திங்கள், 28 மார்ச், 2011

War against Congress - Seeman:

போராட்டம் வெல்க! ஈழததமிழர்களை அழித்தவர்கள் தேர்தலில் அழியட்டும்! மக்களை மண்ணோடு மண்ணாகப் புதைத்தவர்கள் தேர்தலில் மண்ணாகி மறையட்டும்!  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! /  எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக காப்போம்!


திசையன்விளை, மார்ச். 27-
 
 
தமிழக சட்டமன்ற தேர்தலில்  காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்யப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டைரக்டர் சீமான் அறிவித்தார். அதன்படி நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. திசையன் விளையில் நடந்த கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு ராதாபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேல்துரையை எதிர்த்தும், அந்த தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க.வேட்பாளர் மைக்கேல்ராயப்பனை ஆதரித்தும் பேசினார். அவர் பேசியதாவது:-
 
தமிழக சட்டமன்றதேர்தல்  தமிழ் தேசிய இயக்கத்தின்  எதிரி காங்கிரசிற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நடக்கும் அரசியல் யுத்தம். இதில் வெற்றி பெற எங்கள் தாய் தமிழன், தாய் தந்தையர்கள், அக்கா, தங்கைகள் வாழ்த்தி கொண்டிருக்கின்றனர். வெள்ளையனே வெளியேறு என வீர முழக்கமிட்ட நெல்லை சீமையின் புலித் தேவர் பிறந்த மண்ணில் இருந்து காங்கிரசை வீழ்த்த  திசையன்விளையில் அரசியல் யுத்தம் தொடங்கியுள்ளோம்.
 
இந்த தொடக்கம் காங்கிரசுக்கு அடக்கம்.  எங்களை பார்த்து காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை தாமதமாக  அறிவித்தனர். காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்க வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த காங்கிரஸ் இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல. வ.உ.சிதம்பரனாரை அவமானப்படுத்திய கட்சி காங்கிரஸ். காமராஜரை கைது செய்ய சொன்ன கட்சி காங்கிரஸ்.  காங்கிரஸ் தோல்வி, நாம் தமிழர் கட்சியின் வெற்றி.
 
110கோடி இந்தியர்கள் இருக்கையில் இத்தாலியில் இருந்து  வந்த சோனியா ஆட்சி செய்கிறார். எனவே சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு வாக்களிக்க வேண்டும்  என்றார். முன்னதாக அவர் பிரபாகரனின் தாயார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக