வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Un expected candidate - Thanga balu: எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்: தங்கபாலு

தங்கபாலு உட்பட அனைத்துக் காங். வேட்பாளர்களும் மண்ணைக் கவ்வ வேண்டும். அதே நேரம் தங்கபாலுவிற்கு எதிராகக் கோவன் குழுவினர் தொடர்ந்து ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.  காலங்காலமாகக் காங்.கட்சி என்பதே இங்குள்ளோர் தனிப்பட்ட முடிவைச் செயல்படுத்த முடியாது என்பதுதான். அவ்வாறிருக்க அவர்மீது வேண்டும் என்றே பழி சுமத்தப்படுகிறது. தி.மு.க.கூட்டணியை விரும்பாதக் காங். தலைவர்களாலும் எதிர்ப்புப் போராட்டம் தூண்டப்படுகிறது.  மாநிலக் கட்சியின் தலைவர் என்ற முறையில் நேரடியாகவே தொகுதியைப் பெற வாய்ப்பு உள்ளபொழுது அவர் ஏன் குறுக்குவழியைப் பின்பற்ற வேண்டும். தங்கபாலு தலைவராக இருக்கும் பொழுது எதிரப்பு ஆர்ப்பாட்டங்கள் மிகுதியாக இருக்கின்றன வென்னால் அதன் காரணம், அவரது எதிர் அணியினர் தலைமைக்குக்கட்டுப்படாததுதான். எனவே, காங். அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேளை காங்.. கணிசமான அளவில் வெற்றி பெற்றால் அணிமாறி ஆட்சிப்பீடத்தில் அமரத் துடிப்பவர்களால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தை அக்கட்சித் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடாமல் சத்தியமூர்த்தி நிலையத்தைத் தங்கள் அணிக்குச் சார்பான போ்ராட்டக் களமாக மாற்றும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வேண்டுகோள்  காங்.தலைமைக்க நடுவு நிலையுடன் விடுக்கப்படுவது! அதே நேரம்  வாக்காளர்களுக்கான மனித நேய வேண்டுகோள், காங்.கிற்கு எக்காரணம் கொண்டும் வாக்களிக்காதீர்கள் என்பது! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

சென்னை: ""எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.

சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காங்கிரஸ் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பது கட்சி விரோத செயல். தேர்தல் நேரத்தில் தொண்டர்களை குழப்புவது நல்லதல்ல. தேர்தல் முடியும் வரை தொண்டர்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். தேர்தல் முடிந்த பின் தங்களது கருத்துக்களை கட்சி மேலிடத்தில் தெரிவிக்கலாம். உண்ணாவிரதம் இருந்தவர்களை, உள்ளே வருமாறு அழைத்தேன். இது என் பண்பாடு. கட்சி கட்டுப்பாட்டை நான் மதிக்கிறேன். கட்சியில் எனக்கென்று தனி சிறப்பு உண்டு. இரண்டு முறை தலைவர் பதவியும், பல பொறுப்புகளையும் வகித்துள்ளேன். கூட்டணியின் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

நான் எந்த வேட்பாளரையும் மாற்றவில்லை. வேட்பாளர்கள் தேர்வு மேலிடம் எடுத்த முடிவு. மேலிடம் அறிவித்த வேட்பாளர்கள் அனைவரையும் காங்கிரசார் ஆதரிக்க வேண்டும். ஒரு அசாதாரண சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகியுள்ளேன். இது விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. எனக்கு கட்சி தான் முக்கியம். அதற்காக எந்த தியாகத்தையும் நான் செய்வேன். தனிப்பட்ட முறையில் விருப்பு, வெறுப்புக்கு இடமில்லை. நான் விரும்பியிருந்தால் சோனியாவிடம் ஏதாவது ஒரு தொகுதியை கொடுங்கள் என கேட்டிருப்பேன். 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். தலைமைக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது; விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.

Senthil - San Franciso,யூ.எஸ்.ஏ
2011-04-01 01:57:56 IST Report Abuse
வருங்கால பிரதமர் நொங்குபாலு வாழ்க.
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
Yuvraj - Chennai,இந்தியா
2011-04-01 02:45:55 IST Report Abuse
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி தங்கபாலு வாழ்க!!...
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
2011-04-01 01:52:51 IST Report Abuse
எங்களுக்கு தெரியும் உங்களின் எதிர்பார்ப்பு என்னவென்று. திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் காங்ரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தால் துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நப்பாசை தானே? அதெப்படி உங்களின் வேட்புமனுவோடு எல்லா ஆவணங்களும் சரியாக இருக்கும் போது மனைவியின் வேட்பு மனுவில் இரண்டு ஆவணங்களை மறந்தீர்கள்? நல்ல வேலை இந்த குறுக்கு புத்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே வந்ததே. நான் மேலே சொன்னது போல் தப்பித்தவறி கூட்டணி ஆட்சி அமைந்து அப்போது உங்களுக்கு துணை முதல்வர் பதவி ஆசை இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப குசும்பு தான். பேட்டிய பாரு "எதிர்பாராத விதமாக நான் வேட்பாளராகி விட்டேன்".
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
sathish - melbourne,ஆஸ்திரேலியா
2011-04-01 01:38:10 IST Report Abuse
அது எப்படி அய்யா தங்க பாலு, மனைவியின் வேட்பாளர் படிவத்தில் கையெழுத்து போட மறந்து,, உங்க படிவத்தில் மாத்திரம் எல்லாம் சரியாக செய்தது, என்ன இருந்தாலும் இந்த தமிழ் மக்களை இவ்வளவு கேனைகளாக செய்ய கூடாது. தமிழ் மக்கள் முட்டாள்கள் தான். கேனைகள் தான். இந்த இலவசத்தை கொடுத்து கொடுத்து, சொரணை கெட்ட ஜன்மங்களாக செய்து விட்ட இந்த கலைனர் உங்களுக்கும் நல்ல உதவி இருக்கிறார். என்ன தெரு கூத்து நடந்தாலும் உங்க பின்னே தான் கொஞ்சம் சூடு, சொரணை, வெட்கம், மானம் இல்லா நீங்க அப்ப அப்ப போடும் பிச்சைக்கு கை தூக்கும் தொண்டர்கள் கொஞ்சம் இருக்கும் வரை உங்களுக்கு கவலை எது,. உங்க கலைனரும் கோஷ்டி தலைவர்களும் வாரிசு பதவி வைக்கும் போது உங்களுக்கு மட்டும் என்ன இருக்காதா? என்ன ஒரு கேவல பிழைப்பு அய்யா ? இதில் காமராஜரையும் என்னையா இழுக்கிறீர்கள்.
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
maazmai - Chennai,இந்தியா
2011-04-01 00:49:46 IST Report Abuse
ஆனால் எல்லோரும் எதிர்பார்க்கிறபடி உங்கள் தோல்வி உறுதி..
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
k.kaipulla - nj,இந்தியா
2011-04-01 00:46:24 IST Report Abuse
பொதுவா பாத்தீங்கன்னா, எதிர்பாராத விதமா அந்த சம்பவம் நடந்திடிச்சுன்னு ஒரு கெட்ட காரியத்த பத்தி சொல்லுவாங்க. அதுமாறியே இவரும் சொல்லுறாரு.
  • Rate it:
  • 4
  •  
  • 0
Share this comment
Baskaran Subramanian - chennai,இந்தியா
2011-04-01 00:44:54 IST Report Abuse
நீயெல்லாம் தமிழ் நாட்டுக்கு ஒரு சாப கேடு... அது என்ன எப்ப பாத்தாலும்... "அன்னை சோனியா", "அன்னை சோனியா" ன்னு ஜால்ராவ தட்டோ தட்டுன்னு தட்ற வெக்கமே இல்லாம.... சோனியாவுக்கு ..... மாதிரி இருக்கிற நீ.... பேச்சை பாரு...
  • Rate it:
  • 3
  •  
  • 0
Share this comment
Rameshbabu R - Salem,இந்தியா
2011-04-01 00:44:10 IST Report Abuse
எதிர்பாராத விதமாய் நி மனிதனாக கூடத்தான் பிறந்து விட்டாய்.. இதெல்லாம் சகஜமப்பா..
  • Rate it:
  • 4
  •  
  • 0
Share this comment
Vaigai Selvan - Chennai,இந்தியா
2011-04-01 00:31:12 IST Report Abuse
நீங்கள் வேட்பாளர் ஆனது எதிர்பாராதது தான்.. ஆனால்நீங்கள் டிபாசிட் இழக்கப்போவது நாங்கள் எதிர்பார்த்தது..
  • Rate it:
  • 4
  •  
  • 0
Share this comment


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக