ஞாயிறு, 29 ஜூலை, 2012

தமிழின அழிப்புக்கு த் துணை போன கருணாநிதி எந்த முகத்துடன் டெசோ நடாத்துகிறார்: வைகோ

தமிழின அழிப்புக்கு த் துணை போன கருணாநிதி எந்த முகத்துடன் டெசோ நடாத்துகிறார்: வைகோ

First Published : 29 Jul 2012 08:07:59 PM IST


திருச்சி, ஜூலை 29: ஈழத் தமிழர் படுகொலைக்கு துணை போன திமுக தலைவர் கருணாநிதி எந்த முகத்தை வைத்துக் கொண்டு டெசோ மாநாட்டை நடத்துகிறார் என்றார் வைகோ. திருச்சியில் மதிமுக நிர்வாகிகளிடையே அவர் உரையாடிய போது,"பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த போது அந்த வயதான தாயாரைத் தடுத்து நிறுத்தியவர் கருணாநிதி. அவர்தான் இப்போது தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டை நடத்தப் போகிறாராம். இது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை. ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது உடந்தையாக இருந்து துரோகம் செய்தவர் கருணாநிதி. இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர் டெசோ மாநாட்டை நடத்துகிறார்? திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றுவதிலும் தமிழீழக் கோரிக்கையிலும் எப்போதும் உறுதியாக இருப்பது மதிமுகதான். தேர்தலில் போட்டியிடாத போதும் நாங்களே மக்கள் பிரச்னைகளுக்காக போராடுகிற இயக்கம். பொதுமக்களிடம் கட்சி நிர்வாகிகள் தங்களது தொலைபேசி எண்ணை கொடுத்து வைத்திருங்கள். அப்போதுதான் மக்கள் பிரச்னைகளின் போது உடனே நம்மைத் தொடர்பு கொள்வார்கள் என்று அவர் நிர்வாகிகளிடையே பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக