செவ்வாய், 23 மார்ச், 2010

சர்ச்சையில் நித்யானந்தா சிக்கியதற்கு திட்டமிட்ட சதிச் செயலே காரணம்: பிரவீண் தொகாடியா



புதுதில்லி, ​​ மார்ச் 22:​ நித்யானந்தா சுவாமி திரைப்பட நடிகை ஒருவருடன் அந்தரங்கமாக இருப்பது போன்ற குறுந்தகட்டை ​(சி.டி.)​ வெளியிட்டு,​​ அவரை சர்ச்சையில் சிக்க வைத்ததற்கு திட்டமிட்ட சதிச் செயலே காரணம் என விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கூறினார்.​ ஹிந்துக்களுக்கு எதிரான சதிச் செயல் இது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.​ ​ தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:​ ​ இந்தக் குறுந்தகட்டை தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்து உண்மை நிலையை அறிந்த பிறகே,​​ அதைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியிருக்க வேண்டும்.​ இதுபோன்ற விஷயங்களில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்புகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் பின்பற்றியிருக்க வேண்டும்.​ ​​ ​ தில்லியில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளின் போது,​​ வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள்,​​ பிரமுகர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.​ அது உண்மையாக இருக்குமானால்,​​ அதை எதிர்த்து விசுவ ஹிந்து பரிஷத் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும்.​ ​ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்துவது நமக்கு பெருமை அளிக்கும் விஷயம்தான்.​ அதேநேரத்தில்,​​ நமது கெüரவத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது.​ நமது மத உணர்வுகளை எவரும் புண்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.​ ​ எனவே,​​ இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள்,​​ பிரமுகர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய சட்ட ரீதியான,​​ ஜனநாயக வழிமுறையிலான நடவடிக்கைகளை விசுவ ஹிந்து பரிஷத் எடுக்கும்.​ ​ கடந்த வாரம் ஒரிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் மாவட்டத்துக்குள் நான் செல்வதற்கு அந்த மாநில அரசு தடை விதித்ததைக் கண்டிக்கிறேன்.​ கந்தமால் மாவட்டத்துக்குள் ஹிந்துக்கள் அனைவரும் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.​ ​ இந்தியக் குடியுரிமை இல்லாத ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கந்தமால் மாவட்டத்துக்குள் சென்று வருவதற்கு ஒரிசா மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.​ ஆனால்,​​ இந்திய பிரஜையான நான் கந்தமால் மாவட்டத்துக்குள் செல்வதற்கு தடை விதிக்கிறது.​ ​ ரங்கநாத் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதன் மூலம்,​​ இந்து மதத்தைச் சேர்ந்த எஸ்.சி.,​​ எஸ்.டி.​ மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கல்வி,​​ வேலைவாய்ப்புகளைப் பறிக்க முயற்சி நடைபெறுகிறது.​ இந்த வகுப்பினருக்கான கல்வி,​​ வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை அளிப்பதற்காகவே நான் கந்தமால் மாவட்டத்துக்கு செல்ல விரும்புகிறேன்.​ ​ கடந்த 2008-ம் ஆண்டு கந்தமாலில் சுட்டுக் கொல்லப்பட்ட சுவாமி லட்சுமானந்த சரஸ்வதி நலிவடைந்த பிரிவினருக்கு கல்வி,​​ வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்றார் தொகாடியா.
கருத்துக்கள்

இந்துச் சமயம் காப்பாற்றப்பட வேண்டும் என்பவர்கள் நித்யானந்தனைக் கண்டிக்கிறார்கள். பிராமணீயம் காப்பாற்றப்பட வேண்டும் என்ப்வர்கள் நித்யானந்தனைப் புகழ்கிறார்கள். திக்கு முக்காடி மூச்சு முட்டிச் சாக இருப்பவனுக்கு மூச்சு விட வாய்ப்பு கொடுக்கிறார்கள். அப்பாவிப் பெண்களை ஏமாற்றித் தன்னை இறைவனாகக் கூறிக் காமவெறியில் பாழ்படுத்திய நித்யானந்தனுக்குக் கல்லால் அடிக்கும் தண்டனையையும் காயடிக்கும் தண்டனையையும் ஏற்படுத்தி வழங்கினால் பெண்கள் காப்பாற்றப்படுவார்கள்; இறைநெறியும் காப்பாற்றப்படும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/23/2010 3:32:00 AM

அடப் பாவிங்களா, யாருடா திட்டமிட்டு சாமியாரின் கையை ரஞ்சிதாவின் தொடையிடுக்கில் போக வைத்தது? அப்புறம் சதி பண்ணி சாமியார் ரஞ்சிதாவை கட்டிப்பிடிக்க வச்சிடீங்கலேடா. பாவம் வாயில் விரலை வைத்தாலும் கடிக்கத் தெரியாத சாமியார் மீது இப்படி திட்டம் போட்டு கவுத்திட்டீங்களேடா, விட்டிருந்த ரஞ்சிதா அவங்க பாட்டுக்கு சாமியாருக்கு ஆயில் மசாஜ் பண்ணி இறைச் சேவை செஞ்சிகிட்டு இருந்திருப்பாங்களே, அதில் மண்ணை வாரி போட்டுட்டீங்கலேடா? கல்யாணமான நிறைய பேரு தாம்பத்தியத்தில வர்ற பிரசிகளுக்கு தீர்வு காணும் ஆராய்ச்சியில் தானே சாமியார் ஈடுபட்டிருந்தார், அதுக்குத்தானே ரஞ்சிதாவை கட்டி பிடுச்சு உதடு கடித்தார், அப்புறம் விளக்கை அனைத்து ஆராய்ச்சியை துவக்கி அதில இறைவனையும் கண்டார். எல்லாம் மக்கள் நன்மைக்குத்தானே தன்னையே மெழுகுவர்த்தி மாதிரி அற்பனிச்சுகிட்டார். அதை போய் தப்பா புரிஞ்சிகிட்டேங்கலேடா. இனி மேலாவது இந்த மாதிரி பாசிடிவா think பண்ண கத்துகுங்கடா. வரட்டா, ஐயோ ....ஐயோ ...

By Nithya Gajakol Pandyananda
3/23/2010 3:21:00 AM

ஹிந்து சாமியார் சிவ்முரத் திவேதி விபசாரம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் ஹிந்து சாமியார் சிவ்முரத் திவேதியையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர். போலீஸ் விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபசாரம் நடப்பதும் உறுதியாக தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் ஹிந்து சாமியார் சிவ்முரத் திவேதியின் கோவிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபசாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக ஹிந்து சாமியார் சாமியார் சிவ்முரத் திவேதி கைது செய்யப்பட்டார். அவருடன் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 2 விமானப்பணிப் பெண்கள், கல்லூரி மாணவிகள் 2 பேர் பிடிபட்டனர். இந்தி படங்களில் நடித்து வரும் துணை நடிகை ஒரு வரும் இந்த வேட்டையில் சிக்கினார்

By maan
3/23/2010 1:42:00 AM

மாட்டிறச்சியை சாப்பிட கூடாதாம் எனய்யா முட்டாத்தனமா பேசுரீக பசுவை தெய்வமா மதிக்கும் நீங்கள் பசுந்தோலில் தயாரிக்கும் செருப்பை காலில் அணியக்கூடாது உன்னை மாதிரி ஆள் இருப்பதால் தான் இந்தியா இன்னும் முன்னேராமல் இருக்கு நித்யானந்தா ஆசிரமத்தில் புலித் தோலை வனத்துரை கைப்பற்றியதே அப்போ எங்கே போனது உங்கள் வீரம்

By thamil arasan-msa
3/23/2010 1:11:00 AM

ஹிந்து சாமியார் மாட்டியதால் ஹிந்துக்களுக்கு எதிரான சதியாம் இதுவே முஸ்லீம் கிருஸ்துவே சிக்கினால் முஸ்லீம் கிருஸ்துவர் களுக்கு எத்ரான சதி என சொல்லலாமா?

By buhari thamil nadu
3/23/2010 1:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக