முல்லைப்பெரியாறு அணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முல்லைப்பெரியாறு அணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 டிசம்பர், 2011

stop Iyyaappa woship - vijayakanth



தற்போதைய செய்திகள்
தமிழக எம்.பி.,கள் ராஜினாமா செய்ய வேண்டும்: விஜயகாந்த்

First Published : 14 Dec 2011 05:45:05 PM IST

Last Updated : 14 Dec 2011 05:48:36 PM IST
தேனி, டிச. 14: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.,களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தேனியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.தேனியில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் விஜயகாந்த் பேசியது: முல்லைப் பெரியாற்று தண்ணீரை குடித்து வளர்ந்தவன் என்ற முறையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமிதமடைகிறேன். கேரள மக்களின் பாதுகாப்பில் தமிழர்களுக்கு அக்கறை உண்டு. அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள் செய்து வரும் பொய் பிரச்சாரத்தை கேரள மக்கள் நம்பக் கூடாது. அணை பாதுகாப்பாக உள்ளது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார். பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, இரு மாநிலங்களிடையே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். அணை பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும் என்று தமிழக எம்.பி.,கள் கேட்டதற்கு, கேரள அரசிடம் ஆலோசனை கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்கிறார் பிரதமர். மத்திய அரசு மெத்தனப் போக்குடன் நடந்து வருவதாக இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு திமுக தலைவர் கருணாநிதி கூறுகிறார்.தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்தும், இந்தப் பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியும் தேனி மாவட்ட மக்கள் தற்போது தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு போராடி வரும் மக்களுக்கு போலீஸ் தடியடிதான் பரிசாக கிடைத்துள்ளது. கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள், தமிழக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபடுவதை பக்தர்கள் நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் தெய்வம், குல தெய்வங்களையும், தமிழகத்தில் உள்ள கோயில்களிலும் தரித்து நலமும், வளமும் பெற வேண்டும்.பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.,களும் ராஜினமா செய்ய வேண்டும். தேசிய சாலைகளைப் போல, நதிநீரை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும். அணையில் நீர்தேக்கும் அளவு குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு மற்றும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். பெரியாறு அணை பிரச்னையில் தமிழர்கள் இழந்த உரிமைகளை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
கருத்துகள்

முதலில் நீ ராஜினாமா சேய் டா ....
By gopal
12/14/2011 9:41:00 PM
அருமையான யோசணைகள். பக்தி செலுத்துவதில் தமிழர்கள் அறீவாளிகளாக இருக்க வேண்டும்.மலையாளிகள் தெலுங்கர்கள் எவரனும் நம் ஊர் கோயில்கல்லுகு கூட்டம் கூடி வராத பொது நாம் ஏன் அங்கு போயி உண்ட்யலை நிரப்ப வேண்டும்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும். விஸ்வகர்மன்.
By விஸ்வகர்மன்
12/14/2011 9:36:00 PM
ஆண்டு தோறும் இலட்ச கணக்கில் அயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று கோடிக்கணக்கான ரூபாய்களை அங்குள்ள மேல்சாந்தி கீழ் சாந்திக்கு என தானம் கொடுத்து வருகிறார்கள். விஜயகாந்த் சொல்வதை நான் வரவேற்கின்றேன். தான் குடி இருக்கும் வீட்டில் காணாத தெய்வத்தை வெளியில் போய் காணமுடியும் என்பது அரியது.
By annakan
12/14/2011 9:31:00 PM
"தமிழகத்தில் இருந்து கேரளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபடுவதை பக்தர்கள் நிறுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் தெய்வம், குல தெய்வங்களையும், தமிழகத்தில் உள்ள கோயில்களிலும் தரித்து நலமும், வளமும் பெற வேண்டும்."- நன்றி, திரு.விஜயகாந்த் .தமிழனின் அழிவுக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு அடையாளம் தான் இந்த முட்டாள்தனமான ஐயப்ப பக்தி. எனது வாழ்நாளின் முற்பகுத்தில் முருகனை தவிர வேங்கடவனை தவிர அம்மனை தவிர, சிவனை தவிர வரலாற்றில் வேறு தெய்வங்களை கும்பிடாத தமிழனி மட்டுமே பார்த்தேன். ஆனால் நம்பியார் போன்ற மலையாளி நடிகர்களின் இன பற்றான ஐயப்ப வழிபாட்டை ஏமாளி தமிழனும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்று இன்று ஒரு இயக்கமாகவே வளர்ந்து விட்ட முட்டாள் தனமாந ஐயப்ப பக்தி தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் முல்லை பெரியார் அணையை உடைப்போம் என்று மலையாளிகள் முரச்சிக்கும் போதுக்கோத் அனெக் உள்ள ஐயப்ப சபரிமளிக்கு செல்வோம் என தமிழன் நடக்கும் பொது இவர்கள் எல்லாம் எப்பாடு ஒரு இழி பிறவிகள் என எண்ண தோன்றுகிறது. தயவு செய்து தமிழர்களே இன பற்றோடு செயல்படுங்கள்.
By P .Padmanaabhan
12/14/2011 9:27:00 PM
யோவ் மொதல்ல உன் 29 MLA களை ராஜினாமா செய்ய சொல், உன் கட்சிக்கு MP இல்லேன்ற தைரியத்துல பேசுறியா?
By radhakrishnan
12/14/2011 9:13:00 PM
யோவ் மொதல்ல உன் 29 MLA க்கலை ராஜினாமா செய்ய சொல், உனக்கு MP இல்லேன்னு தைரியமா பேசுறியா?
By ram
12/14/2011 9:08:00 PM
ஐயப்பன் கோவிலுக்கு அதிகமாக வருமானத்தை கொடுப்பது தமிழர்களின் கூட்டம்தான், ஐயப்பனே இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்தவேண்டும், தமிழர்கள் சில காலத்திற்கு சபரிமலை செல்வதை நிறுத்த வேண்டும். தமிழ் நாட்டிலுருந்து செல்லும் பொருட்களை தடை செய்ய வேண்டும். கேரளா தன்னால் வழிக்கு வரும்.
By Kamalar
12/14/2011 8:49:00 PM
உண்மைதான். அத்தனை M P இக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதுதான் பிரதமருக்கு நம்முடைய உணர்ச்சிகள் புரியும். இவ்வளவு போராட்டத்திற்கு பிறகும் பிரதமர் மெளனமாக இருப்பது வேதனைக்கு உரியதாக உள்ளது.
By இரா.இராவணன்
12/14/2011 8:43:00 PM
அட்ரா சக்கை ! நமக்கு தான் எம்பி இல்லையே ? நமக்கு என்னா போச்சு ?
By ர.ராஜன்,cheyyar
12/14/2011 8:26:00 PM
தலைக்குக் தலை பெருதனம்... ஐய்யப்பன் பத்தி நீ பேசாதே..
By மணிகண்டன்
12/14/2011 8:25:00 PM
தமிழ் மக்கள் இலங்கையில் செத்து மடிந்த போதே செய்யாதவர்கள் இப்போது செய்ய போக சொன்னால் எப்படி?ஓட்டு போட்ட மக்களை மாக்ககள் அக்க துடிக்கும் அரசியல் கட்சிகள் உள்ளவரை ஒன்றும் செய்யமுடியாது.காங்கிரஸ் கட்சியை தமிழ் நாட்டு மக்கள் புறகணிக்க வேண்டும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கட்சி.தமிழ் மக்கள் ஒருவர் கூட இனி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட கூடாது.அவர்களோடு கூட்டணி வைப்பவர்களையும் புறக்கணிக்க வேண்டும்.அவர்கள் என்ன தமிழ் மக்களையும் தமிழ் நாட்டையும் புறகணிப்பது நாம் ஒன்று சேர்ந்து புறகணிப்போம் .தமிழா புறப்படு இனி இவர்கள் நம் தலை எழுத்தை மாற்ற தேவை இல்லை .நாம் அவர்கள் தலை விதியை மாற்றுவோம்.
By BKV
12/14/2011 8:14:00 PM
இதைப்புரிந்து கொண்டு தமிழ் மக்கள் கேரளாவுக்கு டூர் போவதையும், ஐயப்பன் கோவிலுக்கு போவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் .நம் பணத்தை வீணா நன்றி கேட்ட கேரளாவுக்கு எதற்கு செலவு செய்ய வேண்டும்.வன்முறைக்கு வன்முறை, காலம் இது.வன்முறையால் தான் கேரளாவுக்கு புத்தி புகட்ட வேண்டுமென்றால் அதற்கு தமிழ் மக்களுக்கு வீரம் உள்ளதா?வாய்ச்சொல்லில் வீரர்கள் என்றில்லாமல் செயல்படவேண்டும்.
By ramachandhirasekaran.
12/14/2011 7:36:00 PM
இவர் எதற்கு எம்பீக்கள் மட்டும் என்கிறார்? எம் எல் ஏக்களும் என்று சொல்லி ,முன்மாதிரியாக தன் பதவியை முதலில் விடுவதுதானே?
By Tamilian
12/14/2011 7:12:00 PM
இது போன்ற யோசனைகள் சினிமாத்தனமானது மட்டுமல்ல சின்னத்தனமானது. மக்களின் உணர்சிகளை தட்டிவிட்டு குளிர்காய நினைக்கும் கழகங்கள் சினமாவில் அரசியலும் அரசியலில் சினிமாவும் செய்து தமிழ்நாட்டை குட்டிசுவராக்கிவிட்டனர். எந்த மாநிலத்துடனாவது இதுவரை நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ஏற்ப்பட்டதுண்டா? நதிநீர் பிரச்னை அடிப்படை வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒன்று. அதை கூத்தாடிகள் கையில் கொடுப்பது குரங்கு கையில் கொடுத்த பூமாலைதான்.
By திண்டல் சங்கர நாராயணன்
12/14/2011 7:00:00 PM
திரு .விஜயகாந்த் அவர்களின் கோரிக்கை நியாயமானதே.அதுபோல இந்த கோரிக்கைக்கு வலுவூட்ட ,முல்லை பெரியார் அணைக்கு ஆதரவாக தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைத்து ,மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.இதனால் தமிழக மக்கள் மத்தியில் அவரது மதிப்பு பன்மடங்கு உயரும் வாய்ப்பு உள்ளது.
By தனபால்
12/14/2011 6:57:00 PM
இவர் வாயை மூடினால் போதும். அம்மா பிரச்சனையை சரி பண்ணி விடுவார். கருணாநிதி திமுக முடிந்துவிட்டது . திமுக செத்த பிணம் .
By ssrinivasan
12/14/2011 6:57:00 PM
ஹையா .. எம்.பிக்கள் எல்லாம் ராஜினாமா பண்ணிட்டா அடுத்த தேர்தல்ல இவருக்கு எதாச்சும் எம்.பி. சீட் கிடைக்கும்னு நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையிறார் கேப்டன். மக்கள் கொடுத்த உரிமையை தட்டிக்கழிப்பதால் ஒரு புண்ணாக்கும் ஆக போவதில்லை. எல்லா எம்.பிக்களும் மொத்தமா சேர்ந்து பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினையை சத்தமாக பேசுங்கள். அதை விட்டுட்டு ஐடியா சொல்லவந்துட்டார். எல்லாம் நேரம்டா சாமி.!
By ரசிகா
12/14/2011 6:40:00 PM
முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழருக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியோடு எந்த வித கூட்டணியோ/ அரசியல் உடன்பாடோ காணமாட்டேன் என்று உரைக்க சொல்ல முடியுமா காப்டைன்லு (captainlu ). 39 MP சீட்ல 19 தந்தா கூட உடனே காங்கிரஸ் கூட கூட்டணி வைத்து தமிழருக்கு துரோகம் செய்ய ஆரம்பிச்சுடுவீங்களே. உங்களுக்கு சுய மானம் உண்டா? ஒரு முறை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
By Baalaa
12/14/2011 6:36:00 PM
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனினும் சிலர் இறைவனின் மீதான பித்தினால் தானே வேற்று மாநிலம் சென்று வணங்குகின்றனர். எங்கெங்கும் காணினும் சக்தியடா! என்றானே பாரதி.உள்ளம் பெருங்கோயில் என்றும் தெரியும். இருப்பினும் சிலரின் மேலோங்கிய அன்பு என்பதா? இல்லை வேறேதுவும் சொல்லவா? எனத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து திரிந்து இறைவனை வழிபடச் செல்லும் நிலையை என்னவென்று சொல்ல? படியாதவனின் மனம் தான் பதவிக்கு அலையும். அதனால் தான் கேரள உம்மன்சாண்டியும் சார்ந்தவர்களும் உண்மையை உணராது ஏதோ எல்லாமும் அறிந்ததைப் போல் தில்லி வரை சென்றுள்ளனர். உச்ச நீதி மன்றத்தை அவமதிப்பதை போல் அல்லவா கேரள அரசு செயல் படுகிறது. தில்லிவாலாக்களுக்குமா தெரியவில்லை?
By கி.பிரபா
12/14/2011 6:27:00 PM
ராஜினமா செய்வதற்கென்றால் எதற்கு தேர்தலிலே நிற்கணும்?. ராஜினமா செய்த பிறகு பாராழுமன்றத்தில் யார் பேசுவார்கள்? பிரதமர் தான் எம்பி இல்லாத கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பாரா? தேர்தலில் நிற்பதே வென்று, அதன் பின் பணியை தொடரத்தான், புறமுதுகிட்டு ஒடுவதர்கல்ல.
By K. ராஜன், திருநெல்வேலி
12/14/2011 6:15:00 PM
நீயும் உன்னுடைய MLA களும் ராகினமா செய் ...
By SARAVANAN
12/14/2011 6:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

புதன், 14 டிசம்பர், 2011

நேரு தொடக்கி வைத்த முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல்


நேரு தொடக்கி வைத்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்த்து வைப்பாரா மன்மோகன்சிங்?

பதிவு செய்த நாள் : 14/12/2011


முல்லைப்பெரியாறு அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையில் பெரும் போராட்டத்திற்கு வித்திட்டிருக்கிறது. நதி நீர் பிரச்சினைகள் இந்தியாவில் இரண்டு மாநில மக்களிடையே பெரும் பதற்றத்தை தோற்றுவிப்பது பெரியாறு அணைப்பிரச்சினை மட்டும் அல்ல. இதற்கு முன்பு கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே எழுந்த காவிரிப் பிரச்சினை இன்னும் தீரவில்லை.
ஆந்திராவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே எழுந்த பாலாறு பிரச்சினையும் இன்னும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது இந்நொரு அண்டை மாநிலமான கேரளாவுடனான முல்லைப்பெரியாறு தகராறு ஒவ்வொரு வருடமும் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. அணையால் ஏற்பட்ட தலைவலியின் பின்னணி என்ன.
கேரளாவில் 2000 டி.எம்.சி. தண்ணீருக்கு மேல் உபரியாக கடலில் போய் விழுந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2000 டி.எம்.சி. தண்ணீரில் வெறும் 200 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கொடுத்தால் கூட, சுமார் 13இற்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பது தமிழக விவசாயிகளின் கருத்து.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1800ஆம் வருடங்களில் கடும் பஞ்சத்தில் வாடியது தமிழகத்தின் தென் பகுதிகளான மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள். இந்த பஞ்சம் அடிக்கடி 1840ஆம் வருடம் வரை தொடர்ந்தது. பஞ்சத்தைப் போக்குவதற்காக கட்ட திட்டமிடப்பட்டதுதான் பெரியாறு அணை.
அணை கட்டுவதற்காக சுமார் 8 முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என்றாலும் கேப்டன் ஸ்மித் தலைமையிலான முதல் ஆய்வில் பெரியாறு அணை கட்டும் திட்டத்தின் மொத்த மதிப்பீடு வெறும் 1.75 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கான முதல் செயற்றிட்ட அறிக்கையிலேயே 1867இல் ஸ்மித் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக முயன்றவர் அப்போது ராமநாதபுரம் ராஜாவாக இருந்த திவான் முத்து அருளப்பிள்ளை.
இதைத் தொடர்ந்து 19 வருடம் கழித்து சென்னை மாகாணத்திற்கும், திருவாங்கூர் ராஜாவிற்கும் 999 வருடங்களுக்கான முல்லைப் பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 9 வருடங்கள் கழித்து அணை கட்டிமுடிக்கப்பட்டு 10.10.1895 அன்று பெரியாறு அணை திறக்கப்பட்டது. ஆக இன்று பெரியாறு அணையின் வயது 116.

அணையை கட்டி முடித்தவர் பென்னி குக் என்ற பொறியாளர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இதைக் கட்டுவதற்கு அணையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு களைப்புத் தெரியாமல் இருக்க தினமும் 4000 லீற்றர் கள்ளச் சாராயம் வழங்கப்பட்டது என்று ஐந்து மாவட்ட பெரியார் பாசண விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் தன்னுடைய “முல்லை பெரியாறு சில உண்மைகள்” என்ற புத்தகத்தில் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்ல, அணை கட்டுவதற்கு ஒரு கட்டத்தில் தங்களிடம் நிதி இல்லை என்று கூறிவிட்டது ஆங்கிலேய அரசு. ஆகவே அணையின் பொறியாளராக இருந்த பென்னிகுக் தன் சொத்துக்களைக் கூட விற்று அணையின் மீதியிருந்த பணிகளை முடித்தாராம். 152 அடி உயரம் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கும் அளவிற்கு பலம் நிறைந்த அணையாக கட்டப்பட்டதுதான் பெரியாறு அணை.
இந்த உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால் 10.5 டி.எம்.சி. அளவு தண்ணீரினால் தமிழகத்தில் உள்ள சுமார் 2.25 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும். நேரடியாக 70 லட்சம் மக்களும், மறைமுகமாக சுமார் 1.15 கோடி மக்களும் பயன்பெறுவார்கள் என்று கருதப்பட்டது.
ஆனால், இந்த அணையின் மீதிருந்த உரிமைகளை தமிழ்நாடு படிப்படியாக கேரளாவிடம் விட்டுக் கொடுத்ததுதான் இன்றைய இவ்வளவு பெரிய சிக்கலுக்கு காரணம். உதாரணமாக முதலில் அணை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது இது முற்றிலும் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றுதான் முல்லைப்பெரியாறு ஒப்பந்தம் கூறுகிறது.
ஆனால் மொழி வாரி மாநிலங்கள் 1956இல் உருவான போது அணை இருக்கும் பகுதிகளான பீர்மேடு, தேவிகுளம் தாலுகாக்கள் எங்களுக்கே வேண்டும் என்று கேரளா அடம்பிடித்தது. இத்தனைக்கும் அங்கு அப்போது 90 சதவீதம் பேர் தமிழர்கள் வாழ்ந்தார்கள். மொழி வாரி மாநிலங்கள் அடிப்படையில் பார்த்தால் கூட இப்பகுதிகள் தமிழ்நாட்டிற்கே வந்திருக்க வேண்டும்.

ஆனால் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராஜரிடம், “இந்த இரு தாலுகாக்கள் கேரளாவிடம் இல்லை என்றால் அந்த மாநிலம் தலையில்லாத உடலாகவே இருக்கும்” என்று சொல்லி, இவ்விரு தாலுகாக்களையும் கேரளாவிடம் ஒப்படைத்தார்.
அப்போதே முல்லைப் பெரியாறு அணையின் ஒட்டு மொத்த கட்டுப்பாடும் கேரளாவிடம் போய் விட்டது. இதை வலியுறுத்திக் கொள்ளும் வகையில் இந்த இரு தாலுகாக்களிலும் கேரள மாநிலத்தவரை கொண்டு வந்து அதிக அளவில் குடியேற்றிய நிகழ்ச்சிகளும் நடந்தன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரியாறு அணையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யவும் தமிழ்நாடு தொடங்கியது. இது கேரளாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கேரளா இடுக்கியில் ஒரு அணை கட்டியது. ஆனால் அந்த அணைக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் 1979ஆம் வருடம், அதாவது 32 வருடங்களுக்கு முன்பு “முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது.
இது உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து” என்ற கோரிக்கையை முன் வைத்து, முதல் போராட்டத்தை துவக்கியவர் அன்று எம்.எல்.ஏ.வாக இருந்த கே.எம்.தோமஸ். இதன் விளைவாக மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் கே.சி.தோமஸ் இரு மாநில அதிகாரிகளுடனும் 25.11.1979 அன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதான் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே தொடங்கிய முதல் பேச்சுவார்த்தை.
அதில் இரு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அணையை 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பலப்படுத்துவது என்றும், அதுவரை அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து குறைத்து 136 அடியாக வைத்துக் கொள்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இப்படித்தான் அணையின் நீர்மட்ட அளவு அணை கட்டிய 84 வருடங்கள் கழித்து முதல் முறையாக குறைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த ஒப்பந்தத்திற்கு அப்போது எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராஜா முகமது ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு 1980இல் மீண்டும் மத்திய நீர்வளத்துறை ஆணையம் 145 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தவும், 12.51 கோடி ரூபாய் செலவில் அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் ஆணையிட்டது. அந்த பணிகளும் நடைபெற்றன. ஆனால் 145 அடி உயர்த்த கேரள அரசு சம்மதிக்கவில்லை. இதில் விஷேசம் என்னவென்றால் அணை பாதுகாப்பு தொடர்புடைய அனைத்துப் பணிகளும் கேரள அரசுக்கு அனுப்பப்பட்டு, அம்மாநில அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே செய்யப்பட்டன.
ஆனாலும் கேரளா தொடர்ந்து பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் நோக்கிலேயே செயல்பட்டது. குறிப்பாக அணைக்கு தண்ணீர் வரும் வழியில் நான்கு புதிய அணைகளை கட்டியது. ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கை இது. அதேபோல் அணையின் பாதுகாப்பு மட்டும் தமிழகத்திடம் இருந்து வந்தது. அதையும் 1982 வாக்கில் கேரளாவிடம் விட்டுக் கொடுத்தது தமிழக அரசு.இந்நிலையில் 1989இல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது அணையின் நீர்மட்டத்தை மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் முந்தைய உத்தரவுப்படி 145 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அதனை அணையை பாதுகாக்கும் கேரள பொலிஸார் ஏற்கவில்லை.
இதன்பிறகு முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை இரு மாநில உறவில் தைத்த முள்ளாக மாறியது. தொடர்ந்து கேரள அரசு வம்பு பண்ணியே கொண்டிருந்ததால், 1998ஆம் வருடம் மகபூப் பாட்ஷா, கே.எம்.அப்பாஸ், ரத்தினசாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தொடுத்தார்கள். அதில் வைக்கப்பட்ட இரு முக்கிய கோரிக்கைகளில் ஒன்று அணையின் பாதுகாப்பு மத்திய தொழிற் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும்.
இன்னொன்று அணையின் நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்த வேண்டும் என்பதுதான். சுப்ரீம் கோர்ட் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, “இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் இப்பிரச்சினை தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து என்பதால் மத்திய அரசு உடனே தலையிட்டு இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. ஆனாலும் பிரச்சினை தீரவில்லை.
மீண்டும் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் முன்பு வந்த போது வை.கே.சபர்வால் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும். அணையை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறகு 152 அடி வரை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கலாம்.
இந்த பணிகளை மேற்கொள்ள கேரள அரசும் அதிகாரிகளும் எந்தவித முட்டுக்கட்டையும் போடக்கூடாது” என்று தீர்ப்பளித்தார்கள். இந்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைத்தான் இப்போது கேரள அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. குறிப்பாக கேரளா அரசு ஒரு சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து அணையின் நீர்மட்டம் 136 அடி என்று நிர்ணயித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிரான இந்த சட்டம் செல்லாது என்று தமிழகத்தின் சார்பில் அப்போதே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் பிறகு உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நடைபெற்ற இரு மாநில அதிகாரிகள் கூட்டம், அமைச்சர்கள் கூட்டம், முதல்வர்கள் கூட்டம் எவற்றிலும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இந்நிலையில்தான் “இவ்வழக்கில் சட்டபிரச்சினைகள் உள்ளன” என்று கூறி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்.
மீண்டும் தொடங்கிய சட்டப் போராட்டத்தின் விளைவாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் முல்லைப்பெரியாறு அணையின் பலம் பற்றி ஆய்வு நடத்த “எம்பவர்டு கமிட்டி” அமைக்கப்பட்டது. இதுவரை டி.கே. மித்தல் கமிட்டி, டாக்டர் எஸ்.எஸ்.பிரார் கமிட்டி என்று பல கமிட்டிகள் அணையின் பலம் பற்றி ஆய்வு மேற்கொண்டு விட்டன.
இப்போது ஒருபுறம் ஆனந்த் கமிட்டி விசாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த கமிட்டியின் விசாரணை வரம்பில் கேரளா புதிய அணை கட்டும் விவகாரமும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரள அரசு புதிய அணை கட்டக்கூடாது என்று தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு தாக்கல் செய்த மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், கேரள அரசே தன்னிச்சையாக ரூர்க்கி ஐ.ஐ.டி. மூலம் ஒரு ஆய்வு நடத்தி, “அணை இருக்கும் பகுதியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டால் அணை உடையும் ஆபத்து இருக்கிறது” என்று கூறியிருக்கிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “தமிழகத்தில் உள்ள கல்லணை பெரியாறு அணையும் முன்பு கட்டியது. ஆனால் இன்னும் பாதுகாப்பாக இருக்கிறது. அதேபோல் ஆந்திராவில் உள்ள கோதாவரி, கிருஷ்ணா போன்ற அணைகளும் இதற்கு முன்பு கட்டப்பட்டு இன்னும் பத்திரமாக இருக்கின்றன. ஆகவே பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. இதனால் கேரள மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
ஆகவே அணைக்கு மத்திய தொழிற்படை பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கோரிக்கை வைத்துள்ளார். அணையின் மதகுகளை உடைக்க கேரள இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தை முன்னிட்டே இப்படி அவசரக்கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

“டாம் 999″ (அணை குத்தகை காலமான 999 வருடத்தை குறிப்பிடும் வகையில்) என்று அணை உடைவது போன்ற ஒரு படத்தை போட்டுக் காட்டி கேரள மக்கள் மத்தியில் பீதியை அம்மாநில அரசு உருவாக்கி விட்டது. அதேபோல் அங்குள்ள காங்கிரஸ{ம் சரி, கம்யூனிஸ்ட் கட்சியும் சரி “அணை பாதுகாப்பற்றது” என்ற பிரசாரத்தை கடுமையாகவே செய்து மக்களை நம்ப வைத்து விட்டது.
“இருக்கின்ற அணையிலேயே இவ்வளவு பிரச்சினைச் செய்யும் கேரளா, புதிய அணை கட்டி எங்கே தண்ணீர் தரப்போகிறது” என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக இந்த நீர் பாசனம் பெறும் ஐந்து மாவட்ட மக்கள் பீதியில் இருக்கிறார்கள். மத்திய அரசோ டெல்லியில் சில்லறை வணிகத்தில் 51 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதித்தன் விளைவாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குவதை சமாளிக்கவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
அதனால் இரு மாநிலப் பிரச்சினைகள் குறித்து தீவிர முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை. காரணம் மத்திய ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தனியாக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இல்லை. ஆனால் கேரளாவில் அந்த வாய்ப்பு இருக்கிறது. முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக அந்த வாய்ப்பை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. 55 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு உருவாக்கி வைத்த தொல்லை முல்லைப் பெரியாறு. அதை இப்போது காங்கிரஸ் பிரதமராக இருக்கும் மன்மோகன்சிங் தீர்த்து வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை நதி நீர் பிரச்சினையில் மாநிலங்கள் ஏற்பதில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. பெரியாறு அணை பிரச்சினையில் நடக்கும் கேரளாவின் போராட்டங்கள் அதைத்தான் காட்டுகிறது. பிரச்சினையை உருவாக்கிய காங்கிரஸே தீர்த்து வைக்குமா இதுதான் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் ஏக்கமாக இருக்கிறது.
நன்றி: டெய்லிமிறர்
0