செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனைத் ‘தீர்த்துக்கட்ட’ சோனியா பிறப்பித்த கமுக்க உத்தரவு?

ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சீர்குலைத்து, ராணுவ மோதலுக்கு ஊக்கப்படுத்தியது இந்தியாவும் – சோனியாவும் தான் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழு, ராஜபக்சேவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் சோனியாவும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுபற்றி பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ‘ஸ்டேட்ஸ்மென்’ ஆங்கில நாளேட்டின் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாம் ராஜப்பா ஆகியோர் தனித்தனியாக எழுதிய கட்டுரைகள் – இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன.
குழுவில் இடம் பெற்றிருந்தவரும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான எம்.ஜி.தேவசகாயம் எழுதிய கட்டுரை:
அண்மையில் உலக நாடுகளையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது ‘சேனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள். ஈழத் தமிழர்களை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி, சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்வதும், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதும் இதில் இடம் பெற்றுள்ளது. அண்மையில் இலங்கை சென்று திரும்பிய பிரிட்டிஷ் முன்னாள் வெளியுறவு அமைச்சர் டேவிட் மில்லி பாண்ட், பிரான்சு முன்னாள் வெளியுறவு அமைச்சர் பெர்னார்டு கவுச்னார் ஆகியோர், “யுத்தம் முடிந்த பிறகு, தமிழர்கள் நான்காம் தர, அய்ந்தாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். வெளிநாட்டுக் கொள்கை என்று ஏதேனும் ஒன்று இருக்குமானால், உடனடியாக இந்த மோசமான மனித விரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்” என்று எழுதியிருந்தனர்.
இந்த கொடூரமான மனித அவலங்களுக்குப் பின்னால், இந்தியாவின் பங்கு உண்டு என்பது வெளிவராத உண்மை.
2005 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்தியாவின் விருப்பத்துக்கு மாறாக ரணில் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்சே வெற்றிப் பெற்றார். ராஜபக்சேவின் வெற்றியை விரும்பாத புதுடில்லி, அவரை அங்கீகரிக்காமல், ஓரம் கட்டி, ராஜபக்சேவை ஒதுக்கி வைத்துவிட்டது. இந்த நிலையில் தந்திரக்காரரான ராஜபக்சே, தன்னை நேர்மையாகக் காட்டிக் கொள்ளவும், இந்தியாவின் ஆதரவைப் பெறவும் விரும்பினார். அதற்காக ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முயன்றார். தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழின உணர்வு கொண்ட மூத்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு ஈழத் தமிழர் அரசியல் தீர்வுக்காக இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே உறவுப் பாலமாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டார். கொழும்பிலிருந்து வந்த இந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் நானும் (எம்.ஜி. தேவசகாயம்) இடம் பெற்றிருந்தேன். குழுவின் முதல் கூட்டம் 2007 மே மாதம் 10 ஆம் தேதி சென்னையில் நடந்தது. ராஜபக்சேவின் மூத்த ஆலோசகர் கலந்து கொண்டார். இருதரப்பினரும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான திட்டம் ஒன்றை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் குழு கொழும்பு சென்று 2007 ஜூலை 17 அன்று ராஜபக்சேயையும் கொழும்பு உயர் மட்ட அதிகாரிகள் குழுவையும் சந்தித்தது. ராஜபக்சே விரிவாக பேசினார். அவரது பேச்சு மிகவும் ஈடுபாட்டுடனும், ஆக்கபூர்வமாகவும் இருந்தது. தமிழக குழுவின் கருத்துகளை ராஜபக்சே முழுமையாக ஒப்புக் கொண்டார். பிரச்னைகளுக்கான தீர்வு முதலில் அந்த நாட்டு மக்களிடமிருந்தே உருவாக வேண்டும் என்றும், அந்தத் தீர்வுத் திட்டங்கள் சர்வதேச கருத்துகளோடு, குறிப்பாக, இந்தியாவின் கருத்தைப் பெற்று திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கூறினோம். ராஜபக்சேயும் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு, தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்குப் பகுதிகளை ஒன்றாக இணைத்து, சுயாட்சி வழங்கும் திட்டத்தை ராஜபக்சே அறிக்கையாகவே வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தமிழகக் குழு, ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் தொடர்ந்து பலமுறை சந்தித்து, தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டது. கடைசியாக, இலங்கை சட்ட அமைச்சர், ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசிய பிறகு ராஜபக்சேவுடன் முக்கியமான சந்திப்பு 2008 மார்ச் 25 இல் நடந்தது. அப்போது அரசியல் தீர்வு திட்டம் ஒன்று இறுதியாக்கப்பட்டது.
உடனே, கொழும்பிலிருந்த இந்திய தூதரகம் இதை அறிந்து ஆத்திரமடைந்தது. அதன் துணை ஆணையர் ஏ. மாணிக்கம், என்னை சந்திக்க நேரம் கேட்டார். நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு மாலை 5 மணிக்கு வரச் சொன்னேன். ஆனால், அந்த அதிகாரி வரவில்லை. அதற்கு பதிலாக எங்களுடன் பேசிக் கொண்டிருந்த கொழும்பு அதிகாரிகள் குழுவிடம், அங்கீகாரம் இல்லாத நபர்களிடம் எப்படி பேசலாம் என்று இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது. பிறகு நான், நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளை விளக்கி, பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.எ. நாயருக்கு 2008 ஏப்ரல் முதல் தேதி விரிவான கடிதம் எழுதினேன். அவர், என்னுடன் பணியாற்றிய அதிகாரி நீண்ட காலப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு உருவாகியுள்ள இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை” என்று அய்.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி மேலும் பல விவரங்களை ‘ஸ்டேட்ஸ்மென்’ ஏட்டின் ஓய்வு பெற்ற மூத்த செய்தியாளர் சாம் ராஜப்பா, தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழக குழுவினர் அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதில் வெற்றிப் பெற்ற நிலையில், இந்தியா தனது போக்கை மாற்றிக் கொண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழு ராணுவத் தாக்குதலைத் தொடங்குமாறு, ராஜபக்சேவுக்கு பச்சைக் கொடி காட்டியது. பிரபாகரன், உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோரின் தலையை வெட்ட வேண்டும் என்றும், இதற்காக எந்த ராணுவ உதவியையும் இந்தியா வழங்கும் என்றும் சோனியா கூறினார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்தன. பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கரமேனன், பிரதமர் அலுவலகத்தில் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழு ஒன்றாக இணைந்து, நாட்டின் நலனைவிட சோனியாவின் விருப்பமே முக்கியம் என்று செயல்பட்டன. அதன் பிறகு, கொடூரமான இனப் படுகொலைகளை ராணுவம் நடத்தியது. அதுதான் ‘சேனல் 4’ வெளியிட்ட படுகொலை காட்சிகள். இலங்கையே இந்தப் புதைகுழியை வெட்டிக் கொண்டுவிட்டது.
‘சேனல் 4’ ஆவணங்களைப் பார்த்து உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கும்போது, இந்தியா மட்டும் எதுவுமே தெரியாதது போல் கள்ள மவுனம் சாதிப்பதற்கு காரணம் இதுதான்.
ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்படும்போது, புதுடில்லியும், இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததிலிருந்து தப்பிவிட முடியாது. அதற்கான மணி ஒலிக்கத் தொடங்கி விட்டது” – என்று சாம் ராஜப்பா எழுதியுள்ளார்.
விடுதலை இராசேந்திரன்

இலங்கை அகதிகளுக்கு்த் தமிழக அரசு ஓய்வூதியம்


பாராட்டுகள்.அவர்களை முகாம்களில்அடைத்து வைக்காமல் நாட்டு மக்களுள் ஒரு பகுதியினராகத் தன்னுரிமையுடன் வாழ விரைவில் வழி செய்யுங்கள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசு ஓய்வூதியம்
First Published : 02 Aug 2011 11:52:11 AM IST


சென்னை, ஆக.2: இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாகத் தங்கி உள்ளவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவின்மூலம் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 5544 இலங்கைத் தமிழர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதிமாகப் பெறுவார்கள் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் சிக்கலைத் திசைதிருப்ப மத்திய அரசு முயற்சி: பழ.நெடுமாறன்

ஈழத் தமிழர் பிரச்னையை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சி: பழ.நெடுமாறன்

First Published : 02 Aug 2011 12:40:21 PM IST


சென்னை, ஆக.2: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் ஈழத் தமிழர் பிரச்னை எழுப்பப்படும் என்பதால் எதிர்க்கட்சிகளை திசைதிருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபட்ச தலைமையில் வந்துள்ள குழுவினருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு  அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. தி.மு.க. உறுப்பினர்கள் அவைக்கே வரவில்லை.நாடாளுமன்றத்தின்  மழைக்காலக் கூட்டம் தொடங்கும் வேளையில் இலங்கை நாடாளுமன்றக் குழு வந்திருப்பது திட்டமிட்ட ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்னால் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ்  கொழும்பு சென்று ராஜபட்சவை சந்தித்துப் பேசியதின் விளைவாகவே இக்குழு  அனுப்பப்பட்டுள்ளது. மழைக்காலக் கூட்டத் தொடரில் ஈழத் தமிழர் பிரச்சினை உறுதியாக எழுப்பப்படும் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சிகளைத் திசைத் திருப்புவதற்கு இலங்கைக் குழுவை இந்திய அரசு திட்டமிட்டு வரவழைத்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.தமிழக மக்களின் மன உணர்வுகளை மேலும் மேலும் அவமதிக்கும் வகையில் இந்திய அரசு ராஜபட்ச குழுவுடன் கைகோர்த்து நிற்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு நல்ல பாடம் கற்பித்தும்கூட இந்திய அரசு திருந்தவில்லை. தமிழக மக்கள் இந்த துரோகத்தை ஒரு போதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்.இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Awards for whom? விண்ணப்பித்து வாங்குவதா விருது?

கட்டுரையாளரின் நோக்கம் தற்பெருமை அடிப்படையிலானதே அன்றி உண்மையை உணர்த்த வேண்டும் என்பதாக இல்லை. சௌராட்டிரராக இருந்தும் சரியான தமிழ் ஒலிப்பில் நடிகர்களுக்கேற்றவாறு குரலை மாற்றி அமைத்தும் சிறப்பாக மாடிய சிறப்பிபற்குரியவர் சௌந்தரராசன். அவருக்கு விருது கொடுப்பதைக் கேலி பேசக்கூடாது. இன்னாருக்கு விருது வழங்கியிருக்கலாம் எனக் கூறலாமே தவிர, தகுதியானவர் பெற்ற விருதைக் கேள்விக்குறியாக்கக்கூடாது.  தமிழே தெரியாத கலைஞடர்களுக்குக் கடந்த ஆண்டுதான் விருதுகள் அளித்துள்ளார்களா? ஆண்டுதோறும்  அவிழ்த்துப் போட்டு ஆடிப் பண வரவிற்குக்காரணமான யாருக்கும்  விருதுகள் அளிக்கவில்லையா? தமிழக விருதுகள் என்றாலே பொதுவாகத் தமிழரல்லராதவருக்குக் கொடுப்பது வழக்கமாக இருக்கும் பொழுது ஏதோ புதிய செய்தி போல் கூறி உள்ளார். விருதுகள் பற்றிய உண்மையை உணர்த்த வேண்டியவர் தடுமாறித் திசை மாறி எழுதி உள்ளார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

விண்ணப்பித்து வாங்குவதா விருது?

First Published : 02 Aug 2011 12:39:48 AM IST


தமிழக அரசு தரும் "நல்லாசிரியர்' விருது ஒவ்வோராண்டும் செப்டம்பர் 5-ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த விருது மட்டுமன்றி, "கலைமாமணி' விருது பற்றிய செய்திகளும் வரும்போதெல்லாம் அட இவருக்கா இந்த விருது எனச் சிலர் பெயர்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதும், சில பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவதும் தொடர்கதையாகிவிட்டது.இதனால், இவ்விருதுகள் வரவர கேலிக்கூத்தாகி, விருது பெற்றவர்களுக்கும், ஏன் விருதுக்குமே கூட மரியாதையற்ற நிலை உருவாகி வருகிறது. அரசுகள் மாறலாம், கட்சி,அரசியல் மாறலாம். ஆனால், மரபுசார்ந்த சில மாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு.சொல்லப்போனால், திரைக் கலைஞருக்கும் ஆசிரியருக்கும் அரசு விருது தருவதுபோல, எடுத்துக்காட்டான உழவர்களுக்கும், பொதுநோக்கில் சேவைபுரியும் அரசு ஊழியர், மருத்துவருக்கும், புதுமைசெய்யும் இளைஞருக்கும் நல்லவற்றைத்தரும் இதழ் மற்றும் செய்தியாளர்களுக்கும் நமது அரசு விருது வழங்கி கெüரவம் செய்தால் பல துறைகளிலும் உற்சாக ஊற்றுக் கிளம்பும்.அரசியல் கடந்து, மக்களால் மதிக்கப்படும் சான்றோர், புனிதமான பணிகளில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டோர் ஆகிய பெருமக்களை, அரசு, தானே முயன்று தகவல் சேகரித்து, தகுதியானவரை அடையாளம்கண்டு, அழைத்துப்பாராட்டி, விருதுபெறும் அவரது தகுதிகளை அனைவரும் அறியச்சொல்லி, அவரது பணிதொடர வாழ்த்தி, பின்னர் விருதுதந்து அனுப்ப வேண்டும்.ஆனால், இன்றுள்ள நிலை நல்லாசிரியரோ, கலைமாமணியோ அவரே தனது தகுதிகளை எடுத்து விளம்பி - அவற்றுக்கான சான்றுகளையும் இணைத்து - விண்ணப்பித்த பிறகு, சிபாரிசுகளின் அடிப்படையில் தேர்வுசெய்து, நூற்றுக்கணக்கானோரை வரிசையாக வரச்சொல்லி இலவச விநியோகம்போல, விருது கொடுத்து அனுப்புவதில் என்ன கெüரவம் இருக்கிறது? இதன் பலன்தான் என்ன?கடந்த ஆண்டு தமிழே தெரியாத நடிகை தமன்னாவுக்கும், ஸ்ரேயாவுக்கும் தமிழ்நாடு அரசு "கலைமாமணி' விருது தந்தது நகைப்புக்கு இடமானது. கலைக்கு மொழி கிடையாது எனும் பொத்தாம் பொதுவான விளக்கம் போதாது.மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் தகுதி என்றால், சர்க்கஸ் கோமாளிகளுக்கும் விருது கொடுத்து கௌரவிப்பதுதானே முறை? அவரும் கலைஞர்தானே? அவர்கள் படும்பாட்டுக்கு அங்கீகாரமாவது கிடைக்கும்.சிலர், பலருடைய சிபாரிசுகளால், தகுதியற்றவர்க்கும் வாரிவழங்கப்படும் விருதுகளால், சான்றோர் பலரும் விருதுகளைப் பார்த்து எள்ளி நகைப்பதும் சற்றே தள்ளி நடப்பதும் நடக்கும்தானே.முதலில் ஒரு கேள்வி: ""எனக்குக் கடன் வேண்டும், உரியமுறையில் திரும்பக் கட்டிவிடுவேன் என்று ஆசிரியர் அரசிடம் விண்ணப்பம் செய்யலாம், எனக்குப் பணி இடமாறுதல் வேண்டும், இந்த இடம் கிடைத்தால் நல்லது'' என்று அரசிடம் விண்ணப்பிக்கலாம். இவற்றை விட்டு, ""எனக்கு விருது கொடுங்கள்'' என்று சுயமரியாதை உள்ள யாரும் விண்ணப்பம் போடுவார்களா என்ன? ஏன் இது நமது அரசுகளுக்குப் புரிவதில்லை?இப்போது, இந்த விருதுகளைப்பெற விண்ணப்பம்போடும் பலரும், அதை எப்படியாவது வாங்கிவிடச் செய்யும் செலவு உள்ளிட்ட செயல்கள் விருதுகளே வெட்கப்படும்படியல்லவா உள்ளன.அப்படியானால், இதுவரை விருதுபெற்ற யாருக்கும் சுயமரியாதை கிடையாதா என்று கேள்வியைத் திருப்பினால், அப்படி எல்லோரையும் சொல்லிவிட முடியாது.பெரும்பாலோர் அப்படி இருந்தாலும், சுயமரியாதை உள்ள சிலர், தம் மீது அன்பு கொண்டவர்களின் தொந்தரவு தாங்காமல், கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டு விருதுவாங்க மட்டுமே மேடைக்கு வந்ததும் உண்டு. இப்படியான விருதை அவர்கள் பெரிதுபடுத்தாமல் நண்பர்களின் மகிழ்ச்சிக்காக ஏற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.அப்படியானவர்களைச் சந்திக்கும்போது, விருதாளர்களைத் தேர்வுசெய்யும் முறை மற்றும் விருதுவழங்கும் முறை சரியல்ல என்றே அவர்களும் மனம் கசந்து சொல்கிறார்கள்.இலக்கியத்தில் இன்றும் எல்லோராலும் மதிக்கப்படும் இந்திய அரசின் கெüரவம்மிகுந்த இலக்கிய விருதான சாகித்ய அகாதெமி விருதுக்கான தேர்வுக்குழுவில் நான் சிலமுறை இருந்திருக்கிறேன். அவர்கள் பல படிகளை வைத்திருக்கிறார்கள். முதல்கட்டத் தேர்வின்போது, பத்துப்பேர்களைக் கேட்பார்கள்.பரிந்துரைக்கான புத்தகங்களை அனுப்பி வைப்பதோடு, இந்த நூல்கள் தவிரவும், உங்கள் பார்û வயில்பட்ட விருதுக்குத் தகுதியான நூல் என்று கருதுவதை நீங்களே வாங்கிக்கொண்டு, அந்த நூலின் தகுதிகளை எங்களுக்குத் தெரிவியுங்கள், அந்த விலையை நாங்கள் தந்துவிடுவோம் என்றும் நடுவர்களுக்குத் தெரிவிக்கப்படும். அறிவிக்கப்படும்வரை எழுத்தாளருக்குத் தெரியாமலே இது நடக்கும். பலகட்டத் தேர்வு செய்தோரை அவர்களுக்குத் தெரிய வழியுமில்லை.இதேமுறையில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் என் தலைமையிலான தேர்வுக்குழு, 1997-ம் ஆண்டின் சிறந்த நாவலாக "சாய்வு நாற்காலி' நாவலைத் தேர்வு செய்தது.மதுரை திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட விழாவில் நானே என் கையால் அந்த விருதை எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரானுக்கு வழங்கியபோது விருதுபெற்றவரைப் போலவே விருது தந்தவர்களும் மகிழ்ந்தோம். அதன்பின்னரே சாகித்ய அகாதெமி விருதும் அதே நாவலுக்காகக் கிடைத்ததை மதிப்புக்குரிய படைப்பாளியான அவரே கூறி மகிழ்ந்தார்.விருதுக்குத் தேர்வு செய்யும் குழுவை முதலில் சரியாகத் தேர்வு செய்துவிட்டால்எல்லாம் சரியாக நடக்க வழியுண்டு. இன்னொன்று விருதுபெறுவோரின் வயது சார்ந்தது.ஆசிரியப் பணியில் ஓய்வுபெற ஒன்றிரண்டு ஆண்டுகளே உள்ள அல்லது ஓய்வுபெற்றுப் பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கே பெரும்பாலும் நல்லாசிரியர் விருது என்று புகழ்பெற்றுவிட்ட மாநில அரசின் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது விண்ணப்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது.இந்த விருதை நாற்பது வயதுக்கும் முன்னதாகத் தர முடிந்தால், அவரது நல்லாசிரியப் பணியை மீதமுள்ள ஆண்டுகளில் பள்ளிக்குழந்தைகளும் பயன்பெற உதவியிருக்காதா, என்ன? நிச்சயம் அதற்கொரு பாதிப்பு அவர்களிடம் இருக்கும்.இதைவிட்டு முதியோர் உதவித்தொகைபோல விருதுகளை ஓய்வுபெறும் வயதில் விருது தந்து வீட்டுக்கு அனுப்புவதால், அவர் வேண்டுமானால், ஓய்வுபெற்ற மற்றும் விருதுபெற்ற என்று சாகும்வரை போட்டுக் கொள்ளலாமே தவிர, விருதுபெற்ற முதியவரால் சமுதாயத்துக்குப் பணிபுரிந்த துறைக்கு என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?பொள்ளாச்சியில் இருந்துகொண்டு கவிஞர் சிற்பி, மூத்த படைப்பாளி ஒருவருக்கும் இளைய படைப்பாளி ஒருவருக்குமாக - இரு பிரிவுகளாக - விருதுடன் கூடிய ரொக்கப்பரிசுகளை ஆண்டுதோறும் தந்து கெüரவிப்பதுபோல தமிழக அரசும் கலைமாமணி, நல்லாசிரியர் விருதுகளை இளையவர்க்குத் தனியாகவும், மூத்தவர்க்குத் தனியாகவும்கூட வழங்கலாமே. சான்றோரைக் கெüரவிப்பது தேவை. அதைவிடவும் அவரது பணி விருதுபெற்ற பின்னரும் சமூகத்துக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு அரசு யோசிக்க வேண்டாமா? இளைஞருக்குக் கொடுத்து, ஒருவேளை அவர் தவறு செய்துவிட்டால்... விருதுக்கு அவமரியாதையாகிவிடுமே என்றால், இப்போது விருதுபெற்றோரில் விருதுபெற்ற பிறகும் தவறுசெய்து தண்டனை பெற்றவர்களும் உண்டே!குற்றப்பட்டியலில் பெயர் இடம்பெற்ற ஒருவருக்கு மத்திய அரசு "பத்மஸ்ரீ' விருது தந்ததும் நடந்ததே. அதோடு, அரசு விருதுபெற்றோர் காலமாகும்போது, அந்தந்தத் துறைசார்ந்த அரசு உயர் அலுவலர்கள், ஏன் மாவட்ட ஆட்சியரேகூட வந்து அஞ்சலி செலுத்தி, அரசின் சார்பாக கெüரவிப்பது அல்லது அரசின் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடுவது, விருதுபெற்றவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல, விருதுக்கே கெüரவமாக இருக்குமே. இதையும் அரசு யோசிக்கலாமே?பின்னணிப் பாடகர் டி.எம்.செüந்தர்ராஜனைத் தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியனும் "பத்மஸ்ரீ' விருது பெற்றுவிட்டார். பி. சுசிலா "பத்மபூஷண்' விருதே பெற்றுவிட்டார்.இவர்களின் தகுதியறிந்து அந்த விருதுகளைத் தந்த மத்திய அரசு, இவர்களுக்கு முன்னோடியான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஏன் இன்னும் "பத்மஸ்ரீ' விருதுகூடத் தரவில்லை எனும் கேள்வி எழுவது நியாயம்தானே? பாவம், அவர் இந்த விருதுவாங்கும் தொழில்நுட்பம் தெரியாதவரோ என்னவோ?அரசு விழாக்களில் பாடப்படும் "நீராரும் கடலுடுத்த' எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு மட்டுமல்லாமல், பல்லாயிரம் திரைப்பாடல்களுக்கு இசையமைத்துத் தந்த இசைமேதை எம்.எஸ்.வி. போன்ற எண்ணற்ற மேதைகளும், நல்ல ஆசிரியர்களும் மட்டுமல்ல, விருதுக்குத் தகுதிவாய்ந்த உழவர்களும், அரசு ஊழியர்களும், மருத்துவர்களும், எடுத்துக்காட்டான இளைஞர்களும், இதழாளர் மற்றும் செய்தியாளர்களுமாய் பற்பலர் விளம்பர வெளிச்சமே இ ல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்.விருதுகளுக்காக ஏங்கி அல்ல, விருதுகளை அலட்சியப்படுத்திவிட்டு தான் தரும் விருதுகளின் கெüரவத்தைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அரசின் கடமையை உரிமையோடு எடுத்துச்சொல்ல வேண்டியது நம் கடமை.கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர்.

விடை பெற்றார் நிருபமா பேய்

இனப்படுகொலைகளுக்கு இதுவரை செய்த உதவிகளுக்காகவும் இனி்யும் சிங்களஅமெரிக்க உறவிற்குப் பாலமாக இருந்து  தப்பிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும் அளிக்கப்பட்ட விருந்து. இதற்கு முன்பும் வெறியுறவுச் செயலர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தூதர்களும் மாறியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு அளிக்கப்படா விருந்து இவருக்கு அளிப்பதில் இருந்தே சிங்கள இந்தியக் கூட்டுக் கொலைகளைப்பற்றிப் புரிந்து கொள்ளலாம். வருத்தத்துடன்   இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


விடை பெற்றார் நிருபமா ராவ்

First Published : 31 Jul 2011 02:48:25 AM IST


கொழும்பு, ஜூலை 30: இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நிருபமா ராவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச சனிக்கிழமை பிரிவுபசார விருந்து அளித்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள ராஜபட்ச வீட்டில் சனிக்கிழமை காலை அவரை நிருபமாராவ் சந்தித்துப் பேசினார். அப்போது நிருபமா ராவுக்கு, ராஜபட்ச காலை விருந்து அளித்ததாக இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக உள்ள நிருபமா ராவ் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு இந்த பிரிவுபசாரத்துக்கு ராஜபட்ச ஏற்பாடு செய்திருந்தார். வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்படும் முன் நிருபமா ராவ், இலங்கையில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.ஓய்வு பெற்றுள்ள அவர் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்

பதவியின் பின்பும் தமிழ்களை அழிக்க திட்டம் தீட்டி இருப்பார்கள் இருவரும் .அட கருணாநிதி ஒரு கடிதம் மன்மோகன் சிங்கத்திற்கு எழுதப்பா இந்த பொண்ணு எப்படி நியாயமாக நடந்து இருப்பாள் என்று.
By esan
8/1/2011 4:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

இந்திய-இலங்கை எம்.பி.க்கள் நட்புக் குழுக் கூட்டம்: திருச்சி சிவா நா.உ.(எம்.பி.) வெளிநடப்பு

காலையில் கையைக் கட்டிக் கொ்ண்டிருந்தேன். ஆனால், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்த பின்பும் நான் சும்மா இருக்க முடியாது. என்றாலும் வயிறு சரியில்லை என்றுதான் வெளிநடப்பு செய்தேன் எனப் பின்னர் தனிமையில் விளக்கம் தெரிவிக்காமல் இருந்தால் சரி. இனப் படுகொலை என்று சொல்லாமல் இருப்பதனாலும் படுகொலை செய்யப்பட்டவர்கள்  எண்ணிக்கையை ஐந்தில் ஒரு பங்காகக் குறைத்துக் கூறுவதாலும், வயிற்றுவலி  வெளிநடப்பைப் பொருட்படுத்த வேண்டா எனக் கெஞ்சாமல் இருந்தால் நன்று. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இந்திய-இலங்கை எம்.பி.க்கள் நட்பு குழு கூட்டம்: திருச்சி சிவா எம்.பி. வெளிநடப்பு

First Published : 02 Aug 2011 02:55:07 AM IST


புது தில்லி ஆக. 1: இந்தியா-இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்பு குழு கூட்டத்தில் இருந்து திமுக உறுப்பினர் திருச்சி சிவா வெளி நடப்பு செய்தார்.நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 63-ல் மாநிலங்களவைத் தலைவரும் இந்திய துணை குடியரசுத் தலைவருமான ஹமீது அன்சாரி இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபட்ச தலைமையில் இந்தியாவுக்கு வந்துள்ள குழுவை கெüரவிக்கும் வகையில் தேநீர் விருந்து ஒன்றுக்கு மாலை 4.40 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மாநிலங்களவையின் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. திமுகவின் சார்பாக இந்த கூட்டத்தில் திருச்சி சிவா கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியவுடன் திமுக உறுப்பினர் திருச்சி சிவா தனது கருத்தை தெரிவிக்க முயன்றபோது, அவைத் தலைவர் அவருக்கு அனுமதி அளிக்க மறுத்து, "உங்களுக்கு நேரம் அளிக்கும் போது உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்' என்று கூறினார். எனினும் இதைப் பொருள்படுத்தாமல் அவர் பேசிய விவரம்:திங்கள்கிழமை காலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபட்ச தலைமையில் இந்தியாவுக்கு வந்துள்ள குழு மாநிலங்களவைக்கு வந்த போது, அவையின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் அமைதியாக கையை கட்டிக் கொண்டிருக்க நேர்ந்தது. ஆனால் இப்போது என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இலங்கை அரசு உள் நாட்டு போர் என்ற பேரில் அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவத்தினரால் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் தமிழக பெண்கள் கற்பழிக்கப் பட்டும் பல துன்பங்களுக்கும் ஆளாக்கப் பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பும் இலங்கை அதிபர் ராஜபட்சதான். இந் நிலையில் தன்னால் இரு நாடுகளுக்கு இடையேயான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்பு குழுவில் பங்கு கொள்ள இயலாது என்றார். பின்னர் வெளிநடப்பு செய்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக தமிழகத்தின் மாநிலங்களவையின் உறுப்பினரான சுதர்ஷன் நாச்சியப்பன் கலந்து கொண்டார்.

இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்பு

 ஒருபெண்ணாக இருந்துகொண்டு ஈழத்தில்  பெண்களை வதைத்து, மார்பகங்கைள அறுத்து, உடலுறுப்புகளைச் சிதைத்துக், கற்பழித்துக் கொடூரமான முறையில் கொலை புரிந்த சிங்களர்கள் சார்பாக அவர்களின் நா.ம.உறுப்பினர்களை மன்னிப்பு கேட்கச் செய்யாமல்  அவர்களிடம்  மன்னிப்பு கேட்டுத் தாய்க்குலத்திற்கே இழிவு தேடித்தந்து விட்டாரே! கொடுமைக்கு எதிராக முழக்கமிட்டதற்கே வேதனை உற்றார் எனில் கொத்துக் குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் குழந்தைகள், சிறியோர்,  பெரியோர், மகளிர், நோயர் எனப் பார்க்காமல்  கொன்றொழித்த கொடுமைக்கு உள்ளம் உருகி  அழுதிருக்க வேண்டாவா? பதவியினால் வந்த கொத்தடிமை உணர்வு கட்டிப்போட்டதோ!  
வேதனையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம்
மீரா குமார் மன்னிப்பு

First Published : 02 Aug 2011 02:59:02 AM IST


புது தில்லி, ஆக. 1: இந்தியா வந்துள்ள இலங்கை நாடாளுமன்றக் குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.இதற்காக அவர்களிடம், மக்களவைத் தலைவர் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளை காண்பதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தின் உயர்நிலைக் குழுவினர் தில்லி வந்துள்ளனர். மக்களவை திங்கள்கிழமை கூடியதும், மீராகுமார் அவர்களை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.அப்போது, இருக்கையில் இருந்து எழுந்த அதிமுக எம்.பி.க்கள், இலங்கை நாடாளுமன்றக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது பேசிய மீரா குமார், இருநாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்ப்பதற்காக அவர்கள் வந்துள்ளனர் என்றார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மக்களவைச் செயலர் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் மக்களவையில் நிகழ்ந்த சம்பவத்தால், வேதனையடைந்ததாகவும் இதற்காக இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் தமிழர்களின் உணர்வுகளை அதிமுக எதிரொலித்தது

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


"மக்களவையில் தமிழர்களின் உணர்வுகளை அதிமுக பிரதிபலித்தது'

First Published : 02 Aug 2011 02:53:43 AM IST


புது தில்லி, ஆக. 1: இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு மக்களவையில் ஆட்சேபத்தை தெரிவித்ததன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை அதிமுக எம்.பி.க்கள் பிரதிபலித்துள்ளதாக அக்கட்சியின் மக்களவைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மக்களவை நிகழ்வுகளைக் காண வந்த போது அவர்களுக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் தங்களது ஆட்சேபத்தைத் தெரிவித்தனர்.அப்போது மக்களவைத் தலைவர் மீரா குமார், "இந்திய அரசின் அழைப்பின் பேரில் வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை, கெüரவம் அளிக்க வேண்டியது நமது கடமை' என்றார். இதைத் தொடர்ந்து அதிமுகவின் நாடாளுமன்றத் தலைவர் தம்பிதுரையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் விளக்கம் கேட்டதாகத் தெரிகிறது. அதையடுத்து, அதிமுக எம்.பி.க்கள் மீரா குமாரைச் சந்தித்தனர். அப்போது, எம்பிக்கள் நடந்துகொண்ட விதம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக மீரா குமார் கூறியிருக்கிறார். அதற்கு தம்பிதுரை, அதிமுக எம்பிக்கள் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளனர் என்று கூறியதாகத் தெரியவந்துள்ளது.

இலங்கைத் தமிழர் படுகொலை: மக்களவையில் விவாதம் நடத்த திமுக அறிவி்க்கை


செய்த கரிசிற்கு (ப் பாவத்திற்கு)க் கழுவாய் (ப்பரிகாரம்) தேடும் முயற்சிக்குப் பாராட்டுகள். இந்த முயற்சியாவது உண்மையாக இருக்கட்டும்!  வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கான  பேரமாக அமைய வேண்டா! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
 
இலங்கைத் தமிழர் படுகொலை: மக்களவையில் விவாதம் நடத்த திமுக நோட்டீஸ்

First Published : 02 Aug 2011 01:13:30 AM IST


புது தில்லி, ஆக.1 : இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவித் தமிழர்கள் 40,000 பேர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டது குறித்து விதிமுறை 193 கீழ் மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு மக்களவைத் தலைவரிடம் திங்கள்கிழமை நோட்டீஸ் அளித்துள்ளார். அது குறித்த விவாதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.கச்சத் தீவு பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை, மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை அக்கட்சி நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவையின் தலைவருமான பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து இலங்கை தமிழர் பிரச்னை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பார்வையாளர் கட்டண வரவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் சாதனை

கோடிக்கணக்கில் வருவாய் பெற்றுமா இரவு நேரங்களில் விளக்கொளி வழங்காமல் சுற்றுலாப் பயணிகளைத் துன்புறுத்துகிறார்கள்?வருவாயில் மட்டும் குறியாக இராமல் சுற்றுலாப்பயணிகளின் நலனிலும் கருத்து செலுத்துங்கள்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பார்வையாளர் கட்டண வசூலில் 
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் சாதனை

First Published : 02 Aug 2011 01:18:26 AM IST


செங்கல்பட்டு, ஆக. 1: தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதனச் சின்னங்களில் ஒன்றான மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், பார்வையாளர் கட்டண வசூலில் 2010-ல் ரூ. 2.73 கோடியை ஈட்டி சாதனை படைத்துள்ளது.தமிழகத்தில் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் 432 புராதனச் சின்னங்கள் உள்ளன. இவை அந்தத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.பல்லவர் கால கலை நயத்துடன் காண்போரை வியக்க வைக்கும் மாமல்லபுரம் கடற்கரைக்கோயில், சென்னை கோட்டை அருங்காட்சியகம், செஞ்சிக்கோட்டை, சித்தன்னவாசல் உள்ளிட்ட புராதன நினைவுச் சின்னங்கள் தொல் பொருள் பாதுகாப்புத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை கண்டு களிக்க சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2010-ல் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், வசூலில் ரூ 2.73 கோடியை எட்டிப்பிடித்து முதலிடத்தைப் பெற்றுள்ளது. செஞ்சிக்கோட்டை ரூ. 12. 47 லட்சத்தை பெற்றுத் தந்து 2-ம் இடத்தையும், சென்னை கோட்டை அருங்காட்சியகம் ரூ. 4.36 லடசத்தை பெற்று 3-ம் இடத்தையும், சித்தன்னவாசல் ரூ. 1.24 லட்சத்தை பெற்று 4-ம் இடத்தையும் பெற்றுள்ளன.மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் 2009-ல் பார்வையாளர் கட்டண வசூல் மூலம் ரூ. 2.53 கோடியை ஈட்டியது. 2010-ல் ரு. 20 லட்சம் கூடுதலாக ஈட்டி சாதனை படைத்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தஞ்சை பெரிய கோயில் ஆகிய இரண்டும் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றிப்பார்க்க கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலை சுற்றிப்பார்க்க பார்வையாளர் கட்டணம் ரூ. 10 வசூலிக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் பல்லவர் கால சின்னங்களாக விளங்கக் கூடிய ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதான சின்னங்கள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் அயல்நாட்டு சுற்றுலாப்பயணிகளின் கண்களையும் கருத்தையும் ஈர்ககும் வகையில் உள்ளன.கண்ணைக்கவரும் கடற்கரைக் கோயிலை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும், இதன் மூலம் மேலும் பார்வையாளர் வருகையை அதிகரிப்பதிலும் தொல்பொருள் பாதுகாப்பு துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.