செவ்வாய், 17 செப்டம்பர், 2013

விவிலியாவின் கருவூலங்கள்







சென்னையைச் சேர்ந்தவர் 
விவியா வாலண்டினா. 
எம்எஸ் பயோ டெக்னாலாஜி படித்துவிட்டு அமெரிக்காவில் கொஞ்ச நாள் வாசம், பின் தேசத்தின் மீதான நேசம் காரணமாக திரும்ப இங்கே வந்தவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவருக்கு ஓவிய கலையின் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் உண்டு. பள்ளி பருவத்திலேயே இதற்காக பல பரிசுகள் பெற்றுள்ளார். பின்னர் தனது ஓவிய திறமையை நிறையவே வளர்த்துக் கொண்டுள்ளார்.
ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒருவித அற்புதமான அழகுடன் மிளிர்கிறது. லேண்ட்ஸ்கேப் வகை ஓவியங்கள் வரைவதில் தேர்ச்சி பெற்ற இவரின் கைவண்ணம் அது தொடர்பான அலைகள், கடற்கரை, பனிக்காடு போன்ற ஓவியங்களில் அழகாக வெளிப்பட்டுள்ளது.
அதே போல கறுப்பு வெள்ளையில் சிவப்பு வண்ண பின்னணியில் இவர் வரைந்துள்ள ஆண், பெண் ஓவியம் ஒரு காவியம் போல பல கதை சொல்கிறது. தண்ணீரில் அலைபாயும் பாய்மரப் படகின் ஓவியம் பார்ப்பவரின் மனதை சந்தோஷத்தில் அலைபாய வைக்கிறது. பசுமை நிறைந்த காட்டுக்குள் பாயும் தண்ணீர் நம்மை ஜில்லிட வைக்கிறது. இப்படி ஒவ்வொரு ஓவியமும் ஒரு உணர்வை நம்முள் உண்டாக்குகிறது என்றால் அது ஓவியரின் திறமையே.
இவரது ஓவிய கண்காட்சி சென்னை எக்மோர் மாண்டியத் சாலையில் உள்ள ஓட்டல் அம்பாசடர் பல்லவாவில் வருகின்ற செப்டம்பர் 30ம்தேதி வரை நடைபெற உள்ளது.
இவரது தொடர்பு எண்: 9789859717.
இவரது ஓவியங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரியை கிளிக் செய்து பார்க்கவும்.
- எல்.முருகராசு,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக