vijayakanth லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
vijayakanth லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 மார்ச், 2012

resolution of america is like butter milk - Vijakanth: அமெரிக்காவின் தீர்மானம் நீர் மோர்

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கிணங்க நலல கருததுகளைத் தெரிவி்த்து இருக்கும் பொழுது எதிருரை தேவையில்லை.  அமெரிக்க நாடகத்தையும் இந்திய நாடகத்தையும் புரிந்து கொள்ள இக் கருத்துகள் உதவும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++
அமெரிக்காவின் தீர்மானம் நீர் மோர்: விஜயகாந்த் கருத்து

First Published : 23 Mar 2012 03:17:51 PM IST


சென்னை, மார்ச்.23: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் நீர் மோர் என்றும் அதில் இந்தியா தலையிட்டது நீர்மோரில் மேலும் தண்ணீரை ஊற்றியது போலாகிவிட்டது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆள் கடத்தல், ஆட்களை காணாமல் செய்வது, ஆட்களை கொலை செய்வது போன்ற காரியங்களில் ஒரு அரசே ஈடுபட்டால் அது மனித உரிமை மீறல்களாகும். ஒரு போரில் சரண் அடைய வந்தவர்களை சுட்டுக் கொல்வதோ, போரில்லாத பகுதி என்று அறிவித்து அங்கு மக்களை சேர்த்து அவர்கள் மீது குண்டு போடுவதோ, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதோ போர்க் குற்றங்கள் ஆகும்.2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை அரசு தமிழினப் படுகொலையை நடத்தியதன் மூலம் இந்த இரு குற்றங்களையும் செய்துள்ளது. ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசு புரிந்துள்ள இந்த இரு குற்றங்களையும் ஐ.நா.வின் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்காவால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் இந்தியா தலையிட்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தன் விருப்பத்திற்கு இலங்கைக்கு ஆலோசனை கூறவோ அல்லது பிரதிநிதிகளை நேரடியாக அனுப்பவோ கூடாதென்றும், இலங்கை அரசின் சம்மதத்தை பெற்ற பிறகு ஐ.நா. செயல்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை திருத்தியுள்ளது.அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின்படி ஐ.நா. மனித உரிமைக் குழு எதைச் செய்தாலும் அதை இலங்கை அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று இருந்தது. ஆனால் இந்தியாவினுடைய திருத்தம் இலங்கை அரசின் சம்மதம் இன்றி ஐ.நா. மனித உரிமைக் குழு எதையும் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவும் இந்தியாவை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதி, இந்தியாவின் திருத்தத்தை ஏற்றுக் கொண்டு, அப்படி திருத்தப்பட்ட தீர்மானம்தான் தற்பொழுது நிறைவேறியுள்ளது.ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட அனுமதிக்கக் கூடாதென்றும், அந்நாட்டின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா இதற்கு காரணம் கற்பித்துள்ளது. இறையாண்மை என்பதன் மூலம் தன் சொந்த குடிமக்களையே கொன்று குவிப்பதற்கு எந்த அரசையும் அனுமதிக்கக் கூடாது என்பதாலும், உலக சமுதாயம் அதை வேடிக்கை பார்க்கக் கூடாது என்பதாலுமே ஐ.நா. மன்றம் அத்தகைய நாடுகளில் தலையிட்டு மனித சமுதாயத்தை காப்பாற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. இறையாண்மை என்பதன் பெயரால் உலகளாவிய மனிதாபிமான உரிமைகளை தடுக்கவோ, தவிர்க்கவோ எந்த அரசுக்கும் உரிமை இல்லை.போர்க் குற்றங்கள் நிகழ்ந்தாலோ, இனப் படுகொலை நடந்தாலோ அதை தடுத்து நிறுத்த எந்த நாட்டிலும் தலையிடலாம். அதை ஒரு நாடு உள் விவகாரம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த அடிப்படையிலேயே தமிழினப் படுகொலை சம்பந்தமான தீர்மானம் மனிதாபிமான அடிப்படையிலும், போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்ற அடிப்படையிலும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் நீர் மோர் என்றால் இந்தியாவினுடைய தலையீடு அதில் மேலும் தண்ணீரை சேர்த்து நீர்த்து போகச் செய்து விட்டது.இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற போக்கை மாற்றி, அதை அப்பாவி நாடாகக் கருதுகின்ற அணுகுமுறையையே இந்திய அரசு மேற்கொண்டது என்று இந்திய அரசின் அதிகார வர்க்கம் தெரிவித்துள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் இந்தியா கொண்டு வந்த திருத்திய தீர்மானத்தின் மூலம் தங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சலுகையை செய்துள்ளது என்று இலங்கை அதிகார வர்க்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.எனினும் ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்தின்போது, இந்திய அரசு வெளிப்படையாக இலங்கை அரசின் பக்கம் சாயாமல் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. இந்த தீர்மானம் நிறைவேறியதன் மூலம் இலங்கை அரசு உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகவில்லை என்றாலும், கண்காணிப்புக்கு ஆளாகியுள்ளது என்பது திருப்தி அளிக்கிறது.
கருத்துகள்

விஜயகாந்திற்கு கருத்துசொல்ல எந்த அருகதையும் கிடையாது
By இளங்கோவன் கோவிந்தசாமி
3/23/2012 4:12:00 PM

வியாழன், 15 டிசம்பர், 2011

stop Iyyaappa woship - vijayakanth



தற்போதைய செய்திகள்
தமிழக எம்.பி.,கள் ராஜினாமா செய்ய வேண்டும்: விஜயகாந்த்

First Published : 14 Dec 2011 05:45:05 PM IST

Last Updated : 14 Dec 2011 05:48:36 PM IST
தேனி, டிச. 14: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.,களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தேனியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.தேனியில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் விஜயகாந்த் பேசியது: முல்லைப் பெரியாற்று தண்ணீரை குடித்து வளர்ந்தவன் என்ற முறையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமிதமடைகிறேன். கேரள மக்களின் பாதுகாப்பில் தமிழர்களுக்கு அக்கறை உண்டு. அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள் செய்து வரும் பொய் பிரச்சாரத்தை கேரள மக்கள் நம்பக் கூடாது. அணை பாதுகாப்பாக உள்ளது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார். பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, இரு மாநிலங்களிடையே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். அணை பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும் என்று தமிழக எம்.பி.,கள் கேட்டதற்கு, கேரள அரசிடம் ஆலோசனை கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்கிறார் பிரதமர். மத்திய அரசு மெத்தனப் போக்குடன் நடந்து வருவதாக இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு திமுக தலைவர் கருணாநிதி கூறுகிறார்.தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்தும், இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியும் தேனி மாவட்ட மக்கள் தற்போது தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு போராடி வரும் மக்களுக்கு போலீஸ் தடியடிதான் பரிசாக கிடைத்துள்ளது. கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள், தமிழக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபடுவதை பக்தர்கள் நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் தெய்வம், குல தெய்வங்களையும், தமிழகத்தில் உள்ள கோயில்களிலும் தரித்து நலமும், வளமும் பெற வேண்டும்.பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.,களும் ராஜினமா செய்ய வேண்டும். தேசிய சாலைகளைப் போல, நதிநீரை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும். அணையில் நீர்தேக்கும் அளவு குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு மற்றும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். பெரியாறு அணை பிரச்னையில் தமிழர்கள் இழந்த உரிமைகளை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
கருத்துகள்

முதலில் நீ ராஜினாமா சேய் டா ....
By gopal
12/14/2011 9:41:00 PM
அருமையான யோசணைகள். பக்தி செலுத்துவதில் தமிழர்கள் அறீவாளிகளாக இருக்க வேண்டும்.மலையாளிகள் தெலுங்கர்கள் எவரனும் நம் ஊர் கோயில்கல்லுகு கூட்டம் கூடி வராத பொது நாம் ஏன் அங்கு போயி உண்ட்யலை நிரப்ப வேண்டும்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும். விஸ்வகர்மன்.
By விஸ்வகர்மன்
12/14/2011 9:36:00 PM
ஆண்டு தோறும் இலட்ச கணக்கில் அயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று கோடிக்கணக்கான ரூபாய்களை அங்குள்ள மேல்சாந்தி கீழ் சாந்திக்கு என தானம் கொடுத்து வருகிறார்கள். விஜயகாந்த் சொல்வதை நான் வரவேற்கின்றேன். தான் குடி இருக்கும் வீட்டில் காணாத தெய்வத்தை வெளியில் போய் காணமுடியும் என்பது அரியது.
By annakan
12/14/2011 9:31:00 PM
"தமிழகத்தில் இருந்து கேரளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபடுவதை பக்தர்கள் நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் தெய்வம், குல தெய்வங்களையும், தமிழகத்தில் உள்ள கோயில்களிலும் தரித்து நலமும், வளமும் பெற வேண்டும்."- நன்றி, திரு.விஜயகாந்த் .தமிழனின் அழிவுக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு அடையாளம் தான் இந்த முட்டாள்தனமான ஐயப்ப பக்தி. எனது வாழ்நாளின் முற்பகுத்தில் முருகனை தவிர வேங்கடவனை தவிர அம்மனை தவிர, சிவனை தவிர வரலாற்றில் வேறு தெய்வங்களை கும்பிடாத தமிழனி மட்டுமே பார்த்தேன். ஆனால் நம்பியார் போன்ற மலையாளி நடிகர்களின் இன பற்றான ஐயப்ப வழிபாட்டை ஏமாளி தமிழனும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்று இன்று ஒரு இயக்கமாகவே வளர்ந்து விட்ட முட்டாள் தனமாந ஐயப்ப பக்தி தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் முல்லை பெரியார் அணையை உடைப்போம் என்று மலையாளிகள் முரச்சிக்கும் போதுக்கோத் அனெக் உள்ள ஐயப்ப சபரிமளிக்கு செல்வோம் என தமிழன் நடக்கும் பொது இவர்கள் எல்லாம் எப்பாடு ஒரு இழி பிறவிகள் என எண்ண தோன்றுகிறது. தயவு செய்து தமிழர்களே இன பற்றோடு செயல்படுங்கள்.
By P .Padmanaabhan
12/14/2011 9:27:00 PM
யோவ் மொதல்ல உன் 29 MLA களை ராஜினாமா செய்ய சொல், உன் கட்சிக்கு MP இல்லேன்ற தைரியத்துல பேசுறியா?
By radhakrishnan
12/14/2011 9:13:00 PM
யோவ் மொதல்ல உன் 29 MLA க்கலை ராஜினாமா செய்ய சொல், உனக்கு MP இல்லேன்னு தைரியமா பேசுறியா?
By ram
12/14/2011 9:08:00 PM
ஐயப்பன் கோவிலுக்கு அதிகமாக வருமானத்தை கொடுப்பது தமிழர்களின் கூட்டம்தான், ஐயப்பனே இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்தவேண்டும், தமிழர்கள் சில காலத்திற்கு சபரிமலை செல்வதை நிறுத்த வேண்டும். தமிழ் நாட்டிலுருந்து செல்லும் பொருட்களை தடை செய்ய வேண்டும். கேரளா தன்னால் வழிக்கு வரும்.
By Kamalar
12/14/2011 8:49:00 PM
உண்மைதான். அத்தனை M P இக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதுதான் பிரதமருக்கு நம்முடைய உணர்ச்சிகள் புரியும். இவ்வளவு போராட்டத்திற்கு பிறகும் பிரதமர் மெளனமாக இருப்பது வேதனைக்கு உரியதாக உள்ளது.
By இரா.இராவணன்
12/14/2011 8:43:00 PM
அட்ரா சக்கை ! நமக்கு தான் எம்பி இல்லையே ? நமக்கு என்னா போச்சு ?
By ர.ராஜன்,cheyyar
12/14/2011 8:26:00 PM
தலைக்குக் தலை பெருதனம்... ஐய்யப்பன் பத்தி நீ பேசாதே..
By மணிகண்டன்
12/14/2011 8:25:00 PM
தமிழ் மக்கள் இலங்கையில் செத்து மடிந்த போதே செய்யாதவர்கள் இப்போது செய்ய போக சொன்னால் எப்படி?ஓட்டு போட்ட மக்களை மாக்ககள் அக்க துடிக்கும் அரசியல் கட்சிகள் உள்ளவரை ஒன்றும் செய்யமுடியாது.காங்கிரஸ் கட்சியை தமிழ் நாட்டு மக்கள் புறகணிக்க வேண்டும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கட்சி.தமிழ் மக்கள் ஒருவர் கூட இனி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட கூடாது.அவர்களோடு கூட்டணி வைப்பவர்களையும் புறக்கணிக்க வேண்டும்.அவர்கள் என்ன தமிழ் மக்களையும் தமிழ் நாட்டையும் புறகணிப்பது நாம் ஒன்று சேர்ந்து புறகணிப்போம் .தமிழா புறப்படு இனி இவர்கள் நம் தலை எழுத்தை மாற்ற தேவை இல்லை .நாம் அவர்கள் தலை விதியை மாற்றுவோம்.
By BKV
12/14/2011 8:14:00 PM
இதைப்புரிந்து கொண்டு தமிழ் மக்கள் கேரளாவுக்கு டூர் போவதையும், ஐயப்பன் கோவிலுக்கு போவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் .நம் பணத்தை வீணா நன்றி கேட்ட கேரளாவுக்கு எதற்கு செலவு செய்ய வேண்டும்.வன்முறைக்கு வன்முறை, காலம் இது.வன்முறையால் தான் கேரளாவுக்கு புத்தி புகட்ட வேண்டுமென்றால் அதற்கு தமிழ் மக்களுக்கு வீரம் உள்ளதா?வாய்ச்சொல்லில் வீரர்கள் என்றில்லாமல் செயல்படவேண்டும்.
By ramachandhirasekaran.
12/14/2011 7:36:00 PM
இவர் எதற்கு எம்பீக்கள் மட்டும் என்கிறார்? எம் எல் ஏக்களும் என்று சொல்லி ,முன்மாதிரியாக தன் பதவியை முதலில் விடுவதுதானே?
By Tamilian
12/14/2011 7:12:00 PM
இது போன்ற யோசனைகள் சினிமாத்தனமானது மட்டுமல்ல சின்னத்தனமானது. மக்களின் உணர்சிகளை தட்டிவிட்டு குளிர்காய நினைக்கும் கழகங்கள் சினமாவில் அரசியலும் அரசியலில் சினிமாவும் செய்து தமிழ்நாட்டை குட்டிசுவராக்கிவிட்டனர். எந்த மாநிலத்துடனாவது இதுவரை நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஏற்ப்பட்டதுண்டா? நதிநீர் பிரச்னை அடிப்படை வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒன்று. அதை கூத்தாடிகள் கையில் கொடுப்பது குரங்கு கையில் கொடுத்த பூமாலைதான்.
By திண்டல் சங்கர நாராயணன்
12/14/2011 7:00:00 PM
திரு .விஜயகாந்த் அவர்களின் கோரிக்கை நியாயமானதே.அதுபோல இந்த கோரிக்கைக்கு வலுவூட்ட ,முல்லை பெரியார் அணைக்கு ஆதரவாக தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைத்து ,மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.இதனால் தமிழக மக்கள் மத்தியில் அவரது மதிப்பு பன்மடங்கு உயரும் வாய்ப்பு உள்ளது.
By தனபால்
12/14/2011 6:57:00 PM
இவர் வாயை மூடினால் போதும். அம்மா பிரச்சனையை சரி பண்ணி விடுவார். கருணாநிதி திமுக முடிந்துவிட்டது . திமுக செத்த பிணம் .
By ssrinivasan
12/14/2011 6:57:00 PM
ஹையா .. எம்.பிக்கள் எல்லாம் ராஜினாமா பண்ணிட்டா அடுத்த தேர்தல்ல இவருக்கு எதாச்சும் எம்.பி. சீட் கிடைக்கும்னு நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிறார் கேப்டன். மக்கள் கொடுத்த உரிமையை தட்டிக்கழிப்பதால் ஒரு புண்ணாக்கும் ஆக போவதில்லை. எல்லா எம்.பிக்களும் மொத்தமா சேர்ந்து பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினையை சத்தமாக பேசுங்கள். அதை விட்டுட்டு ஐடியா சொல்லவந்துட்டார். எல்லாம் நேரம்டா சாமி.!
By ரசிகா
12/14/2011 6:40:00 PM
முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழருக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியோடு எந்த வித கூட்டணியோ/ அரசியல் உடன்பாடோ காணமாட்டேன் என்று உரைக்க சொல்ல முடியுமா காப்டைன்லு (captainlu ). 39 MP சீட்ல 19 தந்தா கூட உடனே காங்கிரஸ் கூட கூட்டணி வைத்து தமிழருக்கு துரோகம் செய்ய ஆரம்பிச்சுடுவீங்களே. உங்களுக்கு சுய மானம் உண்டா? ஒரு முறை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
By Baalaa
12/14/2011 6:36:00 PM
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனினும் சிலர் இறைவனின் மீதான பித்தினால் தானே வேற்று மாநிலம் சென்று வணங்குகின்றனர். எங்கெங்கும் காணினும் சக்தியடா! என்றானே பாரதி.உள்ளம் பெருங்கோயில் என்றும் தெரியும். இருப்பினும் சிலரின் மேலோங்கிய அன்பு என்பதா? இல்லை வேறேதுவும் சொல்லவா? எனத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து திரிந்து இறைவனை வழிபடச் செல்லும் நிலையை என்னவென்று சொல்ல? படியாதவனின் மனம் தான் பதவிக்கு அலையும். அதனால் தான் கேரள உம்மன்சாண்டியும் சார்ந்தவர்களும் உண்மையை உணராது ஏதோ எல்லாமும் அறிந்ததைப் போல் தில்லி வரை சென்றுள்ளனர். உச்ச நீதி மன்றத்தை அவமதிப்பதை போல் அல்லவா கேரள அரசு செயல் படுகிறது. தில்லிவாலாக்களுக்குமா தெரியவில்லை?
By கி.பிரபா
12/14/2011 6:27:00 PM
ராஜினமா செய்வதற்கென்றால் எதற்கு தேர்தலிலே நிற்கணும்?. ராஜினமா செய்த பிறகு பாராழுமன்றத்தில் யார் பேசுவார்கள்? பிரதமர் தான் எம்பி இல்லாத கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா? தேர்தலில் நிற்பதே வென்று, அதன் பின் பணியை தொடரத்தான், புறமுதுகிட்டு ஒடுவதர்கல்ல.
By K. ராஜன், திருநெல்வேலி
12/14/2011 6:15:00 PM
நீயும் உன்னுடைய MLA களும் ராகினமா செய் ...
By SARAVANAN
12/14/2011 6:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

செவ்வாய், 19 ஜூலை, 2011

கேட்பது குதிரை; கிடைத்தது கழுதை: விசயகாந்த்

கேட்பது குதிரை; கிடைத்தது கழுதை: விஜயகாந்த்

First Published : 19 Jul 2011 12:56:00 PM IST


சென்னை, ஜூலை.19: நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல என்று தற்போதைய சமச்சீர் கல்வி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு ஏற்கனவே கொண்டு வந்த பொதுப்பாடத் திட்டத்தை அப்படியே செயல்படுத்த வேண்டுமென்றும், அதை இன்றைய அரசு திருத்தம் கொண்டு வந்ததை ஏற்க மறுத்தும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பாடத்திட்டத்தில் நீக்க வேண்டியவற்றை நீக்கியும், சேர்க்க வேண்டியவற்றை சேர்த்தும் மூன்று மாத காலத்திற்குள் ஒரு துணை பாடப் புத்தகத்தை உருவாக்கவும் இந்தத் தீர்ப்பு வழி வகை செய்துள்ளது. இந்த கல்வி ஆண்டு தொடங்கி ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லையே என்ற கவலையால் பீடிக்கப்பட்டுள்ளனர். எந்த பாடப் புத்தகத்தையாவது வைத்தால் போதும் என்ற நிலையே அவர்களிடம் உள்ளது. இந்த சூழ்நிலையில் முந்தைய தி.மு.க அரசு கொண்டு வந்த பாடத் திட்டத்தில் உள்ள கருணாநிதி குடும்பத்தின் சுய புராணம் பாடும் பகுதிகளை நீக்கி, தரமுள்ள புதிய பாடத் திட்டங்களை கல்வி நிபுணர்களின் குழுவின் மூலம் சேர்த்து பாடத் திட்டத்தின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும்.தமிழகத்தில் தற்போதைய கல்வியின் தரம் வெகுவாக குறைந்துள்ளது என்பதும், முந்தைய தி.மு.க அரசு கொண்டு வந்த பொதுப் பாடத்திட்ட சட்டம் இந்த தரத்தை மேலும் குறைக்கவே வகை செய்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இன்றைய மாணவர்கள்தான் நாளைய நாட்டின் எதிர்காலம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால் அந்த மாணவர்களுக்கு சரியான கல்வி கிடைக்க தமிழக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய பொதுப் பாடத்திட்ட சட்டம் தீர்வாகாது. கல்வித் துறையில் கடந்த ஆட்சியால் ஏற்பட்டுள்ள சீர்கேட்டினை நிரந்தரமாகக் களைய வேண்டுமானால், அது குறித்து அனைத்து தரப்பினரும், குறிப்பாக கல்வி நிபுணர்களும், கலந்து கருத்தாய்வு செய்வது அவசியம். ஆகவே கல்வி சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் திரட்டி ஒரு வெள்ளை அறிக்கை கொண்டு வரவேண்டும் என்றும், அதில் அனைத்து தரப்பினரின் கருத்துகளை திரட்டி சட்டப் பேரவையில் அனைத்து கட்சியினர்களையும் கலந்து ஒரு விரிவான கல்வி சீர்திருத்த சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.இதற்கிடையில் நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. தேவை மற்றும் உடனடித் தேவை என்று இருப்பதைப் போல, நமக்கு தேவை சமச்சீர் கல்வி என்றாலும் உடனடித் தேவையாக இருப்பது தற்போது திறந்துள்ள பள்ளிக் கூடங்களை பாடப் புத்தகங்கள் தந்து நடத்துவதுதான். ஆகவே உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உடனடியாக பள்ளிக் கூடங்கள் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

vijayakanth contest against kalaignar?

தி.மு.க.வைத் தாக்கும்  விசயகாந்த்து, காங்.ஐக் கன்று என அப்பாவியாக விவரிக்கிறார்.ஊழலின் உறைவிடம்காங்.கின்  கொடுமையை எதிர்த்துப் பேசுவதில்லை. எனவே,  இவரை நடுநிலையாளராகவோ உண்மையில் ஊழல் எதிர்ப்பாளராகவோ கருத இயலவில்லை. துணை முதல்வர் பதவி தருவதாகக் கூறினால் தி.மு.க.வுடனும் கூட்டணி வைப்பார். ஆகவே, இவரது உரைகள் தேர்தல் கண்ணோட்டத்தில் அமைந்தனவே தவிர
உண்மையனா மனச் சான்றின் எதிரொலி அல்ல.  இவரை நம்பிப் பயன் என்ன? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

வெள்ளி, 22 அக்டோபர், 2010

அடுத்த முதல்வர் நான்தான் என்று ஸ்டாலின் அறிவிப்பாரா? - விஜயகாந்த்

சென்னை, அக். 21: தமிழகத்தின் அடுத்த முதல்வர் நான்தான் என அறிவிக்க துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தயாரா? என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தே.மு.தி.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை விஜயகாந்த் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியது:  கட்சி ஆரம்பித்தவுடன் விஜயகாந்த் முதல்வராக நினைக்கிறார் என்று துணை முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஆம், தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று நான் நினைப்பது உண்மைதான். ஆனால் ஸ்டாலினோ அல்லது மு.க.அழகிரியோ தாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று அறிவிக்கத் தயாரா?  காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்று 1967-ல் அண்ணா விரட்டினார். இன்றோ கருணாநிதி, காங்கிரஸýடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார்.  காமன்வெல்த் போட்டி நடத்தியதில் சுரேஷ் கல்மாதி மீது  1000 கோடி ரூபாய் ஊழல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தியதில் லலித்மோடி மீது  470 கோடி ஊழல் என விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால் தொலைத் தொடர்பு துறையில்  1.5 லட்சம் கோடி ஊழல் புரிந்ததாகக் கூறப்படும் ஆ. ராசாவின் மீது ஏன் விசாரணை இல்லை? என்றார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் எல். வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

முதல்வர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது எழுத்தில் ஒரு வகையாக இருக்கலாம். நடைமுறை என்ன என்பது யாவருக்கும் தெரியும். எனவே, தேர்ந்தெடுக்கும் முறை பற்றி ஆராயாமல் விசயகாந்த்தின் வினாக்களுககு விடையிறுத்து அவர் வாயை மூடவேண்டுமே தவிர ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது எழுதி அவரது கருத்தை ஒப்புக் கொள்ளக் கூடாது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2010 4:52:00 AM
Actor Vijayakanth is mentally retarded, he must admit to Kilpauk mental hospital
By deva
10/22/2010 4:43:00 AM
முதல்வரை தேர்தெடுப்பவர்கள் எம் எல் ஏ க்களே. அவர்கள்தான் முடுவு செய்வார்கள். ஸ்டாலினே முடிவெடுத்து அறிவித்தால், அதற்கு பெயர் மமதை.
By மணிமாறன்
10/22/2010 4:35:00 AM
ஏ அறிவு ஜீவியே விஜயகாந்த்! முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் முறைகூடத் தெரியாமல் ஏண்டா அரசிலயலுக்கு வர்றீங்க.. எவனும் நாந்தான் முதல்வர் என்று தம்பட்டம் அடித்தால், தேர்தல் எதற்கு, தேர்ந்தெடுக்கும் சட்ட வழிமுறைதான் எதற்கு? குடிச்சிட்டா என்னனாலும் உளராலாம் இல்லியா?
By வச்சா குடுமி
10/22/2010 3:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *