teso லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
teso லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்க உச்ச மன்றத்தை அணுகத் " தெசோ' முடிவு



கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்க உச்ச மன்றத்தை  அணுகத்  " தெசோ' முடிவு


சென்னை:"கச்சத்தீவு ஒப்பந்தத்தை முறிக்கவும், இந்தியாவின் ஒரு பகுதி என்பதைப் பிரகடனப்படுத்தவும், சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம்' என, "டெசோ' அமைப்பு அறிவித்துள்ளது.

டெசோ அமைப்பின் சார்பில், கலந்துரையாடல் கூட்டம், அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும், வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 368வது பிரிவின்படி, பார்லிமென்டின் பரிசீலனைக்கு வைத்து, சட்டம் இயற்ற வேண்டும். கச்சத்தீவை பொறுத்தவரை, அப்படி எந்தவொரு சட்டமும், இதுவரை நிறைவேற்றபடாததால், கச்சத்தீவை இலங்கைக்கு, ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது, அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது.

எனவே, 1974ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு, இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், சுப்ரீம் கோர்ட்டை, டெசோ அமைப்பு அணுகும். காரைக்காலை சேர்ந்த, 26 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்டு, அவர்களின் சிறைக்காவல், இம்மாதம், 19ம்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளில், மத்திய அரசு ஈடுபட வேண்டும். டெசோ தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம், இம்மாதம் 24ம்தேதி, திருவான்மியூரில் நடைபெறவுள்ளது. அதில், கருணாநிதி மற்றும் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொள்வர் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

TESO urges New Delhi to move for referendum at Geneva

TESO urges New Delhi to move for referendum at Geneva

[TamilNet, Tuesday, 05 February 2013, 07:39 GMT]
New Delhi should take firm efforts to bring forward a resolution at the UNHRC sessions next month for conducting a referendum among Ilangkai Tamils, said a resolution passed by Tamil Eelam Supporters Organisation (TESO) in Chennai on Monday. The organisation cited its earlier resolution passed in this regard in August last year and said that it had already presented the case for the consideration of the UN, member countries of the UN, the Government of India and the UNHRC. In presenting the plight of Eezham Tamils, TESO has resolved to convene an all-India level meet of political party leaders in New Delhi in March. Condemning New Delhi encouraging Sri Lanka President Mahinda Rajapaksa visiting India this week, TESO has also resolved to organise a black-clad demonstration in Chennai on Friday morning, protesting his visit.

TESO welcomed the US Deputy Asst. Secretary James Moore’s statement on a procedural resolution to follow the earlier resolution at Geneva, and resolved that India should support and should take a stand without any ambiguity in the event of such a move taken by the USA.

Last year the Government of India voted in favour of the resolution due to pressure from Tamil Nadu. But later, not only it didn’t take any action, but also it is engaged in a wrong campaign against the resolution, TESO accused.
The other resolutions of the TESO reiterated on international investigations of the war crimes in the island, Indian intervention in the release of the remaining two Jaffna University students in SL military detention, Indian and IC intervention in arresting the cultural genocide and erasure of Tamil identity, and Indian and IC pressure on Colombo in getting an answer on the whereabouts of a number of LTTE senior leaders captured alive.

On the fishermen issue of Tamil Nadu, TESO demanded the Government of India to establish a Naval Base at Ma’ndapam. Condemning the continued attack on the fishermen of Tamil Nadu by the Navy of Sri Lanka, TESO resolved to conduct two protest demonstrations, one at Raameasvaram on 18 February and the other at Naakap-paddinam on 19 February.

The 9-point TESO resolutions on Monday were released to media in a press statement stamped by the DMK headquarters.

An earlier TESO press statement on 26 January, stamped by the DMK headquarters, cited DMK parliamentary leader T.R. Balu talking about a TESO delegation visit to New Delhi, on 28 and 29 January, to meet Indian Minister of External Affairs and envoys of the 47 countries in the UNHRC.

According to Balu, the delegation that was led by Mr. MK Stalin and included Mr K. Veeramani, Mr. Thol Thirumavalavan, Ms. Suppulakshmi Jagadeesan and Prof. Supa Veerapandian, was to campaign for the implementation of the UNHRC resolution.

The TESO delegation’s New Delhi visit was coinciding with the visit of the US officials to Colombo.

* * *

Welcoming the TESO statement on Monday reiterating referendum at least as its 7th resolution, new generation Tamil activists in the island commented that TESO should not encourage the USA’s ‘procedural’ follow up of the LLRC-based UNHRC resolution that ultimately legitimises the annihilation of the territoriality of the nation of Eezham Tamils in the island.

The most precarious act of permanently damaging consequences that is currently committed on the nation of Eezham Tamils in the island is the militarized Sinhala colonisation. Unless this is directly addressed with utmost priority and urgency, even a referendum would be useless, the Tamil activists cautioned.

There are strong circumstantial evidences that the USA and India are tacitly encouraging the Sinhala State to complete the demographic, geographic and territorial genocide of the nation of Eezham Tamils, as much as possible and as early as possible, the activists alleged.

What prevents the TESO that has Tamil Eelam in its name from internationally voicing for the protection of the territorial integrity of the country of Eezham Tamils in the island, asked the activists.

TESO should directly and openly tell the USA engineering resolutions that the Tamil priority is protection of its nation and land, and only when that is addressed Tamils could think of cooperating with anyone. Rather than naively campaigning for the US procedures, TESO should lead alternative opinion to come openly from the international arena. It should prevail upon New Delhi to come out with better and competitive alternatives, the activists said.

Tamil civil society in the island and in the diaspora, from New Zealand to the USA and Canada should not remain silent at this crucial juncture. Getting the cue from the ambiguity within organisations such as the TESO, politicians and activists, the civil society should rise up and tell its demand for nation and territory openly and frankly to the edification of ambiguity and to strengthen positive forces within the organisations, politicians and activists. Failing, Tamils would only see ambiguity hijacking their cause, the new generation Tamil activists in the island commented further.

Chronology:

திங்கள், 28 ஜனவரி, 2013

TESO misrepresents Tamil cause by harping on UNHRC resolution

TESO misrepresents Tamil cause by harping on UNHRC resolution

[TamilNet, Sunday, 27 January 2013, 16:51 GMT]
By calling for pressure on Colombo to immediately implement the 2012 UNHRC resolution as solution, TESO is misrepresenting the cause as well as plight of Eezham Tamils, and is misleading the world in lines with the agenda of New Delhi and Washington, Tamil activists in the island and in the diaspora commented. The UNHRC resolution harping on the implementation of LLRC recommendations of Colombo is actually ‘international legitimisation’ of the structural genocide and annihilation of the territoriality of the nation of Eezham Tamils in the island. This only serves the agenda of New Delhi and Washington that uphold the genocidal Sinhala State in the island for their geopolitical and imperialistic purposes. TESO has to urge the International Community of Establishments to revise the resolution, the activists further said.

Led by Mr MK Stalin, the DMK Treasurer and son of the DMK chief, Mr M. Karunanidhi, a team of TESO members, the DK chief Mr. K. Veeramani, VCK chief Mr Thol Thirumavalavan, Prof. Supa. Virapandiyan, former central minister Ms Subbhulakshmi Jagdeesan and DMK parliamentary leader Mr TR Balu are on a visit to New Delhi on Sunday to meet Indian Minister of External Affairs and Ambassadors of the 47 countries in the UNHRC, a DMK press release said on Saturday.

The team will request the dignitaries they meet to facilitate peaceful life to Eezham Tamils, acceleration of rehabilitation, political solution and pressure on Colombo for the immediate implementation of the 2012 UNHRC resolution, the press release of the DMK headquarters cited Mr TR Balu.
It may be a printer’s devil that the press release coming from the Dravidian movement, known for its use of pun in Tamil, talked about requesting Pu’nar Vaazhvu for Eezham Tamils instead of Punar Vaazhvu. But Pu’nar Vaazhvu (life of assimilation) is exactly what would happen if the current UNHRC resolution is implemented as requested by the TESO, Eezham Tamil activists commented.

As recently pointed out by the DMK Chief Mr M Karunanidhi, in a letter to the Centre at New Delhi, ‘Pu'nar Vaazhvu’ is the one that is implemented every day by the occupying Sinhala soldiers in Vanni.

One of the members in the TESO team, Mr Thol Thirumavalavan, sometimes back requested Congress President Ms Sonia Gandhi to facilitate the implementation of LLRC recommendations to help ‘Sri Lankan’ Tamils.

Except the DK chief, the others in the team are members of parties that align with the ruling Congress at New Delhi.

In the political parties, bureaucracy, media and the intelligence and security services of India, it is difficult to trace where India ends and the USA begins or vice versa, political observers commented.

Unless the Tamil movements directly challenge the structural-genocide outlook of New Delhi and Washington towards the nation of Eezham Tamils in the island, and mobilise the world to go beyond the machinations of the two powers, they are not helping the Eezham Tamils but only serve their ultimate adversaries, alternative shades of Tamil activists in the island and in the diaspora commented.

Related Articles:
25.01.13   Soul searching in India, Obama wipes out tears
20.01.13   DMK chief lists out multifaceted structural genocide beginni..
29.10.12   ‘Reject LLRC based solutions, work with nations without stat..
03.09.12   TESO group to meet Ban in US, visit UNHCR in Geneva
10.05.12   Thirumavalavan hurts sentiments of Eezham Tamils

செவ்வாய், 13 நவம்பர், 2012

துணிவை இழந்த கலைஞரைச் சந்தித்தார் ப.சிதம்பரம்

அப்படி எல்லாம் மிரட்டும் துணிவு கலைஞரிடம் கிடையாது. மத்திய அரசு பொது வாக்கெடுப்பிற்கு உறுதுணையாக இருந்தால் தி.மு.க.வும் அந்தப் பொது வாக்கெடுப்பிற்குத் துணையாக இருக்கும் என அடிமைத்தனத்தைத்தான் வெளிப்படுத்தினார். தலைமை அமைச்சர் விருந்தைப் புறக்கணிதததால அது குறித்துப் பேசி இருக்கலாம். வழக்குகள் குறித்தும் பேசி இருக்கலாம். நீங்கள் பழைய கலைஞர் என எண்ணி ஊகமாகச் செய்தியை வெளியிட  வேண்டா. நாட்டு மக்களைப் பற்றி எண்ணாமல் இன மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வீட்டு மக்களைப்பற்றிக் கவலைப்படும் அவர்களுக்கு அஞ்சும் கலைஞரைப்பற்றி அறிந்தே இவ்வாறு செய்தி வெளியிடுவது வியப்பாக உள்ளது. குடும்பப் பிடியிலிருந்து கலைஞர் விடுபட்டால் அவருக்கும் தி.மு.க.விற்கும் நாட்டிற்கும் இனத்திற்கும் நல்லது. இதனை அறிந்திருந்தாலும் பாசம் கண்களை மறைப்பதால் விடுபட வாய்ப்பில்லை.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மத்திய அரசுக்கு உறுதுணையாக இருக்க விதித்த நிபந்தனை: கருணாநிதியைச்சந்தித்தார் ப.சிதம்பரம்

First Published : 12 November 2012 08:54 PM IST
திமுக தலைவர் கருணாநிதியை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று(திங்கள் கிழமை) மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு திடீரென ஏற்பாடானது என்று கூறப்படுகிறது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு ப.சிதம்பரம் மாலை 5.30 மணி அளவில் வந்தார். கருணாநிதியைச் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேசியுள்ளார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது, 4 மாதங்களாக அவரைச் சந்திக்கவில்லை என்பதால் தற்போது சந்தித்துப் பேசினேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார் ப.சிதம்பரம்.
இலங்கைப் பிரச்னை விவகாரத்தில், ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடப்பதே தீர்வு, அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் திமுகவும் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கருணாநிதி ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். இது தொடர்பாகவே ப.சிதம்பரம் கருணாநிதியைச் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

TESO group to meet Ban in US, visit UNHCR in Geneva

TESO group to meet Ban in US, visit UNHCR in Geneva

[TamilNet, Monday, 03 September 2012, 12:01 GMT]
M.K. Stalin, son of DMK chief Karunanidhi and former deputy chief minister of Tamil Nadu, accompanied by T.R. Balu, senior leader of the DMK, and possibly joined by two other TESO Committee members, the DK chief Veeramani and Subhaveera Pandian, is scheduled to visit the US during the third week of September to meet the UN Secretary General Ban Ki Moon to present the TESO resolutions to him, Deccan Chronicle reported Monday. On their way back, the group is also scheduled to stop at Geneva to hand over the resolutions to United Nations High Commissioner for Refugees (UNHRC). Stalin and Balu would be officially informing the purpose of their travel to the Speakers of the Tamil Nadu Assembly and the Indian Lok Sabha where they are members.

The ground realities increasingly impel Tamil Nadu polity to take external steps independent of New Delhi, South Asia watchers commented, welcoming the trend.

“Among the demands put forward by TESO that Sri Lanka would find very difficult to accept are conducting a political referendum in the Tamil-dominated areas of north and east of the island-nation to allow the Tamil people to decide their own political future, formation of a United Nations monitoring committee to supervise the rehabilitation work being carried out there and conduct of an enquiry by UN into alleged war crimes committed by the Sri Lankan Army during the closing days of the war against the Tamil tigers, rejecting the recommendations of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC),” said the Deccan Chronicle feature by its New Delhi correspondent, K.S. Jayaseelan.

Any model, long-term or short-tem, enforcing military-less Eezham Tamils to live with the occupying Sinhala military that has committed and continue to commit genocide, is the worst of the predicaments to the affected people. Any approach that doesn’t recognise Eezham Tamils a nation having its territory in the island is impractical to resolve the chronic question having an affirmed fault line. Knowing the wish of the affected people in an internationally conducted referendum, especially after an internationally waged genocidal war, is the universally righteous step. The mass-based Dravidian parties shouldn’t hesitate to rise up in unison in presenting the case internationally, Tamil political activists in the island said.

The grassroot should be supportive but at the same time vigilant in monitoring and directing the parties, in the given scenario of deliberations of the establishments, the activists further said.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

Indian protest to Eezham provocative: Peter Schalk

Indian protest to Eezham provocative: Peter Schalk

[TamilNet, Monday, 13 August 2012, 06:45 GMT]
The demand of Indian MEA to drop Eelam from the TESO conference title is provocative, gives food for thought and does not make sense, says Professor Peter Schalk in a note sent to TamilNet on Sunday. The decision comes from confusing Eelam, a Tamil toponym standing for the entire island, with Tamileelam. In usage Eelam predates Lanka. On Eelam and Cinkalam, Prof Schalk said they are of a parallel allocation and parallels never meet, but walk side by side. Meanwhile, BBC Tamil Service on Saturday cited Professor MA Nuhman saying that the connotations of the word became a problem only with the ‘secessionist movement’. He agreed with the word’s old Tamil usage meaning the entire island, but questioned its Dravidian origins. The TESO response was naïve or sly by equating Eezham/ Ilangkai with the politically invented and Tamil -rejected term Sri Lanka.

The full text of the note on Ilam sent by Professor Peter Schalk [His transliteration of Tamil words following Madras Tamil Lexicon system, but without diacritical marks, is retained as it was in the text sent by him]

Peter Schalk
Professor Peter Schalk
The demand by the Indian External Affairs Ministry that Ilam/Eelam should be dropped from the title of the Conference named Eelam Tamil Rights Protection Conference (TamilNet 9.8. 2012) is provocative and gives food for thought. The Ministry probably thought that Ilam stands for Tamililam. If so, the Ministry should have stopped the whole conference making a political evaluation in accordance with India’s evaluation of the Tamil resistance movement being still a threat to the integrity of India. If the Ministry thought that Ilam is an alternative name for Lanka as a whole there was no reason to demand that Ilam should be dropped. The decision by the Ministry does not make sense.

I have observed for many years that in talk and writing by Tamil and Sinhala speakers, but also by Western scholars and journalists, Ilam stands often for Tamililam. The confusion started already in the 1970s with the famous slogan by EROS: nam ilavar, namatu moli tamil, nam natu ilam ‘we are Ilavar, our language is Tamil, our country is Ilam’. The country that EROS wanted was of course Tamililam, not the whole island. Tamililam’s citizens should be called Ilavar and their language be Tamil. Kumar Ponnampalam tried to re-introduce the word ilavar as self-designation, but he was killed in 2000. There was a journal called ilavar kural, a network called eelavar alumni, an eelavar web ring, and a Club Sportive Eelavar. They all had in mind Tamililam, not Ilam.

Historically, Ilam is a Tamil toponym for the whole of the island. It can be documented from the 1st century CE, before “Lanka” was introduced in Dīpavamsa 9:1. “Lanka” was Tamilised to “Ilankai” and alternated with Ilam in use by Tamil speakers. Tamil speakers also used the toponym Cinkalam, which is a Tamilisation of the toponym Sinhala. All three, Ilam, Ilankai and Cinkalam were used by alternation in the wordbooks (nikantu, akarati) throughout the centuries up to the modern period.

There is a tradition by Sinhala speakers on the ethnonationalist front to insist that Ilam is derived from Sinhala, that Ilam is nothing but Sinhala. This derivation was introduced by the Christian missionary Robert Caldwell in the 1850s. It is a typical orientalism. It is therefore ironical that it should be exploited by Sinhala ethnonationalists. It has no support in the Tamil and Sinhala history of linguistics and is from a modern linguistic point of view wrong. Unfortunately, some Tamil scholars went into Caldwell’s trap giving the derivation their blessing. The relation between Ilam and Cinkalam is that of a parallel allocation. Parallels never meet. They walk along side by side.

* * *


BBC Tamil service on Saturday said that it was interviewing Professor M.A. Nuhman, following the advice of India to TESO conference on dropping the word Eezham and as the word has became controversial in the last few decades.

New Delhi has not advised TESO but has made it a condition for permitting foreign participants to the conference. BBC Tamil service was blatantly twisting the truth.

Professor Nuhman cited the use of the word Eezham in the Changkam Tamil literature.

But the Dravidian origin of the word is questionable, Nuhman said.

The word has no entry in the Dravidian Etymological Dictionary (DED). The Madras Tamil Lexicon traces the origin of the word to Pali. In pre-Christian Brahmi inscriptions I’la, Eezha, Hela, Sihala, E’lu and Sinhala come with the same meaning. Researchers have said that they were words in different languages meaning a particular ethnicity of people. Even according to Veeramaamunivar [a 17th century Tamil philologist] Eezham means the country of Sinhalese, Nuhman was cited saying by the BBC Tamil Service.

The term Eezham, meaning the entire island became controversial only after the ‘secessionist’ movement, but writers generally use it in the sense of the entire island, Nuhman said.

* * *


The following comments are from an Eezham Tamil academic in the diaspora:

The word in fact has an entry in the Dravidian Etymological Dictionary (entry no. 549), in the meaning toddy. DED normally accommodate entries only when cognates of the word are found in other Dravidian languages. The word Eezham in the meaning of toddy has cognates in other Dravidian languages.

But the earliest Tamil literary usage of the word found in the Changkam text Paddinappaalai definitely shows that Eezham meant a territory (Eezhaththu u’navu: food items from Eezham).

The earliest objective written evidence in the form of Tamil Brahmi inscription dateable to the dawn of the Common Era also implies the same (Eezha-kudumpikan: the house-holder or clan member from Eezham).

The meaning of toddy for the first time appears only in inscriptions of 8th century CE and literature of 10th century CE.

The toddy-tapper community known as Eezhavar in Kerala traces their origins to the island of Eezham.

The word Seehala cited by the Madras Tamil Lexicon (MTL) as the Pali original of Eezham, is for the first time found in an inscription dateable to c. 3rd century CE, roughly 300 years after the inscriptional usage of Eezham.

Hence, there is no historical linguistic possibility for Eezham to derive from Seehala and the MTL etymology is not convincing.

Meanwhile, there is another Tamil Brahmi inscription that comes out with a geographical identity Chai-a’lam, which could mean red-earth country in Dravidian and could help tracing even the etymology of Seehala/ Sinhala/ Chingka’lam to Dravidian.

Literary and inscriptional evidences for the usage of the Sinhala words E’lu and He’la are found only from 8–10 century CE onwards (nearly 800 –1000 years after the usage of Eezham was found).

Again there is no historical linguistic possibility for Eezham to derive from E’lu or He’la. But it could be the other way round.

Pre-Christian Brahmi inscriptions never tell us that I’la, Eezha, Hela, Seehala, E’lu and Sinhala mean the same, and that they all stand for one ethnicity of people.

Prof Indrapala who conjectures that the prefix I’la found with some personal names in the Brahmi inscriptions could be a cognate of Eezha, and could stand for an ethnicity, concedes that it could also mean a junior or a younger person.

The word Eezham is also equated to Pon in Tamil, by the old lexicons. The word Pon in its early usages in Tamil generally meant any metal. There were specific usages in which it meant iron (DED 4570). The word Eezham in many inscriptional usages meant metal objects.

The earliest dateable inscriptional reference to the island is Tampapa’n’ni, found in Asoka’s Prakrit inscriptions of 3rd century BCE. Tampa-pa’n’ni possibly means anything ‘copper-coloured’.

It seems that the earliest terms so far noted, i.e., Tampapa’n’ni, Eezham, Seehala/ Chai-a’lam, all come from the geography: copper-coloured, having iron or metal and red-coloured earth.

These earliest available words, one being in Prakrit and the other two in Dravidian, are independent in origin. They may be rough synonyms but not cognates. The word Lanka is of another origin, probably Austro-Asiatic, simply meaning an island. Its Tamilised form Ilangkai found used from Changkam times also stood for any island in general.

Territories usually get their original names from geography, not from people or mythologies.

Coming to the comment related to the word Eezham that it became a controversy only after the ‘secessionist’ movement, there is another side of the story, which any unbiased person could see.

Eezham was preferred for political usage by the Tamil youth organisations that wanted to break away from the older generation polity, only when the State in Colombo imposed a Sinhala-Buddhist constitution against the wishes of Tamils and associated an innovated term Sri Lanka with that constitution in 1972. All Eelam organisations or Tamil Eelam organisations came out only after the Sri Lanka of 1972.

At least Eezham has the long historical legacy and justifiability to go beyond any current political connotations. New Delhi and media working for its agenda would only look fools by asking to drop the word or by subtly trying to discredit its usage. But the term Sri Lanka they all try to uphold has a historical legacy of nothing but 40 years of genocide.

Related Articles:
10.08.12   Eezham Tamil politicians not issued with Indian visa until T..
09.08.12   New Delhi infringes into historical and cultural rights of E..
02.08.10   Assert Eezham Tamil identity in international arena: Es Po
28.02.10   Langkaa / Ilangkai / Sri Lanka
01.01.10   Eezham / E'lu / He'la
14.12.09   Sinhala / Chingka'lam / Ceylon
23.09.08   Eezham Thamizh and Tamil Eelam: Understanding the terminolog..


External Links:
BBC Tamil: 'ஈழம், ஹெல, சிஹல, சிங்கள ஆகிய சொற்களின் பொரு&#

கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஓர் ஏதிலியின் கடிதம்…

டெசோ மாநாடு – கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஓர் ஏதிலியின் கடிதம்…- சூனியர் விகடன்

முத்தமிழ் வேந்தன்

நட்பு பதிவு செய்த நாள் : 13/08/2012

டெசோ மாநாடு – கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஒரு அகதியின் கடிதம்…- சூனியர் விகடன்
மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்கட்கு,
எங்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் பேரன்பு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. எங்கள் துன்பத்திலும், துயரத்திலும் நீங்கள் காட்டும் அக்கறையின்
தீவிரம் எம்மை வியக்கவைக்கிறது. எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? தள்ளாத வயதிலும் தார்மீக உணர்வோடு தமிழீழம் காணப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறு வீரத்தலைவனே!
தங்களுக்கு நிகர் தாங்களே தான்.
கந்தக வெடிப்பில் உடல் சிதற, செங்கழுநீர் வன்னி மண்ணில் காட்டாறாக ஓட, எம்மவர் உயிர்கள் இடம்பெயர்ந்து பறக்க – இந்த அவலங்கள் கண்டு துடிதுடித்தெழுந்து நீங்கள் சுழற்றிய வாளின் வீச்சு கண்டு திகைத்துத்தான் போய்விட்டோம் ஒரு போது.
உலகத்தமிழரின் தலைவனாக முடி தரித்து, செங்கோல் ஏந்தி அரியாசனத்தில் வீற்றிருக்க தங்களை விட்டால் யாருக்கு தகுதி இங்கு உண்டு.
காலைச் சிற்றுண்டிக்கும் மதியபோசனத்திற்கும் இடையே நீங்கள் இருந்த “சாகும்வரை உண்ணாவிரதம்” சரித்திரத்தில் ‘பிளாட்டினம்’ எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது. எமது வரலாற்றாசிரியர்களின் எழுது கோலை “சாணை” கொண்டு தீட்டி கூர்மையாக வைத்திருக்க வேண்டும். உங்களின் வரலாறு ‘கூர்’மையாகப் பதிவு செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முனை மழுங்கிய எழுத்தாணி;கள் தங்கள் பிளாட்டினக் காலவரலாற்றைச் சேதப்படுத்தி விடக் கூடாதல்லவா? தமிழின உணர்வாளர்களுக்கு ஒரு முன்னோடி தாங்கள். திராவிட பாரம்பரியத்தின் பெருமையினையும் தமிழின் தொன்மையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய முன்னோடிகளில் இன்றுவரை உயிரோடிருப்பவர் நீங்கள் மட்டும் தான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய எம் மொழியின் தொன்மைச்; சிறப்புக்களை, அம்மொழியின் மூத்த குடிகளின் சீரார்ந்த வாழ்வின் பண்பாடுகளை உங்கள் எழுத்து மூலமும் பேச்சுக்கள் மூலமும் முரசறைந்து நிறுவியவர் தாங்கள். தமிழுக்குள்ளே அதன் முறையான பிரயோகங்களிலே எத்துணை அழகும் இனிமையும் இருக்கிறது என்று எடுத்துக் காட்டியவர் தாங்கள்.
தமிழ் கொஞ்சும்;
தமிழ் ஆனந்தம் பாடும்;
தமிழ் காதல் செய்யும்;
தமிழ் கோபப்படும்;
தமிழ் இரங்கும்;;
பொங்கும், நெருப்பாய் மாறும், சுவாலையாய் எரிக்கும், எரிமலையாய் வெடிக்கும், தீமையைப் பொசுக்கும்.
இவற்றைத் தங்களின் தமிழ் பிரயோகங்களிலிருந்து நாமறிந்தது. தமிழின் பெயரால் கம்பனை, இளங்கோவை, பாரதியை நாமறிந்ததை விட கருணாநிதியை நாம் அறிந்தது அதிகம்.
தந்தையின் கையைப் பிடித்து தளர் நடையில் ஆரம்பப்பள்ளி சென்று ‘அ,ஆ’ எழுதிப் பழகும் காலத்திலே இலங்கை வானொலியில் ‘மனோகாரா’ திரைப்படத்தின் வசனங்களைக் கேட்டவன் நான். அப்போது ஏதும் புரியாத போதும் தமிழின் மீது தீராக் காதல் கொண்ட எந்தையும் தாயும் மனோகரா திரை வசனத்தைச் சிம்மக் குரலோனின் கர்ச்சனையில்; கேட்டு அதை சிலாகித்துப் பேசும் போது “கருணாநிதி” எனும் பெயரை காதுகளில் வாங்கியவன் நான்.
காலவேகத்தில், விபரம் அறியும் வயதின்போது ‘நானும்’ என்னைப் பெற்றவர்கள் போல் மெய்மறந்து நின்றது உண்டு; தங்கள் வசனங்களைக் கேட்டு.
வெளிப்படையாகச் சொல்வதானால் தங்களது தமிழைக் கேட்டே தமிழ் மீது ‘காதல்’ கொண்டவன் நான்.
தமிழுக்கும் தமிழருக்கும் ஒரே தலைவன் ‘கருணாநிதி’ தான் என என்னளவில் நம்பவும், மற்றவர்க்கு நம்பிக்கையூட்டவும் என்னை முனையச் செய்தது தங்களது தமிழ் தான். தங்கள் மீது கொண்ட பற்றினால் தங்கள் கண்களை அலங்கரிக்கும்(?) விழிக்கண்ணாடி போன்றதொன்றை தந்தையைச் சிரமப்படுத்தி அங்காடிகளில் அலையவிட்டு வாங்கி வைத்திருந்தவன் நான்.
பெரியவனாகி திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றபோதும் – அந்தக் கண்ணாடி மட்டும் புது மெருகு மாறாமல் என் பொக்கிசப்பெட்டியில், பெறுமதியான பேழையொன்றில் தனி சாம்ராஜ்யத்தையே நடாத்திக்கொண்டிருந்தது.
எனது குழந்தைகளுக்குக் கூட அந்தக் விழிக்கண்ணாடியையும், தங்களது புகைப்படத்தையும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது வர்ணத்தொலைக்காட்சியில் (இலவசமாகக் கிடைத்தது அல்ல) வரும் தங்கள் பிரதிமைகளையும் காட்டி – திரைப்படங்களையும் காட்டி ‘கருணாநிதி’ புகழ்பாட தவறியவனல்ல நான்.
அந்த கறுப்புக்கண்ணாடி போர் இடப்பெயர்வுகளின் போது தொலைந்து போனது என் பொக்கிசங்களைப் போலவே; எனதும் என் இனத்தினதும் கனவுகள் போலவே…!!
எனது பொக்கிசங்கள் தொலைந்ததற்கும், எம் கனவுகள் அழிந்ததற்கும் இன்றுவரை இரத்தக் கண்ணீர் வடிக்கின்றேன் – விழிக்கண்ணாடி தொலைத்ததற்கு அல்ல. தொலைந்தவற்றை இன்றும் தேடுகின்றேன். “கறுப்புக்” கண்ணாடியையும் கூட. என்ன முரண்நகையாகத் தெரிகிறதா?
ஒருவேளை எனது தேடுதல் வேட்டையின் போது அந்தக் ‘கண்ணாடி’ கண்டுபிடிக்கப்பட்டால்……… மீண்டும் பாதுகாக்க மாட்டேன். மாறாக என் காலில் போட்டு மிதித்து உடைப்பேன். உடைந்த அந்தத் துகள்களை ஒரு பொலித்தீன் பையிலிட்டு எனது வீட்டு வரவேற்பறையில் வைப்பேன், துரோகச்சின்னமாக.
ஒரு தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையை நிர்மூலமாக்கிய துரோகத்தின் அடையாளம் அது.
நம்பிய ஈழத் தமிழ் மக்களின் முதுகில் குத்தி குப்புறச் சாய்த்த சுயநல வெறியின் அடையாளம்! ‘காப்பாற்றுங்கள்’ என அவலக் குரலெடுத்துக் கதறி அபயம் கேட்டு நீட்டிய கைகளை குறுகத் தறித்தெறிந்த அரசியற் துரோகத்தின் அடையாளம்!
அண்ணாவை விட, ராஜாஜியை விட, காமராஜரை விட உண்மையில் தாங்கள் பெரும் புத்திசாலி தான்.
பாவம் அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள். வங்கி இருப்பில் சேமிப்பேதும் இல்லாமல் செத்துத் தொலைத்தவர்கள் அவர்கள். கருணாநிதியின் சாதுரியம் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்களது சந்ததியினர் இன்று “கோடி”களில் புரண்டிருப்பார்கள்; தங்களது சந்ததியினரைப் போலவே.
8ஆம் வகுப்புக் கல்வியையே இடைநடுவில் முறித்துக் கொண்டு, தற்குறியாக இரயில் (அல்லது பேரூந்து) கட்டணத்தை மட்டுமே சட்டைப்பையில் கொண்டு, ‘பெரியாரின்’ முகாமுக்குத் தொண்டனாக வந்து, – இன்று பல்லாயிரம் கோடி ரூபா மோசடி ஊழலில் பெயர் அடிபடும் அளவுக்கு உயர்ந்து விட்ட உங்கள் “தமிழ்ப்பணி” அவர்களுக்குக் கைகூடி வரவில்லை. உண்மையிலேயே தாங்கள் மேதாவி தான்.
நீங்கள் கொண்ட இலட்சியத்தை அடைந்து விட்டீர்கள் இனியுமென்ன நாடகம்? இனியும் ஏன் வேசங்கள்? உலகளந்த பெருமாளுக்கும், உலக நாயகனுக்கும் ஆகக்கூடியது பத்து அவதாரங்கள் தான். ஆனால் தங்களுக்கு….
எத்தனை முகங்கள்?
மாநில அரசியலில், மத்திய அரசியலில், குடும்ப அரசியலில், வர்த்தக அரசியலில், புலம்பெயர் ஈழத்தவர் அரசியலில், சினிமா அரசியலில், சுயமரியாதை அரசியலில், ஆன்மீக அரசியலில், சிறை அரசியலில், ஊழல் அரசியலில், ஊடக அரசியலில் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். போயின் பக்கங்களும் போதாது; எனது ஞாபகசக்தியும் போதாது. இவ்வாறு ஒவ்வொரு அரசியலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடான, முரண்நகையுள்ள அவதாரங்கள் அவற்றுக்கு பூசிய அரிதாரங்கள்.
இந்த அரிதாரங்கள் நாட்பட்டு, கலைந்து வழிந்து நாற்றமும் வீசத் தொடங்கியதின் பின்பும், மீண்டும் நீங்கள் ‘கதா’யுதத்துடன் மேடையேற இந்தத் தள்ளதா வயதிலும் நினைப்பது தான் சற்றும் இரசிக்க முடியாமல் உள்ளது.
‘உங்கள் அவதாரம் கலைந்து போனது ஈழத்தமிழனின் குருதியிலே’ என்பதை நாமுணர்ந்து பல காலமாகி விட்டது.
‘உங்கள் கூத்து மேடை சரிந்து போனது எங்களது சாவிலே’ என்பதைத் தாங்கள் உணர இன்னும் வெகுகாலம் பிடிக்குமோ?
“விடுதலைப் புலிகளை ஆதரிக்கமாட்டேன், ஆனால் தமிழீழம் மலர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்” என்று தாங்கள் கூறியபோது, அதிலுள்ள முரண்நகையை தங்கள் மீது கொண்டிருந்த அபிமானம், எம் புலனுணர்வுக்கு மறைத்து விட்டது.
தமிழ்ச்செல்வனின் சாவிற்கு நீங்கள் வரைந்த கவியாஞ்சலி, அதற்கு நாம் இசைப்பாடல் வடிவத்தை ரி.எல்.மகாராஜன் குரலில் வழங்கி, பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கச் செய்து மெய்யுருகிக் கண்ணீர் விட்டோமே…. அப்பொழுதும் நாம் தங்களின் முடைநாற்ற அரிதாரப்பூச்சுக்களைக் கண்டுபிடிக்கவில்லை நாம்.
காலை உணவு அருந்தி விட்டு, அண்ணா சிலையடியில் திடீரென நீங்கள் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம், ஏற்கனவே எம் இதய வாயிலருகில் வீற்றிருந்த உங்களை இதய கர்ப்பக்கிரகத்துக்குள்ளே உங்களை குடியமரச் செய்தது. “அந்தப்புரம்” உட்பட தங்களது சகல பரிவாரங்களும் குளிரூட்டி பொருத்திய சொகுசு பெருவாகனத்துடன் தங்கள் சாவைக் காணக் கால்கடுக்கக் காத்திருக்கும் செய்தி எம்மை உருக வைத்தது.
எறிகணைகளுக்கும், விமானக்குண்டுகளுக்கும், சீறிவரும் கனரகத் துப்பாக்கிச் சன்னங்களுக்கும் அஞ்சி குழந்தை குட்டிகளோடு எம்முடன் இடம்பெயர்ந்து கூடவே வந்த ஆட்டுக்குட்டி, நாய் போன்றவற்றையும் அருகிலே வைத்துக் கொண்டு பதுங்கு குழிக்குள் நாமிருந்த வேளை; காற்றிலே கலந்து வந்த செய்தி தான் தாங்கள் எடுத்த உண்ணாவிரத அவதாரம்.
சக்தியிழந்து செயலற்றிருந்த மின்கலங்களுக்கு பற்களால் கடித்தும், கற்களால் தட்டியும் அவற்றின் உருளை வடிவத்துக்கு நவீன சிற்பங்களைப் போல வினோதமான நெளிந்த வடிவங்கள் கொடுத்து, சற்று உசுப்பி அவை மூலம் வானொலியில் வரும் தங்கள் செய்திக்காக செவிமடுத்துக் காத்திருந்தவேளை “ஏதாவது நடக்கும்” “நல்ல செய்தி வரும்” “எம்மை காப்பார் உலகத் தமிழர் தலைவர்” என நம்பிக்கையுடன் நாம் காத்திருந்த வேளை….
வந்ததையா நற்செய்தி! காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நடந்த மிகத் தீவிரமான சாகும் வரையான உண்ணாவிரதப் போருக்கு மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உருவிலே வந்தது தீர்வொன்று.
“கனரக ஆயுதப்பாவனை நிறுத்தம்” “போர் நிறுத்தம்” “இனி ஈழத்தமிழர் வாழ்வில் விடிவு”
“தமிழக முதலமைச்சரின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவு”
பலவீனமான மின்கலத்தால் முனுமுனுப்பாகக் கேட்ட வானொலியின் அறிப்பில் கூட திடீரென சக்தி கூடியதான உணர்வு எமக்கு “வெற்றி….வெற்றி….. தமிழர் தலைவன் கருணாநிதி எம்மைக் காப்பாற்றி விட்டார்.”
குதூகலத்துடன் கூவியபடி குஞ்சு குருமான்களுடன் பதுங்குகுழியிலிருந்து பாய்ந்து வெளியே வந்தோம்.
ஆடவேண்டும்…… பாடவேண்டும்…… மனம் மகிழ்ச்சியில் துள்ள ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள……
வந்ததையா எறிகணைகள்…..
கொள்ளை கொண்டு போனதையா எம்மவர் உயிர்களை.
தொடர்ந்தும் இந்திய வனொலியில் “கருணாநிதி ஈழத்தமிழரைக் காத்து அருள்பாலிக்க வந்த தேவதை. வெற்றி வாகை சூடி ஈழத்தமிழர் தலையிலே முடி சூட வந்த கருணைக்கடல்.”
இப்படியாக……… இப்படியாக……… தொடர் புகழாரங்கள்!
நாம் கண்ணீரில் மிதந்தோம், இந்த நயவஞ்சகத்தை எதிர்த்துக் கருணாநிதி எனும் வீரத்தலைவன் தன் போர்க்;கலத்தைத் தூக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தோம்.
அன்றைய தினம் மட்டும் காவு கொள்ளப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேலாகும்.
ஆனால் அவ்வளவு தான்.
நம்பிக்கை கானல் நீரானது. கருணாநிதியின் முடிவு – மத்திய அரசின் முடிவைச் சார்ந்ததே என்றானது. ஆவியே வெந்து போனது.
எம்மால் என்ன செய்ய முடியும்?
கருணாநிதி நினைத்திருந்தால்; மத்திய அரசில் அவரது கட்சிக்கிருந்த பலத்தைக் கொண்டு ஈழத்தமிழரைக் காத்திருக்கலாம்.
அவர் தம் வாழ்வியல் உரிமைக்கான அரசியல் வேணவாவைப் பேணி இருக்கலாம். எம்மைக் காக்கும் கவசமாக தமிழ் நாட்டையே மாற்றி இருக்கலாம்.
எனினும் நாம் நம்பிக்கை இழக்கவில்லை. “தமிழகம் தொப்புள் கொடி உறவு. கருணாநிதி அதன் முதலமைச்சர். அவரது தலைமையில் எம்மை மீட்க தமிழகம் திரளும். எம்மைக் காத்து அணைத்து ஆறுதல் சொல்ல ஓடோடி வருவார் உலகத் தமிழர் தலைவன்” என இன்னும் நம்பினோம். அவரது மௌனம், எம்மைக் காக்கும் இராஜதந்திரமாக இருக்கலாம் எனும் ஒர் நப்பாசை.
“ஓடினோம்…ஓடினோம், வாழ்க்கையின் ஒரத்துக்கே ஒடினோம்.” அந்த ஓரம் தான் முள்ளி வாய்க்கால் ‘கடல் – ஒரம்’. பாராசக்தியின் பார்வதிக்காவது நியாயம் கேட்க குணசேகரன் என்ற அண்ணன் இருந்தான். அவன் பக்கம் பக்கமாக வசனம் பேச நீதிமன்றமும் இருந்தது. கேட்க நீதியரசரும் இருந்தார்.
எனினும் எமக்கு…?
“தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா….. ‘செந்நீரால்;;’ காத்தோம்….. கருகத் திருவுளமோ….”
ஏக்கத்துடன் வங்கக்கடலின் வானம் தொடு எல்லையை, அந்த நீண்ட விளிம்பைப் பார்த்திருந்தோம். ஏமாற்றம்! எம்மைக் காக்க எவரும் வரவில்லை. எம் குரல் கேட்கவும் எந்த நீதிமன்றமும் தயாராக இருக்கவில்லை.
356 என்ற சட்டப் பிரிவின் மீதான பயமா இது?
கலைஞரே! உங்களது சிலவருட பதவி நாற்காலிகளைப் பாதுகாப்பதற்காக ஒரு தேசிய இனத்தின் அழிவுக்குத் துணை போக உங்களால் எப்படி முடிந்தது?
அன்று பதவிகளைத் தூக்கி எறிந்து இந்திய அரசுக்குப் பாடம் புகட்டி எம்மைக் காத்திருந்தால் இன்று நீர் அல்லவோ உலகத் தமிழர் தலைவர். இப்படி அவமானகரமான தோல்விகளையும் இனத்துரோகி என்ற அவப்பெயரையும் சந்திக்க நேர்ந்திராது அல்லவா!
ஆட்சிக் கதிரையை மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதி நிலையையே இழக்க வேண்டிய அவலநிலை வந்திராது அல்லவா?
தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றிலேயே அறிஞர் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க என்ற புரட்சிக்கட்சி, இத்துணை தாழ் நிலைக்கு என்றுமே சென்றதில்லை.
‘தானாடாது விட்டாலும் தன் தசை ஆடுமாமே…’ வன்னிமண்ணின் இடப்பெயர்வு அவலங்கள் காணொளி இறுவெட்டுக்களாகத் தமிழ்நாட்டை அடைந்த போது தமிழகமே பொங்கி எழுந்ததாமே!
அப்போதும் கூட உங்கள் கண்ணில் கூட ஈரக்கசிவு ஏற்பட்டதாமே…?
அப்போதும் கூடத் தங்கள் கபட மூளை அந்த உணர்வெழுச்சிகளை உங்கள் குடும்ப, அரசியல் நலன்களுக்கான முதலீடுகளாக்கிக் கொண்ட சாமர்த்தியம் வேறு எவருக்கு வரும்?
கல்விச்சமூகம், சினிமாத்துறை, தொழில்துறைகள் எனப் பல்வேறு தரப்பட்டத் தமிழ்நாட்டு உறவுகளின் உண்மையான அக்கறையைக் கையாள, அவர்களின் பிரதிநிதியாக மீண்டும் ஒரு அரிதாரப்பூச்சு.
பதவி விலகல் கடித நாடகங்கள்.
கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்ட நாடகங்கள்.
இப்படி எத்தனை….. எத்தனை…..?
முத்துக்குமாரன் முதலானோரின் அக்கினிச் சங்கமங்கள் கூட உங்கள் அரசியல் கபட நாடகத்துக்கு உரமாக்கப்பட்டன. இத்தனை போராட்டங்களும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு விடிவினைப் பெற்றுத்தருவதற்குப் பதிலாக மத்திய அரசில் கருணாநிதியின் அரசியல் சார்ந்த சலுகைகளையே வென்றுகொடுத்தன. சில வருடங்கள் ஆட்சியையும் தாக்குப்பிடித்துத் தக்க வைக்க முடிந்தது.
தங்கள் நாடகங்கள் முடியுமுன்னே பூசிய அரிதாரப்பூச்சுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இன்று சொறிந்து கொண்டிருக்கும் நிலையில் நீங்கள்.
கட்டபொம்மனுக்கு எட்டப்பன்! பண்டாரவன்னியனுக்குக் காக்கை வன்னியன்! ஈழத்தமிழருக்குக் கருணாநிதியா…?
எம்மை வீழ்த்தும் கூட்டுச்சதிக் கூட்டாளிகளில் தாங்களும் ஒருவன் என்பதை நாம் நன்கு அறிவோம்.
எனினும் அந்தச் சதி அம்பலமானதைப் பூசி மெழுக, நீங்கள் சொன்ன காரணங்கள் இருக்கிறதே; அப்பப்பா…. பொய்யின் மொழிப்புலவர் தாங்கள்.
கனிமொழியைச் சிறைக்கூண்டுக்குள் சந்தித்தபோது நா தழுதழுத்ததாமே, கண்ணரும் கசிந்ததாமே.
ஊழல் செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாக்களைக் கபளீகரம் செய்த குற்றச்சாட்டில் அடைக்கப்பட்ட கனிமொழியின் தந்தைக்கு மகளிருந்த கம்பிக்கூண்டு கண்ணீரை வரவழைத்தது என்றால்…..
இங்கே இந்த மண்ணிலே வாழும் உரிமையைக் கேட்டதால் கொத்துக் கொத்தாக மடிந்து போன பிள்ளைகளின் தாய் தந்தையரின் கண்களில் என்ன வரும்…?
இதை உணராதவர் போல், ஒன்றுமே தெரியாதவர் போல், ‘ஈழத்தமிழர் வீழ்ச்சிக்குச் சகோதர இயக்க மோதல்களே காரணம்’ என நாம் எப்போதோ மறந்து போனவற்றை இன்று ஞாபகம் வைத்துப் பேசும் முன்னாள்; முதல்வர் கருணாநிதி – அந்தச் சோற்றுக்குள்ளே தன் துரோகம் எனும் முழுப்பூசனியை மறைக்க நினைப்பது தான் வேடிக்கையானது.
இந்த நிலையில் மீண்டும் சில நாடகங்களின் அறிவிப்புகள்.
“தமிழீழம்
“டெசோ
என்ன இவை….? வரலாற்று நாடகங்களா..?
இருபத்தோராம் நூற்றாண்டில் மட்டுமல்ல் இனி வரப்போகும் சில நூற்றாண்டுகளுக்கும் இதுவே பெரும் நகைச்சுவையாக இருக்க முடியும்.
உண்ணாவிரத நாடகத்தைப் போல் ஒரு ‘ரெசோ’ மாநாட்டு நாடகம். உச்சக்கட்டக் காட்சியாக தமிழீழத் தீர்மானம். பரபரப்பாக ஒத்திகை பார்க்கப்பட்ட இந்த நாடகம் எதை இலக்காகக் கொண்டது என்பதை யார் அறியாவிட்டாலும் ஈழத்தமிழர் நாம் அறிவோம். அதனால் நாம் பரபரப்படையவில்லை….. சிலிர்க்கவில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.
“உண்ணாவிரத” நாடகத்தில் வந்தது போலவே உச்சக்கட்டக் காட்சி. “மத்திய அமைச்சர் சிதம்பரம் வருகை!”
அதே நாடகத்தில் வந்தது போலவே இறுதி முடிவு….. பிசுபிசுப்பு…..! தாங்கள் தமிழீழம் என்று முணுமுணுக்கும் போதே எமக்குப் புல்லரிப்பை ஊட்டவில்லை. மிகப்பெரும் கோமாளித்தனமாகவே தெரிந்தது.
முடிவு எப்படியிருக்கும் என்று புரிந்ததால் மயிர்க் கூச்செறிவு எதுவுமில்லை.
அதிலும் உச்சக்கட்ட நகைச்சுவை என்னவென்றால்;; ஈழத்தமிழர் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் பற்றித் தாங்கள் பேசுவது! அக்கறை காட்டுவது! அது மட்டுமல்ல உங்களது நேர்மையை நிரூபிக்க எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் அழைத்திருப்பதாகச் சொன்னது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா கலைஞரே….? உங்களை விடப் பெரிய நடிகர்கள்; எமது அரசியற் தலைவர்கள். அவர்கள் எம்மைக் கைவிட்டு நீண்ட காலமாகிவிட்டது தெரியுமா….?
உங்களது மாநாட்டில் அவர்கள் பங்குபற்றுவது இருதரப்புக்கும் அவரவர் தரப்பு மக்களை ஏமாற்ற உதவக்கூடுமே தவிர எமது வாழ்வில் எந்த விடிவையும் கொண்டு வந்துவிடப் போவதில்லை.
நாமும் கட்டப்பட்டு கடலில் தான் போடப்பட்டுள்ளோம்….. எம்மால் கட்டுமரங்களாக மிதக்க முடியவில்லை. எந்தக் கட்டுமரங்களும் எம்மை கரைசேர்க்க வரவில்லை.
இதுவரை காலமும் இடம்பெயர்ந்து அல்லலுறும் எமக்காக தங்கள் ‘கஜானா’ விலிருந்து ஒரு ரூபாய் கூட கொடுக்க மனம் வராதவர் நீங்கள். தமிழைச் செம்மொழியாக்கி விட்டுத் தமிழனைக் கொன்றொழித்தவர் நீங்கள். உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இதய சுத்தியுடன் வாருங்கள். எமது காயங்கள் ஆற்றமுடியாதவையானாலும் எம்மைத் தேற்றலாம். உங்கள் உண்மையான மனமாற்றம் எமது இனத்தின் மீளெழுச்சிக்கு, ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உதவுமேயாக இருந்தால் – கடந்தகாலத்தை மறக்க முடியாவிடினும் கூட மன்னிக்கவாவது செய்யும் மனிதத்துவம் இன்னும் எங்களிடம் இருக்கிறது.
தயவுசெய்து எம்மைப் பகடைகளாக்கி விளையாடாதீர்கள்.
ஏனெனில் நாம் மனிதர்கள்.
எங்கள் வாழ்வுரிமைக் கோசத்தை உங்கள் மூலதனமாக்காதீர்கள்.
ஏனெனில் அது எமது இனத்தின் இருப்பு.
சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால்……
எம்மை வாழ விடுங்கள்.
இவ்வண்ணம்
ஈழத்தமிழ் அகதி.

டெசோவில் பங்கேற்ற ஈழத் தமிழர்களின் நிலைப்பாடு

டெசோவில் பங்கேற்ற ஈழத் தமிழர்களின் நிலைப்பாடு

First Published : 13 Aug 2012 05:56:08 PM IST


சென்னை, ஆக., 13 : தமிழீழ மக்களுக்காக நேற்று நடத்தப்பட்ட டெசோ மாநாட்டில் ஈழத் தமிழர்கள் இருவர் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவரான கண்ணன் என்பவர் டெசோ மாநாட்டில் கூறியதாவது, இந்திய அரசு 13வது திருத்தச் சட்டம் மூலமே இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று கூறுவது முட்டாள்தனமானது என்று ஆணித்தரமாகக் கூறினார்.அது ஏன் என்று கனிமொழி கேட்டதற்கு, நிலம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதில் சரியான வகையில் பங்கிடப்படவில்லை. 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி தமிழர்களுக்கு தீர்வு பெற்றால் அது ஈழத் தமிழர்களை சிங்களவர்களிடம் நிரந்தரமாகவே அடிமையாக்கிவிடும் என்றார்.மேலும், தமிழீழத்தில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனக் குறிப்பிட்ட கண்ணன், தம்மை சிறுபான்மை இனத்தவர்கள் என்று கூற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள்

செவ்விந்தியர்கள் அமெரிக்காவிலும் , அபோர்ஜின்கள் அவுஸ்திரேலியாவிலும் ,திராவிடர்கள் இந்திய உபகண்டத்திலும் எப்படி குறைந்த தொகையில் இருந்தாலும் அந்த மண்ணின் பூர்வ குடிகளோ அப்படியே தான் ஈழத்தமிழ் இனமும் கண்ணன் அவர்கள் மிகவும் ஆணித்தரமாக அழகாக எடுத்துரைத்துள்ளார்
By முருகேசு
8/13/2012 6:07:00 PM

Announce question of Eezham Tamils as South Asian issue: TESO resolution

Announce question of Eezham Tamils as South Asian issue: TESO resolution

[TamilNet, Sunday, 12 August 2012, 18:56 GMT]
The question of Eezham Tamils should be announced as a South Asian issue and a UN referendum should be conducted on the issue among the Tamil public, demanded the resolution of the TESO conference convened at the YMCA grounds at Rayappettai in Chennai on Sunday. India should work at the UN to bring in a resolution facilitating Eezham Tamils to choose their political solution, the conference resolved. The foremost resolutions of the conference demanded action on the war criminals in the island and removal of Sri Lankan military from the territories of Tamils. The resolutions also demanded immediate removal of the Sinhalese forcefully colonised in Tamil Eelam and in Tamil territories. On the treatment of refugees in India, the conference demanded the Indian government to adhere to the UN conventions.

The TESO conference has neither dropped the phrase Eezham Tamils nor the phrase Tamil Eelam, in the resolutions. It was using the word Ilangkai in instances of indicating the entire island and often used the word Tamil in generally noting territory, rehabilitation etc.

The resolutions were made in Tamil.

However, the English translators of the resolution, even though were not dropping the usages Eezham Tamils and Tamil Eezham, were knowingly or unknowingly insensitive in using the term ‘Sri Lankan Tamils’ in some instances of denoting Tamils in the island of Ilangkai.

In the given circumstances of sensitivity in terminology, TESO should have avoided ambiguity by the translators, the participants of TESO conference told TamilNet.

The original version of the resolutions in Tamil should be taken as the authentic one, the participants contributing to the resolutions said.

The conference resolutions demanded the release of all Tamil political prisoners in the island.

The resolutions particularly addressed the UNHCR (the refugee organisation) to work on releasing the languishing Tamil refugees in the detention of several countries.

The resolutions addressed the UN to enforce Sri Lanka government bringing in normalcy in the Tamil territories.

The resolutions also demanded multinational supervision arrangement of rehabilitation in the Tamil territories.

TESO voiced against the annihilation of Tamil language identity in the island.

On the question of refugees in India the conference resolutions said that they should be considered for either citizenship or permanent resident status, following the UN norms in this regard.

The conference resolved for not giving training to Sri Lanka’s military in any part of India.

The resolutions wanted to put an end to the slaughter of Tamil Nadu fishermen by retrieving Kachchatheevu in the Palk Bay from Sri Lanka. The resolutions also wanted India to set up a naval base at Thanush-koadi or at Ma’ndapam in the Adam’s Bridge area.

The TESO conference condemned the threat of the Colombo government against the participants and the hindrances caused to the conference by the AIADMK government in Chennai.

When the question of denouncing the 13th Amendment was discussed at the pre-public session of the conference, Mr. Karunanidhi's daughter, Ms. Kanimozhi and Mr Supaveera Pandian, one of the conveners of the conference, wanted circumvention of the issue, the participants said.

When Ms. Kanimozhi asked what was the problem with the 13th Amendment, there was nobody to counter her with substantial argument, thanks to the reluctance or sabotage of right shades of representation, the observers of the conference said.

However, the absence of any mention of the 13th Amendment or the LLRC implementation already pleaded by elements behind some of the conveners itself is a significant get-away from hurdles achieved by the TESO conference, the observers of the conference said.

The achievement is significant, given the circumstances of orchestrated efforts by New Delhi, Colombo and the ICE – International Community of Establishments – operated outfits in the West, the observers further said.

Chronology:

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

டெசோ மாநாடு குறித்த விகடனின் கருத்துத் தொகுப்பு


காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் 'டெசோஅமைப்பை. அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?


 
கருணாநிதியின் டெசோ மாநாடு! நடக்குமா? நடக்காதா?



சேசுராஜ், முன்னாள் போராளி. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது)

''
ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக்கிடந்தேன். அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளும் 500 வரையான காயப்பட்ட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் எங்கும் வியாபித்து இருந்தது. ஷெல் அடி காதைப் பிளந்தது. மருத்துவமனையில் சரியான மருந்துகள், மருத்துவ ஆளணி இல்லாமல் மருத்துவர்கள் திணறிக்கொண்டு இருந்தனர்.

அன்றைய பொழுதில் கடைசி நம்பிக்கையாக கருணாநிதியை நம்பிக்கொண்டு இருந்தனர் எங்களில் பலர். அந்த அவல நிலையிலும் வானொலிப் பெட்டியின் முன் குந்தி இருந்தனர். கருணாநிதி அறிவித்ததாக 'போர் நிறுத்தப்பட்ட அறிவிப்புவானொலியில் வந்த கணத்தில் மக்கள் அதனை முழுவதும் நம்பினார்கள். எங்கும் சந்தோஷ மயம். அனைத்தையும் இழந்துவிட்ட அந்த நிலையில் அவர்கட்கு கருணாநிதி மீட்பராகத் தெரிந்தார். தேவதூதராகத் தென்பட்டார். ஆனால், நடந்தது எல்லாம் நாடகம் என்பதை ஜந்து நிமிடங்களுக்குள் நான் உணர்ந்துகொண்டேன். அன்றுதான் வழமையைவிட ஷெல் அடி அதிகமாக இருந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.

நான் தலைவர் பிரபாகரனிடம் பற்றுக்கொண்டு போராட்டத்தில் இணைந்துகொண்டவன். தமிழீழம் என்பதுதான் எமது ஒற்றை நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கை பொய்த்துப்போனதுகூட எனக்கு வலிக்கவில்லை. உடம்பில் தெம்பு இருந்தவரை நான் போராடினேன் என்கிற ஆத்ம திருப்தி இருக்கிறது எனக்கு. ஆனால், நாங்கள் நம்பிய ஒருவரால் ஏமாற்றப்பட்டோம் என்பதை இன்று வரை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை!''

ஸ்ரீதரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

''
நாங்கள் 60 வருட காலம் போராடிப் பார்த்துவிட்டோம். இன்றைக்கு எங்கள் எதிர்காலம் சம்பந்தமாக எந்தவிதமான நம்பிக்கையும் அற்று இருக்கிறோம். இத்தகைய சூழலில் எமக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை இந்தியத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் உண்டு. இப்போது உள்ள நிலையில் அவர்களால் மாத்திரம்தான் ஈழத் தமிழர்களின் மேலான அடக்குமுறையைச் சர்வதேசத்துக்குக் கொண்டுசெல்ல முடியும்.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தும் மாநாட்டு அழைப்பை நாங்கள் எதிர்கொள்கிறோம். சொந்த விருப்புவெறுப்புகளை விடுத்துப் பார்த்தால் அவர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவர். அவர் பின்னால் பெரும் தொண்டர் படையணி உள்ளது. அவரை நாங்கள் புறக்கணிக்க முடியாது. ஆனால், அவரிடம் உளச் சுத்தியான ஈழ ஆதரவு இருக்கும் என நம்பும் அளவு நான் முட்டாள் அல்ல. ஈழத் தமிழர்கள் அனைவருமே கருணாநிதியின் மேல் மிகப் பெரிய கோபத்திலும் வெறுப்பிலும் உள்ளார்கள். ஈழத்தில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் அவர். ஈழப் போரை நிறுத்த வேண்டிய தார்மீகக் கடமை அவருக்கு இருந்தது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை; சோனியா காந்திக்கு விசுவாசமாக இருந்தார். புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் கடும் வெறுப்பில் அவர் இருந்தார். அந்த வெறுப்பை புலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது அவர்கள் மேல் காட்டினார். ஆனால், புலிகளின் தோல்வி, ஈழத் தமிழர்களின் தோல்வி என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. அவர் எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலே ஈழத் தமிழன் அவரை மன்னித்து இருப்பான். ஆனால், உண்ணாவிரதம் எனும் நாடகத்தை நடத்திவிட்டு, 'ஈழத்தில் போர் முடிந்துவிட்டதுஎன அவர் ஒரு பொய்யான தகவலை உலகத்துக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சொல்லி தமிழ்நாட்டிலே ஏற்பட்ட மக்களின் எழுச்சியை நயவஞ்சகமாக அடக்கினார். அதை நாம் எப்படி மறப்பது?''

சயந்தன், ஈழ எழுத்தாளர்:

''
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் - குறிப்பாக தி.மு.க-வின் தற்போதைய நடவடிக்கைகளை - ஒருவிதமான விரக்தி, ஏமாற்றம், ஏளனம், கோபம் எனக் கலவையான உணர்வுகளின் ஊடாகத்தான் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை விடுத்துப் பார்த்தாலும்கூட, இறுதி யுத்தத்தில் சிக்குண்டவர்கள், உறவுகளை இழந்து தவித்தவர்கள், இன்னமும் சொந்த வாழிடங்களுக்குத் திரும்ப முடியாது அவலப்படுவோர் அனைவரிடத்திலும் கலைஞர் மீதான ஆற்றாமையும் கோபமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. நம்பிக் கெட்ட சனங்களின் உணர்வுகள் அவை.

ஈழ விவகாரமும் தமிழகத் தேர்தல் அரசியலில் ஒரு முக்கியக் கூறாகப் பார்க்கப்படுவதால், அவரவர் வசதிப்படி நடனம் ஆடுகிறார்கள். அந்த ஆட்டத்தில் 'டெசோவும் ஒன்று. சற்றே புத்தி தெளிவுள்ள ஒருவனால்கூட இதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும். காலங்காலமாகத் தமது சொந்த மீனவர்கள் சுடப்படுவதைக்கூட நிறுத்த முடியாதவர்கள், இப்படி எல்லாம் கூத்தடிக்கும்போது, யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது

'
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.’ ''

வழிமூலம்: ஆனந்தவிகடன்
நன்றி. இருமேசு, இணையத் தென்றல் குழு
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif