சனி, 21 செப்டம்பர், 2013

மக்கள் மீது கல்வீசினார் திண்டுக்கல் சார் ஆட்சியர்



கைவீசம்மா கைவீசு.. இது அந்த காலம்...: மக்கள் மீது கல்வீசினார் திண்டுக்கல் சார்  ஆட்சியர்
திண்டுக்கல்: "எஜமான்.. சாமி' என, அரசு அதிகாரிகளை, அந்தக்காலத்து மக்கள் பணிவாக அழைப்பர். அதிகாரிகளும்,
தங்களால் முடிந்த வரை, மக்களுக்கு நல்லது செய்வர். இந்தக் காட்சிகளை இப்போது பார்ப்பது ஆபூர்வம். தற்போது, அதிகாரிகளும் அப்படி இல்லை.. மக்களும் மாறி விட்டனர். இதில் சில அதிகாரிகள் மட்டும் விதிவிலக்கு. இந்த விதிவிலக்கிலும் வித்தியாசமானவர், திண்டுக்கல் சப்- கலெக்டர் பி.மதுசூதனரெட்டி. கோபம் வந்தால்... என்ன செய்வார் என்றே தெரியாது. கையில் கிடைத்ததை தூக்கி வீசுவார். "டென்ஷன்' உச்சத்தில் இருந்தால், கல்லையும் எடுத்து எறிவார். இது கதை இல்லைங்க...நிஜத்திலும் நிஜம். இனி, அவரின் "டெர்ரர்' கதையை படிங்க..

மதுசூதன ரெட்டி, 29, சப் கலெக்டராக செப்., 6 ல், பொறுப்பேற்றார். சிறுமலையில் தங்கியுள்ள இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, வனத்துறை "செக் போஸ்ட்' சென்றார். வனவர் சுந்தரராஜனிடம் தகராறு செய்து, "பெஞ்சை' தூக்கி வீசினார். அங்கு வந்த, பஸ் டிரைவர் மணியின் மொபைல் போனை பறித்தார். எதனால் இப்படி நடந்து கொள்கிறார்? என புரியாத வனத்துறையினர், ஒருவழியாக, சமாதனம் செய்து அனுப்பினர். கலெக்டர் வீட்டிலும்: நேற்று காலை 8 மணிக்கு, கலெக்டரின் முகாம் அலுவலகம் சென்ற அவர், போலீஸ்காரர் பசுபதியின் "வாக்கி-டாக்கி' யை பறித்தார். அவர் யார் என்பது தெரியாத பசுபதியும் தகராறு செய்தார். மற்ற போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.


கல்வீசம்மா..கல்வீசு:

நிலக்கோட்டை கரியாம்பட்டி கிராமத்தினர், ஒரு பிரச்னை தொடர்பான விசாரணைக்கு, நேற்று மதியம் 12 மணிக்கு, சப் கலெக்டர் (ஆர்.டி.ஓ.,) அலுவலகம் வந்தனர். "சமரசம் செய்து வைப்பார்' என, நினைத்தவர்களுக்கோ அதிர்ச்சி. அவர், மக்கள் மீதே "பாய' துவங்கினார்; அதுமட்டுமா... வெளியில் வந்து கற்களை எடுத்து வீசினார்; இதில், பாண்டி என்பவர் காயம் அடைந்தார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று, புதிதாக பதவிக்கு வந்துள்ள இவர், ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. மக்களுக்கு சேவை புரிய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல், இப்படியா கெட்ட பெயர் எடுப்பது; அவருக்கு என்ன தான் பிரச்னை; அவருக்கே வெளிச்சம். இதுகுறித்து கலெக்டர் வெங்கடாசலம் கூறுகையில்,""சப்-கலெக்டர் புது பணி நியமனம் என்பதால், பணியில் வேகமாக உள்ளார். பிரச்னைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.


8ம் வகுப்பு படித்த நிருபர்கள்:

சப்-கலெக்டரிடம் கருத்து கேட்க, பத்திரிகை நிருபர்கள் சிலர், அவரது அலுவலகம் சென்றனர். ""8 ம்வகுப்பு படித்த நீங்கள், நிருபராக இருக்கிறீர்கள். உங்களிடம் பேச, நான் தயார் இல்லை. அனைவரும் வெளியேறுங்கள். கலெக்டரிடம் பேசி கொள்ளுங்கள்,'' என, கதவை சாத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக