gratitude லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
gratitude லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஆகஸ்ட், 2012

நன்றியுள்ளவர்களுக்கு நன்றிக் கடன்!

சொல்கிறார்கள்



நன்றியுள்ளவர்களுக்கு நன்றிக் கடன்!                           

செல்லப் பிராணிகளுக்கான பால் பொருட்கள், உணவுப் பொருட்கள் தயாரிக்கும் அமெரிக்காவின், "பெட்- ஏஜி' நிறுவனத்தின், ஒரே இந்திய டீலர் செல்வ ராணி: என் கணவர், தங்க நகை செய்வதில் கை தேர்ந்தவர். பெரிய அளவில், "ஆர்டர்'கள் பிடித்து, 30 பேருக்கு வேலை கொடுத்து என, வாழ்க்கை வளமாக இருந்தது. எதிர்பாராத விதமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட, செய்வதறியாது திகைத்து நின்றோம். இழந்ததை மீட்டாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். நாங்கள் நேசித்து வளர்த்த நாய்கள், அதற்கான வழியைக் கொடுத்தன. வருமானம் இல்லாத நேரத்திலும், தரமான உணவு, மருந்துகள் என, நாய்களை பராமரிக்க தவறவில்லை. இதையே வியாபாரமாக்கி விடலாம் என தோன்றவே, "சஞ்சய் மார்க்கெட்டிங்' என்ற பெயரில், "பெட் புட்' பிசினஸ் துவக்கினோம். ஆரம்பத்தில், வட மாநிலத்திலிருந்து தயாரிப்புகளை வாங்கி, விற்பனை செய்தோம். செல்லப் பிராணிகள், கால்நடைகளுக்கான மருந்து விற்பனையிலும் முறைப்படி இறங்கினோம். எதிர்பார்த்ததை விடவும், அதிக லாபம் கிடைத்தது. இன்னும் தரமான பொருளாக தேடியபோது தான், லாபத்திற்கு நிகரான தரத்தையும் கடைபிடிக்கும், வெளிநாட்டு நிறுவனத்தைக் கண்டுபிடித்தேன். எங்கள் தயாரிப்பில் முக்கியமானது, பால் பொருட்கள். பிரசவத்தின் போது, தாயை இழந்த, பிரிந்த, பல ஆயிரக்கணக்கான குட்டிகளை காப்பாற்றி இருக்கிறோம். தரம் அதிகம் என்பதால், விலையும் அதிகம் தான். எங்கள் தயாரிப்பின் மூலம், திருப்திய டைந்த நண்பர்களின் வாய்மொழி விளம்பரம் மூலம், பிசினஸ் விரிவடைந்தது. இலங்கை, வங்கதேசம் என, அக்கம் பக்கத்து நாடுகளிலிருந்தும், "ஆர்டர்'கள் வருகின்றன. அதீத உழைப்பின் மூலம், இன்று இந்த நிலைக்கு வந்துள்ளோம். கிடைக்கும் லாபத்தில், கணிசமான பகுதியைக் கொண்டு, தெரு நாய்களை பராமரிக்க உள்ளோம்; எங்களை வாழ வைத்த ஜீவன்களுக்கு, நாங்கள் செய்யும் நன்றிக் கடன் இது தான்.

வளர்த்தவரைக் காக்க (பாம்பைக் கொன்று)பலியான நாய்

எசமானரை க் காக்க உயிரைவிட்ட நாய்: பாம்பைக் கொன்று பலியான சோகம்
கும்பகோணம்: எஜமானரை கடிக்க வந்த பாம்பை கடித்து கொன்று, பாம்பு கடித்ததால் இறந்த நாயின் நன்றியுணர்வு பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி வடக்குவீதியைச் சேர்ந்தவர் அன்வர்பாய், 56. கூலித்தொழிலாளியான இவரது மனைவி பாத்திமாபீவி, 50. இவர்களது மகன் சாகுல்ஹமீது, 17. மூவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டின் பின்புறம் அடர்ந்த முள்செடிகளும், தோட்டமும் உள்ளது. இவர்கள் வீட்டில் பேபி என்ற நாயை கடந்த மூன்று ஆண்டுகளாக வளர்த்து வந்தனர்.

இரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் படுத்திருக்கும் போது பேபி வாசலில் படுத்து காவல் காத்திருக்கும். இந்நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்ட எழுந்த பார்த்த போது, பேபி குரைத்து கொண்டிருந்தது. அப்போது அன்வர்பாய் எழுந்து பார்த்துவிட்டு, மீண்டும் படுத்துவிட்டார். நீண்ட நேரம் குரைத்து கொண்டிருந்தது. அன்வர்பாய் காலை ஆறு மணிக்கு எழுந்து கொல்லைப்புறம் வந்த பார்த்தபோது, அங்கு நாயும், பாம்பு கிடந்தது. நாயையை உற்றுப்பார்த்தபோது அது இறந்து கிடந்தது.

மேலும் நாயின் வாயில் மூன்று அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு உயிருக்கு போராடியதால், அதை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர். பின்னர் நாயையும், பாம்பையும் ஒன்றாக ஒரே இடத்தில் அப்பகுதியினர் புதைத்தனர்.

இதுகுறித்து அன்வர்பாய் கூறியதாவது:நேற்று குடும்பத்தில் உள்ளவர்கள் அசந்து தூங்கிவிட்டோம். காலையில் எழுந்து பார்த்தபோது நாங்கள் மூன்று ஆண்டு செல்லமாக வளர்த்த நாயை பாம்பு கடித்தது தெரியவந்தது. எங்களை கடிக்க வந்த பாம்பை நாய் கடித்து தடுத்துள்ளது. பாம்பு கடித்ததால் எங்கள் வீட்டு நாய் இறந்து விட்டது. எங்களை காக்க செல்லமாக வளர்த்த நாய் தனது உயிரை விட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தங்களின் உயிரைக் காப்பாற்ற தன்னுடைய உயிரை கொடுத்த நாயின் இறப்பால், அன்வர்பாயும், அவரது குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.