வியாழன், 22 செப்டம்பர், 2011

செருமனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களது விடுதலைவீச்சு நிகழ்வு !

ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களது விடுதலைவீச்சு நிகழ்வு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வலுவூட்டும் வகையில் புதிதாக இணைந்துள்ள அரசவை உறுப்பினர்களது அறிமுக நிகழ்வாக விடுதலைவீச்செனும் மக்கள் அரங்கம் பொதுநிகழ்வு ஜேர்மனியில் ஏற்பாடாகியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசவையின் யாப்பினை ஏற்றுக் கொள்ளாமல், தாமாக விலகியவர்களின் இடத்தினை நிரப்பும் பொருட்டு, வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் இருந்த பிரதிநிதிகளே, இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கமைய நா.த.அரசவையில் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் 16 புதிய மக்கள் பிரதிநிதிகளும் யாப்பை ஏற்றுள்ளனர்.
அந்தவகையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதிய அரசவை உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகளின் அறிமுகஅரங்கம் ஜேர்மனியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (17-09-2011) மதியம் 14:00 மணிக்கு Gartenverein NORA , Eberstr 46 , 44145 Dortmund இடத்தில் நிகழ்வு இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன், பிரதிஅவைத் தலைவர் சுகன்யா புத்திசிகாமணி, அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர், தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன், நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா ராஜேந்திரா, கல்வி கலாச்சார சுகாதாரத்துறை துணை அமைச்சர் இராஜரட்ணம் ஜெயசந்திரன், அமைச்சரவைச் செயலர் முருகையா சுகிந்தன் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.
புதிய அரசவை உறுப்பினர்களது விபரம் :
கனடா :
நிமல் விநாயகமூர்த்தி
வின் மாகாலிங்கம்
ஜெயபாலன் அழகரட்ணம்
சிறிசங்கர் சின்னராஜா
கென்றி கிருபைராஜா
தனபாலன் மார்க்கண்டு
டென்மார்க் :
இளையராஜ் கண்ணன் சிதம்பரநாதன்
ஜேர்மனி :
வாசுகி தனகராஜா
சுப்பிரமணியம் பரமானந்தன்
தணிகா சுப்பிரமணியம்
பிரியதர்சினி மனோகரன்
நோர்வே :
தோமஸ் அலோசியஸ்
பிரித்தானியா :
மணிவண்னன் பத்மநாபன்
நிமலன் சீவரட்ணம்
சொக்கலிங்கம் யோகலிங்கம்
சிவயூசம் சுகுமார்
நாதம் ஊடகசேவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக