help லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
help லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஜூன், 2012

A poor boy need help to study medical education

எல்லார்க்கும் எல்லா நிலை க் கல்வியும் கட்டணமின்றிக்கிடை க்கும் நாள் எந்நாளோ!
 மெடிக்கல் "கட்-ஆப்' 196 பெற்ற ஏழை மாணவர்: டாக்டர் கனவு நிறைவேறுமா?

திருச்செங்கோடு : பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், மெடிக்கல் "கட்-ஆப்'பில், 196 பெற்ற ஏழை மாணவரின் டாக்டராகும் கனவு நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் மாணவர் சுரேந்திரன். பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், 1,200க்கு 1,149 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்தார். மேலும், மெடிக்கல் "கட்-ஆப்' 196, இன்ஜினியரிங் "கட்-ஆப்' 195 பெற்று சாதனை படைத்துள்ளார்.

இலவசம்:அம்மாணவர், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில், 500க்கு, 483 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அதை தொடர்ந்து, மல்லசமுத்திரம் அருகே உள்ள விநாயகா மேல்நிலைப் பள்ளியில், இலவசமாக கல்வி பயின்றார். அதிக அளவில் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர் சுரேந்திரன், உயர் கல்வி படிப்பதற்கு வசதி இல்லாததால், தன் தந்தையுடன் கூலி வேலைக்கு சென்று வருகிறார். அதனால், அம்மாணவரின் எதிர்கால கனவான டாக்டராகும் எண்ணம், கேள்விக்குறியாகி உள்ளது.அவரது பெற்றோர் முருகேசன்-சத்யவாணி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுகின்றனர். கிடைக்கின்ற சொற்ப வருமானத்தில் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மாணவர் சுரேந்திரன் கூறியதாவது:""எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 483 மதிப்பெண் பெற்றதால், விநாயகா மேல்நிலைப் பள்ளியில் இலவசமாக படிக்க முடிந்தது. தற்போது, மெடிக்கல் கட்-ஆப், 196 பெற்றுள்ளேன். நான் இருதய மருத்துவ படிப்பு முடித்து, ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது கனவு.''

சுரேந்திரனின் பெற்றோர் கூறியதாவது:""சுரேந்திரன் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன், இதுவரைக்கும் படிக்க வைத்தேன். எங்களது மகனுக்கு மெடிக்கல் "சீட்' கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வறுமை காரணமாக, சுரேந்திரனின் டாக்டராகும் கனவு, வெறும் கனவாகி விடுமோ என அச்சமாக உள்ளது.''இவ்வாறு கூறினர்.

உதவி செய்ய விரும்புவோர், 97919 15986 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



வெள்ளி, 9 மார்ச், 2012

fighting for life : Please help!

உயிருக்கு போராடும் மகனுடன் தவிக்கும் தாய்: காற்றில் பறந்தது கலெக்டர் பரிந்துரை


கள்ளக்குறிச்சி: வயிற்றில் துளையிட்டு பொருத்தப்பட்ட குழாய் வழியே மூன்று ஆண்டுகளாக பால் செலுத்தி தனது மகனை உயிர் பிழைக்க வைக்க ஒரு தாய் தவியாய் தவித்து வருகிறார். குழந்தையின் மருத்துவ மேல் சிகிச்சைக்காக கலெக்டர் கொடுத்த பரிந்துரை கடிதமும் பயனற்று போனதால் அந்த தாய் செய்வதறியாது பரிதவித்து நிற்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் மோகன்,45; தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி பத்மா, 38. இவர்களுக்கு சிவமணி, 10 என்ற மகன் உள்ளார். கடந்த 2006ம் ஆண்டு பாட்டிலில் இருந்த ஆசிட்டை குளிர்பானம் என்று தவறுதலாக சிவமணி குடித்துள்ளார். இதனால் இரைப்பை முழுவதும் புண்ணாகி வலியால் துடித்தான். சென்னையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சிவமணியின் உயிரை காப்பாற்றினர். இருப்பினும் சாப்பிட முடியாமல் சிவமணி மிகவும் சிரமப்பட்டான். தொண்டையின் உணவுக் குழல் முழுவதும் ஆசிட்டால் காயம் ஏற்பட்டதால் அது சரியாகும் வரை உணவை வாய்வழியே கொடுக் கக் கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அதற்கு தற்காலிக ஏற்பாடாக கடந்த 2009ம் ஆண்டு சிவமணியின் வயிற்றில் ஒரு துளையிட்டு, அதன்வழியே குழாயை இரைப்பையில் செலுத்தி அதில் திரவ உணவை கொடுக்கும் படியும், சிலவாரங்களுக்கு பின் மீண்டும் வருமாறு அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். மேற்கொண்டு சிகிச்சை அளிக்க போதிய பண வசதி இல்லாததால் குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் பத்மா தவித்து வந்தார். சிவமணியின் தந்தை மோகனுக்கு குடி பழக்கம் உள்ளதால், வீட்டு செலவுக்கு கூட பணம் தருவதில்லை. வயிற்று பிழைப்புக்கே வழியின்றி தவித்த பத்மா சில வீடுகளில் பாத்திரம் தேய்த்து அதன்மூலம் மாதம் தோறும் 750 ரூபாய் சம்பாதித்து வருகிறார்.
வயிற்றில் உள்ள துளை வழியே சிவமணிக்கு தினமும் பால் செலுத்தி அதன் மூலம் அவனது உயிரை காப்பாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக வாய்வழியே உண்பது நிறுத்தப்பட்டதால் தொண்டை குழலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற குழந்தைகளை போல் தின்பண்டங்களை சாப்பிட ஆசைப்பட்டாலும், அதற்கு வழியின்றி சிவமணி தவித்து வந்தான். ஆசைப்படும் திண்பண்டத்தை வாயில் வைத்து சுவைத்துவிட்டு முழுங்க முடியாமல் கீழே துப்பிவிடும், அவலம் நீடித்து வந்தது. வயிற்றில் பொருத்தப்பட்ட குழாய் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதால் அதில் தொற்று உருவாகி, அதை சுற்றி புண் ஏற்பட்டுள்ளது. குழாய் வழியே பால் செலுத்தும் போது வலிதாங்காமல் சிவமணி துடிப்பது பார்ப்பவர்களை பதற செய்கிறது. பாலை தவிர வேறு உணவுகளை கொடுக்க முடியாததால் சிவமணியின் உடல்நிலை பலகீனமடைந்து நிற்க கூட முடியாமல் கால்கள் நடுங்க சிறுவன் சிரமப்படுவது வேதனையாக உள்ளது. மற்ற குழந்தைகளை பார்க்கும் போது அவர்களுடன் சேர்ந்து ஓடி விளையாட வேண்டும் என்ற ஏக்கம் சிவமணியின் முகத்தில் அப்பட்டமாய் தெரிகிறது. ஆனால் வயிற்றில் உள்ள குழாயை பார்த்தபடி வேடிக்கை பார்க்க மட்டுமே அவனால் முடிகிறது.
அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் கூறியதையடுத்து, கடந்த 15 நாட்களுக்கு முன் தனது மகன் சிவமணியை அழைத்துக்கொண்டு விழுப்புரம் கலெக்டர் சம்பத்தை நேரில் சந்தித்து தனது மகனுக்கு மருத்துவ உதவி செய்யும் படியும், சுயதொழில் செய்ய வங்கி கடன் வழங்கவும் பத்மா கோரிக்கை விடுத்தார். அதை பரிசீலித்த கலெக்டர் கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் சிறுதொழில் செய்ய கடன் பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்து கடிதம் வழங்கினார்.கடன் பெறும் எதிர்பார்ப்போடு கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய வங்கிக்கு சென்று கலெக்டர் கொடுத்த கடிதத்தை கொடுத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வங்கி அதிகாரிகள் வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் செய்வதறியாது பத்மா தவித்து வருகிறார். வயிற்றில் குழாய் பொருத்தப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி வரும் தனது மகனை தூக்கிக்கொண்டு யாராவது உதவமாட்டார்களா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார். மகனுக்கு மேல்சிகிச்சை தந்து மீட்டெடுக்க போராடி வரும் இந்த ஏழை தாய் பத்மாவுக்கு உதவ முன்வருபவர்கள் 93604 73263 என்ற மொபைல் போனுக்கு தொடர்பு கொள்ளலாம்.

திங்கள், 14 மார்ச், 2011

Inida helps to Japan: சப்பானுக்கு இந்தியா உதவி

விரைந்து உதவுக! நிறைவாக உதவுக! அரசியல் நோக்கமின்றி உதவுக! உற்றுழி உதவுக! 
துயரத்துடன்
 இலக்குவனார் திருவள்ளுவன் 
/தமிழே விழி! தமிழா விழி! /

ஜப்பானுக்கு இந்தியா உதவி

First Published : 13 Mar 2011 02:18:50 PM IST


புதுதில்லி, மார்ச்.13: சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கம்பளிப் போர்வைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை இந்தியா அளிக்க உள்ளது.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட செண்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான கம்பளிப் போர்வைகளுடன் இந்தியாவில் இருந்து முதல் விமானம் புறப்படத் தயாராக உள்ளது என வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.தில்லியில் உள்ள ஜப்பான் தூதருடன் இதுகுறித்து விவாதித்தோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குளிரைத் தாங்கக்கூடிய கம்பளிப்போர்வைகள் பயனுள்ளதாக இருக்கும் என நிருபமா கூறினார்.ஹரியானா, பஞ்சாப் அரசுகள் கம்பளிப்போர்வைகளை அளித்து உதவிவருவதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.நிருபமா ராவ் ஜப்பான் மக்களின் தேவைகள் தொடர்பாக இந்தியத் தூதரகத்துடனும், ஜப்பான் அதிகாரிகளுடனும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். அவர்களுக்கு சாத்தியமுள்ள அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்படும் என வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஏற்பட்டு கடல்நீர் நிலப்பரப்புக்குள் புகுந்தது. சுனாமியால் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.மினாமிசன்ரிகு நகரில் சுமார் 10 ஆயிரம் பேரைக் காணவில்லை என்று அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.