புதன், 27 ஏப்ரல், 2011

Prathipaa speech in the parliament of Mauritius: மொரீசியசு நாடாளுமன்றத்தில் பிரதீபா பாட்டீல் பேச்சு

மொரிசீயசில் வாழும் தமிழ் மக்கள் அவர்கள் தமிழ் கற்பதற்காக வேண்டும் உதவிகள் பற்றி ஒன்றுமே பேசவில்லையா? அலைக்கற்றை ஊழலை மொரீசியசில் உசாவப் போவதால் அதைப்பற்றி மட்டும் தனியே பேசியிருப்பாரா? 



மொரீசியஸ் நாடாளுமன்றத்தில் பிரதீபா பாட்டீல் பேச்சு

First Published : 26 Apr 2011 02:52:42 PM IST


போர்ட் லூயிஸ், ஏப்.26- ஐந்து நாள் சுற்றுப்பயணமாக மொரீசியஸ் சென்றுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:தீவிரவாதம் மற்றும் கடற்கொள்ளைகளை தடுப்பதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது. இந்தியப் பெருடங்கடலில் கடற்கொள்ளைகளை தடுப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது.தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு மொரீசியஸ் ஒத்துழைப்பு தந்து வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம்பெற மொரீசியஸ் தெரிவித்து வரும் ஆதரவுக்கு நன்றி.இவ்வாறு பிரதீபா பாட்டீல் தனது உரையில் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக