்களுடன் ஊரை வளைத்தனர். சிவகுமாரன் யாழ்ப்பாணத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.
பணம் தேவைப்பட்டது. யாரும் உதவி செய்யவில்லை. நண்பர்கள் மூவரைக் கூட்டிக்கொண்டு ஓரிடத்திற்குப் போனார். அங்கும் பணம் கிடைக்கவில்லை. ஒரு சிலர் அவரைத் துரத்தினர். அவர்களுக்கு எல்லாவற்றையும் விளங்கப்படுத்தினார்.
நேரம் போய்க்கொண்டிருந்தது. போலீஸôர் சுற்றி வளைத்துக் கொண்டனர். துப்பாக்கியிலோ ரவைகள் இல்லை. உடன் வந்த நான்கு நண்பர்களையும் நாலாபக்கமாக ஓடச்சொல்லிவிட்டு அவரும் ஓடினார்.
அறுவடை செய்யப்பட்ட புகையிலைத் தோட்டத்தின் அடிக்கட்டை அவரது காலில் குத்தியது. வேகமாக ஓட முடியவில்லை. அப்போது போலீஸôர் அவரைப் பிடித்து விட்டனர். அவரிடம் ஒரு குப்பியில் "சயனைட்' எப்பொழுதும் இருந்தது. தொடையைக் கத்தியால் கிழித்து நஞ்சை ரத்தத்துடன் கலக்க முயற்சித்தார். போலீஸôர் கத்தியைப் பிடுங்கி எறிந்தனர். நஞ்சை வாயில் ஊற்றி விழுங்கினார்.
போலீஸôர் அவரை மருத்துவமனையில் சேர்த்துச் சங்கிலிகளால் கட்டிலுடன் பிணைத்துப் போட்டனர். பயங்கர ஆயுதங்களுடன் போலீஸ் காவல் வேறு. ஒருசில மணிகளில் அவர் உயிர் போய்விட்டது. அவர்தான் சிவகுமாரன்!
(--லங்காராணி--அருளர்
எழுதியதிலிருந்து)
1974 ஜூன் 5-ஆம் நாள் இந்தச் சிவகுமாரன் தன் வாழ்க்கையை ஒரு சீர்திருத்தவாதியாகவே தொடங்கினார். சாதியொழிப்பு, சமபந்தி, சமயச் சீர்திருத்தம் போன்றவற்றில் ஆர்வம் காட்டியவர் சிவகுமாரன். பொதுவாக அவரைக் கம்யூனிஸ்ட் என்று அழைப்பார்கள்.
குடியரசு, சுதந்திர தினம் போன்ற தேசியக் கொண்டாட்ட நாட்களில் அரசாங்கத்தின் தேசியக் கொடியை தமிழர்கள் ஏற்றி வைத்துக் குதூகலிப்பதை சிவகுமாரன் வெறுத்தார். தனது இல்லத்துக்குப் பக்கத்தில் யாராவது சிங்கள தேசியக் கொடியை ஏற்றி வைத்தால் அறுத்து எறிந்து விடுவார். சிங்களவரைக் குறிக்கும் சிங்கம் ஒன்று கத்தியுடன் நிற்கும் காட்சியைத் தாங்கியதாக இருந்தது அந்தக் கொடி. இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த சமயத்தில் இந்தக் கொடிக்குத் தமிழர் தலைவர்கள் பயங்கரமாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்த எதிர்ப்புக்குப் பயந்து தமிழர்களைக் குறிக்கும் இரண்டு நிறங்களை தேசியக் கொடியில் இணைத்தார்கள். அந்த இரண்டு நிறக்கோடுகளையும் சிங்கத்துக்கு எதிர்ப்புறமாக வைத்தனர். தமிழர்களுக்கு அந்தச் சிங்கம் கத்தியைக் காட்டிக் கொண்டிருப்பதாக அமைந்திருக்கிறது இந்த தேசியக் கொடி.
துரையப்பா தமிழ்ப் பகுதியில் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக ஸ்ரீமாவோவினால் அமர்த்தப்பட்டார். துரோகிகளின் பட்டியலில் இவருக்கு முதலிடம் தந்து அவர் தீவிரவாத இளைஞர்களால் கண்காணிக்கப்பட்டார்.
இளைஞர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து துரையப்பாவின் நடவடிக்கைகளை ஆராய்ந்தனர். அவர் செவ்வாய்க்கிழமைதோறும் மானிப்பாய் என்னுமிடத்திலமைந்த அந்தோணியார் கோயிலுக்கும், வெள்ளிக்கிழமைகளில் புன்னாலையிலிருந்த வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும் செல்வார் என்று தெரிந்து கொண்டனர். வரதராஜப் பெருமாள் கோயில் வாசலில் நான்கு இளைஞர்கள் கையில் துப்பாக்கி சகிதம் நின்று கொண்டிருந்தனர். துரையப்பாவின் வண்டி கோயில் வாசலில் வந்து நின்றது. அவரும் காரின் கதவைத் திறந்துகொண்டு இறங்கினார்.
நான்கு இளைஞர்களில் ஒருவர் வேகமாகச் சென்று, "இப்போது மணி என்ன?' என்று கேட்டார். துரையப்பாவும் மணி சொல்லும் நோக்கத்துடன் கையைத் தூக்கி மணி பார்த்தார். சற்றும் தாமதிக்காமல் மணி கேட்ட இளைஞர் தனது துப்பாக்கியில் இருந்த குண்டுகளைத் தீர்த்தார். துரையப்பா குண்டு துளைத்து சுருண்டு விழுந்தார். இளைஞர்கள் துரையப்பாவின் காரில் ஏறித் தலைமறைவானார்கள்.
அவ்வாறு குறிதவறாமல் சுட்டவர் யார் தெரியுமா? அவர்தான் பின்னாளில் தமிழ் ஈழவிடுதலைப் போரில் வீரமரணம் எய்திய விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன்.
சிவகுமாரனின் வீரமும், தியாகமும் தமிழ் அமைப்புகள் அனைத்திலும் ஒரு வீச்சை உருவாக்கின. 1976-ஆம் ஆண்டு மே 22-ஆம் நாள் தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் புதிய மாற்றம் பெற்றது.
அப்போது தமிழர் கூட்டணி தனது ஆரம்பகால கோஷமான தமிழர் சுயாட்சியைக் கைவிட்டுத் "தனி ஈழம்' என்ற கோஷத்தை முன்வைத்துச் செயல்பட ஆரம்பித்தது.
1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் ""ஆறு வடக்கு, வட கிழக்கு மாவட்டங்களை உள்ளடக்கிய "ஒரு தனித்தன்மை வாய்ந்த ஈழமே' தனது நோக்கம்'' என்று பிரகடனம் செய்தது. செல்வநாயகம், பொன்னம்பலம், தொண்டமான் மூவரும் கூட்டுத் தலைவர்களானார்கள்.
""சுதந்திரம் பெறுவதும், தங்கள் உழைப்பின் பயனை தாங்களே அனுபவிப்பதும் தமிழ் மக்களின் சொந்த பிறப்புரிமை என்றும், எந்த ஓர் அரசாங்கமாவது மக்களின் அந்த உரிமைகளைப் பறித்தால் மக்கள் அச்சட்டத்தை தூக்கி எறியக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்'' என்றும் அம்மாநாட்டுத் தீர்மானம் கூறியது.
அது மட்டுமல்லாது தொடர்ச்சியான சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் தமிழ் மக்களின் சுதந்திரத்தைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதார வளர்ச்சி, பண்பாட்டு முன்னேற்றம் ஆகியவற்றிற்கான வாய்ப்புகளையும் பறித்ததாகவும் தீர்மானம் கூறியது.
மேலும் மாநாட்டுத் தலைவர் குறிப்பிடுகையில், தாங்கள் வாழ்வதற்கு தமிழ் அரசை மீண்டும் உருவாக்குவதைத் தவிர வேறு மாற்று வழி ஏதும் தமிழர்களுக்கு இல்லை என்றும் கூறினார்.
இதை ஒட்டி தமிழ் மக்கள் ஓர் அமைப்பு ரீதியான வெகுஜனத் தன்மையான எதிர்ப்பை சிங்களவர் மீது தொடுக்க ஆரம்பித்தனர்.

(நாளை: புத்தளம் இனப்படுகொலை)

கருத்துக்கள்

அட அப்பனே! சாதியத்தை எதிர்த்ததால் ஆசு என்னும் ஆங்கிலேயனைக் கொன்றதைக் கூட விடுதலைச் செயலாகக் கருதும் நாட்டில் இருந்து கொண்டு இனமானத்தைக் காக்கவும் உரிமையைக் காக்கவும் மரணத் தண்டனை அளித்ததைக்கூட தனிப்பட்ட பழிவாங்குதலாகக் கருதுகிறீரே! முறைதானா? உலகின் பிற பகுதிகளில் எழுந்த உரிமைக் குரலுக்குச் செவிசாய்த்துத் துணைநின்ற இந்தியம் பிற நாடுகளையும் கூட்டுச் சேர்த்து வஞ்சகமான செயல்களில் ஈடுபட்டதால்தான் நூறாயிரக் கணக்கில் ஈழத் தமிழர்கள் மடிந்து வருகின்றனரே தவிர வேறு காரணமல்ல என்பதை எப்பொழுது புரிந்து கொள்வீர்? வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2009 3:26:00 AM

எழுதப்பட்ட விசயங்களை பார்க்கும்போது இந்த செயல் விடுதலை புரட்சிக்கு செய்ததாக தெரியவில்லை. மாற்றாக தீவிரவாத செயல்களாக தெரிகிரது. ஒத்த கருத்து இல்லாத வர்களை போடுத்தள்ளும் கலாச்சாரம் கட்டாயமாக விடுதலைக்காக இருக்க முடியாது.முப்பது வருடங்கள் கழித்து இந்த செயலை சீர்தூக்கி பார்க்கும் போது இதனால் ஈழ மக்கள் பயனடைந்தது ஒன்னுமில்லை. மாற்றாக இந்த செயலால் ஒரு லட்சத்திர்க்கு மேலான ஈழ மக்கள் செத்து மடிந்தினர். புலிகள் கூப்பிடு தூரத்தில் உள்ள தமிழகத்திலும் இப்படி பட்ட வன்முறையை உபயோகித்ததால் , தமிழகமும் இவர்களை ஒதுக்கி வைத்து விட்டது.விளைவு சரித்திரம் காணாத அளவில் ஈழத்தமிழர்கள் துயர்பட்டுகொண்டு இருக்கிரார்கள். இந்த ஒரு லட்சம் பேர் விடுதலைக்காக சாத்வீக முறையில் மாண்டு இருந்தால் உலகமே விழித்திருக்கும். அகையால் ஈழ மக்கள் விவேகமாக வன்முறையில் ஈடுபடாமல் ஈழப்புரட்சி செய்யவும். ஈழம் கட்டாயம் மலரும். இது காலத்தின் கட்டாயம்

By Appan
6/29/2009 2:02:00 AM

THANKS TO DINAMANI FOR HIGHLIGHTING BARBARIAN SINHALESE ACTS IN THE HISTORY. WHOEVER WHO SUPPORT IN THE NAME OF NATIONALISM ABOUT INDIAN ACTIONS ARE DEFINITELY ARE NOT TAMILS. THEY ARE ARYANS AND ENEMIES OF TAMIL COMMUNITY. ITS NOT LONG ,MOTHER NATURE WILL TEACH A VERY BIG LIFE LONG LESSON TO INDIA AND ENEMIES OF SL TAMILS.

By tamizhan
6/29/2009 12:42:00 AM

ஞாயிறு, 28 ஜூன், 2009

Colombo’s concentration camps compared with Hitler’s in NZ parliament

Urging New Zealand government to pay immediate attention to the horrific situation faced by the Tamil people of Sri Lanka, Keith Locke, New Zealand’s member of parliament, speaking Tuesday last week on the budget of the Ministry of Foreign Affairs and Trade, compared the concentration camps run by Colombo with that of Hitler. Blaming the international community for its failure, the MP urged the NZ government to demand full access to the camps, fair treatment to the combatants and non-combatants of the LTTE and release of people to get back to their homes. He also reminded not to forget attending the underlying cause of the conflict – the Tamil aspirations that arose from the time of independence, well before the Tamil Tigers were ever thought of.

“This year anything up to 20,000 Tamils have been killed by huge air and artillery bombardment of the territory that for some years has been under the administration of the Liberation Tigers of Tamil Eelam, known as the LTTE. Most of the population of that territory-around 300,000 people-has been herded into what can best be termed concentration camps”, Keith Locke MP said, adding that “The Sri Lankan Government aims to use these camps to destroy all traces of the former Liberation Tigers of Tamil Eelam administration, in the same way that Hitler used concentration camps to eliminate the German communists and socialists as political forces”.

The MP pointed out that the “most damaging was the failure of the international community to keep the pressure on the Sri Lankan Government to go down the negotiating track and to not resort to war again.”

“During the 2002-2005 ceasefire, the Liberation Tigers of Tamil Eelam was made a legal organisation by the Government of Sri Lanka and could freely operate anywhere in that country, yet the US, British, and Australian Governments kept their designations of the Liberation Tigers of Tamil Eelam as a terrorist organisation and the European Union added the Liberation Tigers of Tamil Eelam to its terrorist list. Of course, it is true that the Tamil Tigers have engaged in terrorist actions in the past, including political assassinations, and so has the Sri Lankan Government on an even larger scale according to the statistics of civilian deaths in the reports of human rights monitors like Amnesty International”, he said.

Citing the call by Human Rights Watch for an impartial international commission of inquiry to investigate the alleged crimes that were committed during the war, the MP said that the identification of these and the prosecution of those responsible will have to be done with the direct involvement of the international community. However, Tamil political circles ask how to have an impartial inquiry when Colombo enjoys the status of a government and the LTTE is still proscribed.

Talking on political solution, the MP said, “We also should not forget the underlying cause of the conflict and suffering: the failure of successive Sri Lankan administrations to allow the Tamil people their full rights, including their right to an autonomous area in the north of Sri Lanka. That issue arose from the time of independence, well before the Tamil Tigers were ever thought of”.

Keith Locke expressed sadness at the way Mr. Nadesan and Mr. Puleedevan from the political side of the LTTE were killed.

“We want to engage with Sri Lanka's politicians to help find a way forward, including the 22 Tamil MPs who are under some siege at the present time”, the MP said in conclusion.

Reflecting on the parliamentary speech of Keith Locke, a political commentator in Colombo said that time is past for the international community to ‘engage’ with the Sri Lankan government in order to convince it to concede the freedom of Tamils.

“The international reality today is that those who want to remedy the situation have to boldly intervene in the island, recognizing Tamil nationalism and its self-determination. They also have to convince India of the need for it. Diplomatic or government to government niceties of discussing solutions bound by ‘sovereignty’ will not work with the Sri Lankan state or its ethno-totalitarian government”, the commentator said.

“Those who still think of conflating some solution such as autonomy should demonstrate its feasibility if they can, but seeing the realities that are explicit now, they should at least show the grace of not standing in the way of the liberation struggle of the Eezham Tamils in the name of upholding the sovereignty of colonial creations”, the commentator further said.

Full text of the parliamentary speech by Mr. Keith Locke follows:

KEITH LOCKE (Green): I wish to speak on the Ministry of Foreign Affairs and Trade's budget and explain some matters that the Government should be paying particular attention to. There are too few Governments on this planet that treat matters of peace and human rights with the attention they deserve.

One of the matters that I think our Government should give immediate and ongoing attention to is the horrific situation facing the Tamil people of Sri Lanka. Their aspiration for an autonomous Tamil region within the Sri Lankan State has been crushed by massive force. This year anything up to 20,000 Tamils have been killed by huge air and artillery bombardment of the territory that for some years has been under the administration of the Liberation Tigers of Tamil Eelam, known as the LTTE. Most of the population of that territory-around 300,000 people-has been herded into what can best be termed concentration camps. I think that term is apt because what is happening to the Tamil people in those camps is similar to what happened in Hitler's concentration camps, but without the mass extermination programme.

The Sri Lankan Government aims to use these camps to destroy all traces of the former Liberation Tigers of Tamil Eelam administration, in the same way that Hitler used concentration camps to eliminate the German communists and socialists as political forces. All those associated with the Liberation Tigers of Tamil Eelam will either be imprisoned long term, "re-educated", or perhaps they will disappear. There have already been reports from the camps of "white van disappearances" of young Tamil Tiger activists. Hitler believed that anything was justified in the war against communism, and the Sri Lankan Government proceeds as if anything is justified in the so-called war against terrorism. It need not have been this way.

There was a chance of negotiated autonomy for the Tamils in the north of Sri Lanka during the 2002-2005 ceasefire. I toured Sri Lanka in October 2003 to monitor this process, and it was going well. I talked to both the Government and the Liberation Tigers of Tamil Eelam negotiators. They were all quite hopeful and indicated respect for each other. While I was in the Liberation Tigers of Tamil Eelam capital of Kilinochi, a Tamil proposal for an interim self-governing authority was presented to the Norwegian peace negotiators and was covered by the international media, but substantive discussions on an autonomy solution never eventuated.

There was probably blame on both sides for that, but most damaging was the failure of the international community to keep the pressure on the Sri Lankan Government to go down the negotiating track and to not resort to war again. To do this, the international community should have consciously taken the conflict out of the context of the Government on one side and the terrorists on the other.

During the 2002-2005 ceasefire, the Liberation Tigers of Tamil Eelam was made a legal organisation by the Government of Sri Lanka and could freely operate anywhere in that country, yet the US, British, and Australian Governments kept their designations of the Liberation Tigers of Tamil Eelam as a terrorist organisation and the European Union added the Liberation Tigers of Tamil Eelam to its terrorist list. Of course, it is true that the Tamil Tigers have engaged in terrorist actions in the past, including political assassinations, and so has the Sri Lankan Government on an even larger scale according to the statistics of civilian deaths in the reports of human rights monitors like Amnesty International.

In 2003 and 2004 the two sides that had done such bad things to each other and to civilians were talking and could have reached a solution with enough pressure and involvement from the international community. But the negotiating process lost momentum, and when President Rajapaksa came to power in 2005 he decided on a military solution. The tragic consequences for the Tamils are for all to see.

As for New Zealand's responsibility now, this Parliament took a good step in passing a resolution on 2 June " That this House notes its deep concern at the dire humanitarian situation in northern Sri Lanka and call upon the Sri Lankan Government to exceed to United Nations Secretary-General Ban Ki-moon's call for UN agencies to be given ‘immediate unhindered access' to the internally displaced persons camps on order to bring aid to those who desperately need it, and ask the Sri Lankan Government to allow media access to the camps." However, the New Zealand Government must take the next step and engage both directly with the Sri Lankan Government and through United Nations organisations to enable full access to the camps for international humanitarian organisations, human rights monitors, and the media. At present the media is only allowed into the big detention camps on guided tours, and is not allowed to talk freely and privately with camp inmates. I think it is appropriate to use the prison term "inmates".

We must insist that all members and former members of the Liberation Tigers of Tamil Eelam, whether combatants or non-combatants and their families, be treated fairly and without discrimination. Surely it is now time for reconciliation, not punishment and further suffering. People should be able to leave the camps and return to their homes if they so wish. Yes, war crimes have been committed by some on both sides of the conflict, but the identification of these and the prosecution of those responsible will have to be done with the direct involvement of the international community.

Human Rights Watch rightly called for an impartial international commission of inquiry to investigate the alleged crimes that were committed during the war, including the repeated bombing of civilians crammed into the small amount of territory held by the Liberation Tigers of Tamil Eelam in the last phase of the war and accusations that Tamil Tiger fighters prevented civilians from leaving its territory.

The tragedy of Sri Lanka is very personal to many people in the New Zealand Sri Lankan community. Many have lost family and friends back in Sri Lanka, or are desperate to find out their fate. We have a responsibility to them, as citizens of our country now, to take up the humanitarian and political issues involved, to help the Tamil people here find out what has happened to their relations, to help those in northern Sri Lanka who survive return home to their towns and villages, and to help survivors to get welfare assistance through international agencies.

We also should not forget the underlying cause of the conflict and suffering: the failure of successive Sri Lankan administrations to allow the Tamil people their full rights, including their right to an autonomous area in the north of Sri Lanka. That issue arose from the time of independence, well before the Tamil Tigers were ever thought of. The personal stories of Tamils living in New Zealand include terrifying stories of earlier times during the repeated pogroms in places like Colombo when Sinhalese militias, one might call them, went door-to-door with knives and people were hiding in cupboards trying to prevent being killed.

I feel sadness myself because when I visited Sri Lanka in 2003, two of the people I met, Mr Nadesan and Mr Puleedevan were key in the political side of the Liberation Tigers of Tamil Eelam's involvement in the negotiations. At the very end of the recent conflict, they phoned the international contacts and one of the reporters they talked to, Marie Colvin relayed the whole story to us in the Dominion Post on May 25. Contact was also made with the Red Cross, the Sri Lankan Government, and the United Nations trying to work out a way to surrender and Mr Nadesan and Mr Puleedevan were told to carry white flags to the Sri Lankan Government's line, which they did. As they were carrying these white flags, they and their families were gunned down.

It is a very tragic situation we face today and we want to engage with Sri Lanka's politicians to help find a way forward, including the 22 Tamil MPs who are under some siege at the present time.

ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...

கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!
ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து, வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்
தலை சுக்கு நூறாகச் சிதறட்டும்!
ஒரு சொட்டுத் தண்ணீருக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழை மேகங்கள் மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்...
இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!
தானியங்களெல்லாம் தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...
உங்கள் இரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!
போர்நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!
வாய்திறந்தாலே இரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து அரசாட்சி செய்தவர்களே...
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில்
பெருமின்னல், பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு முளைக்காது போகட்டும்...
அலைபேரலையாய் பொங்கியெழுந்து அத்தனையும்
கடல் கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!

பின்குறிப்பு :

உங்கள் குழந்தைகளை மட்டும்
சபிக்க மாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்
குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உம் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உம் குழந்தைகள் சிரிக்கட்டும்!

மரணம்வரை மடியாது
எங்கள் தமிழ் மான உணர்ச்சி!

வைகோ உரை

ஈரோடு மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் 21.06.2009

மிகுந்த மகிழ்ச்சியோடும், எதிர்காலத்தைப்பற்றிய நிறைந்த நம்பிக்கையோடும் இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் உங்கள் முன்னால் நிற்கின்றேன். சில ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, ஈரோடு மாவட்டம் ஆர்த்தெழுந்துள்ளது, 90 களில் நான் கண்ட ஈரோடு மாவட்ட எழுச்சியை மீண்டும் இன்றைக்குப் பார்க்கிறேன். இது மிகைப்படுத்திப் பேசுகிற பேச்சு அல்ல. நமது இயக்கத்துக்கு எந்தச் சரிவும் கிடையாது. ‘நடப்பது எல்லாம் நன்மைக்கே’ என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். என் தோல்வியிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.

அண்ணன் துரைசாமி அவர்களும், மாவட்டச் செயலாளரும் சொன்னதைப்போல, எதையும் தோல்வி என்று கருதி சோர்வு அடைவது இல்லை. அந்த நிமிடத்திலேயே அடுத்தக் களத்துக்கு நான் ஆயத்தமாகி விடுவேன். இம்முறை அந்த ஊக்கத்தைத் தந்தது நீங்கள் பெற்றுக் கொடுத்த வெற்றி; ஈரோடு பெற்றுத்தந்த வெற்றி; என் வீரச்சகோதரன் கணேசமூர்த்தி பெற்ற வெற்றி. (பலத்த கைதட்டல்)

என் நெஞ்சில் ஒரு சுமை இருந்தது; என் மனதில் ஒரு முள் இருந்தது; என் உள்ளத்தில் ஒரு குறை இருந்தது. 2004 ஆம் ஆண்டு அவரை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பி வைக்க இயலாமற் போயிற்றே. ஈரோடு கழகக் கண்மணிகளின் முகத்தைப் பார்க்கிறபோது, அவர்களது மனக் கவலைகளைப் பார்க்கிறபோது, எங்கள் கணேசமூர்த்திக்கு இம்முறை இடம் இல்லையா என்று உள்ளுக்குள் அவர்களுக்குள் கவலை மூண்டு இருந்ததைப் பார்க்கிறபோது, அது எனக்கு ஆறாத காயமாக இருந்தது. அந்தக் காயம் ஆறிவிட்டது, அந்தக் குறை நீங்கிவிட்டது, அந்த முள்ளை வெளியே எடுத்துப் போட்டாகிவிட்டது. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஈரோடு தொகுதி உறுதியாக வெற்றிபெறக்கூடிய நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை, நல்லமனதோடு இந்தத் தொகுதியை நமக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பேச்சுவார்த்தையில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்காக ஒரு முறிவு வந்துவிடக்கூடாது என்று கணேசமூர்த்தி கவலைப்பட்டார்.
தாயகத்தில் என்னை அழைத்துப் பேசினார். பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வெளியில் முரணான செய்திகள் கசிகின்றன. நம்மை அழிக்க நினைப்பவர்கள் அந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி ஏடுகளுக்குத் தருகிறார்கள்.

அந்த வேளையில், கணேசமூர்த்தி அவர்கள், ‘எப்படியாவது உடன்பாட்டில் நீங்கள் கையெழுத்திட வேண்டும்; ஈரோட்டில் பிடிவாதமாக இருக்காதீர்கள். அதனால் உடன்பாட்டுக்குக் குந்தகம் வந்து விடக்கூடாது. திருவள்ளூரைப் பெறுங்கள் - ஆரணியைப் பெறுங்கள்’ என்றார். அந்த நல்ல உள்ளம், உள்ளத்தில் உயர்ந்த உள்ளம், அதுதான் அந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க. தந்தது. அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சகோதரர் இராமலிங்கம், பி.சி.ஆர். , நான் எந்நாளும் மதிக்கின்ற மதிப்புக்குரிய துரை.ராமசாமி, அருமைச் சகோதரர் முன்னாள் அமைச்சர் ஈரோடு முத்துசாமி, உள்ளிட்ட அனைவருமே நம் கணேசமூர்த்தி வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று உழைத்தார்கள். ஒன்றிய, நகரச் செயலாளர்கள் பாடுபட்டார்கள். அவர்கள் ஆற்றிய பணிகளுக்கு, தோழமைக்கட்சியினரான பொது உடைமைக் கட்சியினர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ் உணர்வாளர்கள், மனிதநேய மக்கள் கட்சி அப்படி உழைத்திட்ட பலருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 16 ஆவது ஆண்டின் தொடக்கத்தை நடத்த, நான் ஈரோட்டைத் தேடி ஓடோடி வந்தேன். தந்தை பெரியார் சிலைக்கு அருகில், கொடிமரத்தில் நம் கொடியை உயர்த்தினோம். சூளுரை மேற்கொண்டோம்.

கணேசமூர்த்தி அவர்கள், இன்று காலை நாமக்கல் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கூறினார் ‘முதல்சுற்றில் இருந்தே எனக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. உறுதியாக வெற்றி பெறுவோம் என்று தெரிந்து விட்டது. ஆனால், அதில் மகிழ்ச்சி இல்லை.’ ஏனென்றால், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தமட்டில் மகிழ்ச்சிகரமான செய்தி வரவில்லை. அது முன்னும்பின்னுமாக இருக்கிறது, ஓட்டுகள் இன்னும் குறைவாக இருக்கிறது என்றும் மிகுந்த கவலையோடு இருந்தேன்’ என்று அவர் குறிப்பிட்டார்.

நான் விருதுநகர் தொகுதியில் பின்தங்கி இருக்கிறேன் என்று கணேசமூர்த்தி கவலைப்பட்டார். அதே வேளையில், நான் தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு, ஈரோடு முன் நோக்கிப் போய்க் கொண்டே இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு இருந்தேன்.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே இமாலய ஊழல் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு நபரை, நீலகிரியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக ஆக்கி, ஓட்டுக்கு 5,000 ரூபாய், தங்கக் காசுகள், தங்க மோதிரம் கொடுத்து, லட்சம் கோடி ரூபாய் ஊழலுக்குக் காரணமான ஒருவரை எம்.பி.யாக்கி திரும்ப அதே இலாகாவையே தந்துவிட்டார் மன்மோகன்சிங். அதே இலாகாவைத் தருகிற அளவுக்கு என்ன கட்டாயம்? அப்படி யாராவது வற்புறுத்தி இருந்தால், பெரும்பகுதி ஊழல் பணம் அவரது வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

ஈரோடு தொகுதி வெற்றியால், நமது இயக்கத்துக்கு ஒரு உந்துதல் கிடைத்து இருக்கிறது. கவலைப்படுவதற்கு ஒன்றும் கிடையாது. பண வெள்ளத்தைத் தாண்டி நீங்கள் இந்த வெற்றியைப் பெற்று இருக்கிறீர்கள்.

மே 6 ஆம் தேதி அன்று ஈரோட்டில் புறப்பட்டு, வெள்ளகோயிலுக்குப் போகிறபோது, நம் மதிப்புக்கு உரிய துரை.ராமசாமி அவர்கள், என்னை வரவேற்றார். அவருடைய இயல்புக்கு, நெடுஞ்சாலையில் காத்து இருந்து வரவேற்பது என்பதெல்லாம் உண்மையில் அது நம்மைப் பெருமைப்படுத்திய காரியம். நமது வெள்ளகோயில் பெரியசாமி, வெள்ளகோயில் சண்முகம் இந்த இயக்கத்துக்கு வித்து ஊன்றிய காலத்தில் இருந்து எனக்குத் தோள் கொடுத்து இருக்கக்கூடிய என் உயிரான சகோதரர்களுக்கு அவர்களுக்கும் இப்பொழுதுதான் மனதில் ஒரு திருப்தி, மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

அந்தத் தேர்தல் களத்தில் பணியாற்றிவிட்டு, பகலில் அவருடைய சகோதரர் மகன் இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நான் அனைவருடனும் சேர்ந்து உணவு அருந்திவிட்டு, அந்த வீட்டில் சற்றுநேரம் ஓய்வு எடுக்கலாம் என்று மாடியில் தங்குகிற அறைக்கு அழைத்துச் சென்றபோது, மூலனூர் ஒன்றியச் செயலாளர் பட்டுத்துறை மாரிசாமி அவர்கள் அங்கே வந்தார்கள். அவரது உடல்நலத்தை விசாரித்தேன். இப்போதும், அவருக்கு உடல்நலம் சரியில்லாததால், இந்த நிகழ்ச்சிக்கு அவர் வர முடியவில்லை. அதைப் போலவே, நம்முடைய தியாகராஜன், சென்னியப்பன், சுப்பிரமணியம் ஆகியோரும் உடல்நலம் சரியில்லாததால் வர முடியவில்லை. அவர்கள் முழு உடல் நலம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் நல்ல நலத்துடன் இயக்கத்துக்குப் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

பட்டுத்துறை மாரிசாமி அவர்கள் என்னிடம் எப்பொழுதும் உரிமையாகப் பேசுவார். ‘நான் காலையில் இருந்து பார்க்கிறேன். வெயிலில்கூட மக்கள் திரண்டு வந்து வரவேற்கிறார்கள். நமது கணேசமூர்த்தி உறுதியாக வெற்றிபெற்று விடுவார். நான் இன்றைக்கு மகிழ்ச்சியோடு இருக்கிறேன்’ என்று சொன்னவுடன், அவர் என்னிடம் மகிழ்ச்சியாகப் பேசவில்லை.

‘கணேசமூர்த்தி உறுதியாக வெற்றி பெற்று விடுவார். நீங்கள் அதைப்பற்றிக் கவலையேபட வேண்டாம். எங்கள் கவலை எல்லாம் இப்பொழுது உங்களைப்பற்றித்தான். விருதுநகர் தொகுதியைப் பற்றித்தான். வருகிற செய்திகள் நன்றாக இல்லை. நிறைய பணத்தைக் கொட்டுகிறார்கள் என்று எங்களுக்குத் தகவல் வருகிறது. நீங்கள் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். மற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, முதலில் உங்கள் தொகுதிக்குச் செல்லுங்கள். அங்கு அதிக நாட்களைச் செலவழியுங்கள்.
எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது’ என்று அவர் கவலையோடு என்னிடம் சொன்னார். நான் ஒன்றும் மறுத்துச் சொல்லவில்லை.அவரிடம் சரி அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னேன்.

என்னுடைய பயணத் திட்டத்தை எப்படி மாற்ற முடியும்? நம்முடைய நான்கு தொகுதிகளுக்கு மட்டும் அல்ல, அண்ணா தி.மு.க. - பாட்டாளி மக்கள் கட்சி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என எல்லாத் தொகுதிகளுக்கும் நான் நாட்களை ஒதுக்கித் தந்து இருந்தேன். அது ஏடுகளில் வரவில்லையே தவிர,வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, திருவண்ணாமலை இந்தப் பகுதிமுழுவதும் பிரச்சாரம் செய்துவிட்டு, அதைப்போலவே, தஞ்சை, கோவை, மதுரையில் இரண்டுநாட்கள், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, வெற்றிபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட தென்காசியில் பிரச்சாரம் என்று பயணத்திட்டத்தை அந்த 20 நாட்களுக்குப் பிரித்து வகுத்து விட்டேன்.

பொதுக்குழுவுக்குப் பின்னர்தான் பிரச்சாரத்துக்குச் செல்ல முடிந்தது. அதற்கு முன்னர் நான் வெளியில் செல்ல முடியவில்லை. விருதுநகர் உறுதியாக வெற்றிபெறும் என நம்பியதற்குக் காரணம், நான் அந்தத் தொகுதியில் நல்ல பணி புரிந்து இருந்தேன். மனித நேயப் பணிகளைச் செய்து இருந்தேன்.

ஆனால், கவனக்குறைவு என்று தயவுசெய்து கருதாதீர்கள். நான் வெற்றி பெற்று விடுவேன் என்று அதிக நம்பிக்கையில் இருந்ததாக கந்தசாமி அவர்கள் சொன்னார்கள். நான் எப்பொழுதும் அதிக நம்பிக்கையில் பணியாற்றாமல் இருந்தது இல்லை. எல்லைமீறிய பணம் கொட்டப்பட்டது. முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு பல வியூகங்களை வகுத்துக் கொடுத்தார், அவர் பிள்ளைகள் மூலம், அமைச்சர்கள் மூலம் - அவர்களது கட்சியின் பிரமுகர்கள் மூலம். அதை எல்லாம் நான் இங்கு விவரிக்க விரும்பவில்லை.

அதை நான் கடைசியில் உணரமுடிந்தது. சிலரைப் போட்டியிட வைத்தார்கள். சிலரைப் போட்டியில் இருந்து விலக்கினார்கள். சிலரைப் போட்டியில் இருந்து விலக வைத்தார்கள். ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தார்கள். இவை எல்லாவற்றையும்விட பல வாக்குச்சாவடிகளில் கடைசி ஒருமணிநேரத்தில் 20 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஆகவே, இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறக்கூடும் என்று நம்பி இருந்த நிலையில், 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற இயலாமற் போயிற்று.

அண்ணன் துரைசாமி அவர்கள் சொன்னார்களே, வீட்டில் இருந்து கைக்காசைக் கொண்டுவந்து செலவழித்து நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பத்தரை மாற்றுத் தங்கங்கள் இந்தக் கட்சியில் இருக்கிறபோது எதைப்பற்றி எனக்கு கவலை இருக்கிறது?
ஒரு படிவத்தின் விலை இரண்டு ரூபாய்தான். ஆனால், மாவட்டச் செயலாளர்கள் கழகத்துக்கு ஒரு உந்துதல் தரவேண்டும் என்பதற்காக என்னிடம் வந்து படிவங்கள் பெறவேண்டும். அதற்கு 100 ரூபாய் தந்தால் கட்சிக்கு நிதிசேரும் என்று அவர்களாக அந்தத் திட்டத்தை வகுத்தார்கள். இந்தத் திட்டத்தை நான் வகுக்கவில்லை. மற்ற மாவட்டச் செயலாளர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் தொடங்கி வைத்தார். இன்றைக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?தமிழ்நாட்டில் முதன்முதலாக நிதியைத் திரட்டிய போது நீங்கள்தான் 60 இலட்சம் கொடுத்து அன்றைக்கு முதல் இடத்தைப் பெற்றீர்கள். இன்றும் முதல் இடத்தைப் பெற்று இருக்கிறீர்கள். 1,55,750 ரூபாய் படிவத்துக்குத் தந்து இருக்கிறீர்கள். இரண்டாவது இடத்தில் நெல்லை மாவட்டம் இருக்கிறது. 82,000 ரூபாய். அநேகமாக மூன்றாவது இடம் என்று நினைக்கின்றேன், கரூர் மாவட்டம் 72,000 ரூபாய். இதெல்லாம் ஏற்பாடு செய்து தரவில்லை. கேட்காமலேயே கிடைக்கிற தொகை.

இங்கே இப்படிக் கொடுக்க வேண்டும் என்று பூங்கொடி சுவாமிநாதன் சொன்னபோது, நமது மாவட்டச் செயலாளர் சொன்னபோது, நான் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டே இருந்தேன். ஊருக்குத் திரும்பிப் போவதற்கு மட்டும் கொஞ்ச பணத்தைப் பையில் வைத்துவிட்டு, மிச்சப் பணத்தை எல்லாம் கொடுத்து விட்டுப் போய்விட்டார்கள். நான் சொன்னேன், அவர்கள் ஊருக்குத் திரும்பிப் போக வேண்டாமா? என்று. இது நமது குடும்பத்துக்குள் பேசுகிறமாதிரி.
நமது இயக்கத்தில் பந்த பாசமும், கொள்கை உறுதியும், இலட்சியதாகமும் இருக்கிற போது இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது.

இயக்கத்துக்கு ஆபத்து என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. அது முடிந்துபோயிற்று. எந்த எதிரியும் இந்த இயக்கத்தின் பக்கம் நெருங்க முடியாது. ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு கருணாநிதி அழிக்க நினைத்தபோதிலும், ஒவ்வொன்றிலும் நாம் மீண்டு வந்து இருக்கிறோம். அவருடைய முயற்சியை முறியடித்து இருக்கிறோம். அவருடைய திட்டத்தைத் தவிடு பொடியாக்கி இருக்கிறோம்.

இந்த இயக்கம் 15 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறது. அவரால் இதை அழிக்க முடியவில்லை. இனி விரும்புகிற வெற்றியைப் பெறுவது எப்படி? தமிழகத்துக்கு நல்ல மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது எப்படி? அந்தக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

நான் இராமகிருஷ்ணனுக்கு அதைத்தான் சொன்னேன். எங்கேயாவது ஒன்றிரண்டு தேள் கொட்டும். அதுதானே அதன் இயல்பு. அப்படி சில தேள்கள் ஆங்காங்கு இருக்கிறது. பாம்பு என்றால் கொத்தத்தான் செய்யும். அய்யோ பாம்பு கொத்துகிறது என்றால் அதன் இயல்பே அதுதானே.

அப்படி சில நச்சுப் பாம்புகள் சில கருந்தேள்கள், பொய்ச்செய்திகளை ஏடுகளுக்குத் தருகின்றன. அவர்களுக்கு ஒன்றும் நோக்கம் கிடையாது. இப்பொழுது இருப்பது பரபரப்பு ஜெர்னலிசம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இது கிடையாது.
ஆகையால் இப்படி செய்திகள் வரத்தான் செய்யும்.

அதை எல்லாம் அலட்சியப்படுத்த வேண்டும். அதைப்பற்றிக் கண்டுகொள்ளவே கூடாது. விளக்கம் சொல்ல வேண்டுமா அதற்கு? வீதியில் நின்று கொண்டு நான் கற்பு நிறைந்தவள் என்று எந்தக் கற்புக்கரசி சொல்வாள்? அந்த வார்த்தையை உதட்டில் உச்சரிப்பதே தனக்கு இழுக்கு என்று கருதுவாள். ஆகையால் நீங்கள் இதையெல்லாம் கொஞ்சம்கூட பொருட்படுத்தக்கூடாது.

ஒரு துரும்பைக்கூட இங்கிருந்து அசைக்க முடியாது. இந்த நேரத்தில் போய் இருக்கிறார்கள். நாமாக வெளியே பிடுங்கிப் போடவில்லை. களைகளாக அகன்று இருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? பயிராக வளர்த்தோம்; பதராகப் போய்விட்டது. இந்த நேரத்தில் போய் பிடுங்கிப் போடவா, இருந்து விட்டுப் போகிறது என்று நினைத்தோம். காற்றில் பதர்கள் போய் விட்டன. அவ்வளவுதான்.

543 எம்.பி.க்களில் ஒரு ஆள் தானே உங்க ஆள் போய் இருக்கிறார் என்றார்கள். காட்டில் ஒன்று தானய்யா சிங்கம் (பலத்த கைதட்டல்). மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு கொள்கைச் சிங்கம் கணேசமூர்த்தி.

நாடாளுமன்றத்தில் பேசாததை எல்லாம் பேசியதாக, பத்திரிகைக்கு எழுதி அனுப்புகிற பேர்வழிகளை எல்லாம் எனக்குத் தெரியும்.ஆனால், நமது கணேச மூர்த்தி அவர்கள் என்ன உரையாற்றினாரோ, அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை மொழிமாற்றம் செய்து ஏடுகளுக்கு அதையும் சேர்த்து அனுப்பினோம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் இது ஒரு முக்கியமான காலகட்டம். அடுத்த மாநாடு எங்கே? திருச்சியில்.. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு.

நான் கொஞ்சம் வித்தியாசமான வேலைத்திட்டத்தை நினைக்கிறவன், எல்லா வற்றிலும். தோற்றவுடன், அய்யோ தோற்றுப் போயிற்றே என்று நினைக்கவில்லை. அடுத்த ஆறு மாதங்களுக்கு என்ன வேலைதிட்டம்? என்றுதான் முடிவு செய்தேன். நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள் கடந்த 15 ஆண்டுகளில். 3 மாதத்துக்கு ஒரு வேலைத் திட்டம். 6 மாதத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்றே கொண்டு வந்து இருக்கிறோம்.

எழுச்சிப் பேரணி, 1994 நடைப்பயணத்தில் இருந்து 1996 தேர்தல் தோல்விக்குப்பிறகு வரிசையாகப் பாருங்கள். திருச்சி மாநில மாநாடு, ஈரோடு மாநாடு, காஞ்சி மாநாடு, சென்னை மாநாடு, மதுரை மாநாடு, மறுமலர்ச்சிப் பயணம், சைக்கிள் பேரணி, முல்லைப் பெரியாறு, காவிரி நடைப்பயணங்கள், உண்ணாநிலை அறப்போராட்டங்கள் என எத்தனையோ நிகழ்ச்சிகள்.

அதைப்போல அடுத்த 3 மாதகால, 6 மாதகாலத்துக்கு ஒரு வேலைத்திட்டம் வைத்து இருக்கிறேன். அடுத்த வேலைத்திட்டம்தான் உறுப்பினர் சேர்ப்பது. தேர்தலில் தோற்ற நேரத்தில் உறுப்பினர் சேர்க்கச் சொல்கிறாரே என்று ஒன்றிரண்டு தோழர்களுக்கு எண்ணம் வந்தது. அது தப்பு இல்லை. இப்பொழுது தோல்வி அடைந்து இருக்கிறோமே, நான்கு இடத்திலும் வெற்றிபெற்று நீங்கள் உறுப்பினர் சேர்க்கச் சொன்னால், இன்னும் கொஞ்சம் வேகமாக இருக்கும்.
இப்பொழுது இந்தநேரத்தில் மனதில் சோர்வாக இருப்பார்களே, இப்பொழுது சென்று உறுப்பினர் சேர்க்கச் சொன்னால் எப்படி என ஒன்றிரண்டு தோழர்கள் என்னிடம் கலந்து பேசினார்கள்.

நாங்கள் விளக்கம் சொன்னோம். அண்ணன் துரைசாமி இருந்தார். மாவட்டச் செயலாளர்கள் இருந்தார்கள். அனைவரும் உட்கார்ந்து பேசினோம். அப்பொழுது நான் சொன்னேன். இதுதான் சரியான நேரம். மக்களிடம் நம்மீது நல்லெண்ணமும், பரிவும் இருக்கிறது. ஒரு அலட்சியம் இல்லை. நான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று வருகிறேன். மக்களைக் கவனிக்கிறேன். கொடிகட்டிய காரில் முன்சீட்டில் உட்கார்ந்து செல்லும்போதும், காரில் இருந்து இறங்கி தெருவில் அழைத்துக் கொண்டு செல்லும்போதும் அங்கு உள்ள மக்களை அவர்களது முகங்களை கணப்பொழுதில் பார்ப்பேன். அதில் அலட்சியம் தெரிகிறதா? வெறுப்பு இருக்கிறதா? என்று.

சிலகாலங்களில் அலட்சியம் இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். இப்பொழுது அலட்சியத்தைப் பார்க்கவில்லை. அன்பைப் பார்க்கிறேன் மக்கள் முகங்களில். நம் இயக்கத்தின்மீது ஒரு பரிவைப் பார்க்கிறேன். இந்தப் பரிவும், அன்பும்தான் நமக்கு முதலீடு.

நான் தோற்று இருக்கக் கூடாது என்று பலர் பேசுவதாகச் சொன்னீர்கள் அல்லவா? அதுதான் இன்றைக்கு நமக்கு வண்டல் உரம். நம்மீது ஒரு நல்லெண்ணம் இருக்கிறது அல்லவா? அதுதான் நம் இயக்கத்துக்கு மூலதனம். ஒரு அரசியல் கட்சிக்கு அதுதான் மூலதனம். எனவே, இந்தக் கட்டத்தில் நீங்கள் முயற்சி செய்யுங்கள்.

கிராமத்தில் பேசிக் கொள்வார்கள். என்னப்பா, மழை பெய்து இருக்கிறதே, எப்படி? பதத்துக்குப் பெய்து இருக்கிறதப்பா என்பார்கள் கிராமத்தில். பதத்துக்குப் பெய்து இருக்கிறது என்றால், அப்போது உழவு பிடிக்கலாம், விதைக்கலாம். அப்பொழுதுதான் முளைக்கும். பெரிய வெள்ளமாக வந்து விட்டாலும் உடனே விவசாயம் செய்ய முடியாது. இரண்டு தூறல் விழுந்தாலும் ஒன்றும் முடியாது.

ஆடிப்பட்டம் தேடிவிதை என்பார்கள்; பருவத்தே பயிர் செய் என்பார்கள். இதெல்லாம் நமது விவசாயிகள் முன்பு சொன்னது. நம்முடைய தாய்மார்களுக்கு எளிதாகச் சொன்னால் புரியும். ஏனென்றால், அவர்கள் தயார் செய்தால்தான் நாம் சாப்பிட முடியும். தோசை போட வேண்டும் என்றால், வெறும் மாவை எடுத்து கல்லில் போட்டால் தோசை வராது. அடுப்பை மூட்டி தோசைக் கல்லைக் காய வைத்து எண்ணெயை எடுத்து லேசாக ஊற்றி, உங்களுக்கு உரிய கைப்பக்குவத்தில் மாவைச் சுற்றி விட்டு, இரண்டு நிமிடத்தில் அதைப் புரட்டிப் போட்டால் சுவையான தோசை கிடைக்கும்.

கல் சூடாக இருக்கும்போதுதான் மாவை ஊற்ற வேண்டும். அதுபோல மக்கள் மனதில் நம்மீது நல்லெண்ணம் இருக்கிற நேரத்தில், உடனே அணுகுங்கள். நீங்கள் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று சொல்லுங்கள். புதிய இளைஞர்களைக் கட்சியில் சேருங்கள். இங்கு நிறைய இளைஞர்கள் வந்து இருக்கிறார்கள் எனக்கு மகிழ்ச்சியே அதுதான்.

1993இல் இளைஞர்களாக இருந்த பலர் இப்பொழுது குடும்பÞதராக ஆகிவிட்டீர்கள். திருமணமாகி குழந்தைகள் எல்லாம் வந்தாகிவிட்டது. நான் அதைத்தான் கவனிக்கிறேன். பதினைந்து ஆண்டுகள் ஆயிற்று அல்லவா? அன்றைக்கு 20 வயதானவர்களுக்கு இன்றைக்கு 35 வயதாகி விட்டது. அடுத்த தலைமுறை இளைஞர்கள் நம்மீது பற்றுதலாக இருக்கிறார்கள். சேலத்தில் நேற்று சட்டக் கல்லூரி மாணவர்கள், 50 பேர் கட்சியில் சேர்ந்தார்கள். அந்தத் தம்பிகள் அனைவரும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தவர்கள்.

ஆகவே, இளைஞர்களிடம் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அரசியல் மீது விரக்தியும் வெறுப்பும் பல பகுதிகளில் வளர்ந்து வருகிறது. அரசியல் என்பதே, ஊழல் கூடாரம் தானோ? அதிகாரம் என்பதே கொள்ளை அடிப்பதற்குத்தானோ? தேர்தல் என்பதே கொள்ளை அடித்த பணத்தை விநியோகித்து ஓட்டுகளை விலைக்கு வாங்கத்தானோ? இந்த நாடு எங்கே போகிறது? மக்கள் ஆட்சிக்கு எவ்வளவு பெரிய கேடு நேர்ந்து வருகிறது என்று கவலைப்படுகிற மக்கள் மனதில் ஒரு வெறுப்பு உருவாகி இருக்கிறது.

ஆனால், இந்த விஷச்சுழலில் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க முடியும். இன்று மக்கள் ஆட்சிக்கு இருமுனைத் தாக்குதலை கருணாநிதி நடத்துகிறார். அண்ணா ஜனநாயகப் பேரொளியாகத் திகழ்ந்தார். அண்ணா மக்கள் ஆட்சி ஒளிச்சுடரை துணைக்கண்டத்துக்கே உயர்த்திக் காட்டினார். அந்தத் தென்னகத்துத் திருவிளக்கு இந்தியத் துணைக்கண்டத்துக்கு, மக்கள் ஆட்சிக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தது, காஞ்சித் தலைவனின் வழிகாட்டுதலில்.

இன்று என்ன நிலைமை? பெருங்கேடு சூழ்ந்து விட்டது தமிழ்நாட்டில். எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, வீடுவீடாகச் சென்று பணத்தைத் திணிக்கின்ற கொடுமை.. எங்கோ அங்கொன் றும் இங்கொன்றும் இலைமறைகாயாக இருந்தது. ஒரு ஊருக்குச் சென்று, உங்கள் ஊருக்குக் கோயில் கட்டித் தருகிறோம், சத்திரம் கட்டித் தருகிறோம், அல்லது உங்கள் ஊருக்கு ஏதாவது செய்கிறோம் என்று வெளியில் தெரியாமல் சின்னச்சின்ன உதவிகள் செய்வது தேர்தல்களில் நடந்தது.

ஆனால், வரிசையாக வீடுதோறும் சென்று விடியற்காலை 4 மணிக்குக் கதவைத்தட்டி கவரில் பூத் சிலிப்பும், 3,000 ரூபாயும் போட்டுவிட்டு வருவது தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நடந்தது கிடையாது.

இதனால் மக்கள் திகைத்துப் போனார்கள். எத்தனையோ வீடுகளில் 1000 ரூபாயை ஒருசேரப் பார்த்தது இல்லை. எத்தனை செலவுகள் வீடுகளில்? மருத்துவச் செலவுக்கு, மருந்து வாங்குவதற்குப் பணம் இல்லாமல் இருந்து இருக்கும்.
கிழிந்த துணிகளைப் போட்டுக்கொண்டு தங்கள் பிள்ளைகள் வருவதைப் பார்த்து வேதனைப்பட்டு ஒரு புதுத்துணி வாங்கிக் கொடுக்க வழியில்லையே என்று எத்தனை ஏழைக் குடும்பங்கள் ஏங்கித்தவித்து இருக்கும். அப்படிப்பட்ட சூழலில், 2,000, 3,000, 4,000 ரூபாய் வீட்டுக்கு வருகிறது என்றால் அதைத் தூக்கி வீதியில் எறியவா மனம் வரும்?
அதைப்போல உழைக்கின்ற மக்கள், கஷ்டப்படுகிற மக்கள் வீடுகளில் 2,000 ரூபாய் கொடுக்கிற போது இது திடீர் தாக்குதல், இதற்கு முன் அவர்களுக்கு அனுபவம் இல்லை. இது கொள்ளை அடித்த பணம், ஊழல் பணம் இதை வாங்கக்கூடாது என்கிற அளவுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நிலைமை ஏற்படவில்லை. எடுத்த எடுப்பில், திடீரென்று கொடுத்த உடனே, அதில் ஏற்பட்ட மனப் போராட்டத்தில் வாக்குகள் அந்தப் பக்கம் விழுந்தது. இது நிரந்தரமாக விழாது. இன்னும் பணத்தைக் கொண்டு வருவார்கள். இன்னும் அதிகமாகக் கொடுப்பார்கள். ஏனென்றால், நிறையக் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து இருக்கிறார்கள்.

ஆனால், மின்வெட்டால் ஏற்பட்ட கஷ்டத்தை, நட்டத்தை நீங்கள் மறந்து விடாதீர்கள் அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது என்று வையுங்கள் சட்டசபை தேர்தலுக்கு. நான்கு ஆண்டுகால கணக்குப் போடுங்கள். இன்றைக்கு உள்ள கணக்குப்படி மாதம் ஆயிரம் ரூபாய் நட்டம். ஆண்டுக்கு 12,000 ரூபாய் மூன்று ஆண்டுகளுக்கு 36,000 ரூபாய்.. அடுத்த ஆண்டு தேர்தல் வரும்போது 48,000 ரூபாய். உங்கள் தலையில் கல்லைப் போட்டவர்கள் இவர்கள், இன்றைக்கு 5000 ரூபாய் கொடுத்து உங்கள் ஓட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அதை வாங்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் பணம். இவர்கள் திரும்பவும் ஆட்சிக்கு வந்தால், திரும்பவும் கொள்ளை அடிப்பார்கள். எனவே தோற்கடியுங்கள். இந்த விழிப்பு உணர்வை நாம் ஏற்படுத்த முடியும்.

ஒரு பக்கத்தில் நமது இயக்கம் வைரம் பாய்ந்து கொண்டு இருக்கிறது. கொள்கை உரம் பெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால், அங்கே அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் உயிர்த்தன்மை செத்துக் கொண்டு இருக்கிறது. இலட்சிய தாகம் கிடையாது, கொள்கை கிடையாது. அதனுடைய விளைவு என்னவாகும் என்றால், அந்த இயக்கத்துக்கு ஒரு சரிவு வருகிறபோது, தூக்கி நிறுத்த வாய்ப்பே கிடையாது.

இதற்குமுன்பு, புரட்சித்தலைவர் ஆட்சியில் இருந்த காலத்தில் அன்றைய தி.மு.க. நிலைவேறு - இன்றைய தி.மு.க. நிலைமை வேறு. இன்று அவருடைய குடும்பத்துக்காகத்தான் கட்சி நடத்துகிறார், ஆட்சி நடத்துகிறார். அவருடைய மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் இந்தக் குடும்பத்தைத்தான் அதிகார பீடத்தில் உட்கார வைத்து இருக்கிறார். அதற்கு விளக்கம் தருகிறார். தங்கச் சங்கிலி போட்டு மகிழ்கிறார்.

என்ன ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திரனா? கரிகாலன் மகனா? மகேந்திரவர்மனின் மகன் மாமல்லனா? இது என்ன மக்களாட்சியா? மன்னராட்சி காலமா? அண்ணா உருவாக்கிய இயக்கம் எங்கே? இன்றைக்கு ஒரு குடும்பத்துக்காக இத்தனை இலட்சம் தொண்டர்களின் கண்ணீரை வியர்வையை இரத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைக்கு நான் நெஞ்சை நிமிர்த்திப் பேசுகிறேன். ஏனெனில், என்னிடம் சுயநலம் இல்லை. ஒரு போதும் இந்தக் கட்சியை என் குடும்பம் பயன்படுத்தாது. என் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்த மாட்டார்கள். இந்தக் கட்சியின் தாழ்வாரத்தில்கூட என் பிள்ளைகள் வந்து நின்றது கிடையாது. எனக்குக் கட்சிதான் குடும்பம். என் தோழர்கள்தான் உறவினர்கள் என்ற முறையில் நாங்கள் கட்சி நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

அதிகார பீடத்தில் கிடைத்து இருக்கிற பதவிகளால் செய்யப்படும் விளம்பரங்களால், ஏடுகளில் ஊடகங்களில் பிரதான இடங்களைப் பெற்று இருக்கிற நிலைமை நீடிக்காது.

இருமுனைத் தாக்குதல் என்று சொன்னேன். ஒன்று, பணம் கொடுத்து மக்கள் ஆட்சித் தத்துவத்தை அழிக்கிறார். இன்னொன்று, தன் குடும்பத்துக்காகவே கட்சியை ஆட்சியை நடத்துகிறார். இந்தக் கேடு தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் இதுவரை நடக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் நடக்கவில்லை. புரட்சித் தலைவரின் அண்ணா தி.மு.க. ஆட்சியிலும் நடக்கவில்லை. இப்பொழுது நடக்கிறகேடு தமிழக வரலாற்றிலேயே நடக்கவில்லை. வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து இன்றுவரை தேர்தல்களில், மக்களாட்சிக்குக் கேடுசெய்கின்ற ஊழல் பணத்தின் ஆதிக்கம் தலைகாட்டியது இல்லை.

இவ்வளவு சுயநலம் வந்தபிறகு, இவ்வளவு கொள்ளை பணத்தைச் செலவழித்து தேர்தலில் ஓட்டு வாங்கலாம் என்று அக்கிரமத்தைச் செய்தபிறகு, குடும்பத்தினருக்குப் பதவி வாங்குவதற்கு, தில்லிக்குச் சென்று காத்திருந்து மந்திரி சபையில் கேட்ட பதவிகளை வாங்குவதற்கு, பிளாக்மெயில் செய்து பதவிகளைப் பெற்றவரா, இனத்தைப் பற்றிக் கவலைப்படப் போகிறார்?

தமிழ் இனத்துக்கு அவர் செய்து இருக்கின்ற கேடு, வேறு யாரும் செய்தது இல்லை. இங்கே பேசியவர்கள் மிகுந்த வேதனையுடன் சொன்னார்கள். திராவிட இயக்கத்தின் வரலாற்றில் இது ஒரு மிக சோதனையான வேளை. ஏன் தெரியுமா? தமிழர்களின் நலனுக்காக அண்ணா ஒரு இயக்கத்தை உருவாக்கினார், தனிநாடு கேட்டார், திராவிட நாடு கேட்டார். பின்னர், ‘திராவிட நாட்டை நாங்கள் கைவிட்டுவிட்டோம். ஆனால், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ என்றார். முதலமைச்சரானபிறகும்கூட தனிநாடு கேட்டதற்கான காரணங்கள் உயிரோடு இருக்கின்றன என்று சொன்னார்.

இன்றைக்கு அந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற கருணாநிதி, ஆட்சியில் இருக்கிற நேரத்தில், இந்திய அரசு துரோகம் செய்தது. தமிழ் இனத்தை அழித்தது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கவில்லை. தி.மு.க. பெயரில் ஆட்சி. அங்கே இனத்தை அழிக்கின்ற கொடுமை நடந்தது. உலகில் எங்கே நடக்கும் இந்தக் கொடுமை? எந்த இனத்தில் நடக்கும்? எந்த இனம் இதை அனுமதிக்கும்?

யூதர்கள் தங்களுக்கு என்று ஒரு நாடு அமைக்கத் தீர்மானித்தபோது, அமெரிக்கச் செல்வந்த யூதர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். இரண்டு கப்பல்களில் ஆயுதம் வாங்கினார்கள். எங்கோ 6,000 மைல்களுக்கு அப்பால் இருக்கிற அமெரிக்காகாரன், தன் தொப்பூள்கொடி உறவாக இருந்தவன் யூத நாட்டுக்காரன் என்று இஸ்ரேல் என்ற நாட்டை அமைப்பதற்கு உதவினான்.

இன்றைக்கு அதே அமெரிக்காவின் குடியரசுத் தலைவர், கெய்ரோவுக்குச் சென்று பேசுகிறார் பாலஸ்தீனியர்களுக்கும் ஒரு தனி நாடு வேண்டும். அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இரு தேசங்கள். ஒன்று இஸ்ரேல் நாடு - இன்னொன்று பாலஸ்தீனம். இந்த இரண்டையும் ஏற்றுக் கொண்டால்தான், பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படும். அடுத்துச் சொல்கிறார் பாலஸ்தீனியர்களின் பூர்வீக பூமி என்று கருதப்படுகிற இடத்தில் யூதக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும் என்று சொல்கிறார். அமெரிக்க யூத கோடீஸ்வரர்கள் தயவில் அங்கே அரசியல் நடத்தவேண்டிய நிலைமையில் இருக்கிற பாரக் ஒபாமா சொல்கிறார்.

இங்கு என்ன நிலைமை? இந்திய அரசு சொல்கிறது. இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நாங்கள் இராணுவ உதவி செய்தோம் என்று வெட்கமில்லாமல் துணிச்சலாக டாக்டர் மன்மோகன் சிங் எனக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.
எங்கள் இன மக்கள் சாவுக்கு நீங்கள் காரணம். ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் இந்திய அரசு காரணம். தமிழர்கள் சிந்துகிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.. வருங்காலத்தில் நீங்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவீர்கள் என்று நான் கடிதம் எழுதி அனுப்பி இருந்தேன்.

இந்தக் கடிதத்துக்குப் பிரதமர் எனக்குக் கடிதம் எழுதுகிறபோது முதல் வாக்கியமே ‘உங்கள் கடிதத்தின் வாசகங்கள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டன’ என்றுதான் எழுதி இருந்தார். எனக்குத் தனிப்பட்ட முறையில் அவர்மீது பகையா? எனக்குத் தனிப்பட்ட கசப்போ வெறுப்போ கிடையாது. அவர் இந்த நாட்டின் - நான் குடி மகனாக இருக்கின்ற நாட்டின் பிரதமர். நான் இந்தியக் குடிமகன். எங்கள் தொப்பூள் கொடி உறவுகள் கொல்லப்படுவதற்கு இந்த நாட்டின் ஆயுதங்கள் தரப்பட்டால், எங்கள் உள்ளம் கொதிக்காதா? இரத்தம் கொதிக்காதா?

சிலருக்கு வேண்டுமானால் கேலியாகத் தெரியும். வைகோ ஆவேசமாகப் பேசினார் என்று பேசலாம். இதுவெறும் ஆவேசம் அல்ல. எங்கள் இரத்தத்தில் கொதித்துக் கொண்டு இருக்கும் உணர்ச்சி. இந்த உணர்ச்சிதான் முத்துக்குமாரைத் தீக்குளிக்க வைத்தது. இந்த உணர்ச்சிதான் பதினான்குபேரைத் தீக்குளிக்க வைத்தது. இப்படிப்பட்ட உணர்ச்சிதான் சிவலிங்கம், சின்னசாமி, அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, கீரனூர் முத்து ஆகியோருக்கு தணலை தங்கள் மேனியில் போட்டு சாகத் தூண்டியது.

இது தமிழ் உணர்ச்சி - இது மான உணர்ச்சி - தந்தை பெரியார் ஊட்டிய உணர்ச்சி - அண்ணா ஊட்டிய உணர்ச்சி - பட்டுக்கோட்டை அழகிரி ஊட்டிய உணர்ச்சி - திராவிட இயக்கத்தின் தீரர்கள் ஊட்டிய உணர்ச்சி - எங்கள் நாடிநரம்புகளில் ஓடுகிற குருதி ஓட்டத்தில் கலந்து இருக்கிற உணர்ச்சி - நாங்கள் சாகிறவரை இந்த உணர்ச்சி எங்கள் உடம்பை விட்டு அகலாது.

என் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கும் அந்த ஆசைதான் பதவிகளுக்காக அல்ல. பதவியில் உட்கார வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. கொள்கைக்காக பொதுவாழ்வுக்கு வந்தோம். இலட்சியத்துக்காக பொதுவாழ்க்கைக்கு வந்தோம். தமிழ் இன மேம்பாட்டுக்காக அண்ணாவின் இயக்கத்துக்கு வந்தோம். நம் வாழ்வை அதற்காகத் தந்தோம். அதற்காகவே இனியும் பாடுபடுவோம்.
























சென்னை, ஜூன் 27: இலங்கைத் தமிழர்களுக்காக எந்த தியாகத்துக்கும் தயாராக இருங்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். பா.ம.க. மகளிரணி சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. பேரணியை முடித்துவைத்து ராமதாஸ் பேசியது: இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் அகதிகளாக வெளியேறட்டும் என்ற எண்ணத்தில் அந் நாட்டு அரசு செயல்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை. எந்த வகையில் ஒற்றுமையில்லை? இலங்கைப் பிரச்னையில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். தேர்தலில் தி.மு.க.வும் பா.ம.க.வும் எதிரெதிராகப் போட்டியிட்டோம். அதையெல்லாம் மறந்து இலங்கைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருக்கு எழுதியக் கடிதத்தை முதல்வருக்கும் அனுப்பினேன். இலங்கைப் போரில் திட்டமிட்ட சதி நடைபெற்றுள்ளது என்றும், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரியிருந்தேன். கருணாநிதியும் இந்த சதியை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என அதில் வேண்டுகோளும் விடுத்திருந்தேன். இலங்கைத் தமிழர் பிரச்னையில் நாங்கள் எந்த வகையில் ஒற்றுமையை வெளிப்படுத்தவில்லை? முகாம்களில் உள்ள 3.5 லட்சம் தமிழர்களுக்கு சரியான உணவு, மருந்து அளிக்காமல் அவர்களை பூண்டோடு அழிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இதைப்பற்றி நாம் கவலைப்படுகிறோம். ஆனால், நமக்குள் ஒற்றுமையில்லை. இலங்கைத் தமிழர்கள் நலமுடன் வாழ எந்த தியாகத்துக்கும் தயாராக இருங்கள்!: ராமதாஸ்



கருத்து
அதிகாரச்சுவையைத் தூக்கி எறியாத நாம் வேறு எதைத் தூக்கி எறியப் போகிறோம்? --- இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/28/2009 2:24:00 AM அதிகாரச்சுவையைத் தூக்கி எறியாத நாம் வேறு எதைத்


கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை
இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க நடவடிக்கை:
ஜி.கே. வாசன்
தினமணி


சென்னை, ஜூன் 27: "வணங்கா மண்' என்ற கப்பலில் உள்ள நிவாரணப் பொருள்களை இலங்கை தமிழர்களுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது; இதுகுறித்து விரைவில் சாதகமான முடிவு வரும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------------
உதவ வந்தவர்கள் உதவியின்றி 50 நாள்களுக்கும் மேலாக அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றனரே! அதற்கு முதலில் முடிவு கட்ட வேண்டாவா? தமிழ் ஈழத்தில் உள்ள காட்டுப் பகுதிகளை அழித்து அங்குள்ள விடுதலைப் படையினரையும் மக்களையும் கூட்டம் கூட்டமாக அழித்து மற்றொரு பேரவலத்தை நடத்த இந்தியாவின் ஒத்துழைப்பிற்குத்தான் சிங்கள ஓநாய்கள் வந்தனர் என்றும் அதை மறைப்பதற்காக வணங்கா மண் கப்பலில் உள்ள பொருள்களைத் தமிழ் மக்களுக்கு வழங்க ஒப்புக் கொண்ட நாடகம் நிறைவேறியது என்றும் இணையச் செய்திகள் கூறுகின்றனவே! அதற்கேற்றாற் போல் வணங்காமண் கப்பல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றதே! பேரினப் படுகொலைகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் கருவாயும் உருவாயும் இருந்த காங். அரசும் மலையாள ஆரிய அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இன்னும் என்னவெல்லாம் சொல்லி நம்மை ஏமாற்றப் போகிறார்கள்?

நல்ல தீர்வை வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/28/2009 2:15:00 AM






சித்திரவதைகள், கொலைகள், கலவரங்கள், எதிர்த்தாக்குதல்கள் இவற்றுக்கு மத்தியில் 1974 பிறக்கிறது. இந்த ஆண்டு நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தும்படி அரசைக் கேட்டுக் கொள்ள ஒரு தூதுக் குழு செல்கிறது. ஆனால் அரசு அதற்கு அனுமதி மறுக்கிறது. அதை ஒரு சவாலாக ஏற்றுத் தாங்களே அம்மாநாட்டை நடத்துவது என்று தமிழ்ச்சமூகம் முடிவெடுக்கிறது.யாழ்ப்பாணத்தில் எப்படியும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை 1974 ஜனவரி 3-10 நாள்களில் நடத்துவது என்பதை அனைத்துத் தமிழ் மக்களும் உறுதியுடன் ஆர்வத்துடன் ஆதரிக்கின்றனர். இந்த மாநாட்டை ஒவ்வொரு தமிழரும் தனது சொந்தக் குடும்ப விழாவாக நினைத்து யாழ்நகரத்தில் குவிகின்றனர்.இம்மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து புலவர் செ.ராசு (ஆசிரியர், கொங்கு), பிரகதம் (கொங்கு), கொடுமுடி ச.சண்முகன் (பொதுப்பணித்துறை), இரா.கணேசன் (சென்னைப் பல்கலை.), வண.தந்தை இராசமாணிக்கம் (லயோலா), பேரா.நயினார் முகமது (ஜமால் முகமது கல்லூரி), நீலகண்டன் (பெங்களூர் தமிழ்ச்சங்கம்), ரேன தா தேசா, ராஜ மகள் (கோவா), டாக்டர் சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், டாக்டர்.மோசூர் வாசுகி அம்மையார், டாக்டர் ரவீந்திர குமார், சேத் (இந்தி மொழியறிஞர்), வி.ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமானநிலையத்தில் இறங்கிய பலருக்கு 'விசா' அளிக்கப்படவில்லை, வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதன் பின்னர் அமைப்பாளர் குழுவில் பங்குபெற்ற கோ.மகாதேவா, மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஆகியோர் தலைமை அமைச்சரைச் சந்தித்துப் பேசியபின்னர்தான் எல்லா நாட்டினருக்கும் விசா வழங்கப்பட்டது.நகர் விழாக்கோலம் பூண்டது. கடைவீதிகளில் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. மின்விளக்கு அலங்காரம் இரவில் ஒளி வீசியது. உலகமே கண்டிராவகையில் முழுத்தென்னை, பனை, பாக்கு, மூங்கில், மா மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரங்களில் நடப்பட்டிருந்தன. பனை மற்றும் தென்னை மரங்களில் வாழைமரங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு நாகசுரம் முழங்க பூரண கும்ப மரியாதை அளித்து, கொழுக்கட்டை, சீடை, பிட்டு என பண்டைய தமிழ்ப் பலகாரங்கள் தந்து உபசரித்தனர் -என்று மாநாட்டில் தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட தஞ்சைப் பல்கலைக்கழகக கல்வெட்டு தொல்லியல்துறைத் தலைவர் செ.ராசு வியந்து மகிழ்கிறார். (தகவல்: கொங்கு இதழ் மற்றும் மறவன்புலவு க.சச்சிதானந்தம் எழுதிய 'எனது யாழ்ப்பாணமே').தமிழ் அறிஞர்களின் பேச்சுகளைக் கேட்க ஆண், பெண் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கில் மக்கள் கூடினர். ஓர் உணர்ச்சி மயமான சூழ்நிலையில் விழா நடந்து கொண்டிருக்கிறது. இதைக் கண்டு பொறுக்காத சிங்கள அரசும், இனவெறிச் சக்திகளும் ஆத்திரமும் கோபமும் ஆவேசமும் கொள்கின்றன. இதன் விளைவாக அரசின் காவல்துறை தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்தது. அன்றைய சம்பவங்களை நேரில் கண்ட ஒருவரின் நேரடி வர்ணனை இது-திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் நயினா முகமது உணர்ச்சி மயமாக உரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென வேறு ஏதோ ஒலிபெருக்கிக் குரல் தூரத்திலிருந்து வந்து மோதியது. என்னவென்று விளங்கவில்லை. அணி வகுத்து வந்த காவலர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். அளவுக்கதிகமாக வீசியதால் நெஞ்சை அடைத்தது. மேடையில் அமர்ந்திருந்தவர்களின் மீதும் வீசினார்கள். தூரத்தில் ஒரு பேருந்தில் உள்ளமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோர் மீதும், பேருந்திற்குள்ளும் வீசினர்.பயந்துபோய் பதுங்க இடம்தேடிப் பறந்து சென்ற மக்களை பிரம்பால் மிருகத்தனமாக அடித்துத் தாக்கினர் காவல்துறையினர். நாலாபக்கமும் சிதறி ஓடினர் மக்கள். பலர் மிதிபட்டுத் துயருற்றனர். தாயைப் பிரிந்த குழந்தைகள், கணவரைப் பிரிந்த மனைவியர் போன்று ஏராளம். அருகிலே சேறு நிறைந்த குளம் ஒன்று இருந்தது. அதில் பலர் விழுந்தனர். செருப்புகளைத் துறந்தனர். பல பெண்கள் புடவைகளை இழந்து ஓட வேண்டியதாயிற்று.தீரமிக்க யாழ் நகர் இளைஞர்கள் தமக்கு வந்த இடரையும் பொருட்படுத்தாது பலரைக் காத்தனர். குளத்தில் விழுந்தவர்களைத் தூக்கிவிட்டனர். தனியாக நின்ற குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.கண்ணீர்ப் புகையால் திணறிய இந்திய நாட்டினரை யாழ் நகர் இளைஞர்கள் சூழ்ந்துகொண்டு ஒவ்வொருவரையும் காப்பாற்ற முனைந்தனர்.புலவர் இராசு அவர்களை வீரசிங்கம் மண்டபத்திற்குப் பின்புறம் இழுத்துச்சென்று சுற்றுச்சுவர் மீது ஏற்றிப் பின்பக்கம் குதிக்க வைத்தனர். குதித்த இடம் சாக்கடை. அதிலேயே சற்றுதூரம் நடந்துசென்று சாலையேறி, தொடர்ந்து வந்து, எதிரில் வந்த கார் ஒன்றில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் பின்னர் வந்து, இவர் வீடு வந்து சேர்ந்ததை உறுதி செய்துகொண்டனர்.அதே போல இரவீந்தர்குமார்சேத், நயினார்முகமது, சனார்த்தனம் ஆகியோர் தத்தம் துணிமணிகளை இழந்து பல துயருற்று பத்திரமாக வீடுவந்து சேர்ந்தனர்.தென் ஆப்பிரிக்காத் தமிழர் முதியவர். கையில் அடிபட்டு வீடு வந்து சேர்ந்தார்.காவல்துறையினர் சனார்த்தனம் பேசக்கூடாதென்று சொல்லியிருந்ததாகவும், பேராசிரியர் நயினார்முகமதுவின் பேச்சை தவறாகப் புரிந்துகொண்டு, இரா.சனார்த்தனம் பேசுவதாகக் கருதிக் கூட்டம் சட்டவிரோதமானதென்று அறிவித்துக் கலைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. கூட்டத்தில் குழப்பம் என்பது பச்சைப் பொய்.எனினும் மேடையில் அமர்ந்திருந்த இந்தியர்களையும், பிற வெளிநாட்டாரையும் பாதுகாக்க முயலாமல் மேடை மீதும் கண்ணீர்ப்புகை வீசியதைப் போன்ற கொடுமை வேறு இருக்க முடியாது.யாழ் நகரப் படுகொலைக்கு இலங்கை அரசு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைக் காலம்தான் நிர்ணயிக்க வேண்டும்! தமிழன்னையின் கண்ணீர்த்துளிகள் வீணாவதில்லை. (கொங்கு இதழில் வந்தபடி).அதன் விளைவாக மின்சாரம் தாக்கியும் கூட்டத்தில் சிக்குண்டும் 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.விழாவிற்கு வந்த உலகத் தமிழ் அறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதைய யாழ்மேயர் ஆல்பிரட் துரையப்பா அளித்த விருந்துக்குப் போகக்கூடாது என்று 'பொடியன்கள்' (தமிழ் இளைஞர்கள்) தடுத்தனர். அவர் தமிழ்மாநாட்டு எதிரி என்பது அவர்களின் வாதம். 'கவரிமான்' என்ற பெயரில் யாழ் நகர இளைஞர்கள் துண்டுப்பிரசுரங்கள் வழங்கினர். 'பொடியன்களை' பெரியவர்கள் நம்பினர். ஈழத் தமிழர் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!