சென்னை, ஆக. 21: ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு தனது வாழ்த்துகளை முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:கேரள மாநில மக்கள் அறுவடைத் திருநாளாகப் பெரிய அளவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டும் ஓணம் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.சாதி, மத, வேறுபாடு கருதாமல் எல்லா மக்களும் கொண்டாடும் ஓணம் திருநாள் ஆணவம், அகம்பாவம் ஆகிய கொடிய குணங்கள் மனித சமுதாயத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதையும், அன்பு, அமைதி, சகோதர நேயம் ஆகியன மண்ணில் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.ஓணம் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் மலையாள மொழி பேசும் மக்கள் நிறைந்து வாழும் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு சிறப்பு விடுமுறை விடப்படுகிறது. ஓணம் திருநாள் கொண்டாடும் மலையாள மொழி பேசும் அனைவரின் வாழ்விலும் அன்பும் அருளும், அமைதியும் தழைத்து வளம் பெருகிட தமிழ்ச் சமுதாய மக்கள் சார்பில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2010 5:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 8/22/2010 5:50:00 AM
ஓணம் பண்டிகை: ஜெயலலிதா வாழ்த்து
First Published : 22 Aug 2010 12:02:42 PM ISThttp://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=291430&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0b93%u0ba3%u0bae%u0bcd+%u0baa%u0ba3%u0bcd%u0b9f%u0bbf%u0b95%u0bc8%3a+%u0b86%u0bb3%u0bc1%u0ba8%u0bb0%u0bcd%2c+%u0b9c%u0bc6%u0baf%u0bb2%u0bb2%u0bbf%u0ba4%u0bbe+%u0bb5%u0bbe%u0bb4%u0bcd%u0ba4%u0bcd%u0ba4%u0bc1
ஓணம் பண்டிகை: ஆளுநர், ஜெயலலிதா வாழ்த்து
First Published : 23 Aug 2010 02:52:39 AM IST