புதன், 27 ஏப்ரல், 2011

Thamizh Eezham is the only remedy = Ramdoss: இலங்கைச் சிக்கலுக்குத்தமிழ் ஈழமே தீர்வு: இராமதாசு

தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் அதைப்பற்றிக்கவலைப்படாமல் இப்பொழுதே இராமதாசு கொலைகாரக் காங்.அணியில் இருந்து விலக வேண்டும். அப்பொழுதுதான் அவர் சொல்லுக்கு மதிப்பு இருக்கும். படுகொலைகள் நடந்த பொழுது அமைச்சர் பதவியைத்  துறக்காத மகனை வைத்துக் கொண்டு மறைமுகமாக  உடந்தையாக இருந்தார் என்னும் பழிச்சொல் நீங்கவும் இவரது தமிழ் நலப்பணிகளின் உண்மையை உணரவும் தமிழ் ஈழம்  மலர மேலும் இவர்   போராடி வழிகாட்டவும் உடனே கொலைகார அணியில் இருந்து வெளியேற வேண்டும். அதற்கான மனம் வராவிட்டால், குறைந்தது தன் கட்சியின் சார்பாகத் தமிழ் ஈழப் பரப்புரை தூதுக் குழு என ஒன்றை அமைத்து உலக நாடுகள் எங்கும் அனுப்பி அனைத்து நாடுகளும் தமிழ் ஈழத்திற்கு ஏற்பிசைவு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 



இலங்கைப் பிரச்னைக்கு தமிழ் ஈழமே தீர்வு: ராமதாஸ்

First Published : 26 Apr 2011 01:02:57 PM IST


சென்னை, ஏப்.26- இலங்கைப் பிரச்னைக்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட இலங்கைப் படைகள் அரங்கேற்றிய அத்தனை போர்க்குற்றங்களையும் ஐநா அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.சூடான், ருவாண்டா, யுகோஸ்லாவியா போன்ற நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்காக அந்த நாடுகளின் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டதைப் போல, தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபட்சவும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.இலங்கை இனப்பிரச்னைக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழமே என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை ஐநா.,வும் உலக நாடுகளும் தொடங்க வேண்டும்.இலங்கையுடனான தூதரக உறவுகளையும், வணிக உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

போடா குப்பா, எல்லாம் செய்ய உதவியது காங்கிரஸ் திமுக & பாமக கூட்டணி, பேசறது ஒன்னு செய்யறது ஒன்னு. வந்துடன் வெண்ணை.
By சகதேவன்
4/26/2011 10:48:00 PM
Regarding the views of reader Tamil Nesan, let's appreciate it. it is true LTTE is almost not in existence but some wrong elements in the Congress Government of India will continue to extend the ban on LTTE until the end of this world. Their sole aim behind closed doors- to wipe out LTTE at any cost without any regard for the civilians in Eelam. To assist, enable Singhalese there to live as a single strong nation. These they feel, will be beneficial for future India. What they have failed to see in future - the reawakening of Tamils once they come to know the truth.
By Palanisamy T
4/26/2011 10:01:00 PM
ஈழத் தமிழர்களுக்கு ஐ நா சபை, ஸ்வீடன், நோர்வே போன்ற நாடுகள் உதவி செய்தால்தான் உண்டு என்று நினைத்து நம்பிக்கையிழக்க வேண்டாம். தமிழகத்து ஒட்டு மொத்தத் தமிழர்கள் ஒரு மனத்தோடு உறுதி- யோடு செயல்பட்டால், சாமி சத்தியமாக, நிச்சயமாக ஈழம் உருவாகும். அதை எப்படி என்பதை சரியான நேரத்தில் இறைவன் நமக்கு அருளுவான்;நம்புங்கள்.
By பழனிசாமி T
4/26/2011 9:46:00 PM
இங்கு ஈழத் தமிழர்களை எதிர்த்து எழுதுபவர்கள் யார் தெரியுமா? தமிழினத்தைக் காட்டிகொடுத்து அழித்த இலங்கை முஸ்லீம்களும், அவரது ரத்த சொந்தங்களும்தான்! குள்ளநரித்தனமாக அவர்களை 'நீங்கள் தமிழர்களே அல்ல! வியாபாரத்திற்க்காக தமிழ் கற்றுக்கொண்டு அதனை வீட்டில் பேசும் இந்தோனேசியர்கள்'எனப் பிரித்தாண்டான் சிங்களவன்!அதனை நம்பி தமிழனை கைவிட்டு,இனத்தைவிட மதத்திற்கு முழு முக்கியத்துவம் தந்து, காட்டிக்கொடுத்தனர் பல புல்லுருவிகள்!அந்த எட்டப்பன் கூட்டத்தை முழுமையாக அழிக்காமல் விட்டது இமாலயத் தவறே! அந்த எட்டப்பன்களே சொந்த சகோதரர்களைக் கடைசிவரை காட்டிக்கொடுத்தனர்!சில யாழ் தமிழர்கள் தலைக்கனம் படித்து அலைந்தது ஒரு காலம். ஆனால் தாழ்த்தப்பட்ட மீனவர்குலத்தில் பிறந்து தன்னலம் பாராமல் தமிழனுக்காக போரிட்ட பிரபாகரனைத் தூற்றுவது மிக மோசமானது! சொந்த சகோதரர் சிறிது தவறு செய்தாலும் அதனைப் பெரிதாக்கி அவரது தியாகங்களைக் கொச்சைப் படுத்துவது இழிபிறவிகள் மட்டுமே செய்யும் செயல்!
By மணி
4/26/2011 9:45:00 PM
தனி ஈழமே தீர்வு என்று சொன்னால் மட்டும் போதாது. அதில் நம் பங்கு இனிமேல் என்ன என்பதை அறிந்து செயலில் இறங்க வேண்டும். அந் நடவடிக்கைகளை ஐ நா வும் உலக நாடுகளும் தொடங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்- தால், நம் தலைமுறையிலும் தனி ஈழம் உருவாகாது இனிமேல் நம் பங்கு என்ன என்பதை ஆராய்ந்து அதையும் தமிழர்கள் முதன் முதலாக தொடங்க வேண்டும். நம் பங்கை செலுத்துவதற்கு முன் நம்மை நாம் முதலில் சரிபடுத்திக் கொள்வோம். முதலாக நல்ல தமிழர்களாக வாழக் கற்றுக்கொள்- வோம். கடல் கடந்தத் தமிழர்கள் அப்படித்தான் வாழ்கின்றார்கள்
By
4/26/2011 9:31:00 PM
dai dai unoda dakalti velai theriyayha tamil makkaluku
By tamilan
4/26/2011 8:48:00 PM
Mr RAMADOSS YOU ARE A DOCTOR AND SHOULD HAVE COMMON SENSE, CAN YOU EXPECT JUSTICE FROM THE PERSON WHO COLLABARATED WITH RAJAPAKSE AND CO THE JUSTICE, IF YOU REALLY WANT TAMIL ELLAM PLS ABONDON THE PARTY AND WELL BEING OF YOUR FAMILY AS A FIRST STEP AND FIGHT IT ON THE STREETS, ONLY THEN TAMILS CAN LIVE IN PRIDE, WITH YOU, JAYA AND KARUNA AROUND EVERY BODY KNOW THE ATTITUDE TOWARDS EACH FOR MONEY, FAMILY, CASTE..................GOD SAVE THIS TAMIL RACE FROM THE BRAMANISTIC DEPENDENT ANIMALS..................
By VETRI
4/26/2011 8:46:00 PM
இந்த மாதிரி இலங்கை தமிழர்களை உசுப்பேத்தி விட்டு அவர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விட்டு கடைசியில் கை கழுவி விட்டது போதும்! அந்த அப்பாவி மக்களுக்கு நார்வே. சுவீடன் அல்லது ஐநா சபை என்று யாராவது உதவி செய்தால் தான் உண்டு! இலங்கை தமிழர்களை உள்ளூர் அரசியலுக்கு பகடை காய்களாக பயன் படுத்தி அதில் ஆதாயம் தேடிய தமிழக அரசியல்வாதிகள் இனிமேல் பேசுவதை இங்கிருக்கும் தமிழர்களோ அல்லது புலம் பெயர்ந்த தமிழர்களோ யாரும் நம்பப்போவதில்லை! போய் அன்புமணிக்கு நடுவண் அரசில் எப்படி பதவி வாங்கிக்கொடுக்கலாம் என்பதை பற்றி யோசியுங்கள் மருத்துவரே! திமுகவை விட மக்களுக்கு உங்கள் மீது இருக்கும் விசேஷ வெறுப்பை புரிந்து கொண்டு சற்று அமைதியாக இருங்கள்!! மே 13 க்கு அதிக நாட்கள் இல்லை
By பாலா ஸ்ரீனிவாசன்
4/26/2011 8:30:00 PM
மிக மிக தாமதமான யோசனை. இவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ ஈழம் ஒரு நாள் முகிழ்க்கும். திருடர்களின் முகத்திரை கிழியும்.
By சாது. இயேசுவானந்தா , ஒரத்தநாடு. .
4/26/2011 8:17:00 PM
ஐயோ ....உங்க கூட்டணி தலைவர் ஒரு 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தா போதுமே! எல்லாம் சரி ஆயிடும். உங்க மகனுக்கும் MP பதவி கிடைச்சுடும். அப்புறம் வேற என்ன வேணும் உங்களுக்கு!
By Suresh
4/26/2011 8:13:00 PM
திருடர்கள் ஜாக்ரதை, இவ்வளோ நாள் என்ன ராமதாஸ் கைலே கத்தி வச்சுக்கிட்டு ஆபரேஷன்???? பண்ணிக்கிட்டு இருந்தாரா
By அருண்
4/26/2011 6:22:00 PM
இதெற்கெல்லாம் துணை போன மு க வுடன்தான் இந்த மரம்வெட்டி ராமதாசு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்.இப்போது இனபடுகொலை பற்றி அறிக்கை விடுகிறார். இரட்டை வேடம்!!
By Tamilian
4/26/2011 5:38:00 PM
சார் .......எலெக்சன் நடக்கும் போது ஈழ பிரச்சினைக்கு லீவு கொடுதிடீன்களோ?.உங்களை போன்ற தலைவர்கள் இருக்கும் வரைக்கும் அல்லது திருந்தும் வரைக்கும் தமிழனின் வாழ்வு உருப்படவே உருப்படாது.
By bharathi
4/26/2011 5:34:00 PM
தமிழர் பிரச்சனை , வன்னியர் முதல்வர் , முற்போக்கு கொள்கை, ஊழல் எதிர்ப்பு என்று எப்படி தனித்தனியே timetable போட்டு உங்களால் பேச முடிகிறது. நல்ல வேலை தேர்தல் முடிந்து விட்டது இனிமேல் நீங்கள் தமிழ் ஈழம் ,ஊழல் எதிர்ப்பு எல்லாம் பேசலாம்.
By ஆ.அருமை நாதன்
4/26/2011 5:12:00 PM
ஆஹாஹா என்ன ஞானோதயம்?
By karunganni
4/26/2011 5:06:00 PM
இது ஓர் ஈன பிறவி. தமிழன் என்று கூறுவதுடன் சரி.தனக்கு என்றல் மரம் வெட்டும். இது ஓர் ஈன பிறவி.
By சுரேஷ்.ச,qatar
4/26/2011 5:03:00 PM
Dear Sir, I appreciate your views. Start to prove this, please start public meetings and tell to people about the attrocities and the plight of Tamils. Tell them not to be afraid of LTTE any more because they are not in existence. Please help for a meaningful solutions.
By tamil nesan
4/26/2011 4:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக