ஆதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

கட்டணமானியில் ஆதாயம் பார்க்கலாம்


 கட்டணமானியில்   ஆதாயம் பார்க்கலாம்

ஆட்டோக்களில் மீட்டரைப் பொருத்தி, பொது மக்களிடம் சரியான கட்டணத்தை வாங்கும், புஷ்பவனம்: நான், திருச்சி நேஷனல் கல்லூரியில் விரிவுரையாளராகவும், ஆங்கிலத் துறை தலைவராகவும் பணியாற்றி, ஓய்வு பெற்றவன். தமிழகத்தில், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பலர், பயணத்திற்கான கட்டணத்தை கேட்டவுடனே, பதற்றம் ஏற்படும் அளவிற்கு கட்டணம் உள்ளது. மீட்டர் பொருத்தியிருந்தாலும், நியாயமான கட்டணத்தை பெற மாட்டார்களா என, பலர் எண்ணினர்.திருச்சியில், 39 ஆண்டுகளுக்கு முன், "தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு'வை ஆரம்பித்தேன். இந்த அமைப்பின் மூலம், தமிழகத்தில் சரியான ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என, தொடர்ந்து போராடினோம். எங்கள் போராட்டத்தின் பயனாக திருச்சியில், 1976, 1982 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளின், சில மாதங்கள் மட்டுமே, மீட்டர் பொருத்தி இயக்கப்பட்டன.
தொடர்ந்து இயக்கப்படாததால், இப்பிரச்னைக்கு எப்படியாவது நிரந்தர தீர்வு ஏற்படுத்த, எங்கள் குழு மூலம், மீட்டர் ஆட்டோக்களை இயக்க முயற்சித்தேன். "மீட்டர் ஆட்டோ' திட்டத்தின் முதல் கட்டமாக, ஏழு ஆட்டோக்களை, வங்கி உதவியுடன் வாங்கி, 4,500 ரூபாய் செலவில், கிலோ மீட்டரை கணக்கிட்டு, அதற்கான ரூபாயை அச்சிடும் இயந்திரத்தை, ஆட்டோவில் பொருத்தினேன். உலக உபயோகிப்பாளர் தினமான, மார்ச் 15ல், இத்திட்டத்தை துவக்கினேன். இத்திட்டத்தின் கீழ் முதல், 2 கி.மீ.,க்கு, 20 ரூபாய், அதற்கு மேல் செல்லும், ஒவ்வொரு கி.மீ.,க்கு, 10 ரூபாய், இரவு நேரங்களில் மட்டும், கி.மீ.,க்கு கூடுதலாக, 2.50 பைசா என, கட்டணத்தை நிர்ணயித்தேன். இத்திட்டத்திற்கு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஏழு ஆட்டோக்களுடன் துவக்கப்பட்ட இத்திட்டம், 2014ம் ஆண்டிற்குள், 100 ஆட்டோக்களாக உயர்த்த முயற்சிப்போம். மீட்டர் பொருத்தி ஆட்டோ ஓட்டினால், லாபம் கிடைக்காது என, சில ஓட்டுனர்கள் கருதுவது முற்றிலும் தவறு. தொடர்புக்கு:93451 01216.

மின் சிக்கனம் தேவை!

மின் சிக்கனத்தோடு, தானியங்கி முறையில் ஒளிரும் தெரு விளக்குகளை கண்டுபிடித்த, 6ம் வகுப்பு மாணவி ஹர்ஷதா: நான், காரைக்காலில் உள்ள ஆத்மாலயா பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கிறேன். மின்சாரத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தாலும், அரசு சார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தால் அமைக்கப்படும் தெரு விளக்குகள், தவறான மேலாண்மை மற்றும் மனித தவறுகளால், பகல் நேரத்திலும் ஒளிர்கின்றன.மின்சாரம் வீணடிக் கப்படுவதால், அரசு மற்றும் பொதுமக்கள் மின்சாரமின்றி பாதிக்கப்படுவதை தடுக்க முயற்சித்தேன்.
என் ஆர்வத்தை அறிந்த அப்பா, மின்சாரம் பற்றி பயிற்சி பெற, "ஹை-டெக் ரிசர்ச் பவுண்டேஷன்' ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்த்தார். பள்ளி விடுமுறை நாட்களில், மின்சாரம் தொடர்பான பயிற்சி வகுப்புகளுக்கு சென்றேன்.மின் சிக்கனத்திற்கான முயற்சியை பயிற்சியாளர்களிடம் தெரிவித்த போது, ஆர்வத்தை புரிந்து கொண்டு, என் முயற்சிக்கு உதவினர்.
அதிகமான தெரு விளக்குகளை, மனிதன் மூலம் மேலாண்மை செய்வதை விட, தானியங்கி முறையில் செயல்படுத்த எண்ணினேன்.மனிதனோ அல்லது வாகனங்கள் போன்ற, ஏதேனும் நகரும் பொருட்களோ சாலையை கடக்கும் போதுமட்டும், அதிக வெளிச்சத்துடன் ஒளிர, 100 வாட்ஸ் திறனுள்ள விளக்கும், ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில், குறைந்த வெளிச்சம் தரும், 15 வாட்ஸ் விளக்கு என, இரண்டு, எல்.இ.டி., விளக்குகள் பொருத்தினேன். இரவில் மட்டும் ஒளிர, ஒளியை உணரும், "எல்.டி.ஆர்., சென்சார்' மற்றும் நகரும் பொருட்கள் விளக்கு நோக்கி வருவதை உணர, "ஐ.ஆர்., சென்சார்' பொருத்தி, தானியங்கி முறையில் ஒளிரக் கூடிய விளக்கை கண்டுபிடித்தேன். தெரு விளக்கில் உள்ள, 400 வாட்ஸ் திறனில் சோடியம் விளக்கு தரும் ஒளியை, 100 வாட்ஸ் திறனுள்ள, எல்.இ.டி., விளக்கு தரும். இது பூமி வெப்பமடைவதையும் தடுக்கும்.ஒரு, எல்.இ.டி., மின் விளக்கே, 300 வாட்ஸ் மின்சாரத்தை சேமிக்கும் போது, அனைத்து மின் விளக்குகளும் தானியங்கி முறையில் இயங்கினால், சேமிக்கப்படும் மின்சாரத்தை விவசாயம் போன்ற அடிப்படை தேவைக்கு பயன்படுத்தலாம். தொடர்புக்கு: 98424 22397.

வியாழன், 7 மார்ச், 2013

ஈழத்தமிழர் ஆதரவை ஆதாயத்துக்கு ப் பயன்படுத்துகிறார் கருணாநிதி: வைகோ

பெருகிவரும் ஈழத்தமிழர் ஆதரவை அரசியல் ஆதாயத்துக்கு ப் பயன்படுத்த எண்ணுகிறார் கருணாநிதி: வைகோ



பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவை தனது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்திக் கொள்ள கருணாநிதி எண்ணுகிறார்; அதனால் மார்ச் 12ல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
உலக வரலாற்றில் கொடூரமான மனிதப் பேரழிவுகளுள் ஒன்றாக, சிங்கள இனவாத அரசால் நடத்தப்பட்ட ஈழத்தமிழ் இனப்படுகொலையும், அம்மக்களுக்குத் தொடரும் விவரிக்க இயலாத துன்பங்களும், மனிதகுலத்தின் மனசாட்சியின் கதவுகளைத் தட்டுகின்றன. இளந்தளிர் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை, தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் இதயத்தைப் பதறச் செய்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 2004 ஆம் ஆண்டில் இருந்தே, சிங்கள அரசுக்கு, முப்படை ஆயுதங்களைக் கொடுத்தும், இந்தியத் தளபதிகளை அனுப்பி ஆலோசனை தந்து,  மிக நவீனமான ரடார் உள்ளிட்ட போர்ச்சாதனங்களை வழங்கி, யுத்தத்தை இயக்கியது.  அதனால்தான், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். உலகின் பல நாடுகள் போரை நிறுத்தும்படி  இலங்கை அரசை வற்புறுத்தியும், இந்திய அரசு ஒப்புக்குக் கூட, யுத்த நிறுத்தத்தைக் கோரவில்லை. மாறாக, ‘அது எங்கள் வேலை அல்ல’ என்று, திமிராகக் கூறியது.
அந்த மத்திய அரசில் பதவிகளை அனுபவித்துக் கொண்டே, ‘மைய அரசின் கொள்கைதான் இதில் எங்கள் கொள்கை’ என்று, தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
2009 ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர், அதே மே மாத இறுதியில், ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில், சிங்கள அரசைப் பாராட்டி, அக்கிரமமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றச் செய்ததில், இந்திய அரசு முக்கியப் பங்கு வகித்தது.
கடந்த ஆண்டு, மனித உரிமைக் கவுன்சிலில், அமெரிக்க அரசால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கையின் சிங்கள அரசாங்கம், உலகத்தை ஏமாற்றுவதற்காக மோசடியாக அறிவித்த, கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம் - எல்எல்ஆர்சி என்ற ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஏமாற்று வேலைக்குத்தான் வழி வகுத்தது.
2010 ஆம் ஆண்டு, ஐ.நா. அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு, இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து விசாரிக்க, பன்னாட்டு விசாரணை அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றது.
ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர், 2013 பிப்ரவரி 11 ஆம் நாள் தாக்கல் செய்த அறிக்கையில், இலங்கையில் தமிழர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து, உலகம் அறிவதற்கு சுதந்திரமான புலன் ஆய்வு விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும்; அங்கு நடந்தது வெறும் போர்க்குற்றம் அல்ல; சிங்கள அரசு திட்டமிட்டுச் செய்த தமிழ் இனப்படுகொலை ஆகும்; இந்த இனக்கொலை குறித்து, சுதந்திரமான பன்னாட்டுப் புலன் ஆய்வு விசாரணை நடத்த, ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானிக்க வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்குத் தீர்வு என்பது, சுதந்திர தமிழ் ஈழ தேசம் அமைவது மட்டும்தான்; தீர்வு ஆகும். அதற்கான விடியலை நோக்கித்தான், உலகெங்கும் தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், குரல் எழுப்பவும் போராடவும் வேண்டும்.
2009 ஆம் ஆண்டு, வீரத்தியாகி முத்துக்குமார் உடலுக்கு எரியூட்டப்பட்ட ஜனவரி 31 ஆம் நாள், தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்துக்கு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும், தமிழ் உணர்வாளர்களும் அறிவித்தபோது, இதில் ஈடுபட்டால் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று காவல்துறையின் மூலம் மிரட்டியும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக தலைமைச் செயலாளர் மூலம் கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கடிதங்கள் அனுப்பியும், இந்திய அரசின் துரோகத்தை மூடி மறைக்க படாதபாடுபட்ட, அன்றைய முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி,  இப்போது, மார்ச் 12 இல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளார்.
அமெரிக்கா கொண்டு வருகின்ற ஆதரித்து பொது வேலை நிறுத்தம் என்கிறார்.
அமெரிக்கா கொண்டு வர இருப்பதாகச் சொல்லப்படும் தீர்மானத்தில், இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்ற சொல்லோ கருத்தோ அறவே கிடையாது;
இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கின்ற வாசகமும் கிடையாது. சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கான கோரிக்கையும் கிடையாது;
முதலில் வெளிவந்த தீர்மானத்தில் இருந்த சித்திரவதை என்ற சொல்லைக் கூட, பின்னர் அமெரிக்கா நீக்கி விட்டது.
மனித உரிமை ஆர்வலர்களும், சுதந்திரமான நீதித்துறை குறித்த ஆய்வாளர்களும், பெண்களுக்குக் காட்டப்படும் பாகுபாடு, மக்கள் காணாமல் போதல், சிறுபான்மையினர் பிரச்சினைகள் பற்றி ஆய்வு செய்கிறவர்களும், இலங்கைக்குள் தாராளமாகச் செல்வதற்குக் கேட்கும் வேண்டுகோள்களைப் பரிசீலிப்பது குறித்து, சிங்கள அரசு கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்கிறது. மேலும், இலங்கை அரசாங்கத்தோடு ஆலோசித்து, அதன் ஒப்புதலோடுதான், மனித உரிமை ஆணையர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. இலங்கை அரசு அமைத்த ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்கிறது. 
அதுமட்டும் அல்ல, மனித உரிமைகள் ஆணையர் இதுபற்றிய அறிக்கையை, மனித உரிமைகள் கவுன்சிலின் 25 ஆவது அமர்வில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
நம் தொப்புள் கொடி உறவுகள் ஆன ஈழத்தமிழர்களின் குழந்தைகள், தாய்மார்கள், ஆயுதம் ஏந்தாத, போரில் ஈடுபடாத பொதுமக்கள் என இலட்சக்கணக்கில் படுகொலை செய்த சிங்கள அரசு, உலகத்தை ஏமாற்றுகின்ற மாய்மால வேலைகளுக்கு உடந்தையாக, இந்தியாவின் மத்திய அரசு இன்றுவரை செயல்பட்டு வருவதற்கு, அசைக்க முடியாத ஆதாரங்கள் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன.
2008-09 இல், ஈழத்தமிழர் படுகொலைக்கு, முழுக்க முழுக்க உடந்தையாக இருந்து செயல்பட்ட இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்கவும், ஈழத்தமிழரைக் காக்கவும், முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தபோது, தமிழகத்தில் பிரளயமென எழ வேண்டிய கொந்தளிப்பைத் தடுப்பதற்கு, என்னென்ன சூழ்ச்சிகள் தந்திரங்கள் மேற்கொள்ளப்பட்டதோ, அதே வேலைதான் இப்போதும் நடக்கிறது.
கொலைகார ராஜபக்சேவை, நேற்றுவரை இந்தியாவுக்கு வரவழைத்து விருந்து வைத்துப் பாராட்டி, உலகத்தின் கண்களில் இந்தியாவின் காங்கிரஸ் அரசு மண்ணைத் தூவுகிறது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியும்கூட, இந்திய அரசு இலங்கையோடு புதிய ஒப்பந்தங்களைச் செய்துகொண்டே வருகிறது.
தமிழக மீனவர்கள் 500 பேர் சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். அதனைத் தடுக்கத் தவறிய இந்திய அரசு, எந்தவிதக் கண்டனமும் தெரிவிக்காமல், இலங்கைக் கடற்படையோடு ஒப்பந்தமும் போட்டு இருக்கின்றது.
தமிழ்நாட்டு மக்கள் மனதில் நீறுபூத்த நெருப்பாக, சிங்கள அரசின் மீது, நியாயமான ஆத்திரமும், தமிழர்கள் குறித்த வேதனையும், வேகமாக வளர்ந்து வருவதால், நீதிக்கான பாதைக்கு வழிகாட்டாமல், மக்களைத் திசைதிருப்புகின்ற முயற்சியில், இந்தியாவின் காங்கிரஸ் அரசு, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வைப் பயன்படுத்துகிறது.
அமெரிக்கத் தீர்மானம் என்பது, தமிழர்களுக்கு நீதிக்கு வழி அமைக்கும் தீர்மானம் அல்ல.
ஈழத்தமிழர் இனக்கொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டுப் புலன் ஆய்வு விசாரணை நடைபெற, மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று, அதன் உறுப்பு நாடுகளான, 47 நாடுகளின் அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்து இருந்தோம். அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வைப்பதற்குத்தான், தமிழக மக்களும், உலகு வாழ் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் ஒருமித்து எழ வேண்டும்.
இத்தனை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மாவீரர்களும், விடுதலைப்புலிகளும், இரத்தத்தைச் சிந்தி, உயிர்களைத் தந்ததெல்லாம் சிங்களவனோடு அடிமை வாழ்க்கை நடத்த அல்ல. உரிமைகளுக்காக அவனிடம் பிச்சை கேட்டு, அவனது ஆதிக்கத்தில் வாழ்வதற்காக அல்ல.
தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களவன் வெளியேற்றப்பட்டு, சிறைகளில் வதைபடும் தமிழர்கள் விடுவிக்கப்பட்டு, போலீசும், இராணுவமும் அகற்றப்பட்டு, உலக நாடுகள் மேற்பார்வையில், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்திடச் செய்வது ஒன்றுதான், ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமான நீதியை வழங்கும் என்பதை, எள் அளவும் மலிவான அரசியல் லாப நோக்கம் இன்றி, தன்னலம் அற்ற கடமை உணர்வோடு, தமிழக மக்களின் மேலான கவனத்துக்குத் தெரிவிக்கின்றேன்.
- என்று கூறியுள்ளார்.

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(13)

கருணாநிதி இப்போது இந்தப் பிரச்சனையில் செயல்படுவது மத்திய அரசின் செல்வாக்கைப் பயன்படுத்தி தன் மீதான வழக்குகளையும், தன் குடும்பத்தினர் மீதான 2ஜி கமிஷன் தொடர்பான வழக்குகளையும் இல்லாமல் செய்வதற்குத்தான்.. துரோகத்தின் மறுவுருதான் கருணாநிதி என்பது தமிழகம் அறிந்த உண்மை.... தமிழக மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்...
படுகொலை நடந்த போது இந்த பேடி துரோகி கருணாநிதி .பத்திரிகைகளுக்கும் ..டிவி களுக்கும் சொன்ன கருத்துக்களை ..திரும்ப வெளியிட்டால் ..இவன் சாயம் வெளுக்கும் ....இவன் என்ன தமிழர்கள் எல்லோரும் மடையர்கள் என்று நினைத்து விட்டானா ????
ஈழ பிரச்சினையில் 360 டிகிரி பல்டி அடிக்கும் ( 2009 முதல் இன்று)இந்த பேடி கருணாநிதி alias தட்ச்சனமூர்த்தி பற்றி அறிவுள்ள எவருக்கும் விளங்கும் ..கழக கண்மணிகள் தவிர ..அரசியல் வாழ்விற்கு பிணம்களையும் மேடை ஏற்ற இவன் தயார் .இன்று இவன் சீப் மினிஸ்டர் ஆக இருந்தால் ...பாலச்சந்திரன் பற்றி பேசினால் கூட அவர்களை சிறையில் அடைத்திருப்பான்
People should teach the DMK President Karunanithi and his party a Good Lesson in the forth coming Lok Shaba Election, 2014, by defeating all his Candidates for the treachery and letting down the Tamils.
பதிவுசெய்தவர்  03/06/2013 16:01 இதற்கான பதில்

புதன், 6 பிப்ரவரி, 2013

நெகிழியில் ஆதாயம் பார்க்கலாம்


" நெகிழியில் ஆதாயம் பார்க்கலாம்!'உறுதியான பிளாஸ்டிக் சாலைகள் அமைப்பதற்கான, தொழில்நுட்பநிபுணர் டாக்டர் ஆர்.வாசுதேவன்: மதுரை தியாகராஜர் கல்லூரியில், வேதியல் துறை தலைவராக பணியாற்று கிறேன். ஒரு சாதாரண தார் சாலை, மூன்று ஆண்டுகள் மட்டுமே தாக்கு பிடிக்கும். ஆனால், பிளாஸ்டிக் சாலைகள், 10ஆண்டுகள் தாக்கு பிடிக்கும்.தார் சாலை மழை நீரில் தேங்கி ஊறுவதால், தாருக்கும் கல்லுக்குமான இணைப்பு துண்டிக்கப்பட்டு, சாலைகள் எளிதில் வீணாகின்றன. இது போன்ற, எந்த விளைவு களும், பிளாஸ்டிக் சாலையில் ஏற்படாது. சாலையில் பள்ளம், விரிசல் விழாமல், உறுதியாக பிணைக்கப்பட்டிருக்கும். தார் சாலையை விட, இரண்டு மடங்குஉறுதியானது. கல்லை, 170 டிகிரி சென்டிகிரேடில் சூடேற்றி, அதன் மீது, பிளாஸ்டிக் துகள்களை தூவுவதால், பிளாஸ்டிக் உருகி, கல் மீது"லேமினேட்' செய்தது போல் ஒட்டிக் கொள்ளும். அதன் மேல், உருகிய தாரை ஊற்றினால், லேமினேட் செய்யப்பட்ட கோட்டிங் கல்லுக்கும், தாருக்கும் நல்ல பிணைப்பு ஏற்பட்டு, சாலையின் தரமும் அதிகரிக்கும்.மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம், பால் கவர், கேரி பேக் என, மட்காத பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை, வீடுகளில் கிலோ 7 ரூபாய் வரை வாங்கி சுத்தப்படுத்தி, பிளாஸ்டிக் அரவை இயந்திரத்தில், 2 மி.மீ., முதல் 4 மி.மீ., நீளமுள்ள துகள்களாக மாற்றப்படுகின்றன. ஒரு அரவை இயந்திரம், 1.5 லட்சம் ரூபாயில் கிடைக்கிறது.தினமும், மகளிர் சுய உதவிக் குழுவின் இரண்டு உறுப்பினர் வீதம், பிளாஸ்டிக்கை அரைக்கும் வேலை செய்தாலே போதும். அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களின் அளவிற்கு ஏற்றார் போல், 16 ரூபாய் முதல், 23 ரூபாய் வரை விற்கிறோம். இத்தொழிலை மற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களும் மேற்கொண்டு லாபம் ஈட்டலாம்.தமிழக அரசே, பிளாஸ்டிக் தார் சாலைகள் அமைக்க ஊக்குவிப்பதால், அரசின் உள்ளாட்சி நிர்வாகங்களே, பிளாஸ்டிக் துகள்களை கொள்முதல் செய்கின்றன.

வியாழன், 15 நவம்பர், 2012

(பாவம் நிதி யில்லையாம்! என்ன பெயரில் திரட்டலாம் எனக் கருத்து சொல்லுங்களேன்.)ஆதாயம் பார்க்காமல் உழைப்பவர்கள் தி.மு.க.வின் இரத்த நாளங்கள் - கலைஞர்

இலாபம் பார்க்காமல் உழைப்பவர்கள் தி.மு.க.வின் இரத்த நாளங்கள்: சைதை கிட்டு மகன் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
(இலாபம்தான்  தலைவர் குடும்பத்தில் கொட்டுகிறதே! அந்த நிறை வு போதும் - தொண்டர்களுக்கு!)
 
 
லாபம் பார்க்காமல் உழைப்பவர்கள் தி.மு.க.வின் ரத்த நாளங்கள்: சைதை கிட்டு மகன் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
சென்னை, நவ.15-

முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. சைதை க.கிட்டு மகன் கருணா- தாரிகா திருமணம் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-

அருமை தம்பி சைதை கிட்டுவின் புகழை, அவர் பெற்ற பெருமையை, அவரது வீரத்தை எல்லாம் எண்ணி எண்ணி அகமகிழ்கின்றேன். மணமக்களை வாழ்த்தும் உங்கள் அனைவரோடு எனது வாழ்த்துக்களையும் சேர்த்து வாழ்த்துகிறேன். நான் பல்வேறு மாவட்ட செயலாளர்களை பார்க்கும் நல்ல வாய்ப்பை பெற்று உள்ளேன்.

சைதை கிட்டுவும், நானும் எந்த அளவு உடன் பிறவா சகோதரர்களாக இருந்தோம், எந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் நேசித்தோம் என்பதை எல்லாம் எங்களை உணர்ந்தவர்கள் உணருவார்கள். அவர் என்னிடத்தில் கொண்ட அன்பு காரணமாகத்தான் தனது மகன் பெயரை கருணா என்று சூட்டினார். நிதியையும் சேர்த்து சூட்டியிருந்தால் தலைவர் பெயரை சொல்லி அழைக்க வேண்டுமே என்று கருதி அவ்வாறு சூட்டினார். இன்று இங்கு நடைபெற்ற காதல் கலப்பு திருமணம் எங்கே சாதி உயர்ந்தது என்று குறிப்பிடப்பட்டதோ அந்த சாதியை சேர்ந்த தாரிகா திராவிட சாதியை சேர்ந்த கருணாவை கரம் பிடித்து அனைவரின் வாழ்த்தையும் பெற்று உள்ளார்.

இது ஒரு ஆரிய- திராவிட கலப்பு திருமணம். ஆரியர் கொள்கை வேறு, திராவிட கொள்கை வேறு. திராவிட எண்ணங்கள் பகுத்தறிவு கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் அளவு காலம் மாறியிருக்கிறது. சாதி வேற்றுமை அகலும் காலத்தை உருவாக்கக் கூடியது இளைஞர்கள் தான். சைதை கிட்டுவால் இந்த இயக்கம் எத்தகைய வளர்ச்சி பெற்றது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான்.

எத்தனையோ பேர் இந்த இயக்கத்துக்காக பாடுபட்டு இருக்கலாம். அவர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக விளங்கும் தகுதி கிட்டுவை போன்ற சிலருக்குத்தான் உண்டு. அவர் எதற்கும் அஞ்சாத மனிதர். நெருக்கடி கால சோதனையின் போது எங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்து எங்களையும், இயக்கத்தையும் காத்த பெருமை அவருக்கு உண்டு. அவர் ஆற்றலும், திறனும் கொண்ட மாவீரர். அவரை போல் இன்னும் பலர் தோன்ற வேண்டும்.

கிட்டு ஆற்றிய தொண்டை தொடர்ந்து ஆற்ற வேண்டும். என்னால் இயக்கத்துக்கு என்ன லாபம் என்று நினைப்பவர்கள் தான் இந்த இயக்கத்தின் ரத்த நாளம். இயக்கத்தால் எனக்கு என்ன லாபம் என்று நினைப்பவர்கள் இயக்கத்தின் புற்று நோய் போன்றவர்கள். கிட்டு சாதாரண தொண்டராக பணியை தொடங்கி எல்லோராலும் பாராட்டப்பட்டவர்.

கிட்டு விட்டுச்சென்ற இடத்தை நிரப்புவோம். இன்று அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் நிழலாக தொடருகிறார். அவரது இல்லத்து குடும்ப விளக்குகள் கருணா- தாரிகா இருக்கிறார்கள். அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மணமக்களை வாழ்த்திய வர்கள் வருமாறு:-

மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுமான்கான்,  பெரியகருப்பன், சுப.தங்க வேலன், எஸ்.பி.சற்குண பாண்டியன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் வி.பி. துரைசாமி, ஆர்.எஸ். பாரதி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிர மணியன், சேகர்பாபு, பூச்சி முருகன், தனசேகரன், மு.மகேஷ்குமார், கிருஷ்ண மூர்த்தி, கிண்டி செல்வம், தாயகம் கவி, தொழில் அதிபர் வி.ஜி. சந்தோஷம், வசந்தகுமார், சைதை ரவி உள்பட பலர் வாழ்த்தினார்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கிட்டு என்று சொன்னாலே கிட்டாதது எல்லாம் கிட்டும் : கருணாநிதி புகழாரம்

First Published : 15 November 2012 02:24 PM IST
சைதைக் கிட்டு என்று சொன்னாலே கிட்டாதது எல்லாம் கிட்டும் என்று மறைந்த சைதைக் கிட்டு இல்லத் திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.
சைதை கா.கிட்டு இல்லத் திருமணத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆற்றிய உரையின் போது,  இந்த மண மக்களை வாழ்த்துகின்ற வாய்ப்பை கருதி மணமக்கள் வாழ்க வாழ்க என்று உங்களோடு இணைந்து நானும் வாழ்த்துகின்றேன்.
சைதை கிட்டு என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவர் என்பதற்கு அடையாளமாகத் தான் தன்னுடைய மகனுக்கு “கருணா” என்ற பெயரை வைத்திருக்கிறார். “கருணாநிதி” என்று முழு பெயரையும் வைக்க வேண்டுமென்று எண்ணினாலும், என்னிடத்திலும், அவரிடத்திலும் “நிதி” இல்லாத காரணத்தால் (கைதட்டல்) நான் என்னிடத்திலும், அவரிடத்திலும் என்று தான் சொன்னேன் - மற்றவர்களையெல்லாம் குறிப்பிடவில்லை. அந்தக் காரணத்தினால் “கருணா” என்ற அளவோடு தன்னுடைய மகனின் பெயரை சூட்டி அழைத்தார். “கருணாநிதி” என்று ஏன் முழுப் பெயரைச் சூட்டி அழைக்கவில்லை என்று கேட்டால், அது தலைவர் பெயரை நான் கூறினேன் என்ற தவறுக்கு ஆளாகி விடுவேன் என்று அவர் பல நேரங்களிலே சொல்லியிருக்கிறார்.
கிட்டுவை நாங்கள் பறி கொடுத்த போது என் மனம் என்ன பாடுபட்டது என்பதை என்னோடு இருந்தவர்கள் தான் அறிவார்கள். கிட்டு என்று சொன்னால் எல்லாமே கிட்டும் - கிட்டு என்று சொன்னால் கிட்டாதது எல்லாம் கிட்டும் - கிட்டு என்று சொன்னால் எட்டாதது எல்லாம் எட்டும் (பலத்த கைதட்டல்). அப்படிப்பட்ட வல்லமையும் ஆற்றலும் திறனும் கொண்ட ஒரு மாவீரரைத் தான் இந்த இயக்கம் பெற்றிருந்தது. இந்த இயக்கத்திலே அப்படிப்பட்ட மாவீரர்கள் இன்னும் தோன்ற வேண்டும் என்ற அவா மிகுதி உடையவன் நான். ஒரு இயக்கத்தில் கிட்டுப் போன்றவர்கள் இருப்பார்களேயானால், அவர்கள் இந்த இயக்கத்திற்கு என்ன செய்தார்கள் என்பது தான் கேள்வியே, அந்தக் கேள்விக்குக் கிடைக்கின்ற பதில் தான் இந்த இயக்கத்தை வளர்க்கக் கூடியதா அல்லது வீழ்த்தக்கூடியதா என்பதை அறுதியிட்டுக் கூறுகின்ற நிலையிலே அமையக் கூடியது என்பதையும் நான் பல நேரங்களிலே எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
நான் அடிக்கடி சொல்வது உண்டு. உன்னால் இந்த இயக்கத்திற்கு என்ன லாபம்? என்று கேட்டு விட்டு நான் சொல்வேன் பல நேரங்களில் - ஒரு இயக்கத்தில் தன்னால் அந்த இயக்கத்திற்கு என்ன இலாபம் என்று கருதுகிறவன் தான் அந்த இயக்கத்தை வளர்க்கின்ற, அந்த இயக்கத்திற்கு உயிர் தருகின்ற இரத்த நாளம் - இயக்கத்தால் தனக்கு என்ன இலாபம் என்று வருந்தி பெருமூச்சு விடுகிறவன் அந்த இயக்கத்திற்குப் புற்று நோய் - என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அப்படிப்பட்ட இரத்த நாளங்களில் ஒருவராக நம்முடைய தம்பி கிட்டு அவர்கள் இருந்தார்கள். அந்த இரத்த நாளம் தான் இடையிலே சில ஆண்டுகளுக்கு முன்பு நாமெல்லாம் கலங்குகின்ற அளவிற்கு - நாம் பெருமூச்சு விடுகின்ற அளவிற்கு நம்மை விட்டு விலகியது, நம்மை விட்டுப் பிரிந்தது. பிரிந்தாலுங்கூட இங்கே நண்பர்கள் எல்லாம் எடுத்துக் காட்டியதைப் போல நிழலாக நம்மோடு இருக்கிறார் கிட்டு. அவருடைய துணிவு நமக்குத் துணையாக இருக்கின்றது. அவருடைய அன்பு நம்மை விட்டு அகலாமல் இருக்கின்றது. அவருடைய தொண்டுள்ளம் நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் நாம் வாழ வேண்டும். கிட்டு ஒரு சாதாரணத் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கி, அண்ணாவின் தம்பியாக வாழ்ந்தவரே, பெரியாரின் தொண்டனாக இருந்தவரே, எங்களுக்கு எல்லாம் உற்றத் தோழராக விளங்கியவரே, என்று பாராட்டக் கூடிய அளவிற்கு அவர் நம்முடைய மனதிலே நிழற் படமாக ஆகியிருக்கிறார் என்று பேசினார்.

புதன், 14 நவம்பர், 2012

"வான்கோழி வளர்த்தால் ஆதாயம் அள்ளலாம்!'

சொல்கிறார்கள்
"வான்கோழி வளர்த்தால் ஆதாயம் அள்ளலாம்!'
வான் கோழி வளர்ப்புப் பற்றி கூறும் ராஜாமணி: வான் கோழி வளர்க்க அதிக முதலீடோ, இடவசதியோ தேவையில்லை. ஆர்வமும், உழைப்பும் இருந்தால் போதும். நெளிவு சுளிவுகள் தெரிந்தால், வான் கோழி வளர்ப்பது சுலபம். புதிதாக வான்கோழி வளர்க்க நினைப்பவர்கள், 200 முதல் 250 சதுர அடி இடத்தில், 100 குஞ்சுகளுடன் வளர்க்கத் துவங்கலாம். ஒரு மாதத்திற்குள்ளான குஞ்சுகளில், அதிக அளவில் இறப்பு இருக்கும் என்பதால், கொஞ்சம் வளர்ந்த குஞ்சுகளை வாங்கி வளர்ப்பது நல்லது.
வான் கோழிகளுக்கு, கடைகளில் விற்கும் கோழித் தீவனங்களை வாங்கிப் போட்டால், கட்டுப்படியாகாது. எனவே, பச்சை புற்களை அதிக அளவில் கொடுக்க வேண்டும். 60 சதவீதம் புற்கள், 20 சதவீதம் தவிடு, 20 சதவீதம் முட்டைக் கோழித் தீவனம் என்ற விகிதத்தில் கொடுத்தால், தீவனச் செலவை அதிக அளவில் குறைக்கலாம். மனிதர்களுக்கு கீரை உண்பது எவ்வளவு ஆரோக்கியமானதோ, அதே போல், பச்சை புற்கள், கீரைகள் வான்கோழிகளுக்கு நல்லது.வான்கோழி வளர்ப்பில் சந்தை வாய்ப்பு இல்லை என்ற தவறான எண்ணத்தால், பலரும் இந்தத் தொழிலை செய்யத் தயங்குகின்றனர். ஆனால், உண்மையில் நாளுக்கு நாள் தேவைகளும், சந்தை வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. இறைச்சி தேவைக்கு இணையாக, இதன் முட்டைக்கும் நல்ல கிராக்கி உள்ளது.

நாம் வளர்க்கும், 100 கோழிகளில், 50 தான் பெட்டை என்றாலும், இதன் மூலம், தினமும், 25 முட்டைகள் கிடைக்கும். ஒரு வான்கோழி முட்டையின் விலை, 20 ரூபாய். வான்கோழி, தினமும் முட்டை வைக்காது. 36 மணி நேரத்திற்கு ஒரு முறை தான், முட்டை வைக்கும். எனவே, 50 கோழிகள் மூலம், ஒரு நாளைக்கு, 25 முட்டைகள் கிடைத்தாலும், 500 ரூபாய் வருமானம் பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் வரை இந்த கோழி, முட்டையிடும். அதற்கு மேல், அதை கறிக்கு விற்றுவிடலாம்.வான்கோழி வளர்ப்பதைத் துவங்கும் முன், கால்நடை பல்கலைக் கழகப் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி எடுத்துக் கொண்டால், இன்னும் சிறப்பாகச் செய்யலாம்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

ஓய்வு நேரத்திலும் ஆதாயம் பார்க்கலாம்!'

சொல்கிறார்கள்


"கொலு வைப்பதேதொழில் தான்!'
திருமணம், நிச்சயம் போன்ற நிகழ்ச்சிகளில், அதற்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை, கொலு பொம்மைகள் மூலம் காட்சிக்கு வைக்கும் கவிதா, ஜெயஸ்ரீ, அஞ்சனி, சத்தியபாமா:கவிதா ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த பள்ளியில் தான், எங்களின் குழந்தைகள் படிக்கின்றனர். அங்கு தான், நான்கு பேரும் அறிமுகமானோம். கவிதாவிற்கு, கை வேலைப்பாடுகளில் அதிக ஆர்வம். ஓய்வு நேரங்களில், கிராப்ட் வேலைகள் செய்ய ஆரம்பித்து விடுவார். அதில், ஆர்வமாகி பாராட்டியதுடன், கற்றுக் கொள்ளவும் துவங்கினோம்.பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் ஏதாவது தொழில் செய்யலாம் என, தீர்மானித்தோம். அப்போது தான், திருமணத்திற்கான ஆரத்தி, அலங்காரங்கள், கொலு பொம்மைகள் என, "கான்செப்ட்'டிற்கு ஏற்ப செய்து கொடுப்பதையே, நாமும் ஒரு தொழிலாக எடுத்து செய்யலாம் எனத் தோன்றியது.சென்னை, மேற்கு மாம்பலத்தில், ஒரு, "பிளாட்'டை வாடகைக்கு எடுத்தோம். சுப விசேஷங்களுக்கான, ஆரத்திகள் மற்றும் சீர்தட்டுகள், மண்பானை அலங்காரங்கள், விழா அரங்கில் கொலு பொம்மைக் காட்சி என, மூன்றும் செய்து தருகிறோம் என, தெரிந்தவர்களிடம் வாய்ப்பு கேட்டோம். இந்த புதுமையான யோசனைக்கு, பலர் தயங்கினாலும், சிலர் ஆர்வமாயினர்.மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயம், முகூர்த்தம், முளைப்பாரி, மோதிர விளையாட்டு என, சுபசடங்குகளை, நாங்கள் கொலுவாக வைப்பதை பார்ப்பவர்கள் ரசித்ததுடன், வாய்ப்பும் கொடுத்தனர்.ஒரே மாதிரியான, கொலு பொம்மைகளையே அனைத்து விசேஷங்களிலும் வைக்காமல், ஒவ்வொரு, "ஆர்டரு'க்கும், புதிதாக ஏதாவது யோசித்து செய்வோம். விழா நடத்துபவர்களின் விருப்பங்கள், அவர்களின் சமுதாயப் பழக்கம் அனைத்தையும், கொலுவில் கொண்டு வருவோம். இப்போது, பல, வி.ஐ.பி., வீட்டு விசேஷங்களுக்கும் எங்களுக்கு ஆர்டர் வருகிறது.தினமும் காலை, 10:00 மணிக்கு அலுவலகத்திற்கு வருவோம். ஆர்டர்கள், கணக்கு வழக்கு அனைத்தையும், ஒவ்வொருத்தரும் பகிர்ந்து செய்வோம். 1:00 மணிக்கு, வீட்டிற்கு கிளம்பி விடுவோம். இந்த நான்கு ஆண்டாக, குடும்பமும், தொழிலும் ஒன்றை ஒன்று தொந்தரவு செய்யாமல் போகிறது.
"ஓய்வு நேரத்திலும் ஆதாயம் பார்க்கலாம்!'
 இல்லத்தரசிகள் பங்குச் சந்தையில் ஈடுபடுவது பற்றி வகுப்பெடுக்கும் தர்மஸ்ரீ: திருமணத்திற்குப் பின், கணவரின் வேலை காரணமாக, மும்பையில் இருந்த போது, ஓய்வு வேளையில், "ஷேர் மார்க்கெட், கமாடிட்டி மார்க்கெட், கரன்சி மார்க்கெட்' என, பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன், பங்குச் சந்தை நேரடி வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். துவக்க காலத்தில் பங்குச் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் சரிவர புரியாமல் நிறைய நஷ்டங்கள்.நஷ்டம் வருவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்ததில், எந்த வித அடிப்படை அறிவுமின்றி, மனம் போன போக்கில் செய்த முதலீடுகள், அதிகபட்ச நஷ்டத்தை தந்திருப்பது புரிந்தது. தவிர, நிபுணர் கருத்துக்களை மட்டுமே நம்பி முதலீடு செய்ததாலும், நஷ்டம் ஏற்பட்டதை உணர்ந்தேன். இந்த அனுபவத்தின் மூலம், மெல்ல மெல்ல, சந்தையின் போக்கைக் கவனிக்க ஆரம்பித்தேன்.இதில் நான் கற்றுக் கொண்டதை, நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, இதையே மற்றவர்களுக்கு வகுப்பாக எடுத்தால், மற்ற பெண்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என, யோசனை கூறினர். அது எனக்கு சரியென பட, கணவரின் ஒப்புதலுடன் பங்குச் சந்தை பற்றிய வகுப்பெடுக்க ஆரம்பித்தேன்.மொத்தம் ஐந்து வகுப்புகள். பங்குச் சந்தை என்றால் என்ன, அடிப்படை விஷயங்கள், பங்குகளை ஆன்-லைன் மூலம், வாங்குவது, விற்பது, நாள் வர்த்தகத்தில் ஈடுபடும் முறைகள், நல்ல நிறுவனங்களை கண்டுபிடிப்பது எப்படி என, படிப்படியாக சொல்லிக் கொடுப்பேன். சில சமயம், வெளியூர்களுக்கும் சென்று வகுப்பெடுப்பேன்.பங்குச் சந்தையில் முன் அனுபவமே இல்லாதவர்கள், முன் அனுபவம் இருந்தும் நஷ்டப்பட்டவர்கள் என, பல தரப்பட்டவர்களையும், இந்த வகுப்பின் மூலம் சந்திக்க முடிகிறது. இந்த துறையில், பெண்கள் குறைவாகத் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு காரணம், பங்குச் சந்தை என்றாலே, "சூதாட்ட களம்' என்ற மாயை தான்.வீட்டில் ஒரு கம்ப்யூட்டரும், குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய் முதலீடும் இருந்தாலே போதும். பங்குச் சந்தை பற்றிய நெளிவு, சுளிவுகளைக் கற்று, ஓய்வு நேரத்தில், நல்ல லாபம் பார்க்கலாம்!