திங்கள், 28 மார்ச், 2011

wickyleaks about hrble Prapakaran

தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் பிடிபடவில்லை என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டள்ளது. அவர் காலத்தால் மறையவில்லை. ஆனால் காலச்சூழலால் மறைவாக உள்ளார். அவர் தலைமையில் தமிழ்  ஈழக் குடியரசு அமையும். அப்பொழுது அனைத்து உண்மைத் தகவல்களும் வெளிவரும்.ஞாலம் வாழ்த்த மலரும் ஈழம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக காப்போம்! 

பிரபாகரனை உயிருடன் பிடிக்க விரும்பியது இலங்கை: விக்கிலீக்ஸ்

First Published : 28 Mar 2011 03:07:56 PM IST

Last Updated : 28 Mar 2011 03:09:52 PM IST

கொழும்பு, மார்ச் 28- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிக்க இலங்கை அரசு விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனை உயிருடன் கைது செய்யுமாறு அதிபர் ராஜபட்சவும் பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரிகளும் உத்தரவு பிறப்பித்திருந்தனர் என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இதன் காரணமாகவே போரில் பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து இலங்கை அரசும், ராணுவமும் சிறிதும் கவலைப்படவில்லை என்றும் விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.ஆனாலும், போர்க்களத்தின் உண்மையான நிலவரம் குறித்து ராஜபட்சவுக்கும் பாதுகாப்புத்துறை செயலருக்கும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும், இலங்கை அரசு எதிர்பார்த்தது போல் பிரபாகரன் உயிருடன் பிடிபடவில்லை என்றும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்

He is Living in the world. Every Tamilian confident43
By Reka
3/28/2011 3:54:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக