ஓணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 செப்டம்பர், 2013

கேரளாவில் உள்ள சென்னை ? ஓணம் பண்டிகை - பிற்பகல் வரையே இருப்பூர்திப் பணிகள்

தென்னக இருப்பூர்தி என்பது கேரள இருப்பூர்திதானே! எனவே, தமிழர் திருநாளுக்குத் தரப்படாத விடுமுறை வாய்ப்பை மலையாள விழாவிற்குத் தரவேண்டியதுதான்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


ஓணம் பண்டிகை:  பயணச்சீட்டு மாடங்கள் பிற்பகல் வரை மட்டும் இயங்கும்

First Published : 14 September 2013 05:03 AM IST
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திங்கள்கிழமை அனைத்து ரயில் நிலையக் கவுன்ட்டர்களும் பிற்பகல் வரை மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
"ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையக் கவுன்ட்டர்களும், திங்கள்கிழமை (செப். 16) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும்' என, தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஓணம் பண்டிகை: முதல்வர் வாழ்த்து


சென்னை, ஆக. 21: ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு தனது வாழ்த்துகளை முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:கேரள மாநில மக்கள் அறுவடைத் திருநாளாகப் பெரிய அளவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டும் ஓணம் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.சாதி, மத, வேறுபாடு கருதாமல் எல்லா மக்களும் கொண்டாடும் ஓணம் திருநாள் ஆணவம், அகம்பாவம் ஆகிய கொடிய குணங்கள் மனித சமுதாயத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதையும், அன்பு, அமைதி, சகோதர நேயம் ஆகியன மண்ணில் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.ஓணம் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் மலையாள மொழி பேசும் மக்கள் நிறைந்து வாழும் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மற்றும் சென்னை மாவட்டங்களுக்கு சிறப்பு விடுமுறை விடப்படுகிறது. ஓணம் திருநாள் கொண்டாடும் மலையாள மொழி பேசும் அனைவரின் வாழ்விலும் அன்பும் அருளும், அமைதியும் தழைத்து வளம் பெருகிட தமிழ்ச் சமுதாய மக்கள் சார்பில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். 
கருத்துக்கள்

1.ஓணத்திருநாள் பழந்தமிழர் விழா. பின்னர் இவ்விழா திருமாலின் பிறந்த நாள் எனக் கொண்டாடப்பட்டது. மதுரைக் காஞ்சியில், மக்கள் சேர்ந்து வாழ்வதால் சேரி என அழைக்கப்படும் பகுதி மக்களுக்கிடையே திருவோணத் திருநாளில் யானைப்போர் நடைபெற்றது பற்றிக் குறிப்பிடப்படுகிறது. 2. பிற மாநிலத்தவர் விழாக்களுக்கும் பிற மொழியினர் விழாக்களுக்கும் விடுமுறை விடும் பெருந்தன்மை மிக்க கலைஞர் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் தமிழர் விழாக்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பிற அரசுகளை வேண்டி ஆவன செய்ய வேண்டும். 3. தமிழர்களின் பெருந்தன்மைகளைப் புரிந்து கொண்டு மலையாளிகள் தங்கள் மூல இனமும் மூல மொழியும் தமிழ் என்பதால் தமிழ்ப் பகையாளிகளாக நடந்து கொள்ளாமல் மூதாதையர் இனத்தையும் மொழியையும் போற்றும் நன்றி மிக்கவர்களாக நடந்து கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/22/2010 5:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஓணம் பண்டிகை: ஜெயலலிதா வாழ்த்து
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%u0b93%u0ba3%u0bae%u0bcd+%u0baa%u0ba3%u0bcd%u0b9f%u0bbf%u0b95%u0bc8%3a+%u0b9c%u0bc6%u0baf%u0bb2%u0bb2%u0bbf%u0ba4%u0bbe+%u0bb5%u0bbe%u0bb4%u0bcd%u0ba4%u0bcd%u0ba4%u0bc1&artid=291187&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest


ஓணம் பண்டிகை: ஆளுநர், ஜெயலலிதா வாழ்த்து

First Published : 23 Aug 2010 02:52:39 AM IST