ஆசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 செப்டம்பர், 2013

பாடத்தைப் பாடலாக்கிய ஆசிரியர்!

பாடத்தை ப் பாடலாக்கிய ஆசிரியர்!

நாட்டுப்புற பாடல் மூலம் கணித சூத்திரம், வேதியியல் சமன்பாடு மற்றும் தனிமங்களை, மாணவர்களுக்கு எளிதில் புரிய வைக்கும்,
ஆசிரியர் தவமணி: நான், கொட்டாம்பட்டி அருகில் உள்ள, நாகப்பன் செவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவன். எங்கள் ஊரில், பேருந்து வசதி இல்லாததால், தினமும், 8 கி.மீ., தூரம் நடந்தே, அரசு பள்ளிக்கு செல்வேன். இதனால், நாட்டுப்புற பாடல் பாடிக் கொண்டே, பள்ளிக்கு செல்லும் பழக்கம், சிறுவயதிலேயே ஏற்பட்டது. ஆசிரியர் பணியின் மீதான ஆர்வத்தால், 1989ல் பி.எட்., படித்தாலும், ஏனோ ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை. நாட்டுப்புற பாடல்களை நன்கு பாடும் திறமை இருந்ததால், நண்பர்கள் வலியுறுத்தலின்படி, அகில இந்திய வானொலியில், நாட்டுப்புறப் பாடல்களை பாடி வந்தேன். கடந்த, 1996ல், என் விருப்பப்படியே, ஆசிரியர் பணி கிடைத்தது. அறிவியல் மற்றும் கணித பாடங்களை படிக்க, கிராமத்து மாணவர்கள் படாத பாடு பட்டனர். சிலர், இதற்காகவே பள்ளிப் படிப்பை, பாதியிலேயே கைவிட்ட செய்தியையும் அறிந்தேன். அதனால், கணித சூத்திரம், வேதியியல் சமன்பாடு மற்றும் தனிம அட்டவணைகளை, நாட்டுப்புற பாடல் வடிவில் மாற்றியமைத்து, மாணவர்களை பாட வைத்தேன். நாட்கள் செல்ல செல்ல, என் முயற்சிக்கு பலன் கிடைக்க ஆரம்பித்தது. மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். சுனாமி பாதித்த அதிர்ச்சியிலிருந்து மீளாத, நாகப்பட்டினம் கடற்கரையோர மாணவர்கள், பள்ளிக்கு செல்லவே ஆர்வமின்றி, மன உளைச்சலுடன் இருந்தனர். 2005ல் அங்கு சென்று, நாட்டுப்புற பாடல் வழியாக பாடம் நடத்தினேன். இதையறிந்து, மற்ற குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். பழையபடி கல்வியில் கவனம் செலுத்தியது, மனதிற்கு மகிழ்ச்சியாக அமைந்தது. கிராமப்புற பெற்றோருக்கு, போதுமான படிப்பறிவு இல்லாததால், தங்கள் குழந்தைகளையும் படிக்க விடுவதில்லை. எனவே, கிராமப்புற பகுதிகளுக்கு சென்று, நாட்டுப்புற பாடல்கள் வழியாக, அறிவொளி இயக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன்.

புதன், 26 ஜூன், 2013

மாணவர்கள் கல்வி க் கரை சேர, ஆற்றில் நீந்தி ப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்

மாணவர்கள் கல்வி க் கரை சேர, ஆற்றில் நீந்தி ப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்
பாலக்காடு:தன்னிடம் படிக்கும் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற, கேரளாவை சேர்ந்த ஒரு வகுப்பாசிரியர், கரைபுரண்டோடும் ஆற்று தண்ணீருடன் தினமும் போரிட்டு தோற்கடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மஞ்சேரி யானைக்கயம் பெரும்பலத்தைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக். இவர் இரும்பழி எனுமிடத்தில் உள்ள பள்ளியில் 1992ல் ஆசிரியராக சேர்ந்தார். வீட்டிலிருந்து மூன்று பஸ்கள் மாறினால்தான் பள்ளியை அடைய முடியும். அதுமட்டுமின்றி பஸ் ஏறுவதற்கு வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்கவும் வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த ரூட்டில் பஸ் சர்வீஸ் மிக குறைவு. எப்படிதான் வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்தாலும் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு அப்துல் மாலிக்கால் வரமுடியவில்லை.வேலையில் சேர்ந்து முதல் கல்வியாண்டு முடிந்த பிறகுதான் பள்ளிக்கு எளிதில் வர கடலுண்டி ஆற்றை கடந்தால் போதும் என்ற யோசனை பிறந்தது.

அன்று முதல் இன்று வரை கடலுண்டி ஆறு, மாலிக்கின் தினசரி போக்குவரத்து வழியாக மாறிவிட்டது. மாலிக்கின் வீடும் அவர் பணியாற்றும் பள்ளியும் கடலுண்டி ஆற்றின் இருகரைகளில் உள்ளது. இதன் அருகே பாலங்கள் எதுவும் இல்லை. வீட்டிலிருந்து நேராக யானைக்காயம் பெரிம்பலம் ஆற்றின் கரையோரம் வந்து, அணிந்துள்ள ஆடைகள், டிபன் பாக்ஸ், குடை மற்றும் புத்தகங்களை பிளாஸ்டிக் பையில் வைத்து இடுப்பில் துண்டால் இறுக்க கட்டிக் கொள்கிறார். இந்த பையையும் செருப்பையும் ஒரு கைய்யால் ஏந்தி, மறுகையால் டயர் டியூபில் நீச்சலடித்து ஆற்றை தாண்டி அக்கரை சென்றடைகிறார். பிறகு ஆடைகளை அணிந்து டியூபை அருகிலுள்ள வீட்டில் வைத்து விட்டு பள்ளிக்கு செல்கிறார். மாலையிலும் இதேபோல் வீடு திரும்புகிறார். தற்போதுள்ள கனமழையிலும் மாலிக் இந்த கடின பாதையை வழிதான் பள்ளிக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாலிக் குறுகையில், ""இதுவரை எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. வெள்ளம் அதிகரித்துள்ளதால் தற்போது ஆற்றின் தரை மட்டத்தை தொடமுடியவில்லை. நீச்சலடித்து செல்லும்போது ஆற்றின் இடையே உள்ள பாறைகளிலோ, கற்களிலோ நின்று சிறிது நேரம் ஒய்வெடுப்பேன். தற்போது 12 ஆடி உயரத்தில் ஆற்றில் நீர் உள்ளது. கன மழை தொடர்ந்தால் 36 ஆடி உயரத்துக்கு தண்ணீர் பாய்ந்து செல்லும். அப்போதுதூன் ஆற்றைக் கடப்பது சிறிது சிரமமாக இருக்கும்,'' என கூலாக கூறுகிறார்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

கணினி வழிக் கல்வி; "கைப்பணத்தில்' ஆசிரியர் தொண்டு

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_693830.jpg

கணினி வழிக் கல்வி; "கைப்பணத்தில்' ஆசிரியர்  ்டு

காரைக்குடி: காரைக்குடி அருகே புதுக்குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவர்கள், கணினி வழிக் கல்வியில் கலக்கி வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில், 66 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் கூலி வேலை செய்வோரின் குழந்தைகள் அதிகம். தலைமை ஆசிரியர் லாரன்ஸ் முயற்சியால், கணினி மூலம் கல்வி கற்கின்றனர். அவரது செலவில், பொது அறிவு, பாட சம்பந்தமான "சிடி' க்களை வாங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு பாடத்துக்கும் முன்பு, அது குறித்த தகவல்களை "சிடி' மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்; பொது அறிவு "சிடி' க்களும் காட்டப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணினியில், "மவுஸ்' கையாளுதல், கூட்டல், கழித்தல் கணக்கு போடுதல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது. உணவு நேரத்திற்குப் பின், "டிவி' மூலம் "டிஸ்கவரி சேனல்' ஒளிபரப்பப்படுகிறது. மாணவர்கள் வனங்கள், வன உயிரினங்கள், கடல் வாழ் உயிரினங்களை பற்றியும் அறிந்து கொள்கின்றனர். "ஸ்போக்கன் இங்கிலீஸ்' கற்று கொடுக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் கூறுகையில், ""அறிவியலின் வளர்ச்சி, நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. புத்தகப் படிப்போடு, உலகம் பற்றிய அறிவை, மாணவர்களுக்கு வளர்க்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கொடுக்கப்பட்ட "சிடி' க்களும் உள்ளன. மாணவர்களே "சிடி' யை போட்டு, பாடத்தை அறிந்து கொள்ள கற்றுக் கொடுக்கிறோம்,'' என்றார்.

புதன், 31 அக்டோபர், 2012

விமானத்தைப் பள்ளியாக மாற்றிய ஆசிரியர்

விமானத்தை ப் பள்ளியாக மாற்றிய ஆசிரியர்

திபிலிசி:ஜார்ஜியா நாட்டு ஆசிரியர் ஒருவர், பழைய விமானத்தை விலைக்கு வாங்கி, அதை, பள்ளிக் கூடமாக மாற்றி உள்ளார்.ஜார்ஜியாவின், ரஸ்தாவி நகரை சேர்ந்தவர் காரி சாப்பிட்சி. இவர், பாலர் பள்ளியை நடத்துவதற்காக, ஜார்ஜியா நாட்டு ஏர்லைன்சிடமிருந்து, பழைய விமானம் ஒன்றை, விலை கொடுத்து வாங்கினார். விமானி அறையை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார். பயணிகள் அமரும் பகுதியை பள்ளியாக மாற்றினார். மழலையர்கள் பைலட்டாகும் கனவுடன், இந்தப் பள்ளிக் கூடத்துக்கு உற்சாகமாக வருகின்றனர். பைலட் அறையில் உள்ள கருவிகளை இயக்கி பார்த்து மகிழ்கின்றனர்.இந்த பள்ளியில் படிக்க, மாதக் கட்டணம், 5,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
- தினமலர்

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

தமிழும் சமயமும் இணைபிரிக்க முடியாதவை: தினமணி' ஆசிரியர்

தமிழும் சமயமும் இணைபிரிக்க முடியாதவை: தினமணி' ஆசிரியர்



காஞ்சிபுரம், ஆக. 12: "தமிழும் சமயமும் தண்டவாளங்களைப் போன்றவை. இணை பிரிக்க முடியாதவை' என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.  ÷திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில், மூவர் முதலிகளின் பெரும்பணி என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  ÷இதில் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் தலைமையேற்று, பேசியது:  ÷தனிநாயகம் அடிகள் தமிழ் மேல் தணியாத காதல் கொண்ட கிறிஸ்தவப் பாதிரியார். இலங்கையில் பிறந்தவர், இன்று உலகத் தமிழ் மாநாடுகள் நடந்து கொண்டிருக்கின்றனவே, அந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்பதற்காக முனைப்புடன் செயல்பட்டவர் தனிநாயகம் அடிகளார்.  ÷தனிநாயகம் அடிகளார் செய்திருக்கிற ஒரு பதிவை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆங்கிலம் வணிக மொழி, லத்தீன் சட்டத்தின் மொழி, கிரேக்கம் இசையின் மொழி, ஜெர்மன் தத்துவத்தின் மொழி, பிரெஞ்சு தூது மொழி என்று கூறிச் சென்ற தனிநாயகம் அடிகளார் தமிழைப் பற்றி என்ன கூறினார்? என்று பார்த்தால் ஆச்சரியப்பட்டு போவோம்.  ÷இத்தனைக்கும் அவர் கிறிஸ்தவ பாதிரியார். இலங்கையில் பிறந்தவர், இன்று உலகத்தமிழ் மாநாடுகள் நடந்து கொண்டிருக்கின்றனவே, அந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்பதற்காக முனைப்புடன் செயல்பட்டவர் தனிநாயகம் அடிகளார்.  ÷இந்த பாதிரியார் குறிப்பிடுகிறார், தமிழ் என்பது பக்தியின் மொழி என்று. தமிழ்தான் பக்தியின் மொழி என்றால், அதற்கு காரணகர்த்தாக்கள் யார்? நதி மூலம் ரிஷி மூலத்தைப் போலவே தமிழ் மொழி பக்தி மொழியானது எங்கிருந்து என்று பார்த்தால், அது எங்கே போய் நிற்கும் என்றால் மூவர் முதலிகளிடம் போய் நிற்கும்.  ÷தமிழும் மதமும் இணைபிரியாத தண்டவாளங்களைப் போல. சமயம் என்று பேசுகிறோமே எது சமயம்? மதம் என்று சொல்கிறோமே எது மதம்? மதம் என்பது கொள்கை, நான் இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்பது கொள்கை.  ÷ஆனால், சமயம் கொள்கை அல்ல, சமயம் என்பது நெறி. தொல்காப்பியம் தொடங்கிய பழந்தமிழ் இலக்கிய நூல்கள் எதிலும் மதம் என்கிற சொல்லாட்சி இல்லை. "சமயம்' என்கிற வழக்குதான் காணப்படுகிறது. மதம் என்ற சொல், கொள்கையை மட்டும் குறிக்கும் பொதுச் சொல். சமயம் என்பது கொள்கையை மட்டுமின்றி, அதற்கும் மேலான ஒரு நெறிப்பாட்டைக் காட்டும் சிறப்புடையது.  ÷சைவத்தை கூட சமயம் என்று ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் அது நம்மை நெறிப்படுத்தும் வழி என்பதால்.  ÷÷உயிர் காப்பது சமயம், மனதை நெறிப்படுத்துவது சமயம். சமயத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள்தான் சமயக்குரவர்கள் ஆனார்கள், அந்த சமயக்குரவர்கள் பற்றிய கருத்தரங்கம்தான் இங்கே நடைபெற இருக்கிறது.  ÷இதிலே நான் இன்னொரு சிறப்பையும் சொல்ல வேண்டியுள்ளது. சைவநெறியை நிலைநிறுத்திய திருத்தொண்டர்களை, நாயன்மார்களை மூன்று வகையாக அடையாளம் காண்கிறார் சேக்கிழார் பெருமான்.  ÷மனிதன் பொருட்டு தர்மம் நிலைபெறக் கடவுள் மானுடக்கட்டை தாங்கி அவதரிப்பார் என்பது பொதுவான கருத்து. அதனால்தான் சேக்கிழார் பெருமான், திருஞானசம்பந்தரைக் குறிப்பிடும்போது, "சிவம் பெருக்கும் பிள்ளையார் அவதாரம் செய்தார்' என்றும், நாவுக்கரசரைப் பற்றிக் குறிப்பிடும்போது, "இருள் நீக்கி ஒளிவிளக்கு கதிர் --------- கருணீக்கியார் வந்தவதாரம் செய்தார்' என்றும் சுந்தரமூர்த்தி நாயனாரை, "தீதகன்று உலகம் உய்யத் திருஅவதாரம் செய்தார்' என்றும் குறிப்பிடுகிறார்.  ÷ஏனைய திருத்தொண்டர்களை சேக்கிழார் பெருமான் அடையாளம் காட்டும் பாங்கும் சிறப்பானது. வினைவழிப் பிறப்பவர்களைப் பிடித்தார் என்றும், சிறப்புக் கருதி உதயம் செய்தார்' என்றும் பாடியிருப்பார்.  ÷பலருக்கும் களப்பிரர் காலத்தைப்பற்றி இங்கு கருத்து வேறுபாடு உண்டு. களப்பிரர் காலம் சைவ சமயத்துக்கு இருண்ட காலமாக இருந்தாலும், தமிழுக்கும் இருண்ட காலம் அல்ல என்று சிலர் வாதிடுவார்கள். சிலம்பும், மோனையும் பிறத்த காலம் என்று அதைப் போற்றுவார்கள். அவர்களோடு விவாதிக்க நான் தயாராக இல்லை.  ÷நிஜமான களப்பிரர் காலம் எது என்று என்னைக் கேட்டால், சமயத்துக்கும், அதனால் தமிழுக்கும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய 20-ம் நூற்றாண்டுதான் களப்பிரர் காலம். சமயம் இல்லாமல் தமிழ் என்று பேசியவர்களின் காலம் கலப்பிரர் காலம்  இல்லாமல் வேறென்ன?  ------- திருமுறைகளும் இல்லாமல் தமிழ் காப்பாற்றப்பட்டிருக்காது. இன்று தமிழில் நாம் கையாளும் பல அற்புதமான சொல்லாட்சிகள் சமய இலக்கியங்கள் நமக்குத் தந்த கொடை. சமயத்தையும் தமிழையும் பிரிக்கப் பார்த்தார்கள். சைவத்தையும், சமயத்தையும் அழிக்கப் பார்த்தார்கள்.  ÷சமயம் இல்லை என்றும் நெறிகள் இல்லை என்றும் இறைவனே இல்லை என்றும் ஒரு பொய்ப் பிரசாரத்தை அரங்கேற்ற முற்பட்ட 20-ம் நூற்றாண்டுதான் நிஜமான களப்பிரர் காலம்.  ÷அந்தக் காலத்தில் இருந்து நாம் மீண்டுவிட்டோம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் காஞ்சி மாநகரத்தில் திருமுறை அருட்பணி அறக்கட்டளை நடத்தும் விழாவில் இத்தனை பேர் சைவத்தின்பால் கூடி நிற்கிறோம் என்பது சைவம் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், நான்மறைகளைப் பற்றியும் சைவ சித்தாந்தத்தைப் பற்றியும் திருமுறைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் திருச்சிற்றம்பலம் என்று உச்சரித்து நாம் கடவுள் வாழ்த்து பாடி நிகழ்ச்சியைத் தொடங்குகிறோம் என்று சொன்னால் நவீன களப்பிரர் காலம் முடிவடைந்துவிட்டது என்பது பொருள்.  ÷சமயம் இல்லாமல் தமிழ் இல்லை, தமிழைக் காப்பாற்றுவது சமயம். சமயத்தைக் காப்பாற்றுவது தமிழ். இவற்றை யாராவது பிரிக்க நினைத்தால் சமயம் இல்லாத தமிழைப்பற்றி யாராவது கூறுவார்களே ஆனால், அல்லது தமிழ் இல்லாமல் சமயத்தைப் பற்றி யாராவது கூறுவார்களே ஆனாலும், ரயில் தடம் புரள்வது போல சமுதாய நெறி தடம் புரண்டுவிடும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார் அவர்.  ÷இக்கருத்தரங்கில் முத்தமிழ் விரகர் என்ற தலைப்பில் முனைவர் அ. அறிவொளியும், தாண்டகவேந்தர் என்ற தலைப்பில் மு. கணபதியும், வன்தொண்டர் என்ற தலைப்பில் முனைவர் திரிபுரசுந்தரியும் பேசினர்.  ÷முன்னதாக ஓதுவாமூர்த்தி தி. ஆடலரசு இறைவணக்கம் பாடினார். திருமுறை அருட்பணி அறக்கட்டளையின் நிறுவனர் சு. சதாசிவம் வரவேற்றார். அறக்கட்டளைப் புரவலர் வி.கே. தாமோதரன் நன்றி கூறினார்.

புதன், 17 நவம்பர், 2010

மொழி பெயர்ப்பாளருக்குத் தொடர்புடைய  இரு  மொழியறிவும் துறையறிவும் தேவை. அந்த வகையில் துறையறிவு என்பது பன்முகத் துறையறிவாக விரிவாக்கம் பெற்றுள்ளது. ஆதலின் ஆசிரியர் கூறுவதுபோல் பன்முக அறிவும் வழக்காற்று அறிவும் வேண்டப்படுகின்றது. உலக நலத்திற்கும் வளத்திற்கும் ஒற்றுமைக்கும்  மொழிபெயர்ப்புத் திறன் வேண்டப்படுகின்ற ஒன்றாகிறது. மொழிபெயர்ப்பாளர்களை  வளர்க்கும் பணியிலும் உருவாக்கும் பணியிலும் ஊக்கப்படுத்தும் பணியிலும் பல்கலைககழகங்கள் முன்வரவேண்டும். 
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Trichy&artid=333299&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88:%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8Dஅன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்